Followup -2:மும்பையில் தாக்குதல்

Thanks to CounterCurrents.org

Also refer to this:

http://www.mid-day.com/news/2008/nov/281108-Nariman-House-terror-hub.htm

Mossad-CIA Connection To Mumbai Terror Attacks?

By Yoginder Sikand

29 November, 2008
Countercurrents.org

“O ye who believe! stand out firmly for God, as witnesses to fair dealing, and let not the hatred of others to you make you swerve to wrong and depart from justice. Be just: that is next to piety: and fear God. For God is well-acquainted with all that ye do.”

(The Quran, Surah Al-Maida: 8)


Numerous theories are doing the rounds about the dastardly terrorist assault on Mumbai. The dominant view, based on what is being suggested by the media, is that this is the handiwork of the dreaded Pakistan-based self-styled Islamist and terrorist outfit Lashkar-e Tayyeba, which, ever since it was ostensibly proscribed by the Government of Pakistan some years ago, has adopted the name of Jamaat ud-Dawah. This might well be the case, for the Lashkar has been responsible for numerous such terrorist attacks in recent years, particularly in Kashmir.

The Lashkar is the military wing of the Markaz Dawat wal Irshad, an outfit floated by a section of the Pakistani Ahl-e Hadith, a group with close affiliations to the Saudi Wahhabis. It has its headquarters at the town of Muridke in the Gujranwala district in Pakistani Punjab. The Markaz was established in 1986 by two Pakistani university professors, Hafiz Muhammad Saeed and Zafar Iqbal. They were assisted by Abdullah Azam, a close aide of Osama bin Laden, who was then associated with the International Islamic University in Islamabad. Funds for setting up the organization are said to have come from Pakistan’s dreaded official secret services agency, the Inter Services Intelligence (ISI). From its inception, it is thus clear, the Lashkar had the support of the Pakistani establishment.

The Lashkar started out as a paramilitary organisation to train warriors to fight the Soviets in Afghanistan. Soon it spawned dozens of camps across Pakistan and Afghanistan for this purpose. Militants produced at these centres have played a major role in armed struggles, first in Afghanistan, and then in Bosnia, Chechenya, Kosovo, the southern Philippines and Kashmir.

Like other radical Islamist groups, the Lashkar sees Islam as an all-embracing system. It regards Islam as governing all aspects of personal as well as collective life, in the form of the shariah. For the establishing of an Islamic system, it insists, an ‘Islamic state’ is necessary, which will impose the shariah as the law of the land. If, the official website of the Lashkar announces, such a state were to be set up and all Muslims were to live strictly according to 'the laws that Allah has laid down', then, it is believed, ‘they would be able to control the whole world and exercise their supremacy’. And for this, as well as to respond to the oppression that it claims that Muslims in large parts of the world are suffering, it insists that all Muslims must take to armed jihad. Armed jihad must continue, its website announces, ‘until Islam, as a way of life, dominates the whole world and until Allah's law is enforced everywhere in the world’.

The subject of armed jihad runs right through the writings and pronouncements of the Lashkar and is, in fact, the most prominent theme in its discourse. Indeed, its understanding of Islam may be seen as determined almost wholly by this preoccupation, so much so that its reading of Islam seems to be a product of its own political project, thus effectively ending up equating Islam with terror. Being born as a result of war in Afghanistan, war has become the very raison d'être of the Lashkar, and its subsequent development has been almost entirely determined by this concern. The contours of its ideological framework are constructed in such a way that the theme of armed jihad appears as the central element of its project. In the writings and speeches of Lashkar spokesmen jihad appears as violent conflict (qital) waged against 'unbelievers' who are said to be responsible for the oppression of the Muslims. Indeed, the Lashkar projects it as the one of the most central tenets of Islam, although it has traditionally not been included as one of the 'five pillars’ of the faith. Thus, its website claims that ‘There is so much emphasis on this subject that some commentators and scholars of the Quran have remarked that the topic of the Quran is jihad’. Further, a Lashkar statement declares, ‘There is consensus of opinion among researchers of the Qur'an that no other action has been explained in such great detail as jihad’.

In Lashkar discourse, jihad against non-Muslims is projected as a religious duty binding on all Muslims today. Thus the Lashkar’s website claims that a Muslim who has ‘never intended to fight against the disbelievers […] is not without traces of hypocrisy’. Muslims who have the capacity to participate or assist in the jihad but do not do so are said to ‘be living a sinful life’. Not surprisingly, therefore, the Lashkar denounces all Muslims who do not agree with its pernicious and grossly distorted version of Islam and its hideous misinterpretation of jihad—Sufis, Shias, Barelvis and so on—as being ‘deviants’ or outside the pale of Islam or even in league with ‘anti-Islamic forces’. The Lashkar promises its activists that they would receive great rewards, both in this world and in the Hereafter, if they were to actively struggle in the path of jihad. Not only would they be guaranteed a place in Heaven, but they would also 'be honoured in this world', for jihad, it claims, is also ‘the way that solves financial and political problems’.

Astoundingly bizarre though it is, the Markaz sees itself as engaged in a global jihad against the forces of ‘disbelief’, stopping at nothing short of aiming at the conquest of the entire world. As Nazir Ahmed, in-charge of the public relations department of the Lashkar, once declared, through the so-called jihad that the Lashkar has launched, ‘Islam will be dominant all over the world’. This global war is seen as a solution to all the ills and oppression afflicting all Muslims, and it is claimed that 'if we want to live with honour and dignity, then we have to return back to jihad’. Through jihad, the Lashkar website says, ‘Islam will be supreme throughout the world’.

In Lashkar discourse, its self-styled jihad against India is regarded as nothing less than a war between two different and mutually opposed ideologies: Islam, on the one hand, and Hinduism, on the other. It tars all Hindus with the same brush, as supposed ‘enemies of Islam’. Thus, Hafiz Muhammad Saeed, Lashkar chief, declares: ‘In fact, the Hindu is a mean enemy and the proper way to deal with him is the one adopted by our forefathers, who crushed them by force. We need to do the same’.

India is a major target for the Lashkar's terrorists. According to Hafiz Muhammad Saeed, ‘The jihad is not about Kashmir only. It encompasses all of India'. Thus, the Lashkar sees its self-styled jihad as going far beyond the borders of Kashmir and spreading through all of India. Its final goal, it says, is to extend Muslim control over what is seen as having once been Muslim land, and, hence, to be brought back under Muslim domination, creating what the Lashkar terms as 'the Greater Pakistan by dint of jihad’. Thus, at a mammoth congregation of Lashkar supporters in November 1999, Hafiz Muhammad Saeed thundered, ‘Today I announce the break-up of India, Inshallah. We will not rest until the whole of India is dissolved into Pakistan’.

The Lashkar, so say media reports, has been trying to drum up support among India’s Muslims, and it may well be that it has managed to find a few recruits to its cause among them. If this is the case, it has probably been prompted by the fact of mounting murderous Hindutva-inspired anti-Muslim pogroms across the country, often abetted by agencies of the state, which has taken a toll of several thousand innocent lives. The fact that no semblance of justice has been delivered in these cases and that the state has not taken any measure to reign in Hindutva terrorism adds further to the deep-seated despondency and despair among many Indian Muslims. This might well be used by self-styled Islamist terror groups, such as the Lashkar, to promote their own agenda. Obviously, therefore, in order to counter the grave threat posed by terror groups such as the Lashkar, the Indian state needs to tackle the menace of Hindutva terror as well, which has now assumed the form of full-blown fascism. Both forms of terrorism feed on each other, and one cannot be tackled without taking on the other as well.

Mercifully, and despite the denial of justice to them, the vast majority of the Indian Muslims have refused to fall into the Lashkar’s trap. The flurry of anti-terrorism conferences that have recently been organised by important Indian Islamic groups is evidence of the fact that they regard the Lashkar’s perverse understanding of Islam as being wholly anti-Islamic and as a perversion of their faith. These voices urgently need to be promoted, for they might well be the most effective antidote to Lashkar propaganda. Numerous Indian Islamic scholars I know and have spoken to insist that the Lashkar’s denunciation of all non-Muslims as ‘enemies of Islam’, its fomenting of hatred towards Hindus and India and its understanding of jihad are a complete misrepresentation of Islamic teachings. They bitterly critique its call for a universal Caliphate as foolish wishful thinking. And they are unanimous that, far from serving the cause of the faith they claim to espouse, groups like the Lashkar have done the most heinous damage to the name of Islam, and are to blame, to a very large extent, for mounting Islamophobia globally.

At the same time as fingers of suspicion are being pointed at the Lashkar for being behind the recent Mumbai blasts, other questions are being raised in some circles. The significant fact that Hemant Karkare, the brave ATS chief who was killed in the terrorist assault, had been investigating the role of Hindutva terrorist groups in blasts in Malegoan and elsewhere and had received threats for this has not gone un-noticed. Nor has the related fact that the assault on Mumbai happened soon after disturbing revelations began pouring in of the role of Hindutva activists in terror attacks in different parts of India. That the attack on Mumbai has led to the issue of Hindutva-inspired terrorism now being totally sidelined is also significant.

And then there is a possible Israeli angle that some are raising. Thus, the widely-read Mumbai-based tabloid Mid-Day, in an article about a building where numerous militants were holed up titled ‘Mumbai Attack: Was Nariman House the Terror Hub?’, states:

“The role that Nariman House is coming to play in this entire attack drama is puzzling. Last night, residents ordered close to 100 kilograms of meat and other food, enough to feed an army or a bunch of people for twenty days. Shortly thereafter, the ten odd militants moved in, obviously, indicating that the food and meat was ordered, keeping their visit in mind, another cop added.

“One of the militants called up a television news channel and voiced his demands today, but, interestingly, when he was asked where are they all holed him, he said at the Israeli owned Nariman House and they are six of them here", one of the investigating cops said. Since morning, there has been exchange of gun fire has been going on and the militants seem well equipped to counter the cops fire. To top it, they have food and shelter. One wonders [if] they have the support of the residents, a local Ramrao Shanker said.”

A Mossad/Israeli hand in the affair might seem far-fetched to some, but not so to others, who point to the role of Israeli agents in destabilizing a large number of countries as well as possibly operating within some radical Islamist movements, such as a group in Yemen styling itself ‘Islamic Jihad’, said to be responsible for the bombing of the American Embassy in Sanaa, and which is said to have close links with the Israeli intelligence. Some have raised the question if the Mossad or even the CIA might not be directly or otherwise instigating some disillusioned Muslim youth in India, Pakistan or elsewhere to take to terror by playing on Muslim grievances, operating through existing Islamist groups or spawning new ones for this purpose.

If this charge is true—although this remains to be conclusively established—the aim might be to further radicalize Muslims so as to provide further pretext for American and Israeli assaults on Islam and Muslim countries. The fact that the CIA had for years been in very close contact with the Pakistani ISI and radical Islamist groups in Pakistan is also being raised in this connection. The possible role of such foreign agencies of being behind some terror attacks that India has witnessed in recent years to further fan anti-Muslim hatred and also to weaken India is also being speculated on in some circles.

Whether all this is indeed true needs to be properly investigated. But the fact remains that it appears to be entirely in the interest of the Israeli establishment and powerful forces in America to create instability in India, fan Hindu-Muslim strife, even to the point of driving India and Pakistan to war with each other, and thereby drag India further into the deadly embrace of Zionists and American imperialists.

In other words, irrespective of who is behind the deadly attacks on Mumbai, it appears to suit the political interests and agendas of multiple and equally pernicious political forces—Islamist and Hindu radicals, fired by a hate-driven Manichaean vision of the world, but also global imperialist powers that seem to be using the attacks as a means to push India even deeper into their suicidal axis.

Followup -1:மும்பையில் தாக்குதல்

Some more Info:

Thanks to Straitstimes, Singapore. Interestingly the narration given by the terrorist, who has been in pictures in the newspapers with a bluecolor rucksack and at the same time, he was the one who killed all the ATS officials.

http://www.straitstimes.com/Breaking%2BNews/Asia/Story/STIStory_308566.html

Nov 30, 2008
CONFESSIONS OF A TERRORIST
India's Sept 11

Mumbai - A sensational revelation has emerged from a terrorist caught alive by Indian troops: The attack on Mumbai's top hotels was meant to be India's Sept 11.

Azam Amir Kasav - some reports have his name as Ajmal Amir Kasab - confessed that part of the plot called for him and his fellow terrorists to carry out a replay of the destruction of Islamabad's Marriott Hotel, in targeting Mumbai's Taj Mahal Hotel.

The Marriott was blown up by militants in September, an attack that killed more than 50 people.

According to a report in The Times of India, Azam said the attacks on the Taj and The Oberoi Trident were aimed to create a 'Sept 11 in India', a reference to the coordinated attacks by Al-Qaeda on the United States in 2001. They involved the crashing of hijacked planes into the Twin Towers in New York and the Pentagon that left nearly 3,000 people dead.

The confessions of the clean-shaven, fluent English-speaking 21-year-old Pakistani have given investigators a clearer picture of what had happened last Wednesday.

