லண்டன் கார் குண்டுகள்.. நாடகமா?

லண்டனில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட இரண்டு மெர்ஸிடஸ்கள் லண்டன் வாசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் இவ்வேளையில், புதிய பிரதமரான கார்டன் பிரெளன் எந்த வித பதட்டமுமில்லாமல் எல்லாரும் அமைதியாய் இருக்குமாறு வேண்டிக்கொண்டிருப்பது அவரின் மேலான நம்பிக்கையை அதிரித்திருக்கிறது..

கார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட மறுநாளே கிளாக்ஸோ விமான நிலைய வாசலில் இதேபோன்ற மற்றொரு கார் தீப்பிடித்து எரிந்தது. காரில் இருந்தவர்கள் அதிகபட்ச காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த வெடிகுண்டுக் கார்கள் எல்லாம் திட்டமிட்டு முறையாகத் தயார் செய்திருந்தும் ஏனோ வெடிக்க வைக்கும் கருவிகள் மட்டும் வெடிக்காமல் போயிருக்கின்றன. இது போலீஸாருக்கு மிக்க ஆச்சரியத்தை வரவழைத்திருக்கிறது. மேலும், இதே காரணங்களால் கிளாக்ஸோ விமானநிலையத்தில் உள்ளவர்களும் தம்மேல் எரிபொருளைக் கொட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கின்றனர்.

வழக்கமான அல்காயிதா கதைகள் இங்கும் ஊகிக்கப்படுகின்றன. பிரிட்டிஷ் அதிகாரிகள் இதைப் பற்றி எதுவும் சொல்லாத நிலையில் வழக்கம்போல அமெரிக்க அதிகாரிகள் முந்திரிக்கொட்டைத்தனமாக இது அல்காயிதாவின் வேலை என்றும், ஈராக்கில் கையாளப்படும் அதே முறைபோன்றுள்ளது என்றும் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்கள். இது என்னவோ எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்வது போல் உள்ளது.

ஏன் இப்படிக் கருத வேண்டியிருக்கிறது என்பதற்கு பல காரணங்கள் உள்ளன.

பிரிட்டனின் de-facto அமெரிக்கன் ஏஜென்ட் திரு. டோனி பிளேர் அவர்கள் ஒரு வாரத்திற்கு முன்னர் பதவி விலகி திரு. கார்டன் ப்ரெளனுக்கு வழி விட்டார். அப்போதே ப்ரெளன் யார், ஈராக் விவகாரத்தில் எந்த அளவிற்கு பிரிட்டனின் ஆதரவு இருக்கும் என்பதைப் பற்றி வாஷிங்டன் வட்டாரங்கள் கவலைப்பட ஆரம்பித்து விட்டன. ப்ரெளனின் சகாக்களிடமிருந்து அவர் பிரிட்டனின் ஈராக் ஈடுபாட்டைப் பற்றி நல்ல அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கவில்லை என்று அறியப்படுகிறது. இதைப்பற்றி பிரிட்டன் விவகாரங்களைக் கவனிக்கும் அமெரிக்க அதிகாரிகள் தனியாக பென்டகனிடம் ப்ரெளன் பதவியேற்ற நூறு நாட்களுக்கும் ஈராக்கிலிருந்து பிரிட்டிஷ் படைகளை மீட்டுக் கொள்ளும் அறிவிப்பை வெளியிடக்கூடும் என்று அறிக்கையளித்திருக்கிறார்கள. ஈராக்கில் தனியாக மாட்டிக்கொள்ளும் அபாயத்தை நோக்கியிருந்த பெண்டகன் அதிகாரிகளுக்கு ப்ரெளனுக்கு பிரிட்டிஷ் படைகளின் அத்தியாவசியத்தை வலுவான காரணங்களுடன் சுட்டிக் காட்ட வேண்டிய சூழ்நிலை இருந்தது.

இப்போது, உங்களுக்கு சில முடிச்சுகளின் சூட்சுமம் தெரிந்திருக்குமே. விசாரண முடிவுகள் வியக்கத்தக்க அறிக்கைகளுக்க வழிவகுக்க அதிக சாத்தியம் இருக்கிறது. காத்திருப்போம்.

இதன் தொடர்பான சுட்டி

http://www.telegraph.co.uk/news/main.jhtml?xml=/news/2007/05/20/wirq20.xml

0 இப் பதிவைப் பற்றிய கருத்துக்கள்: