இலங்கைத் தமிழ் எம்பிக்களின் பயணம் தோல்வியா ?

இந்தியாவுடனான அதிகாரப்பூர்வ தொடர்பு கொள்ளும் முன் இயக்கம் இந்திய அரசு மற்றும் தமிழக சூழல் பற்றி மேல் விவரம் அறிந்து கொள்ளும் முகமாக, இலங்கையைச் சேர்ந்த தமிழ் எம்பிக்கள் இந்தியப் பயணம் மேற்கொண்டனர். தமிழக முதல்வரையும் இந்தியப் பிரதமரையும் சந்தித்து தமது மக்களின் தற்போதைய நிலையை எடுத்துச் சொல்ல இருந்த அவர்களின் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. இது தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்றவாறு தமிழீழ ஆதரவாளர்களால் எடுத்துரைக்கப்படுகிறது.

இந்த சந்திப்பு முன்னமே எனது வலைப் பதிவில் (http://thiruvadiyan.blogspot.com/2006/09/part-2.html) குறிப்பிட்டிருந்த தற்போதைய சாத்தியக்கூறுகளில் ஒன்றாகும்.

இதைப்பற்றி பல்வேறு யூகங்கள் நிலவுகின்றன.

ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

1. இந்தியாவிற்கு வந்த இலங்கைப் பாராளுமன்றத்தின் தமிழ் எம்பிக்கள் புலிகளின் அமைப்பின் அரசியல் பிரிவு எம்பிக்கள். அவர்கள் புலிகள் சார்பாகத்தான் ஈழப் பிரச்னை சம்பந்தமாக பேச வந்தனர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

2. கலைஞர் கருணாநிதி அவர்கள் முதலில் சந்திக்க மறுத்தாலும் பிரதமரின் சந்திப்புக்குப் பின்னால் சந்திக்கலாம் என்று சொன்னதாகத்தான் தெரிகிறது. அதாவது, பிரதமர் எடுக்கும் நிலையை தானும் எடுக்க அவர் நினைத்திருக்கலாம்.

3. பிரதமர் சந்திப்பு சௌத் பிளாக் அதிகாரிகளின் சந்திப்பிற்குப் பிறகு நடைபெற வேண்டும் என்று அதிகாரிகள் வற்புறுத்தியிருக்கக் கூடும். அதாவது, அதிகாரிகள் மட்டத்தில் அரசின் தற்போதைய கொள்கைக்கு (என்ன கொள்கை என்று அந்த ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்) எம்பிக்கள் இசைகிறார்களா என்பது. அப்படி அவர்கள் ஒருவேளை ஒத்துக் கொண்டிருந்தால் பிரதமரின் சந்திப்பு நடைபெற்றிருக்கலாமோ என்னவோ.

மற்றபடி,

வைகோ ஏற்பாடு செய்த சந்திப்பை கருணாநிதி தடுத்தார் என்பது தமிழக அரசியல் பாணி தாக்குதல். அவ்வாறு கருணாநிதி தடுத்திருப்பாரேயானால், ஏன் கருணாநிதியைச் சந்தித்து அந்த உதவியைக் கேட்டிருக்கக்கூடாது. ஏன் இராமதாசைச் சந்தித்து அந்த உதவியைக் கேட்டிருக்கக் கூடாது. கருணாநிதியின் மேல் குற்றஞ்சாட்டுவது, அவரின் இஸட் பிரிவு பாதுகாப்பை அதிகரிக்கவே உதவும்.

மேலும் விஜயகாந்த் தற்போது ஒரு தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக உருவெடுத்து வந்து கொண்டிருக்கிறார் (இவர் ஏற்கனவே வந்த, சிவாஜி கணேசன், எஸ்எஸ்ஆர், பாக்கியராஜ், இராஜேந்தர், இராமராசன், மற்றும் இன்னபிற நினைவில் மறந்துபோன நடிகர்களைப் போல கரையப் போகிறாரா அல்லது நிலைத்து நிற்பாரா என்று காலம் மட்டுமே பதில் சொல்லும்). இவரின் அரசியல் சாணக்கியராக இருப்பவர் பண்ருட்டி இராமச்சந்திரன் அவர்கள். இவர்தான் 1987ல் பிரபாகரனை MGR-ன் உத்தரவின் பேரில் இராசிவுடன் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்தவர். விஜயகாந்தின் வளர்ச்சியில் இயக்கத்திற்கு நன்மை இருக்கக்கூடும். திமுக ஆட்சியின் முழுமையான ஆளுங்காலத்திற்குள் எந்த ஆச்சரியத்தக்க விஷயமும் நடைபெறவில்லையென்றால், கேப்டன் (பிரபாகரன்) விஜயகாந்த் இது சம்பந்தமான முழு ஆதரவு தெரிவிக்க இன்னும் ஐந்தாண்டுகள் ஆகலாம். அது வரைக்கும் தமிழக அரசியலில் புலிகள் ஆதரவு என்பது ஈழத்தமிழர் ஆதரவு என்ற அளவிலேயேதான் இருக்கும்.

தற்சமயம் இலங்கையிலிருந்து அகதிகளாக வந்து கொண்டிருக்கும் மக்களின் அவல நிலை, கவர் ஸ்டோரி எழுதிக் காசாக்குவதற்குத் தான் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. அது தமிழக மக்களிடையே ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை.

இந்திய அமைதிப்படை இலங்கையில் புலிகளால் கொல்லப்பட்ட போது கூட தமிழக மக்களிடையே கருத்து மாச்சரியங்கள் இருந்தன. அமைதிப்படையை வரவேற்கக் கூட கருணாநிதி செல்லாது எதிர்ப்பு காட்டினார். இராசிவைத் தமிழக மண்ணிலேயே வைத்துக் கொன்றதன் மூலம் தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி பயத்தால் உறைய வைத்துவிட்டனர். இயக்கத்தினரைப் பற்றிய ஒரு ஹீரோயிஸப் பார்வை பயத்துடனான பார்வையாக மாறிப்போய் இருப்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவேண்டும்.

இது இயக்கத்தினரின் தமிழக மக்களுடனான, தமிழக அரசியல் களத்தினு}டான அணுகுமுறையில் தற்போது மாற்றம் தேவை என்று உணர்த்துகிறது.

பர்மாவும் ஐநா பாதுகாப்புச் சபை தீர்மானமும்

மியான்மரின் மேல் (பர்மா) ஐநா பாதுகாப்புச் சபை ஏற்றிய தீர்மானம் பல உள்நோக்கங்களைக் கொண்டது. அது என்ன என்று அலசுவதே இந்த பதிவின் நோக்கம்.

செப்டம்பர் 15ம் தேதியன்று ஐநா பாதுகாப்புச் சபை நிறைவேற்றிய பர்மாவைப் பற்றிய தீர்மானம் அமெரிக்காவின் தெற்காசியக் கொள்கையில் மாற்றம் தெரிவதை உறுதிப்படுத்துகிறது.

தற்போது மியான்மர் என்றழைக்கப்படும் பர்மா நாடு, இராணுவப் பிடியில் வெகு காலமாக இருக்கிறது. ஆசியான் நாடுகளிலேயே இராணுவ ஆட்சியாளர் உள்ள நாடு மியான்மர்தான். 1997ம் வருடம் கிழக்காசிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதரப் பின்னடைவுக்குப் பின் அனைத்து ஆசியான் நாடுகளும் கூடிச்சேர்ந்து மியான்மரையும் தமது உறுப்பினர் நாடாகச் சேர்த்துக் கொண்டன, ஒரு நிபந்தனையுடன். அதாவது, கூடிய சீக்கிரம் ஜனநாயக நாடாக மாறிவிட வேண்டும். மேற்படி நிபந்தனையால் ஆசியான் நாடுகளுக்கு எந்த நன்மையும் இல்லை. ஆனால் மேற்கத்திய (அமெரிக்கா என்று கொள்க) நாடுகளுக்கு அப்படி ஒரு நிபந்தனையிடுவதற்கு ஒரு உள்நோக்கம் இருந்தது.

தெற்காசியப் பிராந்தியத்தில் சில SWEETSPOT-கள் உள்ளன, அவற்றில் ஒன்று, மியான்மார். மியான்மார், இந்தியாவையிம் சைனாவையும் எல்லையாகக் கொண்ட நாடு. ஜண்டா எனப்படும் இராணுவத் தலைமை ஆட்சி செய்யும் நாடு அது. இராணுவ ஆட்சி நடந்த போதும் கிழக்காசிய நாடுகளுக்கோ, தெற்காசிய நாடுகளுக்கோ அது ஒரு தொந்தரவாகவோ பிரச்னையாகவோ இருக்கவில்லை. யாருக்கும் பிரச்னையில்லாதபோது யார் அதைச் சீண்டப் போகிறார்கள்.

சுழற்சியின்படி ஆசியான் தலைமை மியான்மருக்கு வரவேண்டிய சூழலில் மலேசிய அமைச்சர் பேச்சு வார்த்தைக்குச் சென்று தோல்வியுற்றார். என்ன பேசுவது... ஜனநாயகத்துக்குத் திரும்பச் சொல்லித்தான். இராணுவத்தலைமை வந்தவர்களுக்கு டீ கொடுத்து உபசரித்து பார்க்கலாம் என்று சொல்லி அனுப்பி விட்டது.

தற்போது ஐநா பாதுகாப்புச் சபை தீர்மானம் போடுகிறதென்றhல் சோழியன் குடுமி சும்மா ஆடுமா? அதற்கு என்ன காரணம் என்று பார்க்கலாம்.
மேற்கொண்டு படிக்குமுன் ஐநா சபை என்பது அமெரிக்காவின் கைப்பாவை என்பதும், சில வீட்டோ அதிகாரமுள்ள நாடுகள் தங்களையும் தங்களைச் சார்ந்தோரையும் காப்பாற்றிக்கொள்ள முடியும். மற்றபடி அந்தத் தகுதி இல்லாதாவர்கள் சொல்லுவதெல்லாம் அம்பலம் ஏற இயலாத சூழல் இருப்பதும், அனைவரும் அறிந்ததே. ஐநா சபையை ஹேக் நகருக்கு மாற்ற ஒரு கோஷ்டி கோஷமிட்டு வருவதும் அறிந்ததே.

சரி.. விஷயத்திற்கு வருவோம்.

1. மியான்மரின் இராணுவத் தலைமை சைனா மற்றும் இந்திய இராணுவ அமைப்புகளுடன் நெருங்கிய மற்றும் சுமுகத் தொடர்பு வைத்துள்ளது.

2. மியான்மரில் சமீபத்தில் எண்ணெய் வயல்கள் இனங்காணப் பட்டன. அவற்றைத் தோண்டும் ஒப்பந்தம் பெறுவதில் சைனாவும் இந்தியாவும் அக்கறை காட்டியும், கடைசியில் சைனாவே அந்த எண்ணெய் வயல்களைப் பெற்றது.

3. புலிகள் சிறிது காலம்... ஏன் இப்போது கூட, தங்களின் டிரான்சிப்மென்ட் பாய்ண்ட் எனப்படும் வகையில் ஆயுதப் போக்குவரத்திற்கு மியான்மரை உபயோகிப்பதாகக் கேள்வி. (வலைஞர்கள் மேல் தகவல் தரலாம்.)

4. ஒரு சில ஆண்டுகளுக்கு முன் மியான்மர் தனது அன்னியச் செலாவனியாக டாலரை விலக்கி ஈரோ என அறிவித்தது. மியான்மரிலிருந்து பெரிய அளவில் வணிகம் நடைபெறாவிட்டாலும், அமெரிக்காவிற்கு இது கோபத்தை ஏற்படுத்தியது. தற்போது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை அந்நாட்டின் மீது மீண்டும் மிகச் சமீபத்தில் தான் விதித்தது. சதாம் உசேன் செய்ய இருந்த தவறும் அதுதான் என்பது நாம் இங்கு குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது. அதாவது, ஓபெக் அமைப்பில் டாலருக்குப் பதில் ஈரோவில் வர்த்தகம் செய்வது என வலியுறுத்துவது என்பது தான் சதாம் செய்த தவறு. அதற்கு ஆதரவளித்தோரில் வெனிசு{லா அதிபரும் ஒருவர், இன்று வரை அவரைக் காலி செய்ய அமெரிக்க உளவு நிறுவனங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றன என்பது கவனிக்க வேண்டிய விஷயம். மேலும் சமீபத்திய ஐநா சபை பேச்சில் அவர் புஷ்ஷை வெளிப்படையாகவே சாத்தான் என்று விமர்சித்ததையும் அறிவீர்கள். இதைப்பற்றி தனி பதிவே போட வேண்டும்.

5. இந்துமகா சமுத்திரமும் மலாக்கா நீரிணையும் இன்று உலகின் பொருளாதார, வர்த்தக முக்கியத்தவம் வாய்ந்த ஒரு பகுதியாகிப் போனது. உலகின் சனத்தொகையில் பாதிக்குமேற்பட்டோர் வசிக்கும் பகுதியாகவும், சைனாவின் ஒரே வர்த்தகப் பாதையாகவும் உள்ள இந்தப் பகுதியில் கிழக்காசியா தவிர இந்துமகா சமுத்திரத்தில் போதுமான பிடியில்லாமல் இருப்பதாக அமெரிக்கா நினைக்கிறது. மலாக்கா நீரிணையில் ரோந்து செல்வதாக அறிவித்த அமெரிக்கா இந்தியாவையும் சேர்த்தக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானது.

6. சைனா, இந்தியாவின் அந்தமான் கப்பற்படைத்தளத்திற்கு ஈடு கொடுக்கும் படியான நடவடிக்கையாக மியான்மருக்கு உதவி செய்து அங்கு தனது செல்வாக்கை உயர்த்திக் கொண்டது. சைனாவின் இந்துமகா சமுத்திர கப்பற்படைத் தளம் மியான்மரில் அமைய அது முயற்சிக்கும். வெகு காலம் இதைக் கண்டும் காணாமல் இருந்த இந்திய அரசு, சமீபத்தில் மியான்மர் அதிகாரிகளைக் கூப்பிட்டு மரியாதை செய்ததற்குக் காரணம் அவர்களிடமிருக்கும் எண்ணெய் வயல்களைக் குத்தகைக்கு எடுப்பதற்குத்தான், ஆனாலும் பயனில்லை. சைனா தனது கப்பற்படைத் தளத்தை அங்கு கொணர முயற்சிக்கிறது, இந்தியா தனது எதிர்ப்பை ஏற்கனவே தெரிவித்திருக்கிறது.

7. இதற்கிடையில் இந்தப் பிராந்தியத்திற்கே சம்பந்தமில்லாத அமெரிக்கா தனது படைகளை மியான்மரில் நிலைநிறுத்தும் வகையாக ஐநா பாதுகாப்பு சபைத் தீர்மானம் என்ற ஆயுதத்தை இன்று எடுத்துக் கொண்டிருக்கிறது. ஆசியான் நாடுகளெதுவும் அமெரிக்கா இராணுவ நடவடிக்கையை எதிர்த்து முணுமுணுக்கக் கூட திராணியற்றவை. இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படப் போவது, இந்தியாவும் சைனாவும் தான். மேலும் இது வெறும் படை நிறுத்தும் ஒரு உத்தியாக மட்டுமில்லாமல், இந்தியா மற்றும் சைனா நாடுகளின் எண்ணெய்த் தேவை மற்றும் அதன் சார்ந்த வர்த்தகத்திலும் அது தலையிடுவதாக அமைகிறது.

மற்றபடி அமெரிக்காவிற்காவது ஜனநாயத்தை நிலைநிறுத்தும் அக்கறையாவது.

ஆக தெற்காசியப் பிராந்தியத்தில் நீண்ட நெடுங்காலமாக எதிர்பார்த்திருந்த பனி யுத்தம் தற்போது ஆரம்பமாகிவிட்டதாகவே தோன்றுகிறது. இதில் யார் யார் பக்கம் என்பது இன்னும் கொஞ்ச நாட்களில் தெரியக்கூடும். அதாவது இந்தியாவும் சைனாவும் அமெரிக்காவிற்கு எதிராக கை கோர்க்குமா.. அல்லது இந்தியாவும் அமெரிக்காவும் சைனாவிற்கு எதிராக கை கோர்க்குமா என்று தெரியவில்லை.

பொறுத்திருந்து பார்க்கலாம். நாளை எதுவும் நடக்கலாம்.

மாத்தையாவின் கதை - 2

புலேந்திரன் குமரப்பா உட்பட 17பேர் சயனைடு உண்டு மரணம் அடைந்த நிகழ்வில் முக்கியத்துவம் என்னவென்றால், இதன் மூலம் தான் இந்திய அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு வெளிப்படையாக உலகுக்குத் தெரியவந்தது. இதற்கு முன்பே திலீபனின் உண்ணாவிரதம் மூலம் அது வெளிப்படுத்தப்பட்டாலும், 17 பேரின் மரணம் ஈழத்தமிழர்களிடையே இந்திய அரசின் மீதான கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இராமேஸ்வரத்திலிருந்து வந்து கொண்டிருந்த அந்தப் படகை போர்நிறுத்தக் காலகட்டத்தில் வம்படியாக இலங்கை இராணுவம் வழிமறித்து 17 பேரையும் கைது செய்தபோது, இயக்கம் இந்திய அரசு அதில் தலையிட்டு அவர்களை விடுதலை செய்யும் என்று நம்பியது. அதாவது இந்திய இராணுவம் போர்நிறுத்தத்தை நிலை நிறுத்துவதுடன் தமக்குச் சாதகமான ஒரு அமைப்பாகச் செயல்படும் என்றுதான் அவர்கள் நம்பியிருந்தனர். அப்படித்தான் இந்திய அதிகாரிகள்
உறுதியளித்திருந்தார்கள். ஆனால் நடந்ததோ வேறு.

இந்திய இராணுவம் தலையீட்டின் பேரில் சிறைச்சாலைகளில் அடைக்கப்படாமல் பலாலி இராணுவத் தளத்தில் இந்திய அரசின் படை முகாமில் இருக்க வைப்பதற்காக அவர்களை பிரிகேடியர் பெர்னான்டஸ் என்ற அதிகாரி கடற்துறையிலிருந்து பலாலி தளத்திற்கு BMP எனப்படும் இன்பான்ட்ரி வாகனத்தில் அழைத்து வந்தார். அவர்கள் பலாலி தளத்தில் இந்திய விமானப்படை அதிகாரிகளின் தற்காலிக உணவருந்துமிடத்திற்கு கீழ் காக்க வைக்கப்பட்டனர். இரு வளையமாக அவர்கள் காவலில் இருத்தப்பட்டனர். வெளிப்புறம் ஏகே47 உடன் இலங்கை இராணுவமும் மறுவளையத்தில் இந்திய இராணுவ அதிகாரிகளுமாக காவலில் இருந்தனர். மிகவும் பரபரப்பான காலகட்டம் அது. அந்தச் சூழலில் பிரபாகரன் கூட வந்து அவர்களை பார்த்துவிட்டுச் சென்றதாக ஒரு செய்தி உண்டு. எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை.

இயக்கம் இந்திய ராணுவத்திற்கு விடுத்த வேண்டுகோள் என்ன வென்றhல் அவர்களை கொழும்புவிற்கு அழைத்துச் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மீறி நடந்தால் விளைவுகள் விபரீதமாகக் கூடும் என்று பதவுரையும் கூறப்பட்டது.

5 அக்டோபர் 1987 அன்று பிரிகேடியர் பெர்னான்டஸிற்கு காலையில் வந்த கடிதத்தைப் படித்து விட்டு மிகவும் சோர்வுடனும் கவலையுடனும் காணப்பட்டார். வேறான்றுமில்லை. 17 பேரையும் கொழும்புவிற்கு அழைத்துச் செல்ல வரும் விமானத்தில் ஏற்றி அனுப்பச் சொல்லியிருந்தது. பிரிகேடியர் பெர்னான்டஸ் தனது படையினரை அழைத்து ஒரு அவசரக் கூட்டம் நடத்தினார். பிறகு...

அது HS748 என்ற ஆவ்ரோ ரக விமானம் சப்ளைஸ் எனப்படும் வீரர்களுக்குத் தேவையான பொருட்களுடன் கொழும்பிலிருந்து வருகின்ற நேரம். பிரிகேடியருக்கு அந்த விமானத்தில் ஏற்றி அனுப்பச் சொல்வார்களோ என்ற பதற்றத்துடன் காத்திருந்தார். அந்த ஆவ்ரோ விமானத்தை டிசில்வா என்ற விமானி ஓட்டி வந்தார். வழக்கம்போல் விமானத்தை தாழ இறக்கி ஓடுபாதையில் வரும்போதுதான் டிசில்வா கவனித்தார். ரன்வேயின் இருபுறமும் இன்பான்ட்ரி வாகனங்கள் விமானப் போக்கிலேயே ஊர்ந்து கொண்டிருந்தன. வந்து சேரவேண்டிய இடத்தில் வந்து விமானத்தை நிறுத்திய பிறகு மற்றெhரு இன்பான்ட்ரி வாகனம் சரக்கு இறக்கும் பின்பக்கக் கதவை ஒட்டி வந்து நின்று கொண்டது. அனைத்துமே இந்திய இன்பான்ட்ரி வாகனங்கள். டிசில்வாவுக்குப் பயங்கரக் கோபம். வேகமாக மெஸ்ஸிற்குள் வந்தவர் சப்ரே என்ற இந்திய விமானியைப் பார்த்து சத்தம் போட்டார். இவ்வளவு அருகாமையில் வண்டி வந்தால் என் பிளேனுக்கு என்னாவது. உங்களுக்கு என்ன ஆயிற்று என்று கத்தினார். அதற்கு சப்ரே அமைதியாக இப்போது அவர்களைக் கொழும்புக்கு
அழைத்தப் போவது தானே உன் திட்டம் என்று கேட்டார். அப்படி எல்லாம் எனக்குத் தகவல் இல்லை என்று அதே கோபத்துடன் சத்தம் போட்ட டிசில்வாவைப் பார்த்து சப்ரே புன்னகை பூத்தார். அப்படியானல் நீ ஒன்றும் அனாவசியக் கவலை கொள்ள வேண்டியதில்லை என்றhர். பிறகு அச்சு{ழல் வெடிச்சிரிப்புடன் உற்சாகக் காலையாக மாறியது.

ஆனால் சந்தோஷம் அதிக நேரம் நிலைக்கவில்லை. மதியமே பெர்னான்டஸிற்கு தகவல் தரப்பட்டது. இலங்கை விமானமொன்று வரும் அதில் அவர்களை ஏற்றியனுப்ப வேண்டும். பெர்னான்டஸிற்கு நிலைமையின் தீவிரம் புரிந்தது.

யாரோ எடுக்கும் முடிவு, பாவம் அவர் என்ன செய்வார்.

விமானமும் வந்திறங்கியது. சோர்வாக தலையில் கைவைத்தபடியே மௌனமாக தளர்ந்து நடந்து இயக்கத்தினர் இருக்க வைக்கப்பட்டிருந்த தளத்திலிருந்து மெதுவாக வெளியேறினார் பிரிகேடியர் பெர்னான்டஸ். பெர்னான்டஸின் உத்தரவிற்கேற்ப இந்தியப் படை விலகிக்கொள்ள இலங்கைப் படை ஏந்திய துப்பாக்கிகளுடன் தபதபவென ஓடினார்கள். அதற்குள் பதினேழு பேரும் சயனைடு சாப்பிட்டிருந்தார்கள். இலங்கை இராணுவத்தினர் அவர்களின் தலையைத் தரையில் மோதி சயனைடு
குப்பியை வெளித்துப்ப வைக்க முயற்சி செய்தார்கள். முடியவில்லை. 15 பேர் தளத்திலேயே மாண்டனர். எஞ்சிய இருவரை இந்திய இராணுவம் மருத்துவ மனைக்குக் கொண்டு சென்று காப்பாற்ற முயன்றது. ஆனாலும் பலனில்லை. பெர்னான்டஸ் தனது இயலாமையை வெளிக்காட்ட முடியாமல் மௌமாக ஒரு பக்கம் இரு கைகளாலும் தலையைப் பிடித்துக் கொண்டு
உட்கார்ந்திருந்தார்.

சயனைடு சாப்பிட்ட செய்தி பரவியவுடன் இயக்கத்தினர் ஒரு வெள்ளை நிற வோல்க்ஸ்வேகன் வேனிலும் ஒரு வெள்ளை நிற டயோட்டா பிக்கப்பிலும் வந்து அனைவரது உடல்களையும் பெற்றுச் சென்றனர். வேன்கள் வெளிச் செல்லும் போது இந்திய அரசிற்கு எதிரான கோஷங்கள் பலத்து ஒலித்தன. அந்தக் கோஷங்கள் வரப் போகும் பெரிய ஆபத்தைக் கட்டியங் கூறுவதாக மாதிரிதான் இருந்தது.

அன்று மாலையே காங்கேசன்துறையில் ஆரம்பித்த துப்பாக்கிச் சத்தம் பிறகு இந்திய அமைதிப்படை இலங்கையை விட்டு வெளியேற்றப்படும் வரை ஓயவில்லை.

அந்த இந்திய எதிர்ப்பு மாத்தையாவால் தான் முதன் முதலில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பிற்பாடு அது இராசிவ் காந்தி கொலை வரை சென்ற போதும் மாத்தையாவின் பெயர் இந்திய அரசின் குற்றப்பட்டியலில் இடம் பெறாமல் போன மர்மம் என்ன..?

(இன்னும் வரும்)

மாத்தையாவின் கதை - 1

மஹேந்திரராசா என்கிற மாத்தையாவின் கதை இது.

இது அவர் தமிழீழ விடுதலை இயக்கத்தில் சேர்ந்து அவர்களாலேயே கொல்லப்படும் வரையிலான காலகட்டத்தில் நடந்த வெளி உலகுக்கு தெரிய வராத சில அரிய விஷயங்களைக் கொணரும் விதமாக எழுதப்படுகிறது. பல்வேறு ஊடகங்களில் வந்த செய்திகளை அடிப்படையாகக் கொண்டே எழுதப்பட்டது. ஆட்சேபனைகள், மாற்றுக் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

1956-ஆம் ஆண்டு பருத்தித்துறையில் பிறந்த மஹேந்திரராசா என்கிற மாத்தையா 1978ஆம் வருடம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். வல்வெட்டித்துறையைச் சேர்ந்தோரே பெரும்பான்மையாக இருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பருத்தித்துறையைச் சேர்ந்த ஒரு இளைஞன் இயக்கத்தின் இரண்டாம் நிலைக்கு வருவது உண்மையில் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம்தான்.

பிரபாகரனின் காரையார் இனத்தைச் சேர்ந்த மாத்தையாவை பிரபாகரனே நேரடியாக விரும்பி தனது இயக்கத்தில் சேர்த்துக்கொண்டதுடன் நிற்கவில்லை. கூடிய சீக்கிரம் வன்னிப் பகுதியின் பிரதிநிதி என்ற அந்தஸ்திற்கு உயர்ந்தார். அதேசமயம் யாழ்ப்பாணப் பகுதிக்கு பிரதிநிதியாக இருந்த கிட்டு என்கிற சதாசிவம் கிருஷ்ணகுமாரும் மாத்தையா சேர்ந்த அதே சமயத்தில்தான் பிரபாகரனால் சேர்த்துக்கொள்ளப்பட்டார். ஆனால் கிட்டுவின் வளர்ச்சி மாத்தையாவின் வளர்ச்சியைவிட அதிகமாக இருந்தது. ஒரு வேளை கிட்டு வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர் என்பதற்காக இருக்கலாம்.

மார்ச் 31, 1987ல் யாழ்ப்பாணத்தில் இரண்டாம் குறுக்குத் தெருவில் கிட்டு பயணம் செய்த மிட்ஷீபுஷி லான்சரில் எறியப்பட்ட கையெறி குண்டில் கிட்டு தப்பித்தாலும் தனது ஒரு காலை இழந்தார். அது வேறுவகையில் கிட்டுவின் வளர்ச்சியைப் பாதித்தது. இந்த ஊனம் அவரது களப்பணித்திறமையை வெகுவாகக் குறைக்க, வேறு வகையான பணிகள் அவருக்குத் தரப்பட்டது. கிட்டுவின் பொறுப்புகள் மாத்தையாவிற்குத் தரப்பட்டது. இவ்வகையாய் மாத்தையா பிரபாகரனின் நேரடிக் கவனத்தையும் மற்றும் இயக்கத்தில அதிமுக்கியத்துவத்தையும் பெற்றhர்.

இதற்குப் பிறகு வட-கிழக்குப் பகுதி இடைக்கால அரசு அமைப்பதான இந்திய ஒப்பந்தத்தில் இயக்கத்தின் சார்பாக இரண்டாம் நிலைத் தலைவர் என்ற தகுதியில் மாத்தையா கையெழுத்திடும் அளவுக்கு அவரது முக்கியத்துவம் அதிகமானது.

இந்த ஒப்பந்தம் உருவாவதற்கு சற்று முன் பிரபாகரன் மாத்தையாவிற்கு இட்டகட்டளை என்ன தெரியுமா?


அதாவது செப்டம்பர் 11, 1987ஆம் நாள் மாத்தையா தனது உதவியாளரான யோகியுடன் பட்டிகோலாவில் ரீகன் மற்றும் கருணா (பிற்பாடு தலைவலியாகிப் போன அதே கருணா தான்) ஆகியோருடன் ஒரு ஆலோசனை நடத்தினார். அதாவது 100 போராளிகளை பல்வேறு சிறு குழுக்களாக அனுப்பி EPRLF, PLOTE and ENDLF ஆகிய குழுக்களைச் சேர்ந்தோரை "கவனிப்பது".

செப்டம்பர் 13ல் மாத்தையா ப்ளோட் (PLOTE) இயக்கத்தைச் சேர்ந்த வாசுதேவனை அமைதிப் பேச்சுப் பேச அழைத்திருந்தார். வாசுதேவன் வரும் வழியில் அவரை ஆயுதந்தாங்கிய சிலர் கொன்றனர். அதன்பின் இரண்டு மணிநேரத்திற்குள் குறைந்தது 70 பேர் கொல்லப்பட்டிருந்தனர். அனைவரும் இன்னபிற போராளிக்குழுக்களின் உறுப்பினர்கள். இந்த ஆபரேஷன் மாத்தையாவால் அவதானித்து நடத்தப்பட்டதாகும்.

அக்டோபர் 2, 1987ல் பருத்தித்துறையில் தமிழகத்திற்கு ஆயுதங்கடத்தியதாக 17 புலிகளை இலங்கை இராணுவம் கைது செய்தது. அவர்கள் சயனைடு குப்பியைக் கடிப்பதற்குள் அது அவர்களிடமிருந்து பறிக்கப்பட வேறு வழியின்றி கைது செய்யப்பட்டு பலாலி இராணுவ தளத்தில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் புலேந்திரனும் குமரப்பாவும் மிக முக்கியமான கமாண்டர்கள். பிற்பாடு அவர்களை விமானம் மூலம் கொழும்புவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அவர்களை பலாலி இராணுவ முகாம் சென்று பார்த்தனர் மாத்தையாவும் அண்டன் பாலசிங்கமும். இதற்கு ஏன் இவ்வளவு விளக்கம் என்றால், இவர்கள் இருவரும் அங்கிருந்து கிளம்பிய சில மணிகளில் பதினேழு போராளிகளும் சயனைடு சாப்பிட்டு இறந்து போயினர். அவர்களுக்கு வேறு வழியில்லாமல் போனது. ஒன்று சயனைடு அல்லது சித்திரவதைக்குப் பின் மரணம். ஆக மரணம் உறுதியாயிப் போனபின் சொர்க்கத்திற்கு சுலப வழியான சயனைடு வழியை அவர்கள் தேர்ந்தெடுத்தனர்.

இதில் இலங்கை அரசிற்கு அதிர்ச்சி என்ன வென்றால் யார் அந்த சயனைடு குப்பிகளை அவர்களுக்குக் கொடுத்திருப்பார்கள் என்பது தான். மாத்தையாவையும் பாலசிங்கத்தையும் தவிர வேறு யாரும் அவர்களைச் சந்திக்க வில்லை. விளங்குகிறதா உங்களுக்கு..? பிரபாகரனின் உத்தரவு, வேறு வழி.

இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பின் மாத்தையா, விடுதலைப்புலிகளின் இந்தியஇராணுவ எதிர்ப்பை, காங்கேசன்துறை சிமிண்ட் பேக்டரி வாசலில் வைத்து இராக்கெட் ஏவி ஐந்து இந்திய இராணுவ வீரர்களைக் கொன்றதன் மூலம் ஆரம்பித்து வைத்தார். பிற்பாடு நடந்த கதைதான் தெரியுமே. இராஜpவ் காந்தி கொலை வரை அது தொடர்ந்தது.

அதன் பிறகு இயக்கத் தலைமையகம் வன்னிக் காடுகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. 17 தினங்களில் யாழ்ப்பாணம் முழுமையும் இந்திய இராணுவம் கைகளில் வீழ்ந்தது. மாத்தையா புத்து[[}ரிலும் பிரபாகரன் ஆலம்பில்லிலும் (alampil) எந்தத் தொடர்புகளுமின்றி சிறிது காலம் கழிக்க வேண்டி வந்தது. அப்போதுதான் என்னன்னவோ மாற்றங்கள் மாத்தையாவிற்குள் நடந்திருக்கிறது. அது என்ன? அது மாத்தையாவின் வளர்ச்சியை எப்படிப் பாதித்தது?

(இன்னும் வரும்)

(பின் குறிப்பு : இங்கு இயக்கம் என்று குறிக்கப்படுவது LTTE யைக் குறிக்கும்)

டியர் பிரின்சிபால்..

டியர் பிரின்சிபால்..

எப்படி இருக்கிறீர்கள். தற்போது தாங்கள் திருச்சியில் இருக்கிறீர்கள் என்று மாதேஸ்வரன் சொன்னான். உடம்புக்குச் சரியில்லாமல்தான் வீட்டில் இருக்கிறீர்கள் என்று சொன்னார்களே.. உடம்பைப் பார்த்துக்கொள்ளுங்கள்.

எங்களை எங்களது தாய்தகப்பன்கூட அடிச்சதில்லை. ஆனா நீங்க பலபேருக்கு முன்னாடி வைச்சு எங்களை கன்னத்தில அறைஞ்சீங்க.. அவமானமாவும் அசிங்கமாகவும் இருந்துச்சு. ஏன் அடிச்சிங்க தெரியுமா? நைட் இராமநாதபுரம் ஜெகன் தியேட்டரில் வருஷம் 16 படம் பார்த்துவிட்டு லாரியின் உச்சிமேல் உக்கார்ந்து வந்தோமே.. அப்புறம் வாட்ச்மேன் கதவைத்திறக்கமாட்டேன்ன பிறகு.. அவனுக்குத் தெரியாமா பின்பக்கவழியாப் போய் ஹாஸ்டலுக்குள்ள சுவரேறிக் குதித்து உள்ளே போனதற்குத்தானே அடிச்சீங்க..

அந்த ராமச்சந்திரன் மட்டும் போட்டுக் கொடுக்கலைன்னா நாங்க இந்த மாதிரி வந்ததெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும். சரி விடுங்க... அடிச்சது அடிச்சுப்புட்டு நான் உங்களுக்கெல்லாம் தகப்பன் மாதிரி.. நான் உங்கள நல்வழிப்படுத்துறத்துக்குத்தான் அடிப்பேன்னு வேறு சொல்வீங்க..

உண்மைதாங்க...

நான் இன்னைக்கு இந்த வலைப்பூவை சிங்கையிலிருந்து எழுதுற அளவுக்கு நாங்கள்ளாம் வளர்ந்திருக்கோம்னா.. அதுக்கு நீங்க ஒரு முக்கியக் காரணம்ங்க...

நாங்கள்ளாம் ஒழுங்கா கிளாஸ்க்கு வர்றதில்லைன்னு காலையில ஏழே முக்கால் மணிக்கெல்லாம் ஹாஸ்டல் வந்து ஒவ்வொரு ரூமாப் போய் து[ங்கிக் கிட்டிருக்கவனையெல்லாம் எழுப்பிவிட்டு கிளாஸீக்கு ஓட வைப்பிங்களே... அது மட்டுமா.. உங்க கார் TCZ3265 வருதுன்ன உடனே தப்பி ஓடுவானே சுகுமாரு... அவனைத் தனிய கார்ல போய் விரட்டி கூட்டிட்டு வருவியளே.. அதெல்லாம் மறக்க முடியுமா..

ஒரு நா இராத்திரி மூனாவது மாடில திருச்சி சிராஜ ரூம்ல பாசித், ஜெயா, அஸ்பாக் இன்னும் அவங்க கோஷ்டியெல்லாம் சீட்டு விளையாடிக்கிட்டிருந்தாய்ங்க.. காலைல மூணு மணிக்கு வந்து இந்தப்பயலுக ஆட்ட மும்முரத்தில நீங்க பின்னாடிலருந்து ரம்மி எடுத்துக் கொடுத்தது கூட தெரியாம விளையாடிக்கிட்டிருந்தாயங்களே...


இறைவன் இப்ப என்முன்னாடி வந்து ஒரே ஒரு வரம் கொடுன்னு கேட்டா நான் என் காலேஜலே வாழ்ந்த அந்த நாள மறுபடி ஒருமுறை வாழனும்தான் கேட்பேன்..

உங்கள ஒரு ராட்சசனா நினைச்சுக்கிட்டிருந்த எங்களுக்கு பைனல் இயரில Heat and Mass Transfer கிளாஸ் எடுத்தப்போ உங்களப் பத்திய நினைப்ப ஒரு மரியாதைக்குரிய புரொபஸர்ங்கிற அளவில எங்களுக்கு உணர்த்தினிங்களே .. அது உண்மையிலேயே எங்களின் பொன்னான நேரம். We realised that you are a world-class teacher.

அரைக்கை வெள்ளைச் சட்டை போட்டுக்கிட்டு நாலு முழ வேட்டி கட்டிக்கிட்டு நெத்தி நிறைய பட்டை அடிச்சிக்கிட்டு அய்யர் மாதிரியே திரிவானே மாதேசு... அவந்தானே உங்களுக்குப் பெட்டு... எதாருந்தாலும் அவங்கிட்டதானே முதல்ல சொல்லுவிய... அந்தப் பய இப்ப என்ன பன்றான் தெரியுமா... அவன் இப்ப பிரின்சிபாலாம்... அதுவும் ஒரு இன்சினியரிங் காலேஜக்கு... ஆச்சரியாமாகவும் இருக்கு... இந்த சான்டிப் பயலைப் பாருங்க ... போடிமெட்டுலேருந்து வந்துட்டு இன்னைக்கு MITலே புரபஸரா இருக்கான்க... என்னன்னமோ பேப்பர் எழுதிக்கிட்டிருக்கான்... பெருமையா இருக்குங்க...

அவிங்க மட்டுமா... அமெரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியாவரை நம்ம பயலுவ பரவிக்கிடக்கிறாய்ங்க தெரியுமா... இதுல முக்கியமா நாங்க எல்லோரும் ஒருத்தரோட ஒருத்தர் ஈமெயில் மூலமாவும் சாட்டிங்க மூலமாவும் தொடர்பு வச்சிக்கிறோம்... நாங்க நாலுபேர் கூடிப் பேசுனோம்னா.. உங்களைப்பத்திப் பேசாம இருக்கமாட்டோம்.

உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னாங்க... திருச்சிக்கு வந்து அவசியம் பார்க்கிறேன்ங்க. கண்டிப்பா எங்களையெல்லாம் மறந்திருக்க மாட்டியன்னுதான் நினைக்கிறேன்.. ஆனாலும் பராவாயில்லை... எங்களை நீங்க ஞாபகம் வச்சிக்கிற வேண்யதில்லை...குருவைத்தாங்க சிஷ்யன் ஞாபகம் வைச்சிக்கனும் தன் வாழ்நாள் வரை... குருவுக்கு அந்த கட்டாயமில்லை... தகப்பனுக்கு அப்புறம் உள்ள ஸ்தானம்ல உங்களுக்கு.. மாதா பிதா குரு அப்புறந்தானே தெய்வமெல்லாம்...

இன்னம் நிறைய எழுதனும்னு தோனுதுங்க... பாருங்க கண்ணெல்லாம் ஒரே கலங்கலாக இருக்கு... நீங்க நல்லாருக்கனும்..

ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் - PART 2

ஈழப்போராட்டத்தின் இன்றையப் போக்கு மிகவும் கவலையளிக்கும் நிலையைப் போய்க்கொண்டிருக்கிறது என்ற தோற்றத்தை உருவாக்குகிறது. புலிகள் பலவீனப்பட்டிருக்கிறார்களோ என்ற எண்ணத்தை வெளிப்புறத்தில் ஏற்படுத்தினாலும், இது போன்று முன்பு ஏற்பட்ட சூழ்நிலைகளை எப்படி தமக்கு சாதகமாக்கினார்கள் என்பது வெளிப்படை.

சமாதானப் பேச்சு வார்த்தை ஊசலாட்டம், பல்வேறு நாடுகளில் அமைப்புச் செயல்பாடுகளுக்குத் தடை, பொருளாதார ரீதியிலான உதவிகள் முன்னெப்போதும் இல்லாதவாறு கூர்ந்து கவனிக்கப்படுதல், இவ்வாறாக உலக அரங்கில் பல்வேறு வகையிலும் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் ஈழப்போராட்டம் தற்சமயம் தமிழகப் பிரமுகர்களின் தயவை நாடஆரம்பித்திருப்பது போல் தெரிகிறது.

சமாதானப் பேச்சு வார்த்தை என்பது இதற்கு முன்பும் இந்தியாவால் நடத்தப்பட்டிருக்கிறது. அப்போதெல்லாம் ஆயுதங்களை ஒப்படைப்பதாக ஒரு பகிரங்க நாடகம் நடந்தது.. உண்மையில் சமாதனம் என்பது ஆயுதபலங்களைப் பெருக்கிக் கொள்ளவும் தேவையான பயிற்சிகளை
மேற்கொள்வதற்குமாகவே இதுவரை பயன்பட்டு வந்திருக்கிறது... மூன்று வருட ஆயுதச் சேர்க்கையையும், ஆட்களின் பயிற்சியையும் சுனாமி அநியாயமாக சேதம் செய்து விட்டது அவர்களின் துரதிர்ஷ்டமே..

இந்தியமண்ணில் இந்திய அரசின் நீதித்துறையின் ஆணைப்படி பிரபாகரன் தேடப்பட்டு வரும் குற்றவாளி.. அந்த இயக்கம் தடைசெய்யப்பட்ட இயக்கம்... உலக அரங்கில் பகிரங்கமாக ஆதரவு பெற இயலாத சூழல்.

இருக்கின்ற வாய்ப்புகள் மிகச்சில மட்டுமே..

1. இந்தியாவை எப்பாடு பட்டாவது இலங்கைப் பிரச்னையில் தலையிட வைப்பது.

2. தமிழக அரசியல் மற்றும் சினிமா பிரமுகர்களை ஈழப்போராட்டத்தின் இழப்புகளைச் சுட்டி அனுதாப அலையை ஏற்படுத்தும் வகையில் பேச, பொதுக்கூட்டங்கள் நடத்த, பத்திரிகைகளில் எழுத ஏற்பாடு செய்வது.

3. ஊடகங்களை தன்பக்கம் திரும்ப வைப்பது.

இந்தியாவின் உதவியை இலங்கை அரசு மிகவும் எதிர்பார்த்தது. அமரர் இராஜவின் படுகொலைக்குப் பின் இலங்கை விவகாரத்தில் இந்திய அரசு நடுநிலை வகிப்பது என்பதை விட வேடிக்கை பார்ப்பதான ஒரு தோற்றம் தெரிந்தது.

ஆகவே, நார்வேயை விடுதலைப்புலிகள் அமைப்பும், அமெரிக்கா, பாகிஸ்தான் மற்றும் சீனா என இந்தியாவிற்கு எதிரான அனைத்து நாடுகளையும் இலங்கை நாடி சமாதானப் பேச்சு வார்த்தைக்கு வந்து நிற்க... சமாதன ஒப்பந்தம் ஏற்பட்டு ஆண்டுகள் மூன்றாகிப்போன.
ஆனால், உண்மையில் இந்தச் சமாதான நாடகத்திற்குப் பிண்ணனியில் ஆயுதச் சேகரிப்பும், ஆயுதப் பயிற்சியுமே முக்கிய நோக்காக இருபக்கத்தினருக்கும் இருந்திருக்கிறது. கொழும்பு விமானநிலையத்தாக்குதலுக்குப்பின் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதாரவீழ்ச்சி இலங்கை
அரசை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்க வைத்திருக்கக்கூடும்.


ஆக இலங்கை அரசிற்கும் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கும் இந்தியா தலையிடுவதில் பல நன்மைகள் உள்ளன. ஆனால் தொலைவிலிருந்தே நடப்பவற்றை வேடிக்கைபார்க்கும் மனோநிலையில் இருந்த இந்தியாவை சமீபத்திய பாகிஸ்தான் நெருக்கம் உசுப்பி விட்டிருக்கிறது என்றே தோன்றுகிறது. பாகிஸ்தான் து{தர் சமீபத்தில் தாக்கப்பட்டதில் ரா வின் கைங்கர்யமாக இருக்கலாம் என்ற உறுதிப்படுத்தப்படாத வதந்தி உலவுகிறது.

இலங்கையில் தற்போது மற்ற நாடுகளின் SWEETSPOT திரிகோணமலை துறைமுகம் தான். அதில் ஆர்வம் காட்டுவோர் மூவர்..

அமெரிக்கா, சீனா, சமீபமாக பாகிஸ்தான். சீனாவின் திரிகோணமலை எண்ணைக் கொள்கலன் ஏற்பாடு இந்தியாவால் முறியடிக்கப்பட்டதால்... அவர்கள் மாலே (மாலத்தீவு) விற்கு சென்றுவிட்டனர்... அதுவும் இந்தியாவின் ரேடாரில் கண்டிப்பாக இருக்கும்.

அமெரிக்கக் கம்பெனிகள் இந்தியாவில் தனது முதலீட்டை வருடாந்திரம் அதிகரித்துக் கொண்டு வருகின்ற இச்சூழலில் இந்தியாவிற்கு எதிரான செயல்களில், குறிப்பாக இந்தியப் பொருளாதாரம் சீர்குலையும் செயல்களில் இறங்குவதற்குத் தயங்கும்.. ஆகவே அமெரிக்காவால் எந்தப் புண்ணியமும் இலங்கைக்கு நேரடியாக கிடைக்கப்போவதில்லை.

ஆகவே எதிரிக்கு எதிரி நண்பன். பாகிஸ்தானைக் கூப்பிட்டு உதவிகேட்க... இதுதான் தருணம் என்று முன்னாள் ஐஎஸ்ஐ தலைவர் வந்து து]தராகிக் கொண்டார். கூடங்குளம் அணுமின் நிலையம், கல்பாக்கம் அணுமின் நிலையம் போன்ற முக்கிய இடங்கள் இருப்பது தமிழகக்
கடற்கரை அல்லவா... ஆகவே.. அது சம்பந்தமான போக்குவரவுக்கு எப்படி இலங்கையில் கால்பதிப்பது என்றிருந்த பாகிஸ்தானுக்கு இது மிகவும் உற்சாகத்தை அளித்திருக்கும்.

இந்தியாவின் எல்லை இந்தியப் பெருங்கடலில் அந்தமான் நிகோபார் தீவுகள் வரை உள்ளது. இலங்கை அந்த எல்லைக்குள் தானே வருகிறது. ஆக பெரும்பாலான வலைப்பதிவாளர்களின் ஆசையான இந்தியாவின் இருபத்தியாறாம் மாநிலமாகும் அனைத்துத் தகுதியும் இலங்கைக்கு
இருக்கிறது.

சேது சமுத்திரத் திட்டம் பல நாடுகளின் கூட்டல் கழித்தல்களை மாற்றிக் கொண்டிருக்கிறது என்பது உண்மை. சேது சமுத்திரத் திட்டம் ஏற்பட்டால் கப்பல் கட்டுமானத் தொழில், கப்பல் ரிப்பேர் தொழில் மற்றும் ட்ரான்ஸிப்மென்ட் எனப்படும் கப்பல் வர்த்தகம் ஆகியவை
து[த்துக்குடிக்கும் கொளச்சல் துறைமுகத்திற்கும் வருங்காலத்தில் போகக் கூடிய வாய்ப்புள்ளது. திரிகோணமலை துறைமுகம் வர்த்தக ரீதியிலான முக்கியத்துவத்தை இழக்கக் கூடும், மற்றபடி இராணுவ ரீதியான முக்கியத்துவம் அப்படியேதான் இருக்கும்.

இதில் மற்றுமொரு முக்கியத்துவம் அணுமின் நிலையங்களையடக்கிய தென்னிந்திய கடற்கரையோரத்தில் உடனடியாக இராணுவப் போர்க்கப்பலை விசாகப்பட்டிணம் கடற்படைத் தளத்திலிருந்து கொண்டுவரக் கூடிய ஒரு சாத்தியக்கூற்றை அதிகப்படுத்தும். இலங்கையில் இரு கடற்புறங்களிலும் இந்தியாவின் இராணுவக் கப்பல்கள் ரோந்து போவது அவர்களுக்கு அவ்வளவு நல்லதல்லவே.. ஒன்று சமாதானமாகப் போவது அல்லது இந்தியாவின் எதிரிகளை அங்கு கொண்டு வந்து அமர்த்துவது.. இதுதான் இலங்கையின் போக்காக இருக்க முடியும். அதற்கு அவர்கள் பாகிஸ்தானைத் தேர்ந்தெடுத்ததுதான் பைத்தியக்காரத்தனம்.. அமெரிக்கா சொன்னால் மூத்திரம் வருவதைக்கூட அடக்கி வைத்துக் கொள்ளக் கூடிய பாகிஸ்தானைப் போய் இலங்கை நம்புவது பைத்தியக்காரத்தனமில்லாமல் வேறு என்னவென்பது...

கற்பாம்..காவியமாம்...

கற்பாம்..காவியமாம்...

இது ஒருபாடலின் தலைப்பு வரி... இந்தப்பாடல் வெளிவந்த காலத்தில் தடைசெய்யப்பட்ட பாடலாகும்.. இன்றளவும் அது மிகுந்த சர்ச்சைக்குரிய பாடலாகவே இருக்கிறது... இந்தப்பாடலை எழுதியவர் கவிப்பேரரசு கண்ணதாசன் அவர்கள்.... (முதலில் கண்ணதாசன் தான் இப்படி கவிப்பேரரசு என்று அழைக்கப்பட்டார். அவரின் மறைவுக்குப் பிறகு... இப்பட்டத்தை எடுத்து திரு வைரமுத்துவிற்குச் சூட்டிவிட்டார்கள்)..

சரி.. விஷயத்திற்கு வருவோம்....

கற்பு.. கற்பு என்கிறார்களே... அதை எத்தனை பெண்கள் சரியாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள்.. இதை வெளிப்படையாக எந்தப் பெண்ணிடமும் பேசமுடியாததால்..இந்த வலையூட்டம் தேவையாகிப் போனது... அது மட்டுமில்லால் பெரியாரைப் பற்றிப் பேசும்போதெல்லாம் தற்போது கற்பைப் பற்றியும் அனைவரும் பேசுகின்றனர்... நன்றி குஷ்பு.....

கற்பு என்பது கடைச்சரக்கா... இல்லை... அல்லது உடலின் ஒரு பாகமா..?? அதுவும் இல்லை... பின் என்னதான் கற்பு???

கற்புநெறி என்றுதான் தமிழிலக்கியம் சொல்கிறது... அதாவது நெறிப்படுத்தப்பட வேண்டியது கற்பு எனப்படுகிறது...கற்பு என்பது பெண்மைக்கு மட்டும் பொருந்துகிற விஷயமில்லை பலரும் இங்கு எழுதித்தள்ளியிருக்கின்றனர்.. ஆனால் கற்பென்றாலே பெண்ணை மட்டுமே
குறிப்பிடுகிறார்களே அது ஏன்? அதற்கு பெண்களும் உடந்தை வேறு...