Azam said he was member of the Lashkar-e-Taiba, but the Kashmir- based Pakistani militant group has denied any role in the attacks.

Founded as a guerilla group to fight the Indian army in Kashmir, the group was banned by the Pakistani government after the Sept 11, 2001 attacks, but reportedly continues to enjoy the backing of some Pakistani politicians and security officials.

A native of Faridkot in Pakistan- occupied Kashmir, Azam revealed the names of his fellow terrorists, all Pakistani citizens: Abu Ali, Fahad, Omar, Shoaib, Umer, Abu Akasha, Ismail, Abdul Rahman (Bara) and Abdul Rahman (Chhota).

But the 10 men were apparently not the only ones directly involved: Another group, he claimed, had checked themselves into hotels four days before, waiting with weapons and ammunition they had stockpiled in the rooms.

Months of preparation

The 10 men in Azam's group were chosen well: All were trained in marine warfare and had undergone a special course conducted by the Lashkar-e-Taiba.

Preparations were also detailed, and started early.

Azam and eight others in the team made a reconnaissance trip to Mumbai several months before the attacks, pretending to be Malaysian students. They rented an apartment at Colaba market, near one of their targets, the Nariman House.

The chief planner of the attacks also visited Mumbai a month before to take photographs and film strategic locations, including the hotel layouts.

Returning to Pakistan, the chief plotter trained the group, telling them to 'kill till the last breath'.

Surprisingly, the men did not expect themselves to be suicide terrorists. Azam said they had originally planned to sail back on Thursday - the recruiters had even charted out a return route, stored on a GPS device.

Getting to India

On the evening of Nov 21, Azam's group set off from an isolated creek in Karachi in a boat. The next day, a large Pakistani vessel with four Pakistanis and crew picked them up, whereupon the group was issued arms and ammunition.

Each man in the assault team was handed six to seven magazines of 50 bullets each, eight hand grenades, one AK-47 assault rifle, an automatic loading revolver, credit cards and a supply of dried fruit. They were, as some media put it, in for the long haul.

A day later, the team came across an Indian-owned trawler, Kuber, which they boarded. They killed four of the fishermen onboard, dumped their bodies into the sea, and forced its skipper Amarjit Singh to sail for India.

The next day, they beheaded the skipper, and one of the gunmen, a trained sailor, took the wheel and headed for the shores of Gujarat, India.

Near Gujarat, the terrorists raised a white flag as two officers of the coast guard approached.

While the officers questioned them, one of the terrorists grappled with one of them, slit his throat and threw his body into the boat. The group then ordered the other officer to help them get to Mumbai.

On Nov 26, the team reached the Mumbai coast.

Four nautical miles out, they were met by three inflatable speedboats. They killed the other coast guard officer, transferred into the speedboats and proceeded to Colaba jetty as dusk settled.

The Kuber was found later with the body of the 30-year-old captain onboard.

At Badhwar Park in Cuffe Parade - just three blocks away from Nariman House - the 10 men got off, stripped off the orange windbreakers they had been wearing and made sure to take out their large, heavy backpacks.

It was there that they were spotted by fisherman Prasan Dhanur, who was preparing his boat, and harbour official Kashinath Patil, 72, who was on duty nearby.

'Where are you going?' Mr Patil asked them. 'What's in your bags?'

The men replied: 'We don't want any attention. Don't bother us.'

Thinking little of it, Mr Dhanur and Mr Patil, who said they did not see the guns hidden in the backpacks, did not call the police, and watched the 10 young men walk away.

Then the carnage started.

Killing spree

On hitting the ground, the 10 men broke up.

Four men headed for the Taj Mahal Hotel, two for The Oberoi Trident, two for Nariman House and two - Azam and Ismail - for the Chhatrapati Shivaji Terminus by taxi.

At the railway station, Azam and his colleague opened fire, targeting Caucasian tourists while trying to spare Muslims.

The two gunmen also destroyed the CCTV control room, throwing grenades into it.

It was here that Azam was photographed, dressed in light-grey combat trousers and sneakers, a rucksack on his back, toting his AK-47.

According to one security expert, the way he carried the assault rifle revealed months of training.

The two men left the main hall of the railway station littered with bodies and pools of blood, then moved on to Metro Cinema and then to the Girgaum Chowpatty area in a stolen Skoda.

It was there that their plans started to unravel.

Capture

At the Girgaum Chowpatty area, Azam and Ismail were intercepted by anti-terror troops from the Gamdevi police station, and they ended up trading shots.

Azam managed to shoot dead assistant police inspector Tukaram Umbale, while one of them also gunned down anti-terror squad chief Hemant Karkare.

Ismail, however, was eventually killed, while Azam himself was shot in the hand. Pretending to be dead, he fell, and the two men were taken to Nair Hospital.

But police soon spotted him breathing and quickly evacuated the hospital's casualty ward, and brought in the anti-terror squad to interrogate him.

At first, Azam remained tight-lipped, but the sight of Ismail's mutilated body broke his resolve.

Pleading with medical staff to save his life, he said: 'I do not want to die. Please put me on saline.'

The bullet in his hand was removed, and after his condition had stabilised, Azam was moved to another location on Thursday for more interrogation.

Reports, however, say that the grilling at the hospital had been so intense that at one point, he pleaded with the police and medical staff to kill him.

He said: 'Now, I don't want to live.'

மும்பையில் தாக்குதல்... பிண்ணனியில் யார்?

மும்பையில் தாக்குதல்... பிண்ணனியில் யார்?

கடந்த மூன்று தினங்களாக மும்பைச் செய்திகள் மக்களை ஆக்கிரமித்த வகையில் வ‌ேறு ச‌ெய்திகள் ச‌ெய்திருக்க முடியாது. வ‌ெளிநாட்டவரும் கொல்லப்பட்டதால் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் தொலைக்காட்சிகளும் தொடர்ந்து செய்திகளைத் தந்து வருகின்றன.

தீவிரவாதிகள் தாக்குதல் என்றாலே பொதுமக்கள் கூடும் இடத்தில் குண்டு வைப்பது, கும்பலாகச் சென்று தாக்குவது என்றிருந்த நிலை மாறி திட்டமிட்டு துப்பாக்கிப் பயிற்சி எடுத்து , தாக்கப் போகும் நிலைகளையெல்லாம் கவனமாக அனுமானித்து பிணைக்க‌ைதிகளை வைத்து "ஏதோ ஒரு" கோரிக்கையை முன் வைத்து உயிர் போகுமளவிற்கு போராடுவது என்றிருப்பது, இந்திய மக்களுக்கு மிகப் புதிது. முன்பொரு முற‌ை கந்தகார் விமானக் கடத்தல் நாடகம் உங்கள் கண் முன்பு வந்தால் ஆச்சரியமல்ல.

இந்தச் சம்பவத்தில் ஏகப்பட்ட கேள்விகள் உள்ளன. நாட்டின் மிக முக்கிய பாதுகாப்பு ஆலோசகர்கள் எல்லோரும் அடர்ந்த ம‌ெளனம் சாதிக்கிறார்கள். பொதுமக்களைப் போலவ‌ே அவர்களுக்கும் போதிய தகவல்கள் கிடைக்க வில்லை போலும்.

இந்தச் சம்பவம் மிகவும் திட்டமிடப்பட்டு துளியும் பிசகின்றி ச‌ெயல்படுத்தப்பட்டிருப்பது, இதன் பிண்ணனிய‌ைப்பற்றி மிகவும் தீவிரமாகச் சிந்திக்க வைத்துள்ளது. இந்தத் திட்டமிடலுக்குத் த‌ேவையான தகவல்கள், பணம், உள்ளூர் ஆதரவு, தொடர்ந்த சாட்டிலைட் போன் உத்தரவுகள் இத‌ெல்லாம் ஒன்று அல்லது அதற்கும் ம‌ேற்பட்ட அம‌ைப்புகளின் உதவியின்றி நடந்திருக்க முடியாது என்று உள்ளுணர்வு சொல்லுகிறது. இது வ‌ெறும் பாகிஸ்தான் மண்ணோடு நின்று விடப் போவதில்லை என்பது மட்டும் உறுதி. அம‌ெ ரிக்கர்கள் நின‌ை த்தால் இந்த முடிச்ச‌ை சுலபமாக அவிழ்த்து நம் க‌ையில் தரமுடியும். சாட்டில‌ைட் தொடர்புகள் மற்றும் முந்த‌ைய தகவல் தொடர்புகள் அன‌ைத்த‌ையும் ஆராய்ந்து இதன் மூலகர்த்தாக்கள‌ை அட‌ையாளங் காண அவர்கள் உதவ முடியும்.

முன்னாள் உளவதிகாரி திரு ராமன் அவர்கள் கூற்றின் படி டெக்கான் முஜாகித்தீன் என்பதெல்லாம் ஒரு பொய்யாக இருக்கலாம். உள்ளூர்த் தீவிரவாதிகளுக்கு இவ்வளவு திட்டமிடலும் (ஒரு அதிகாரி, இது ஒரு த‌ேர்ந்த கமாண்டோ ஆபர‌ேஷன் போல இருக்கிறது என்கிறார்) பொருளாதார பலமும் கிட‌ையாது என்றிருக்கிறார். அதே சமயம், ராண்ட் கார்ப்பர‌ேஷனைச் ச‌ேர்ந்த பாதுகாப்பு ஆலோசகர் ஒருவர் இது முழுக்க முழுக்க உள்ளூர் வாசிகளின் வ‌ேலை என்றிருக்கிறார். குழப்பத்தில் நாம்.

ஆரம்பத்தில் அமெரிக்கர்களையும் பிரிட்டிஷார‌ையும் தனிம‌ைப்படுத்துகிறார்கள் என்பதாக ஊடகங்கள் பெரிது படுத்திப் பேசின. ஆனால், மொத்தம‌ே 5 அம‌ெரிக்கர்கள் தான் கொல்லப்பட்டிருக்கின்றனர். அப்படியானால், அந்தச் சமயத்தில் மொத்தம‌ே 5 அம‌ெரிக்கர்கள் மட்டும‌ே இருந்தார்களா என்பது தெரியவில்லை.

உறுதிப்படுத்தப் படாத தகவல்கள் தெரிவிப்பது என்ன வென்றால், அம‌ெரிக்க மற்றும் இஸ்ர‌ேலிய உளவுத் துறை அதிகாரிகள் அந்தச் சமயத்தில் தாஜ் ஓட்டலில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக இதற்கு மறுப்பை அம‌ெரிக்கா தெரிவித்தது. ம‌ேலும் அது அந்த ஓட்டலில் அமெரிக்கர்கள் யாரும் தங்கியிருக்க வில்லை என்றும் தெரிவித்தது. பிற்பாடு, 5 அமெரிக்கர்கள் இறந்திருப்பதாக அறிவித்திருக்கிறது. அவர்கள் உண்ம‌ையில் யார்?

முதலில் ப‌ேரம் ப‌ேச தீவிரவாதிகள் விரும்பியதாகவும் ஆனால் அரசு அந்தக் கோரிக்க‌ைக்கு உடன்படவில்லை என்றும் தெரிகிறது. தாம் பிடித்து வைத்திருந்த பிணைக் க‌ைதிகளை ய‌ெல்லாம் அவரவர் தூதரகங்களுக்கு போன் ச‌ெய்து மும்ப‌ை அரசை அவர்களுடன் பேரம் ப‌ேசச் சொல்லுமாறும் சொல்ல வில்லை ய‌ென்றால் அவர் களை க் கொன்று விடுவதாகவும் மிரட்டியிருக்கிறார்கள். அப்படி ஒரு நிலை சிங்கப்பூர் இளம் ப‌ெண் வக்கீலுக்கு நேர்ந்திருப்பதாக ஊடகங்களின் வாயிலாக அறிகிறோம். பின்னர் அவர் அநியாயமாகக் கொல்லப்பட்டிருக்கிறார். மும்பை அரசுடன் அப்படி என்ன ப‌ேரம் ப‌ேச விரும்பினார்கள் என்பது புரியவில்லை. யாரை விடுவிக்க விரும்பினார்கள் என்பதும் தெரிய வில்லை.

தீவிரவாதிகள் முதலில் தேடிக் கொன்றது, கர்னல் புரோகித்தைக் க‌ைது ச‌ெய்த மூன்று மிக முக்கிய அதிகாரிகளைத்தான். அந்த முக்கிய அதிகாரி கர்காரே துப்பாக்கி துளைக்காத அங்கியை அணிவதை க‌ேமராவில் காட்டுகிறார்கள். ஆனால், அவர் மார்பில் மூன்று குண்டுகள் துளைத்து வ‌ெளிய‌ேறியிருக்கின்றன. அவர் உண்ம‌ையில‌ேயே தீவிரவாதிகளால் சுடப்பட்டாரா அல்லது சந்தர்ப்பத்த‌ைப் பயன்படுத்தி சில "வ‌ேண்டியவர்கள்" அவர்களைக் கொன்றனரா என்பத‌ையும் இனி தீவிரமாக விசாரித்தாக வ‌ேண்டும்.

INDIA TV தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டது. அதில் ஒருவன் சுத்தமான உள்ளூர் இந்தியில் ப‌ேசுகிறான். கொஞ்சம் யோசித்துவிட்டு தனது ப‌ெயரை சகத்துல்லா என்று தெரிவிக்கின்றான். அவர்கள் உண்ம‌ையில் தீவிரவாதிகளா அல்லது தொலைக்காட்சியின் ச‌ெட்டப்பா என்பத‌ை அரசு விசாரிக்க வ‌ேண்டும்.

தீவிரவாதிகள‌ை ஏற்றி வந்ததாகச் சொல்லப்படும் படகு ஒன்று குஜராத்த‌ைச் ச‌ேர்ந்தவருட‌ையது. அவர் படகு காணாமல் போய் ஒரு வாராமாகி விட்டது என்றும் ஆனால் போலிஸில் புகார் கொடுக்க வில்ல‌ை என்றும் சொல்லியிருக்கிறார். ஏனோ ப‌ெண் சாமியார் ஒருவர் தனது ப‌ைக்க‌ை விற்று விட்டதாகவும் ஆனால் வாங்கியவர் அவர் ப‌ெயருக்கு மாற்ற வில்ல‌ை என்பது தனது குற்றமாகாது என்று வாதாடியதும் நின‌ைவிற்கு வருகிறது.

ஒரு பிண‌ைக் க‌ைதி நாடகத்த‌ை நடத்தி தனது கோரிக்க‌ைகள‌ை நிறைவேற்ற ஒரு புரொபஷனல் தீவிரவாதக் கும்பல் முயன்றுள்ளது. விடுவிக்கப்படும் க‌ைதிகளுடன் வ‌ெளிய‌ேறி விடலாம் என்றிருந்த தீவிரவாதிகள், தங்கள் திட்டம் பலிக்காமல் போனதால் பிண‌ைக்க‌ைதிகள‌ைக் கொன்றிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. இந்திய அதிகாரிகள் சாதாரணமானவர்கள் அல்ல. நிச்சயம் அந்த தீவிரவாதச் ச‌ெயல‌ைச் ச‌ெய்த அன‌ைத்து தொடர்புகள‌ையும் வ‌ெளிக் கொணர்வார்கள் என்று நம்புவோமாக.

பிரிட்டிஷ் பாகிஸ்தானிய நபர்கள் கொல்லப்பட்டிருப்பதாக தற்போது ஊகங்கள் எழுகின்றன. கராச்சியிலிருந்து தாம் வந்ததாகவும் 20 ப‌ேர் மொத்தம் என்பதாக ஒரு பிடிபட்ட LeT தீவிரவாதி கூறுகிறான். நடந்த சம்பவங்களின் கோர்வ‌ைய‌ையும் அதன் வீச்ச‌ையும் கூர்ந்து நோக்கினால் இதில் குற‌ைந்தது 40/50 ப‌ேர்களாவது ஈடுபட்டிருக்க வ‌ேண்டும் என்று அனுமானிக்க முடிகிறது. அப்படியானால் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் போக மீதம் ப‌ேர் என்ன வானார்கள்? அவர்களும் வ‌ெளிய‌ேறும் பிண‌ைக்க‌ைதிகளுடன் தப்பித்தனரா என்பதும் தெரியவில்ல‌ை. அவர்களின் அடுத்த இலக்கு என்ன என்பதும் தெரியவில்ல‌ை. இதில் முத்தாய்ப்பாக அவர்களின் தல‌ைவன் என்பவன் தனது கூட்டத்தாரில் ஒருவரால‌ேயே சுட்டுக் கொல்லப்பட்டான் என்றும் ச‌ெய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால் ஒன்று மட்டும் உறுதி.. இதில் மாப‌ெரும் சதிவலை ஒன்றிருக்கிறது. வளரும் இந்தியாவில் உள் நாட்டுப் பூசல‌ை உருவாக்கி அதில் குளிர்காய நின‌ைக்கும் நாடு அல்லது நாடுகள் இவற்றிற்கு பிண்ணனியாக இருக்கும் என்று மட்டும் புரிகிறது.

இந்தியா தனது தீவிரவாதத்திற்கு எதிரான அணுகுமுற‌ையை பரிசீலன‌ை ச‌ெய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு சிந்திக்க வல்ல அதிகாரிகள‌ைக் கொண்டு தேச நலன் மட்டும் பிரதானமாக என்னக் கூடிய அதிகாரிகளைக் கொண்டு ஒரு அம‌ைப்பு உருவாக்க வேண்டும். தீவிரவாதம் ச‌ெய்பவர்கள் எத்தக‌ைய அம‌ைப்பில் இருந்தாலும் அவர்களுக்கு எதிராகச் ச‌ெயல்படத் தயங்காத அதிகாரிகள‌ை அது கொண்டு இருக்க வ‌ேண்டும்.

இந்த மாதிரியான நிகழ்வுகள் இனியும் ஒரு முற‌ை நடந்த‌ேறாதாவாறு விசாரண‌ையில் தெரிய வரும் அன‌ை த்துக் காரணிகள‌ையும் முள‌ையில‌ேயே கிள்ளி எறிய வேண்டும்.

கட்டாய இராணுவப் பயிற்சிய‌ை அன‌ைவருக்கும் கொண்டு வருவது பற்றி அரசு யோசிக்கலாம்.

இந்த நிகழ்வில் வீர மரணமட‌ைந்த போலீஸ், மற்றும் NSG அதிகாரிகளுக்கு நமது வீர அஞ்சலிய‌ை உரித்தாக்குவோமாக..

############################################################################################

REDIFF.COM ல் கீழ்க்கண்ட க‌ேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. நியாயமான க‌ேள்விகள். இவற்றிற்கு பதில் கிட‌ைக்குமா?

  • How many terrorists were there? Did they number 20 as Maharashtra Chief Minister Vilasrao Deshmukh told a press conference on Thursday? Or did they number many more? If two or three terrorists attacked the CST, how many terrorists were present at the Taj and Trident? Did the CST terrorists drop a grenade/explosive device at Dockyard Road on the way to the station? Or was someone else responsible for that act of terror which claimed three lives?
  • The terrorists are said to have set up control rooms at the Taj and Trident hotels, a Cabinet minister told PTI on Thursday. When were these bookings made? A detailed investigation into the bookings made at both hotels in the months, weeks and days before the attacks may reveal the names of suspicious guests who registered there.
  • Military sources tell rediff.com that there was no way the terrorists could have carried so much ammunition with them when they assaulted the two hotels with their guns blazing. They believe the ammunition may have been stored earlier in rooms at both the hotels, perhaps on the higher floors.
  • If some of the terrorists had registered at the hotels earlier, could these men/women have left along with the guests who were released? Did the police record the identities and addresses of the guests who were released from both hotels?
  • Indian Hotels Chairman Ratan Tata indicated on Thursday that the terrorists had intimate knowledge of the Taj, its service corridors, its layout. Does this mean that they had a mole inside the Taj? Or more worrying, did a couple of them work there at some point of time? Did they have drawings of the layout of the two hotels?
  • If the terrorists were Pakistani, how did they have such an intimate knowledge of the terrain? The two or three cowards who attacked the CST on Wednesday night made their way from the CST through a road on the left side of The Times of India building towards the Cama and Albess hospital/Azad Maidan police station, a route that is known only to true-blood Mumbaikars. Were they locals? Or did they conduct extensive reconnisance of the likely routes of escape?
  • These same two or three men, who are said to have commandeered ATS Chief Hemant Karkare's [Images] police Qualis after shooting him, Additional Commissioner of Police Ashok Kamte and Inspector Vijay Salaskar, revealed similar familarity with the road outside the Esplanade Court, making an easy U-turn towards the Metro cinema junction rather than head on the road towards the CST. How did they know this if they were Pakistanis?
  • How did those men, whose images have appeared all over the world, get to the CST from Colaba where they are said to have landed by boat? Did they take a taxi? Or did they have local transportation? Did they come by a suburban train, which could explain the firing on one of the suburban train platforms? Who left the grenade on the Gitanjali Express, which killed a Bengali mother?
  • The terrorists are said to have done extensive reconnisance of the city. If they are Pakistanis, how did they get earlier entry to the city unnoticed? Did they come in by boat? Or did they use other routes to escape notice?
  • Such an operation could not have been conducted without extensive training and preparation, possibly on models of the Taj and Trident or Chabad House/Nariman House. Could this have been achieved at the rudimentary training camps hosted by the Lashkar-e-Tayiba in Pakistan occupied Kashmir? Or was it a more systematised operation conducted by a State agency in a hostile country?
  • How did they know Chabad House/Nariman House, which even long-time residents of Colaba -- the area in South Mumbai where the Taj, the Leopold Cafe [Images] and Chabad/Nariman House are located -- are unfamiliar with? The choice of this target indicates precision thinking -- it is doubtful if the Lashkar strategists are capable of such deep strategy -- and again points the needle of suspicion at a government intelligence agency in a nation inimical to India or renegades within such a bureau.
  • Early on Thursday morning, the television channels spoke about an exchange of fire between the terrorists and the police near the Liberty cinema (which is close to the Metro cinema/Cama hospital, but situated on an inner road). There was even fear expressed that these terrorists would enter the Bombay hospital, but nothing was heard about them thereafter. Where did they go? Were these two/three terrorists the same men who took over the police Qualis and shot at people near the Metro junction? Or have they escaped?
  • The police say the two men, who took over the Qualis, grabbed the Skoda that was halted at a police road block near the Girgaum Chowpatty [Images] beach. One of them was later killed by the police. Where did the other man go? Is he the Ismail, the Lashkar terrorist who is appparently singing like a canary to the police? Or is he someone else? If these are the two of the three terrorists who attacked the CST, what happened to the third man seen in photographs and video captures? Where did he vanish?
  • Another terrorist is said to be in custody. Where was he captured? What has he told the police?

உயரப் பறக்கும் எண்ணெய் விலை- 2



முன் பதிவில், எண்ணெய் உற்பத்தியோ எண்ணெய்ப் பயன்பாடோ சமீபத்திய விலையேற்றத்திற்குக் காரணமாக இருக்க முடியாது என்பதை, இன்டர்நேஷனல் எனர்ஜி அத்தாரிட்டி இணையத்தளத்தின் புள்ளிவிவரங்களைக் கொண்டு கண்டு கொண்டோம். ஆனால் விலையேற்றம் இருக்கிறது. அதனால் ஏற்படும் பாதிப்பு உலகளாவியது. டீஸல் குடிக்கும் முரட்டுக் கார்களை காரேஜிலேயே நிறுத்திவிட்டு, அதிக மைலேஜ் கொடுக்கும் கார்களை அமெரிக்கர்கள் நாட ஆரம்பித்திருக்கிறார்கள். அமெரிக்க அரசு ஓபெக் அமைப்பை நிர்ப்பந்தித்து உற்பத்தியை அதிகரிக்க வேண்டுகிறது. ஓபெக் அமைப்பு தனது கூட்டத்திற்குப் பின், உற்பத்தி குறையவில்லை, தேவைகளும் அதிகரிக்கவில்லை, எனவே, நாங்கள் ஒன்றும் செய்வதற்கில்லை என்று சொன்னபின், அமெரிக்கா ஓழுங்கு முறையாணையங்களின் பார்வை (Commodities Futures Trading Corporation) தற்போது, பங்குச் சந்தை விற்பன்னர்களை நோக்கிப் பாய்ந்திருக்கிறது. CFTC ஆறு மாதங்களுக்குத் தொடரும்படியான ஆழமான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதில்தான் சூட்சுமம் உள்ளது. ஆய்வறிக்கை வெளியிடாமலேயே மறைக்கப் படலாம். ஆனால், ஆய்வறிக்கை வரும் சமயத்தில் எண்ணெய் விலை குறைய நேர்ந்தாலும், சமீபத்திய விலை உயர்வால் மக்கள் அடைந்திருக்கும் பொருளாதார பாதிப்புகள் பழைய நிலைக்குப் போகப் போவதில்லை. சராசரி விலையேற்றம் பழைய நிலைக்குத் திரும்பப் போவதில்லை.

ஒரு பீப்பாய் குருட் ஆயில் உற்பத்தி செய்ய 4 முதல் 7 அமெரிக்க டாலர்கள் வரை மட்டுமே செலவாகிறது. இதர செலவினங்கள் என்று மேலும் 5 டாலர்களை சேர்த்துக் கொண்டால் கூட (புதிய எண்ணெய் வயல்களைக் கண்டுபிடித்தல், பராமரிப்பு) அது 12 டாலர்களைத் தாண்டுவதில்லை. ஆனால், உலகச் சந்தையில் அதன் விலை 140 அமெரிக்க டாலர்கள். (ஆதாரம் http://www.eia.doe.gov/neic/infosheets/crudeproduction.html)

அமெரிக்காவின் NYMEX மற்றும் லண்டனின் ICE ஆகிய சந்தைகளில் commodities futures விற்கிறார்கள். ஒரு ப்யூச்சர் காண்ட்ராக்ட் வாங்க குறைந்த பட்சம் 6 சதவீதம் பணம் இருந்தால் போதும். அதாவது 140 டாலர் தற்போதைய மதிப்புடைய எண்ணெய் விலை ப்யூச்சரை அடுத்த இருமாதங்களுக்குள் 160 டாலர் என்று நிர்ணயித்து தற்போது வாங்க 6 சதவீதம் அதாவது 10.80 டாலர் இருந்தால் ஒரு பீப்பாய் எண்ணெய் விலையை 160 டாலருக்கு உயர்த்த முடியும். 10.80 டாலருக்கு இரண்டு மாத வட்டி கணக்கிட்டால், 0.05 டாலர் ஆகும். ஆக 5 சென்ட் செலவில் 20 டாலர் சம்பாரிக்கும் ரகசியம் தான் எண்ணெய் விலை உயர்வு. இது கம்மோடிட்டி ப்யூச்சர்ஸ் நிலை. இதில் அதிகம் ஈடுபடுவது, அதீத வீட்டுக் கடன் சுமையில் சிக்கியிருக்கும் அமெரிக்க வங்கிகள், தம்மை மீட்டுக் கொள்ள தற்போது எடுத்திருக்கும் ஒரு ஆயுதம், இந்த எண்ணெய் விலை உயர்வு. கடந்த இரண்டு வருடங்களில் இப்படி ப்யூச்சர்களில் வியாபாரமாக்கப்படும் எண்ணெயின் அளவு ஏறக்குறைய முக்கால் பில்லியன் பீப்பாய்களுக்கு உயர்ந்திருக்கிறது என்றால் புரிந்து கொள்ளலாம். ஐந்து வருடங்களுக்குள் எண்ணெயின் மீது ப்யூச்சர் மார்க்கட்டில் செய்யப்பட்டிருந்த வெறும் 13 பில்லியன் டாலர் இன்றைக்கு 260 பில்லியன் டாலர் என்று உயர்ந்திருக்கிறது.

இன்னொரு முக்கிய விஷயம், உலக உற்பத்தியில் வெறும் 40 சதவீதத் தேவையை மட்டுமே ஓபெக் உற்பத்திசெய்கிறது என்கிறது ஒரு புள்ளி விவரம். ரஷ்யா, பிரேஸில், கனடா மற்றும் ஏனைய நாடுகள் ஓபெக் அமைப்பில் இல்லை, அவர்கள், மத்தியக்கிழக்குப் பகுதியிலும் இல்லை. எனவே, ஓபெக்கைச் சுட்டியும், மத்திய கிழக்கில் ஏதாவது ஒரு நாட்டில் வெடிக்கும் குண்டைச் சுட்டியும் விலையேற்றுவதற்கு எந்தத் தொடர்புமில்லை.

இது போக, திடீரென்று எண்ணெய் ஏற்றிச் செல்லும் டாங்கர்களுக்குக் கடும் தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளது. எல்லா எண்ணெய் டாங்கர்களும் வாடகைக்கு எடுக்கப் பட்டு விட்டன. வழக்கமாக எண்ணெய் ஏற்றுபவர்களுக்கு டாங்கர்கள் கிடைக்காதால், டாங்கர் வாடகை உயர்ந்துள்ளது. என்னவென்று உற்றுக் கவனித்தால், மார்க்கெட்டில் எண்ணெயை விலைக்கு வாங்கி நடுக்கடலில் நிப்பாட்டி வைத்திருக்கிறார்கள். எண்ணெய் விலை உயர்ந்தபின் விற்பதற்காக. இந்த வகையிலும் செயற்கைத் தட்டுப்பாடு ஏற்படுத்தப் படுகிறது.

தற்போது இந்த ஓபெக்-மத்தியகிழக்கு அமைதி-ஈரானியத் தாக்குதல் என்பதெல்லாம், விலையேற்றத்திற்குச் சொல்லப்படும் சப்பைக் கட்டுகள். உண்மையில் வீழும் டாலரும், மோசமான நிலையில் இருக்கும் அமெரிக்கப் பொருளாதாரமும், இந்த செயற்கை விலையேற்றத்திற்குக் காரண்ம்.

இந்தச் செயற்கை விலையேற்றத்தினால் விளையும் விளைவுகள் யாதெனின்

1. ஒரு பொருளை மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் செலவு அதிகரிப்பதால், இனிமேல் அவரவர் அவரவர் நாட்டிலேயே உற்பத்தி செய்து பயன்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கும். சீனாவும் இந்தியாவும் இதிலிருந்து தப்பித்துக் கொள்வார்கள். மக்கட் தொகை குறைந்த நாடுகள் நிறையச் செலவு செய்து தங்கள் வாழ்க்கையை ஓட்ட வேண்டியிருக்கலாம்.

2. விமானப் போக்குவரத்து குறையும். விமானப் பயணச் செலவு அதிகரிக்கும்.

3. அலுவலகத்தில் வேலை செய்பவர்கள், இனி இன்டர்நெட் மூலமாக, Virtual Office, ஆக வேலை செய்வார்கள். அதாவது, வீட்டிலிருந்து கொண்டே வேலை செய்வது. வீடியோ கான்பரன்ஸ் கால் மூலம் மீட்டிங்குகளில் கலந்து கொள்வது போன்ற செயற்பாடுகள் அதிகரிக்கும்.

4. பயன்பாட்டைக் குறைக்க அறிவுறுத்தும் விதமாக நாடுகள், தாங்கள் வழங்கும் எரிபொருள் மானியங்களை சுத்தமாக நிறுத்த வேண்டியிருக்கும். அதே சமயம் அதன் பேரில் விதிக்கப்படும் வரிகளை நீக்கச் சொல்லிப் போராட்டங்கள் நடக்கும். இழக்கபோகும் வரிவருமானத்தை நினைத்து அரசுகள் தயங்க, அரசுகளுக்குத் தலைவலிகள் தொடரும்.

5. ஈரான் மேல் தாக்குதல் நடத்த உத்திகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப் பட்டு வருகின்றன (இதைப் பற்றி வேறு ஒரு பதிவில் பார்க்கலாம்). ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்தத் தீவிரம் தணியும் என்று முன்பு கணிக்கபட்டது பொய்க்கும் என்பதாக தற்போதைய நிலவரங்கள் கட்டியங்கூறுகின்றன.

6. எண்ணெய்க்காக இந்தியாவும் சீனாவும் அமெரிக்க பாணியில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளைத் தங்கள் காலனிகளாகவோ, அபிமானமிக்க நாடுகளாகவோ ஆக்க தீவிரமான முயற்சிகளை மேற்கொள்வார்கள். எண்ணெய் விலையை அமெரிக்க டாலரில் நிர்ணயிப்பது மட்டுமே அமெரிக்காவின் பிரதான வேண்டுகோளாக இருக்கும். சீனா அதைத் தவிர்க்கும் முயற்சியில் ஈடுபடலாம். இதனால், அமெரிக்கா சீனாவைச் சீண்டும் காலம் வரும். ஏற்கனவே, நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் மூலமாக அதற்கு விதையூன்றியாகி விட்டது.

7. எண்ணெய்க்கு மாற்று எரிபொருள், அல்லது, முற்றிலும் மாறுபட்ட எரிபொருள்கள் இனி வலம் வரலாம். அத்தகைய முயற்சிகள் ஜப்பானிலிருந்தோ, சீனாவிலிருந்தோ அல்லது இந்தியாவிலிருந்தோ தான் வருவதற்கு அதிக சாத்தியம் உள்ளது. இதற்கு முன் வெளிவந்த அத்தகைய முயற்சிகள் எல்லாம் எண்ணெய்க் கம்பெனிக் கூட்டத்தாரால் மூடி விழுங்கப் பட்டது என்பது நினைவிருக்கலாம்.


சரி, இந்த விலையேற்றத்தின் உச்சம் என்ன? நான் கேட்டறிந்தவரையில், பீப்பாய் எண்ணெயின் விலை 200 டாலர்களை கிறிஸ்துமஸுக்குள் தொட்டுவிட்டு, அதற்குப் பின் தணிய ஆரம்பிக்கும் என்று சொல்கிறார்கள். ஆனால் எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் திரும்பாதவை. பாதிக்கப் படப் போவது சாமான்யன்கள் தான்...

(தொடர்ந்த வெளிநாட்டுப் பயணங்களால் உடனடியாக இதை எழுத முடியாமல் போனது. ஈமெயில் மூலம் வந்து குவிந்த விசாரிப்புகளின் வழிதான் எனது பதிவை எவ்வளவு பேர் படிக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி)


உயரப் பறக்கும் எண்ணெய் விலை- 1

கச்சா எண்ணெய் விலை ஆகாயத்திற்குப் பறக்கிறது. இந்த தொடர் விலையேற்றம் நீடித்தால், விரைவில் நாமெல்லாம் நடந்துதான் போக வேண்டும். நடந்து போகலாம், ஆனால், வர்த்தகப் பொருள்கள் கடைகளுக்கு அதேவிலையில் வந்து சேருமா என்று உத்தரவாதம் தரமுடியாது. ஏறிய பொருள் விலை இறங்கியதாக சரித்திரமில்லை. கொள்முதல் மொத்த சந்தையில் விலை ஏறலாம், இறங்கலாம், சாதாரண உபயோகிப்பாளருக்கு என்றாவது பொருட்கள் விலை இறங்கியிருக்கிறதா? கிடையாது. தள்ளுபடி, இலவசங்கள் என்று வேண்டுமானால் தொடரும், விலை மட்டும் இறங்காது.

இந்தோனேஷியாவில் பெட்ரோல் விலை உயர்த்தியதற்கு மக்கள் ரோட்டில் இறங்கிப் போராடுகிறார்கள். அதிபர் யுதயானோ விலையேற்றத்தைச் சரிக்கட்ட ஏழைமக்களுக்கு ரொக்க உதவி அளிப்பது பற்றியும், விலையேற்றுவதன் அவசியத்தைப் பற்றியும், ஓபெக் என்ற அமைப்பிலிருந்து வெளியேறுவதன் அவசியத்தைப் பற்றியும் பேசுகிறார். மலேசியாவில் அக்கம்பக்கத்து நாடுகளுகளின் கார்களுக்கு பெட்ரோல் கூடுதல் விலை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இன்னமும் பெட்ரோல் விலை உயர்த்துவது பற்றி அறிவிக்கப்படவில்லை. அறிவித்தபின் என்ன என்ன கலாட்டாக்கள் நடக்கும் என்று இனிதான் தெரியும்.

கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்படவில்லை. பெட்ரோலியப் பயன்பாடு திடீரெனக் கூடி விடவில்லை. ஆனால், எண்ணெய் விலை மட்டும் வானளாவப் போய்க் கொண்டிருக்கிறது.

அது ஏன்?

இதைப் பற்றித்தான் நாம் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.

முதலில் எண்ணெய் உற்பத்தியையும் பயன்பாட்டையும் இப்போது பார்க்கலாம். கீழ்க்கண்ட புள்ளி விவரங்களைக் கவனமாகப் பாருங்கள்.

கச்சா எண்ணெய் உற்பத்தி



கச்சா எண்ணெய்ப் பயன்பாடு

கச்சா எண்ணெய் விலையேற்றம்.

source: worldoil.com


இதிலிருந்து தெரிவது என்னவென்றால், எண்ணெய் உற்பத்தியும் பயன்பாடும் சீராகவே இருக்கிறது. ஆனால் விலையேற்றம் மட்டும் அதற்கேற்ற அளவு சீராக இல்லாமல் தாறுமாறாக ஏறியிருக்கிறது. ஆக இதில் ஏதோ உள்குத்து இருக்கிறது.

இந்த விலையேற்றத்திற்கு பொதுவாகச் சொல்லப்படும் காரணம் என்ன வென்றால், இந்தியாவிலும் சீனாவிலும் அதிகமான கார்கள் விற்கப்படுகிறது. அவர்கள் மின்சாரம் அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். எனவே கார்களை ஓட்டவும் மின்சாரம் தயாரிக்கவும் அதிக அளவில் எண்ணெய் பயன்படுகிறது, அதனால் கச்சா எண்ணெய்த் தேவை அதிகரிக்கும் என்பது தான். இதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது?

கீழே கண்ட புள்ளி விவரத்தைப் பாருங்கள். உலகளாவிய கார் உற்பத்தி பற்றியது.

source: Scotiabank.com


இதில் தெரிவது என்னவென்றால், கார் விற்பனை திடீரென உயர்ந்து விடவில்லை. ஆக இந்தக் காரணம் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.

அதே மாதிரிதான் மின்சாரத் தயாரிப்பும். இந்தியாவும் சீனாவும் அதிக அளவில் பயன்படுத்துவது நிலக்கரியையும் காற்றாலை மற்றும் நீர்மின்சார நிலையங்களையும் தான். கச்சா எண்ணெயைப் பயன்படுத்துவதில்லை.

ஆக, எண்ணெய் விலையேற்றத்திற்கு, அதன் தேவைகள் கூடியதால் விலை ஏறியது/ஏறுகிறது என்ற கூற்று முற்றிலும் பொய்யாகிறது.

