இனி ஒரு விதி செய்வோம்
நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஏறக்குறைய இரண்டாண்டுகளுக்குப் பிறகு, இனி ஒரு விதி  செய்வோம் என்று  மீண்டும் எழுத வந்துள்ளேன்.  நாட்டு நடப்புகளை அணுகக் கவனித்து வந்தாலும் எழுத  ஏனோ  தோன்றவில்லை. ஒரு வகையான மனத்தைப் பிசைகிற விஷயங்களாக நிறைய நடந்து போயின.
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை என்பதாக கவிப்பேரரசு கண்ணதாசன் அவர்கள்  சொன்னதிற்கிணங்க, இனி ஒரு விதி  செய்வோம்  என்று முன் செல்வோம்.
எழுத நிறைய இருக்கிறது.
ஆங் சான் சூகியை ப்பற்றி,  அமெரிக்காவின் அண்மைய இந்திய  நெருக்கம் பற்றி, ஐப்பானின் சீன எதிர்ப்பும் அதை யொட்டிய சீன  மக்களின் சீற்றம் பற்றியும், விக்டர் பெளட்  கைதும் அதைச் சுற்றி நடக்கும் அரசியல் நாடகங்களைப் பற்றியும், சமீபத்தில் இறந்து  போன திருமதி லீகுவான்யூ அம்மையார் பற்றியும், எனது இலங்கை பயணத்தையும் அங்கு நான் கண்ட சில மாற்றங்களைப் பற்றியும், .......      
எழுத நிறைய இருக்கிறது.
ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்...