ஒரு பெண் வன்பியல் புணர்ச்சிக்கு ஆளாகும் போது, தமிழச் சமுதாயம் அவளை கற்பிழந்தவள் என்கிறது... அதையே அந்தப் பெண்ணின் இசைவோடு நடக்கும் போது அது வெறும் புணர்ச்சி அல்லது சம்போகம் ஆகிறது....

ஆக கற்பு என்பது அந்தப் பெண்ணைப் பொறுத்த வி்ஷயம்.. அவள் கற்போடு
இருக்கிறாளா அல்லது கற்பழிந்து இருக்கிறாளா என்பது அந்தப் பெண் மட்டுமே தீர்மானிக்க வேண்டிய விஷயமாகப் போகிறது...

இன்னும் ஒருபடி மேலே போய் சிந்தித்தோமானால்... கற்பு என்பது ஒரு பெண்ணின் RESPONSIBILITY.

தான் ஒரு பொறுப்புள்ளவளாக ஒரு பெண் எப்போதும் தம்மைக் கருதுகிறாள்... தாயாக, தமக்கையாக, தங்கையாக, தாரமாக, இப்படி
எத்தனையோ பொறுப்புக்கள்.. பொறுப்புக்கள் அவள் மேல் பலவாறு சுமத்தப்பட்டுள்ளது... பிறப்பு முதல் இறப்பு வரை....

தான் ஒரு மங்கையாக.. பெண்மையைச் சுமந்து நிற்பவளாக இருக்கும் காலகட்டத்தில் அவளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஒழுக்க ரீதியான
மிகப்பெரிய பொறுப்பு கற்புநிலை அல்லது கற்புநெறி என்பது.... இது நிச்சயமாக உடல் ரீதியான விஷயமில்லை.. மனரீதியான விஷயம்..

ஆனால் இந்த சமுதாயமே அதை ஒரு உடல் ரீதியான ஒரு விஷயமாக பார்ப்பதுடன் ஒவ்வொரு பெண்ணையும் அவ்வாறே பார்க்க
வைத்திருக்கிறது...

தவறு செய்வது என்பது அல்லது தவற்றிற்கு ஆளாவது என்பது... சாலையில் வாகனத்தில் செல்லும் போது ஏற்படும் விபத்துப் போல... நாம் ஒழுங்காக சட்டப்படி சாலையில் செல்வோம்... ஆனால் எதிரில் வருபவர் அப்படி வரவில்லையென்றால் நம்மீது மோதி விட்டால் நமக்கு பாதிப்பு ஏற்படுமே அப்படித்தான்.... இது தானே ஏற்படுத்திக்கொண்ட விபத்தா அல்லது தம்மேல் ஏற்படுத்தப்பட்ட விபத்தா என்பதைப் பெண்கள் தெளிவாகச் சிந்தித்து உணரவேண்டும்...

ஒரு பெண் இவ்வாறான விபத்துக்கு உள்ளானவளானால் அவள் சற்றே சிந்திக்க வேண்டும்... தான் தன்னுடைய RESPONSIBILITY-யிலிருந்து தவறிவிட்டோமா என்று... மனசாட்சிப்படி தான் தவறவில்லை என்று ஒரு பெண் கருதுவாளேயெனில் அவளின் கற்பு நிலைபற்றி அவளே தீர்மானிக்க வேண்டும்...

கற்பைப் பற்றித் தீர்மானிப்பதை அப்பெண்ணிடமே இச்சமுதாயம் விடவேண்டும்... அதே சமயம் கற்பு என்பது ஒரு நெறி என்பதை
பெற்றோர்கள் ஊடகங்கள் சமுதாயம் ஆகியோர் பெண்களுக்கு உணர்த்தவேண்டும்... கற்பை நெறி என்று பரப்புவதை விட்டு அதை ஒரு
உடல்சார்ந்த விஷயமாக எல்லோரும் பார்க்கும் போது... பெண்கள் அது இரகசியமாக இருந்துவிட்டுப் போகும் வரை பிறருக்குத் தெரியாமல்
போகும் வரை தனக்கு எந்தத்தீங்கும் இல்லை என்றாய் நினைக்க வழி கோணுகிறது... இந்தக் கோட்பாட்டைக் கொண்டுதான் குஷ்பு
அம்மையார் தனது கற்பு நெறிக் கொள்கையைப் பற்றி விளக்கிக் கூற... மற்றவை தாங்கள் அறிந்ததே...

பெண்களும் மனித மனத்தினர்தான்.... தேவ, மனித, அசுர குணத்துடையோர் அவர்களுள்ளும் உள்ளோரே.... அவ்வாறானவர்கள் உண்மை மறுத்துரைத்தால் இது எப்படி... கற்பு நெறிபற்றி எப்படி அப் பெண்ணை நிரூபிக்கச் செய்வது... இது சற்று சிக்கலான கேள்விதான்... பெண்களுக்கும் மனசாட்சி உண்டு.... பிறழ்ந்து வாழும் அவர்களுக்கு அவர்களின் மனசாட்சியே அவர்களைக் கொன்றுபோடும் என்பது சாஸ்வதம்...

(இராமயணத்தில் சீதை தீக்குளிக்கவில்லையா...இன்றைக்கு எத்தனை சீதைகள் தீக்குளிக்கத் தயாராக இருக்கிறார்கள்... கோர்ட் படியேறி விட மாட்டார்கள்..?. அதே சமயம்... எவனோ ஒரு வண்ணான் சொன்னானேயென்று தன்னை தன் கணவன் தீக்குளிக்கச் செய்தானே என்ற கோபம் கொண்ட சீதை காட்டுக்குள் சென்றுவிட்டாள்... அவளுக்குத் தன் கணவன் தன்னைச் சந்தேகப்பட்டானேயென்பது தான் மிகப்பெரிய வருத்தம்...)

ஆக கற்பு என்பது ஒரு விவாதப் பொருளாகிவிட்ட நிலை மாறி அது பெண்களின் தன்னிலை சார்ந்த விஷயம் மற்றும் தன்னுடைய பொறுப்பு
என்கிற எண்ணம் பெண்களுக்கு வரவேண்டியது இன்றைய சூழலில் மிக முக்கியமாகும்...

விபச்சார விடுதியிலிருந்து மீட்கப்பட்ட பெண்களை மணந்து கொள்ளுவோர்.. கற்பழிக்கப்பட்டதாக ஊடகங்களில் அறியப்பட்ட பெண்ணை
திருமணம் செய்து கொள்ளுவோர்.. இவர்களையெல்லாம் பார்க்கும் போது எனக்கு உயரிய மரியாதை ஏற்படும்... அவர்கள் எப்படிப்பட்ட
உயர்ந்த மனநிலை உடையோராய் இருப்பர் என்று..

உண்மையில் கற்பென்றால் என்ன என்று இவர்கள் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்திருக்கின்றனர்...

மேற்படி கற்பு பற்றிய தெளிவை ஒவ்வொரு பெண்ணும் உணர்ந்தே இருக்கிறார் என்றுதான் நான் நினைக்கிறேன்... அனைத்துச் சகோதரிகளும் இதில் தவறிருந்தால் திருத்திச் சொல்லுங்கள்... சரியான கருத்துக்களை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்.

அடுத்த வலைப்பூவில்.... வன்பியல் புணர்ச்சிக்கு ஆளாகும் பெண்கள் ஏன் மிகுந்த மனவேதனைக்குள்ளாகிறாரகள் என்று பார்க்கலாம்...