அப்படியென்றால், எண்ணெய் விலையை யார் ஏற்றுகிறார்கள்? எப்படி அது ஏறுகிறது? ஏறுகின்ற எண்ணெயை வாங்க பணம் எங்கிருந்து வருகிறது?

இதையல்லாம் அடுத்த பதிவில் பார்க்கலாம்.

(தொடரும்)

உலகமயாகும் உணவுப் பஞ்சம் - 2


அமெரிக்காவில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடியைப் பற்றி அறிந்திராதவர்கள் இருக்க முடியாது. குறைந்த பட்சம் டாலர் வீழ்கிறது என்றாவது அறிந்திருக்கலாம். ஆனால், ஒவ்வொரு 15 மாதத்திற்கும் 1 டிரில்லியன் (1000 கோடி) டாலர் கடனாளியாக அமெரிக்கா மாறுகிறது என்ற உண்மை உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம். தற்போது 13 டிரில்லியன் டாலர் கடனாளியாக இருக்கும் அமெரிக்கா தான் உலகிலேயே மிகப் பெரிய கடன்கார நாடு என்றால் அதிர்ச்சியடையாதீர்கள், ஆனால், அது தான் உண்மை. அமெரிக்க டாலர் வீழ்வதைத் தான் அமெரிக்க மத்திய வங்கி (ஃபெடரல் வங்கி) எதிர்பார்க்கிறது. 90களில் ஜப்பானின் யென் நாணயம் சந்தித்த அதே நிலையை இன்றைக்கு அமெரிக்க டாலர் சந்திக்கிறது. ஜப்பானிய வங்கிகளில் அதீதமான சேமிப்பு இருந்தது. ஜப்பானியர் சிக்கனவாதிகள். அந்த சிக்கனவாதம் அந்த நாட்டின் பொருளாதாரத்தை அதலபாதளத்திற்கு இட்டுச் சென்று விடாமல் காப்பாற்றிற்று. ஆனால் அமெரிக்கர்களோ, பேரனால் கூட கட்ட முடியாத அளவிற்கு கடன் வாங்கி செலவு செய்கின்ற மனோநிலை உள்ளவர்கள். அங்கு சேமிப்பெல்லாம் இல்லை. எனவே, தற்போதைய வீழ்ச்சி எங்கு போய் முடியும் என்று சொல்ல முடியாத நிலை. ஏன் இந்த வீழ்ச்சி வந்தது என்றெல்லாம் விளக்க ஆரம்பித்தோமானால், விடிந்து போய்விடும். அதை தனியாக ஒரு பதிவாகப் போடலாம்.

எண்ணெய் விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வீட்டுக்கடன் பிரச்னையில் பெரிய பெரிய வங்கிகள் எல்லாம் சிக்கிக் கொண்டுள்ளன. 600 பில்லியன் டாலர் கடன் வீடுகளின் மேல் வராக் கடனாகப் போய் அடைந்து விட்டது. இது வரை 150 பில்லியன் டாலர்தான் நட்டமாக காட்டப்பட்டுள்ளது. மீதம் உள்ள 450 பில்லியன் டாலர் நட்டம் ஒவ்வொரு காலாண்டிலும் கொஞ்சம் கொஞ்சமாக காட்டப்படும். மொத்தமாக காட்டினால், பேங்க் திவாலாகும் என்று சொல்வார்களே அது நடக்கும். இங்கு ஒரு நாட்டின் நாணயமே திவாலாகிப் போகும். ஆகையால், வங்கிகள் சிறிது சிறிதாக நட்டம் காட்டுவார்கள். ஆனால், வீட்டிற்காக கடனாகக் கொடுக்கப்பட்ட அந்தப் பணம் வேறு யாரிடமோ, எங்காவது இருந்து தான் ஆக வேண்டும் இல்லையா. அந்தப் பணத்தை பணமாகவே வைத்துக் கொண்டிருந்தால், கரைந்துதானே போகும். எதிலாவது முதலீடு செய்ய வேண்டும். எதில் முதலீடு செய்வது என்று ஒரு பெரிய கூட்டமே வால்ஸ்ட்ரீட்டில் உட்கார்ந்து கொண்டு மண்டையை உடைத்துக் கொண்டு யோசனை செய்தார்கள். 1960களிலேயே சிலபேர் கம்மோடிட்டீஸ் எனப்படும் மரபு சாரா நிதித்துறை முதலீடுகளில் (Non-traditional investment instruments) முதலீடு செய்ய ஆரம்பித்திருந்தனர். அதன் வளர்ச்சி, தங்கத்தின் மூலம் மட்டுமே பிரமிக்கத் தக்கதாக இருந்தது. தங்கம் மட்டுமல்லாது உணவுப் பொருள்கள், உற்பத்தி மூலப் பொருட்கள், எண்ணெய் போன்ற பொருட்களிலும் அவர்கள் ஃப்யூச்சர்ஸ் (FUTURES) என்ற வகை முதலீட்டைச் செய்திருந்தனர். எக்காலத்திலும், அதன் வளர்ச்சி சீராகவே இருந்தது. டாலர் போகும் போக்கைப் பற்றி அறிந்த, (சாதாரண மாதச்சம்பளம் வாங்குபவனுக்கெல்லாம் புரியாத விஷயமது), நெளிவு சுளிவு தெரிந்த அந்த நிபுணர்கள், நெருப்பில் மாட்டிய புழுபோல் தவித்தனர். எப்படியாவது, தமது நிறுவனத்தின் பணத்தை சரியான அளவில் முதலீடு செய்து போனஸ் வாங்க வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய அடிப்படை நோக்கம். வீழ்ந்து வரும் டாலரால் ஏற்படப் போகும் நஷ்டத்தைச் சரிகட்ட முயற்சிக்கும் பரபரப்பு அது.

ஃப்யூச்சர்ஸ் என்றால் என்ன என்று முதலில் தெரிந்து கொள்ளலாம். ஒரு பொருளை வருங்காலத்தில், அதாவது இன்ன தேதியில், இன்ன அளவிற்கு, இந்த விலை என்று ஆறு மாதத்திற்கு முன்போ அல்லது ஐந்து வருடத்திற்கு முன்போ கணிப்பது. அந்தக் காலக் கட்டத்தில் அந்தப் பொருளின் விலை, மேற்படி விலையை விட கூடுதலாக மார்க்கெட்டில் விற்குமேயானால், அந்த பத்திரத்தை விற்றவர், சொன்ன விலைக்குத் தான் விற்க வேண்டும். வாங்குபவர் சந்தையில் கிடைக்கும் கூடுதல் விலையின் வித்தியாசத்தில் கொள்ளை லாபம் பார்ப்பார். அதாவது, 2008 ஏப்ரல் மாதம் 30ம் தேதி, அரிசி ஒரு குவிண்டால், ஆயிரம் ருபாய் விற்கும் என்று, 10,000 டன்னுக்கு ஆறு மாதம் முன்பே அதாவது 2007 நவம்பர் 30ம் தேதியே, 10 ஆயிரம் டன்னுக்கான பணத்தை வங்கியில் கட்டி அல்லது அதன் 10 சதத்தை கட்டி (மீதத்தை வங்கி செலுத்தும்) அதை வாங்கிக் கொள்வது. நவம்பர் மாதத்தில் அரிசியின் விலை 700 ருபாயாக இருக்கலாம். அதனால், விற்றவர் நினைப்பார், நாம் 300 ருபாய் லாபத்திற்கு இதை விற்றிருக்கிறோம் என்று. ஆனால், ஏப்ரல் மாதத்தில் (எப்படியோ) அதன் விலை 1500 ருபாயாக ஆகிப் போயிருக்கும். வாங்கியவருக்கு 500 ருபாய் ஒரு குவிண்டாலுக்கு லாபம். விற்றவருக்கு லாபத்தில் தான் நட்டம். அப்படியென்றால் எத்தனை கோடி லாபம்? இதில் லாபம் தரக்கூடிய முக்கிய விஷயம், குறிப்பிட்ட தேதியில் அந்தப் பொருளுக்கு விலை ஏறியிருந்தால் தான். இல்லையென்றால் நட்டப் பட வேண்டிவரும். லாபம் வர வேண்டுமானால் விலை ஏற வேண்டும். தட்டுப்பாடு ஏற்பட்டால்தான் ஒரு பொருளின் விலை ஏறும். இப்போது இந்த விளையாட்டில் தட்டுப்பாடு எப்படி முக்கியக் காரணியாகிறது என்று புரிந்திருக்குமே?

ஜான் பால்சன் என்ற ஹெட்ஜ் ஃபண்ட் மேனேஜர் கடந்த ஒரு வருடத்தில் இந்தமாதிரி உணவுப் பொருட்களின் Futures மூலம் சம்பாதித்தது 3.7 பில்லியன் அமெரிக்க டாலர். ஒரு தனி நபர், இந்த அளவிற்கு போனஸ் பெற்றால், அவரை வேலைக்கமர்த்தியிருக்கும் நிறுவனம் எத்தனை கோடி சம்பாதித்திருக்கும். சம்பாதித்த பணம், வேறு எங்கு செல்லும்? மீண்டும், அதே விளையாட்டிற்குத் தான்.

பிலிப்பைன்ஸ் அரிசி உற்பத்திக் கேந்திரம் என்று நமக்கெல்லாம் தெரியும். அரிசி ஆராய்ச்சி நிறுவனம் எல்லாம் அங்கு உள்ளது. ஐஆர் ரக அரிசி எல்லாம் அங்குதான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், இன்றைக்கு ஐந்து லட்சம் டன் அரிசி இறக்குமதிசெய்ய் அந்தநாடு போட்ட ஒப்பந்தம் திடீர் விலையேற்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் ரேசனில் அரிசி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இருக்கின்ற பணத்தால் அரிசியை வெளி மார்க்கெட்டில் ஒரு அரசாங்கத்தாலேயே வாங்க முடியவில்லை என்றால், ஆப்பிரிக்கா போன்ற ஏழை நாடுகளையெல்லாம் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். சிங்கப்பூரின் நிலையெல்லாம் கொஞ்சம் கஷ்டம் தான். இனிமேல், அவர்களும் விவசாயம் பார்க்கப் பழகிக் கொள்ள வேண்டியதுதான். மலேசியாவில் ஒரு மாநிலத்தில் பல பில்லியன் டாலர் ஒதுக்கி, அரிசி விளைச்சலை அதிகரிக்கப் போகிறார்கள். உணவுப் பொருள் இறக்குமதிக்கெல்லாம் வெளிநாடுகளையெல்லாம் நம்பி இருக்க முடியாது என்பது தான் அதன் அர்த்தம்.

மேற்படி நிதித்துறை விளையாட்டு ஒரு காரணம் தான் என்றாலும், உயர்ந்து வரும் ரியல் எஸ்டேட் தரும் பணத்தால், விவசாயம் செய்வது என்பது அருகி வருகிறது. இது இந்தியாவிற்கும் சீனாவிற்கும் பொருந்தும். 7 சதவீத விளைநிலங்களை மட்டுமே வைத்துக் கொண்டு இந்த இரு நாடுகளும் பெரும்பான்மையான உணவுத் தேவைக்கு, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம் என்றிருந்தன. WTO என்பது ஒரு வகையில் வரப்பிரசாதம்தான். ஆனால், உள்நாட்டு மக்கள் பட்டினி கிடக்கும் போது, உணவுப் பொருட்களை எந்த நாடாவது ஏற்றுமதி செய்ய முடியுமா? விவசாயம் பார்க்க மக்களுக்கு மனநிலை இல்லை. இயந்திரமயமாதல்தான் ஒரே வழி. ஆனால், உழுக நிலம் வேண்டுமே? விவசாய நிலம் எல்லாம் வீடாகிக் கொண்டிருந்தால், என்ன செய்வது?

பயோப்யூவல் எனப்படும் உயிர்மஎரிபொருள், தாவரங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்வரை, இந்த எரிபொருளை குறைந்த செலவில் உற்பத்தி செய்ய முடியாததால் இந்தத் துறை பின்தங்கியிருக்கிறது என்று முதலீட்டாளர்கள் பின் வாங்கிக் கொண்டிருந்தனர். தற்போது எண்ணெய்ப் பீப்பாய் விற்கும் விலையைக் கண்டால், அதைவிட குறைந்த விலையில் உற்பத்தி செய்து அதிக லாபம் பார்க்க முடியும் என்று, உயிர்ம எரிபொருள் கம்பெனிகளின் பின்னால் வரிசை கட்டி நின்று கொண்டிருக்கிறார்கள். சோளத்திலிருந்து, சோயாவிலிருந்து, ஏன் பாமாயில் கூட உயிர்ம எரிபொருள் தயாரிக்கப் போய்க் கொண்டிருக்கிறது. இதனால், மனிதன் சாப்பிடத் தேவையான உணவு வகைகள் விலை உயர்ந்து போவதை யாராலும் தடுக்க இயலவில்லை.

லாபம் பார்க்க வேண்டியது தான். ஆனால், பசிக்கு பணத்தையா சாப்பிட முடியும். பங்குச் சந்தை நிதித்துறையில் வேலை பார்ப்பவர்கள், லாபத்தை மட்டுமே மனதிற்கொண்டு அரசாங்கங்களின் தலையீடுகள் இல்லாமல் ஆடுகின்ற இந்த ஆட்டம், அப்பாவி ஏழைகளை உலகெங்கும் கோபத்திற்குள்ளாகியிருக்கிறது. உணவுப் பஞ்சத்தையும் உலகமயமாக்கியிருக்கின்ற இந்தக் கொடுமை எப்பொழுது நிற்கும்? பசிக் கொடுமை தவிர்க்க முடியாத தடுக்க இயலாத புரட்சிகளைக் கொண்டு வந்து, ஆட்சியாளர்களைப் புரட்டிப் போட்டிருப்பதை வரலாற்றின் ஏடுகளில் நாம் கண்டிருக்கிறோம். ஒரு முறையல்ல, இரு முறையல்ல, நூற்றாண்டுகள் தோறும் இது நடந்திருக்கிறது.

இந்தச் சூழலில், அரிசியை இரண்டு ருபாய்க்கு தமிழக அரசு தருவதை, நாம் நன்றிக் கண்கொண்டுதான் பார்க்க வேண்டும்.

உலகமயமாகும் உணவுப் பஞ்சம்



இன்றைக்கு பல நாடுகளின் முக்கியப் பிரச்சினை தீவிரவாதத்தின் மீதான போர் (War on Terrorism) அல்ல. உணவுப் பொருட்களின் திடீர்த் தட்டுப்பாடு. அத் தட்டுப்பாட்டால் ஏற்பட்ட விலைவாசி உயர்வு. விழுந்து கொண்டிருக்கும் டாலர் மதிப்பின் காரணமாக தமது பொருளாதாரம் கண்ணுக்குத் தெரியாமல் தேய்ந்து வருவதை தடுத்து நிறுத்தச் சக்தியற்று, சட்டத்தைக் கையில் வைத்துக் கொண்டு செய்வதறியாமல் திகைக்கும் நாடுகளின் அரசாங்கங்கள் என, உலகம் ஒரு வகையான நெருக்கடிக்குள் சென்று கொண்டிருக்கிறது.

இந்தியாவில் ஏற்கனவே போராட்டங்கள் தொடங்கி விட்டன. பாராளுமன்றம் அளவில் விவாதங்களுடான கூச்சல் குழப்பங்கள் ஆரம்பித்துவிட்டன. சீனாவில், கிராமப்புறங்களில் விலைவாசிக்கெதிரான மக்களின் கொந்தளிப்பு ஊடகங்களில் வெளிவரவில்லை. ஹைட்டி (Haiti)யில் மஞ்சள் களிமண்ணால் ஆன ரொட்டியை சாப்பாடு மாதிரி தின்று தமது பசியைத் தற்காலிகமாக தடுத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த களிமண் பிஸ்கட் கூட தற்போது விலை ஏறிவிட்டதாம். பிரின்ஸ் துறைமுகம் (Port-au-Prince) நகரில் ஊர்வலமாகச் சென்ற ஹைட்டி நகர மக்கள் ஜனாதிபதி மாளிகையின் முன் எங்களுக்குப் பசிக்கிறது என்று கோஷம் போட்டு கலவரம் செய்திருக்கிறார்கள். நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டனர். மெக்ஸிகோவின் முக்கிய உணவான டார்ட்டில்லாவில் பயன்படுத்த சோளம் இல்லையென்பதால் விலை உயரப் போய், அமெரிக்காவிலிருந்து வரவேண்டிய சோள இறக்குமதி மெக்ஸிகோவிற்கு வரவில்லை. காரணம், அமெரிக்காவிலேயே, பயோப்யூவல் (Bio-Fuel) கம்பெனி வைத்திருப்போர் கூடுதலாக விலை தருவதால், விளைகின்ற சோளம் எல்லாம் உயர்ந்து வரும் எண்ணெய் விலைக்கு ஆசைப்பட்டு, மெக்ஸிகோ மக்களின் வயிற்றுக்கு சென்றடையவில்லை. வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் அளவிற்கு சில நாடுகளுக்கு மட்டுமே பொருளாதார வலிமை உள்ளது.

ஈராக் மற்றும் டார்புர் பகுதிகளில் நிலைமை மிக மோசம். போரால் பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கான மக்கள் அகதி முகாம்களில் பிறர் தரும் உணவை நம்பி இருக்கின்றனர். அவர்கள் வேலை செய்வதற்கு நிலமும் இல்லை, அதற்குள்ள அமைதியான சூழலுமில்லை.

மத்தியகிழக்கின் முக்கிய விளைச்சல் நிலங்களை வைத்திருக்கும் ஈராக்கின் இன்றைய நிலைமை என்ன? லட்சக்கணக்கான மக்கள் உணவு உற்பத்தி செய்ய வேண்டியவர்கள், யாரோ தரப்போகும் ரொட்டித்துண்டுக்காக அகதி முகாம்களில் வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள். சூடான் மற்றும் எத்தியோப்பியா நாடுகளில் ஒரு பக்கம் விளையும் தானியம் மறுபக்கத்திற்குச் செல்ல முடியாமல், அகதிமுகாம்களில் இருந்து கொண்டிருக்கும் மக்களுக்கு உணவு தரமுடியாமல் வளர்ந்த நாடுகள் தவித்துக் கொண்டிருக்கினறன. துபாயில் அரசாங்கம் அடுத்த ஒரு வருடத்திற்கு உணவுப் பொருட்களின் விலை ஏறாமல் பார்த்துக் கொள்ளப் போவதாக வாக்குறுதியளித்திருக்கிறது. அரிசி விலையேறினால், குறைந்த கூலியில் வேலை பார்க்கும் இந்திய, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் மக்களால் அங்கு தொடர்ந்து வேலை செய்ய முடியாது. ஏற்கனவே வரலாறு காணாத படிக்கு உயர்ந்து வரும் விலைவாசியைத் தாங்கும் பொருட்டு ஊதிய உயர்வு கேட்டு துபாயில் வேலை நிறுத்தம் நடந்த அதிசயத்தை உலகம் கண்டது. இந்தோனேஷியாவில் அரிசி ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு இராணுவப் பாதுகாப்பு போடப்படுகிறது. சிங்கப்பூரில் அரசு அரிசியைக் கூடுதலாக வாங்கி இருப்பில் வைத்துக் கொள்ள ஆரம்பித்திருக்கிறது. மலேசியாவில் இமிக்ரேஷன் பரிசோதனையில் அரிசி கடத்திச் செல்லப்படுகிறதா என்று சோதனைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. இந்தியா, இந்தோனேஷியா போன்ற நாடுகள் அரிசி ஏற்றுமதிக்கு முற்றிலும் தடைவிதித்துள்ளன.

இது வரை ஏற்பட்ட மாபெரும் உணவுப் பஞ்சங்களை ஆராய்ந்தோமானால், வெறும் 30 சதவீதம் உணவுப்பஞ்சங்கள் தான் இயற்கையால் வந்துள்ளன. மீதம் 70 சதவீதம் உணவுப் பஞ்சம் நாடுகள் பிடிக்கும் பேராசை மிக்க வல்லரசுகளின் போர்களால்தான் ஏறப்பட்டுள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள உலகளாவிய பஞ்சத்திற்கு காரணம் சற்றே வித்தியாசமானது (இதிலும் உலகமயம் தான்).

அமெரிக்காவின் நேரடிப்போர்கள் (ஈராக், ஆப்கானிஸ்தான், மற்றும் ஈரான்/சிரியா போர் ஆயத்தங்கள்) மற்றும் மறைமுகப் போர்கள் (ஆப்ரிக்க நாடுகளில் பெரும்பகுதிகளில்) ஒரு சிறிய காரணம்தான் என்றாலும், தற்போதைக்கு ஏற்பட்டிருக்கும் உணவுப் பஞ்சத்தின் பரிமாணம் சற்றே பெரியது. இது வரை இப்பஞ்சத்திற்கு இயற்கை ரீதியான காரணங்கள் எதுவும் சுட்டிக்காட்டப்படவில்லை. வழமையான மழை பெய்கிறது. விளைச்சல் இருக்கிறது. ஆனால் மக்களுக்கு உணவு கிடைக்கவில்லை. என்ன மாதிரியான பஞ்சமிது.

இதைப் பற்றி அறிந்து கொள்ள கொஞ்சம் பொருளாதார ஞானமும் தேவைப்படுகிறது. அதைப்பற்றி அடுதத பதிவில் விரிவாக பார்க்கலாம்.


(தொடரும்)

தீப விளையாட்டும் திபெத்தும்

ஒலிம்பிக் தீபம் செல்லும் வழியெல்லாம் போராட்டம். ஒலிம்பிக்ஸ் வரலாற்றிலேயே இது ஒரு முக்கியமான கால கட்டம். ஒரு நாடு பொதுவாக மற்ற நாடுகளை பங்குபெறச்செய்து பெருமையுடன் நடத்தும் புராதான உலக விளையாட்டை மற்ற நாடுகள் இவ்வளவு அலட்சியமாக இதற்கு முன் நடத்தியதில்லை.

தீபம் அணைவதற்கு அனைத்து இடங்களிலும் சொல்லப்படும் ஒரே காரணம், திபெத். குறிப்பாக, சீனாவின் மீதான திபெத் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள்.

நாடு கடந்து அகதிகளாக பெரும்பாலோர் வசிக்கும் திபெத்தியர்களுக்கு ஊக்கம் தருவது யார்? ஒவ்வொரு நாட்டிலும் போலீஸ் முடிந்தவரை தீபம் அணையும் வரை கண்டும் காணாமல் இருப்பதற்கு பின்னணியில் இருப்போர் யார்? ஒலிம்பிக் போட்டிக்கு முடிந்த வரையில் இடைஞ்சல் தர சிலர் பிரயத்தனப்படுவது ஏன்? இப்படியெல்லாம் உங்களுக்கு மனதிற்குள் கேள்வி இருந்தால், வாருங்கள், அலசித் தெரிந்து புரிந்து கொள்ளலாம்.

உலகின் மிக உயரமான மலை உச்சி எவரெஸ்ட் இந்தியாவில் இருப்பதாக எனக்குப் பாடப் புத்தகத்தில் படித்ததாக நினைவு. உண்மையில், எவரெஸ்ட் சிகரம் நேபாளத்திற்கும் திபெத்திற்கும் இடையிலான பகுதிக்குள் இருக்கிறது. ஆக இந்தியாவிற்கும் எவரெஸ்டிற்கும் சம்பந்தமில்லை. திபெத்தை சீனா உரிமை கொண்டாடுவதால், நியாயமாக எவரெஸ்ட சிகரம் சீனாவில்தான் இருக்கிறது. திபெத்தில் தான் இருநூறு கோடிப் பேருக்கு மேல் உள்ள நாடுகளில் ஓடும் 7 வற்றாத ஜீவ நதிகள் உற்பத்தியாகின்றன. தலைக்காவிரியைக் கொண்டிருக்கும் கர்நாடகாவிடம் ஒரே நாட்டிற்குள் இருந்து கொண்டு நாம் படும் பாடை நினைத்துப் பார்த்தால், திபெத்தை உரிமை கொண்டாடும் நாடு, நாளைக்கு ராயல்டி கேட்டால் என்ன நடக்கும்? வேறென்ன, நேரடியாக உலகப் போர்தான்.

மேற்படி காரணங்களில் இந்திய வெளியுறவுத்துறை புத்தர் தோன்றிய நாடு என்கிற உரிமையில் தலாய் லாமாவிடம் மிகவும் நெருக்கம் வைத்துக் கொண்டது. அமெரிக்கா, அங்கு ஒரு படைத்தளத்தை நிறுவிக்கொள்ள தனிநாடு கோரிக்கையை முன் வைக்க, இரண்டு நாடுகளுக்கும் சீனா ஆப்பு வைக்க தலாய் லாமா தப்பித்து ஓடினார். இந்தியா, தர்மஸாலா என்ற இடத்தில், அவருக்கு அடைக்கலம் கொடுத்தது. இன்று வரை அவர் தனது மறைமுக திபெத்திய அரசை அங்கிருந்து தான் நடத்துகிறார். அதே சமயம், 1960களிலிருந்தே சிஐஏ விடமிருந்து மாதத்திற்கு 15000 டாலர் வரை ஊதியமாக பெற்று வந்திருக்கிறார்.

ஆக இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் திபெத்தின் மீது ஒரு கண். இந்தியாவிற்கு எல்லை சார்ந்த பிரச்னை. அமெரிக்காவிற்கோ, சீனாவிற்கு தலைவலி கொடுக்க ஒரு சரியான களம். அமெரிக்காவின் NED (National Endowment for Democracy) என்ற சிஐஏவின் மறைமுக அமைப்பு ஒன்று பல்வேறு நாடுகளில் எதிர்க்கட்சிகளையோ, சிறு சிறு குழுக்களையோ தூண்டி அவ்வப்போது பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது. நேரடியான பிரச்னைகள் இல்லாமல், தனித்தமிழ்நாடு கேட்டு ஆங்காங்கே சிறு சிறு குழுக்கள் குண்டுகளை வெடிக்கச் செய்யும் போதெல்லாம் என்னவோ இந்த மாதிரியான அமைப்புகள் மறைமுகமாக பொருளாதார உதவி செய்கின்றனவோ என்கிற சந்தேகத்தை அதிகப்படுத்துகின்றன. சமீபத்தில் மியான்மரில் நடந்த புத்த பிக்குகளின் போராட்டம் உட்பட, சீனாவின் டியான்மென் சதுக்கத்தில் ராணுவ கவச ஊர்தி ஒன்றின் முன் மாணவன் ஒருவன் உயிர் விட்ட சம்பவம், சீனாவின் பாலுன் கோங் (Falun Gong) என்ற அமைப்பை வெளிநாடுகளில் வளர்த்து வருவது, ஜார்ஜியாவில் ரஷ்யாவிற்கு எதிராகப் போராட்டம் என்று (இந்தியாவில் உள்ள சம்பவங்களை இங்கு குறிப்பிட்டால், பல பேர் பொங்கி எழக்கூடும். எனவே, வேண்டாமே, ப்ளீஸ்...) இந்த அமைப்பின் கைங்கர்யங்கள் கொஞ்ச நஞ்சமில்லை.

இந்தச் சூழ்நிலையில், ஹென்றி கிஸ்ஸிங்கர் சொன்ன வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த, அதே சமயம் அமெரிக்காவின் பிந்தைய 50 ஆண்டு வெளியுறவுக் கொள்கையின் பிரதானக் கொள்கையாக இருக்கும் அந்தக் கருத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அது

“If you control the oil, you control entire nations…” - Henry Kissinger

உலகின் மிகப் பெரிய வளரும் நாடுகளில் அதிகமாக எண்ணெய் வளத்தை நம்பி உள்ள நாடு, சீனா. சீனாவின் வர்த்தகரீதியான வளர்ச்சி அதிகரித்த போதெல்லாம் அமெரிக்கா கவலைப்படாமல் இருந்ததற்குக் காரணம். யார் எண்ணெய் வாங்கினாலும், அமெரிக்க டாலரில்தானே வாங்கியாக வேண்டும். டாலர் அச்சிடும் செலவிற்குள் எண்ணெயை ஏறக்குறைய இலவசமாக அமெரிக்கா பெற்றுக் கொள்ளும் அதே சமயத்தில், மற்ற நாடுகள் அமெரிக்கப் பொருளாதாரத்தைத் தாங்கிப் பிடித்துக் கொள்ளும் என்ற கணக்கில் இது நாள் வரை பொழுது ஓடியது. புத்திசாலித்தனமாக சீனா என்ன செய்தது என்றால், அந்நியச் செலாவணியாகக் கிடைத்த டாலரையெல்லாம் அமெரிக்காவிலேயே முதலீடு செய்தது. அதாவது பாண்டுப் பத்திரங்களாகவும் மற்றும் ஏனைய அமெரிக்க நிதியமைச்சு சார்ந்த ஆவணங்களிலும் முதலீடு செய்தது. அமெரிக்காவிலிருந்து சீனாவிற்கு எதுவும் ஏற்றுமதி ஆகாததால், ஏறக்குறைய 3 டிரில்லியன் அமெரிக்க டாலர் முதலீடுகளை இன்றைக்கு சீனா வைத்திருக்கிறது. சீனா அவற்றைக் குறைந்த விலைக்கு சந்தையில் விற்க முன்வந்தால், அமெரிக்கர்கள் எல்லாம், 1997ல் இந்தோனேசியாவில் ருபியாவை மூட்டை கட்டிக்கொண்டு போய் டீக்குடித்த மாதிரி அமெரிக்க டாலரை மூட்டை கட்டி எரித்துக் குளிர் காயவேண்டியது தான். ஏனென்றால், அடுப்புக்கரியை டாலர் கொடுத்து வாங்கி எரிப்பதை விட நேரடியாக டாலரை எரித்தால் காசு மிச்சமாக இருக்கும். இது போக மத்திய கிழக்கு நாடுகள், எண்ணெய் வர்த்தகத்தை ஈரோவில் நடத்தப் போவதாக பேசத் தொடங்கியிருக்கின்றன. சதாம் உசேன் அப்படிப் பேசப் போய்த்தான், இறைவனடி போய்ச் சேர்ந்தார். ஈராக் மக்கள் அனுபவிக்கின்றனர். ஈரான் சந்தடிச் சாக்கில் எண்ணெய்ச் சந்தை ஒன்றை ஆரம்பித்து அதில் ஈரோவை முன்னிறுத்தி வர்த்தகத்தை ஆரம்பித்தே விட்டது. ரஷ்யா அதன் முதல் கஸ்டமர். விரைவில், அபுதாபிக்கருகில் உள்ள வளைகுடாவில் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்கக் கூடும்.

சீனா ஒழுங்காக அமெரிக்க டாலரில் எண்ணெய் வாங்கிக் கொண்டிராமல், தாமே எண்ணெய் தோண்டி எடுத்துக் கொள்ளப் புறப்பட்டது அமெரிக்காவிற்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. கிஸ்ஸிங்கரின் அடிப்படைக் கொள்கையையே அது ஆட்டிப் பார்க்கிறது. அதனால்தான் சீனா எண்ணெய் தோண்டிக் கொண்டிருக்கும் டார்புர் நகரில் மனித உரிமைப் பிரச்னை என்று உலகளாவிய விவாகரங்களாக கிளப்பிக் கொண்டிருந்தனர். இந்தியாவிற்கும் இதே பிரச்னை இனி வரலாம். அதென்னமோ தெரியவில்லை, எங்கெல்லாம் இந்தியாவும் சீனாவும் போட்டி போடுகின்றனவோ, அங்கெல்லாம் சீனாவே அதி முக்கியமான பாகத்தைப் பெற்றுக் கொண்டு, அவ்வளவு சிறப்பில்லாத பாகத்தை இந்தியாவிற்கு விட்டுக் கொடுத்து வருகின்றது. இதோ அருகாமையில் இருக்கும் மியான்மரே ஒரு உதாரணம். [இந்திய வெளியுறவுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகளின் விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கலாம்.] இது ஏன், மத்திய கிழக்கிலிருந்தும், காஸ்பியன் பகுதிகளிலிருந்தும் தரை மார்க்கமாக சீனாவிற்கு குழாய் வழி எண்ணெய் எடுத்துச் செல்லும் திட்டம் முழு வடிவம் பெற்றுக் கொண்டிருந்த வேளையில், அக் குழாய் வழி செல்லும் உஸ்பெகிஸ்தான், கஸகஷ்தான், கிரகிஸ்தான் போன்ற பகுதிகள் ரஷ்யாவை உடைத்து தனி நாடுகளாக்கப்பட்டன. அவை அமெரிக்காவின் நெருங்கிய நண்பர்களாகவும் ஆயின.

திபெத் போதாதென்று, திபெத்திற்கு அருகாமையில் சீனாவிற்குள் இருக்கும் தனியாட்சிப் பிரதேசத்தில் வசிக்கும் சீன முஸ்லிம்களான உய்குர் இன மக்களை பாகிஸ்தானில் பயிற்சி கொடுத்து அனுப்பி வைக்கும் கைங்கர்யத்தையும் செய்து வருகிறது. சமீபத்தில் கூட விமானம் ஒன்றைக் கடத்தியதாக சிலர் சீனாவில் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம்.

ஆகவே, அமெரிக்காவின் எண்ணெய் அரசியலுக்கு சீனாவால் பங்கம் வரும் என்ற பயத்தாலும், அதிகப்படியான டாலரை கையிருப்பாக வைத்திருக்கும் நாடாக சீனா இருப்பதாலும், அமெரிக்காவிற்கு சீனாவை மிரட்டி வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. அதே சமயம், இந்த மாதிரியான பல பிரச்னைகளைப் பார்த்த சீனா நாடு, பல்லைக் கடித்துக் கொண்டு ஒலிம்பிக்ஸை எப்படியாவது அமைதியாகவும் சிறப்பாகவும் நடத்தி விட மிக உறுதியாக இருக்கிறது. இவ்வருடக் கடைசியில், அதாவது, ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்கள் முடிவுற்ற கையோடு, உலகளவில் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதார மாற்றம் வரலாம். அதில், சந்தேகமில்லாமல் பாதிக்கப்படப்போவது அமெரிக்கா தான். அதே சமயம் அந்த மாற்றத்தால் பயனடையப் போகும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

LORD OF WAR - விக்டர் பெளட் கைது.


ஆயுத வியாபாரி விக்டர் பெளட் இன்று தாய்லாந்து போலீசாரால், அமெரிக்காவின் போதைப் பொருள் என்ஃபோர்ஸ்மென்ட் ஏற்பாட்டில் (Sting Operation) கைது செய்யப்பட்டார். கொலம்பியப் போராளிகளுக்கு ஹெலிகாப்டர் உட்பட்ட தளவாடங்களை விற்பதற்கான ஒரு பேரத்தில் அவரின் கூட்டாளியின் மூலம் இந்த வலை விரிக்கப்பட்டு, அதன் தொடர்பான தொலைபேசிப் பேச்சு உட்பட பதிவு செய்யப்பட்டு, பேரத்தின் இறுதிக்கட்டத்தில், பாங்காக்கிற்கு வரவழைக்கப்பட்டு, சில மணி நேரங்களில் கைது செய்யப்பட்டார்.

இவர் கீழ்க்கண்ட பதிவுகள் மூலம் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர்தான்.

ஆயுத வியாபாரிகள்.. அதீத பேரங்கள் - 1
ஆயுத வியாபாரிகள்.. அதீத பேரங்கள் - 2
ஆயுத வியாபாரிகள்.. அதீத பேரங்கள் - 3
ஆயுத வியாபாரிகள்.. அதீத பேரங்கள் - 4

அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகள் இவரைத் தங்கள் நாட்டில் வைத்து விசாரிக்க அனுமதி கோரியிருக்கின்றன. இன்டர்போலின் சிவப்பு நோட்டீஸ் கூட இவரின் பேரில் இருக்கிறது. ஆனால், தாய்லாந்து இந்த வழக்கை தம் நாட்டிலேயே விசாரிக்க முடிவு பண்ணியிருப்பது, பேரத்திற்கு வழி வகுக்கும். ஏனெனில், தாய்லாந்தில் அவர் குற்றம் ஏதும் செய்திருக்கவில்லை. இதற்கு முன் நடந்த பேரம் எல்லாமே வேறு வேறு நாடுகளில் வைத்து நடந்திருக்கிறது. எனவே, தாய்லாந்தில் நடக்கும் இந்த வழக்கு நிலைக்கப் போவதில்லை. ஆகையால் நாடு கடத்தப் போவது என்பது உறுதி. அமெரிக்கா முந்தப் போகிறதா அல்லது ரஷ்யா முந்தப் போகிறதா என்பது விக்டரின் அதிர்ஷ்டத்தைப் பொறுத்த விஷயம். விக்டரின் நேரடி ஈடுபாடு கொஞ்சம் முட்டாள்தனமாகத்தான் தெரிகிறது. ஆனால், வெனிசூலாவின் சாவேஸுடன் வம்பிழுக்க நினைக்கும் அமெரிக்கா, கொலம்பியா மூலம் ஏற்கனவே வம்பை ஆரம்பித்தாகி விட்டது. தற்போது, உளவுத்துறையின் மூலம் அல்லாமல் போதைப் பொருள் தடுப்பு அமைப்பின் படி கைது செய்திருப்பது பலரின் புருவங்களை உயர்த்தியிருப்பதென்னவோ உண்மை.

என்னதான் நடக்கப் போகிறது என்று பார்க்கலாம்.



Picture Courtesy: http://www.mensvogue.com/

சுஜாதா என்கிற வழிப்போக்கன்

சுஜாதா இறந்து போனார் என்று படித்ததில் இருந்து மனது ஒரு மாதிரியாகக் கனக்கிறது. அவரை நான் நேரில் கூட பார்த்ததில்லை. சுஜாதாவின் எழுத்துக்களால் பாதிக்கப்பட்டவர்கள் இன்றைக்கு வலையுலகில் ஏராளமானோர் இருக்கின்றனர். இன்னும் கொஞ்ச நாட்களுக்கு ஏராளமான இரங்கல் வலைப்பதிவுகளைக் காண நேரிடலாம்.

1970களில் அவரின் நில் கவனி தாக்கு தொடர் தினமணிகதிரில் வந்தபோது நான் தொடக்கப்பள்ளி படித்துக் கொண்டிருந்தேன். அப்போதே நான் ஒரு புத்தகப் புழு (அவரின் பல கதைகளில் வருவது போன்ற ஒரு typical புத்தகப் புழு நான்). என் தந்தை அப்போதைய பிரபல நாளிதழ்களுக்கு நிருபராக இருந்ததால் பலவகையான சஞ்சிகைகளையும் நாளேடுகளையும் தினமும் படிக்கின்ற வாய்ப்பை நான் வீட்டிலேயே பெற்றேன். நில் கவனி கொல் தொடரில் அவர் ஒரு பிரட்டா வகை கைத்துப்பாக்கியைப் பற்றி அக்கு வேறு ஆணிவேறாக விவரித்துவிட்டு, தொடரும் என்ற வரிக்கு மேல், அந்தத் துப்பாக்கி 18 இன்ஞ் தூரத்தில் என்னைக் குறிபார்த்துக் கொண்டிருந்தது என்றார். அவ்வளவுதான், அன்றிலிருந்து சுஜாதா சுரம் பிடித்துவிட்டது. அப்போதெல்லாம் பெண்கள் பெயரில் நிறையபேர் கதை எழுத ஆரம்பித்திருந்தனர். பிற்பாடு நூலகத்தில் போய் சுஜாதா ஏற்கனவே எழுதிய கதைகளை, நாவல்களை எல்லாம் படித்தேன். அதுவும் திருச்சி மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், சமயபுரம், லால்குடி என்று இவற்றைச் சுற்றியே எழுதியிருந்த பல நாவல்கள், காவிரிக்கரையின் குளிர்ச்சியில் மரத்தடியில் படுத்துக் கொண்டே படித்த மாதிரியான உணர்வுகள் இன்னும் நினைவிற்குள் இருக்கிறது. என்னை பெரிய அளவில் பாதித்த நாவல், பிரிவோம் சந்திப்போம். அதன்பின், அவரின் நாவல்களில் குறிப்பிட்டிருந்த தி.ஜானகிராமன், மற்றும் இன்னபிற நாவலாசிரியர்களின் நாவல்களைத் தேடிப் பி(டி)த்துப் படிக்கத் தொடங்கினேன். இவ்வாறாக நாவல்களை, கதைகளை சளைக்காமல் படிக்கும் வெறியை ஊட்டியவர் சுஜாதா என்றால் மிகையாகாது. ஏன் எதற்கு எப்படி என்ற தொடர் ஜூனியர் விகடனில் (அப்போது அதன் விலை நாற்பது காசு) வந்தபோது, சுஜாதா பற்றிய மரியாதை அதிகமானது. இவர் தொழில்நுட்பக் கேள்விகளையெல்லாம் இவ்வளவு எளிதாக விளக்கியிருக்கிறாரே என்பதால் அந்த மரியாதை. அப்போது தற்போதைய மாதிரி இன்டர்நெட் எல்லாம் பிரபலமாகவில்லை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

எழுத்து நடையால் தன்னை தனிப்படுத்திக் காட்டி பேர் வாங்கியவர். விஞ்ஞானச் சிறுகதைகளைத் தமிழில் பிரபலமாக்கியவர். துப்பறியும் நாவல் முதல் வரலாற்றுப் புதினம் வரை பல்வேறு தளங்களில் எழுதியிருக்கிறார். நாலாயிரத் திவ்விய பிரபந்தம் முதல் ஷிட்னி வரை விமர்சனம் செய்வார். எண்சீர் விருத்தப்பா முதல் ‌‌ ‌‌அய்க்கூ வரை அலசுவார். சினிமாவிற்கு அவர் போக ஆரம்பித்தபின்னால் அவரின் எழுத்து நடையில் மாற்றம் ஏற்பட்டது. ஆனாலும், அவர் எழுதிய சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் நவீனத் தமிழ்இலக்கியத்தில் மறைத்து விட இயலாதவை.

அவர்தம் மறைவால் வாடும் அன்னாரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆசியாவின் கொசோவாக்கள்..

கொசோவாவின் தன்னிச்சையான சுதந்திரப்பிரகடனமும், அதை அங்கீகரிக்கும் மேற்கத்திய நாடுகளும், உலகின் பல ஜனநாயக நாடுகளின் வயிற்றில் புளியைக் கரைத்திருப்பதென்னவோ உண்மை. 20 லட்சம் பெரும்பான்மை (90%)அல்பேனிய முஸ்லிம் மக்களைக் கொண்ட கொசோவா செர்பியாவின் ஒரு மாநிலமாக, அதே சமயம் UN-NATO அமைதிப் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பில் 1999 கொசோவா போர் முதல் இருந்து வருகிறது. இந்த தனிநாடு பிரகடனத்தை மேற்கத்திய வல்லரசுகள் ஆதரித்து ஒரு முன்னுதாரணத்திற்கு வழிவகுத்திருக்கின்றன. இந்த முன்னுதாரணம், ஐநா என்ற அமைப்பின் இருப்பையே கேலி செய்வதாக உள்ளது. மேலும் பல கொசோவாக்கள் உருவாவதற்கு இது வழி வகுக்கும் என்பதுதான் இப்போதைய முக்கிய விவாதப் பொருள். இந்தியா, இலங்கை, ரஷ்யா, சீனா, ஸ்பெயின், மற்றும் சில ஐரோப்பிய நாடுகள், கொசோவாவின் பிரகடனத்தை அங்கீகரிக்க மறுத்ததுடன், இதைப் பற்றி விவாதிப்பதற்கு அவசர ஐநா கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கின்றன. வேறென்ன, கொசோவாக்கள் தங்கள் நாடுகளில் தோன்றி விடக்கூடாது என்பதற்காகத்தான்.

1970-களிலேயே கொசோவா என்ற தனிநாட்டிற்கு அடிகோலியாகிவிட்டது. பிற்பாடு யூகோஸ்லாவியா என்ற நாடு பல்வேறு பிரிவுகளாக சிதறுண்ட நிலையில் (போஸ்னியா, க்ரோஷியா, செர்பியா, etc), செர்பியாவில் கொசோவா பகுதியை தனி அந்தஸ்துள்ள மாநிலமாகப் பிரகடனப்படுத்தக் கோரி போராட்டம் வலுக்க, அப்போதைய அதிபர் ஸ்லோபதான் மிலோசெவிக் கடுமையான அடக்கு முறையைக் கையாண்டார். அது சர்வேதச அளவில் பெரும் கண்டணத்திற்கு உள்ளானது. அப்போதைய ரஷ்ய அரசின் போரிஸ் எல்ட்ஸினின் அறிவுரையின் பேரில், மிலோசவிக் அந்தத் தவறைச் செய்தார். தனது ராணுவத்தைப் பின்வாங்கிக் கொள்ள, காத்திருந்த சர்வதேச அமைப்புகள் (அமெரிக்க மற்றும் ஜெர்மனிப் படைகள்) ஐநா/நாடோ அமைதிப் பாதுகாப்புப் படை என்ற பெயரில் 1999ல் ஆக்கிரமநம் செய்து கொண்டன. இன்றைக்கு ஐரோப்பாவின் மிகப் பெரிய அமெரிக்கப் படைத்தளம் கொசோவாவில் தான் உள்ளது (Camp BondSteel). ரஷ்யாவைச் சுற்றி பாதுகாப்பு வளையம் அமைக்கும் வகையில் அமெரிக்க முகாம்களை ஏற்படுத்தும் இராசாந்திர செயற்முனைகளில் இதுவும் ஒன்று. அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் ஈடுபாடும் அத்தகைய வகையைச் சார்ந்தது தான்.

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளின் தூண்டுதலின் பேரில், கொசோவா தனிநாடாகத் தன்னைப் பிரகடனப் படுத்திக் கொண்டது. உள்நாட்டில் தனிநாடு கேட்டுப் போராடும் அமைப்புகளைச் சமாளித்துக் கொண்டிருக்கும் பல்வேறு நாடுகள் இதற்கு கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளன. ரஷ்யாவில் ஏற்கனவே ஜார்ஜியா பிரச்னை உள்ளது. இந்தியாவில், காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள், சீனாவில் மத்தியப் பகுதி, பாகிஸ்தானில் பலுசிஸ்தான், இலங்கையில் தமிழீழம் என்று பல நாடுகளிலும் பிரச்சினை உள்ளது.

இலங்கையில் விடுதலைப்புலிகள் தமிழீழத்தைத் தனிநாடாகப் பிரகடனம் செய்து விடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டிருப்பதை மறுக்க முடியாது. ஏன் இப்படி ஒரு சாத்தியக்கூறு இருக்கக்கூடாது என்பதைப் பற்றிப் பார்க்கலாமே.

தனி நாடாகப் பிரகடனப் படுத்த வேண்டுமென்றால், ஒரு வல்லரசு அதற்கு ஆதரவாக இருக்க வேண்டும். அருகாமையில் உள்ள இந்தியா, புலிகளால் இந்த முயற்சி எடுக்கப்படும் வரையில், அதற்கு ஒருபோதும் உதவப் போவதில்லை. சீனாவுக்குச் சரியான முகாந்திரங்கள் இல்லை. அமெரிக்கா இந்தியாவைப் பகைத்துக் கொண்டு இதைச் செய்யப் போவதில்லை. ரஷ்யாவிற்கோ, இதில் ஈடுபாடு் இருக்கப் போவதில்லை.

ஆனால்..... ஆச்சரியங்கள் நடக்கலாம். அதை நடத்திக்காட்ட, அதைப் பற்றி எடுத்துப் பேச புலிகள் தரப்பில் இன்றைக்கு யாரும் இல்லை என்பது தான் வேதனையான விசயம். அன்டன் பாலசிங்கம் அவர்கள் இன்றைக்கு உயிரோடு இருந்திருந்தால் இது சாத்தியமாயிருக்கலாம் என்று ஒரு எண்ணம் பளீரென வந்து போவதைத் தடுக்க முடியவில்லை. தமிழ்ச்செல்வனுக்குப் பிறகும் உலகத் தலைவர்கள் அளவில் அரசியல் ரீதியாகப் பிரதிநிதிக்க இன்னும் யாரும் அடையாளம் காணப்படவில்லை என்பது ஒரு ஊனமே. அப்படி ஒரு தலைவரை ஈழத்தில் அடையாளம் காண்பதை விட, இந்தியாவிலிருந்தே காண்பது சரியாக இருக்கலாம். அப்படிப் பார்த்தால், நம் கண் முன் வருகிற நபர் வைகோ தான். ஆங்கில அறிவுடையவர், பல தலைவர்களுடன் பழகியவர், ஆழ்ந்த அரசியலனுபவம் மிக்கவர் என்ற தகுதிகளுடன், புலிகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தும் அதற்காகச் சிறைவாசம் அனுபவித்தவரும் என்பதும் கூடுதல் தகுதிகள். ஆனால், அவர் அதற்கு சில தியாகங்கள் வேண்டியிருக்கும். தமிழக அரசியலை விட்டு அவர் வெளியே வரவேண்டும். அவர் தனது அரசியல் கனவுகளை உதிர்த்து விட்டு வெளியே வந்தாக வேண்டும். புலம் பெயர்ந்து உலகளவில் செயல்படத் தயாராக வேண்டும்.

மேலும், புலிகள் தரப்பில் பொதுவிவகாரத்தைக் கவனிக்க ஆளில்லாத இந்தச் சூழலில் சரியாகப் பிரச்சாரம் செய்து, உலகளாவிய அபிப்பிராயத்தை ஏற்படுத்தியதில் வெற்றியும் பெற்றிருக்கிற இலங்கை அரசு, ஆயுத ரீதியாகவும், தாக்குதல் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளிலும் புதுமையைக் கையாண்டு வருகிறது. போர் உச்சமடைந்திருக்கிற இந்த வேளையில், ஊடகச் சமரும் உச்சமாக உள்ளது. பல்வேறு வகையான ஊடகப் பொய்கள் வலம் வருகின்றன. இலங்கை இராணுவம் கொடுக்கும் புள்ளி விவரங்களைக் கூட்டினால், சிறு பிள்ளை கூட இது பொய் என்று சொல்லும் அளவிற்கு ஊடக அறிக்கைகள் பிரசுரமாகின்றன. அதை எதிர்த்து அல்லது விளக்கிச் சொல்ல யாருமில்லாத நிலை சோகம்தான்.

ஒன்று நிச்சயம், தலைமுறையாக நடந்து வரும் இந்தப் போராட்டத்திற்கு விரைவில் முடிவென்று ஒன்று வேண்டும். புலம் பெயர்ந்து வசிக்கும் அடுத்த தலைமுறையினர், இஸ்ரேலர்கள் போல தலைமுறை கடந்தும் தமக்கென்று உருவாக்கிய தாய் மண்ணிற்கு வந்தது போல, தமிழ் ஈழத்திற்கு வசிக்க வருவார்களா என்பது கேள்விக்குறிதான். எனவே, தீர்வொன்று வேண்டும், அதுவும் விரைவில் வேண்டும்.

Darfur and Steven Speilberg - 2

சூடானுக்கு உதவ ரஷ்யா மற்றும் கீழ்த்திசை நாடுகள் உதவ முன் வந்ததைக் கண்டோம். சில வாசகர்கள், சரியாகவே கணித்திருந்தனர். எண்ணெய் வளம் தான் மிக முக்கியக் காரணம். உலகின் மிகப் பெரிய எண்ணெய் வளத்தைத் தன்னகத்தே கொண்டிருக்கும் சவுதி அரேபியாவை விட, டார்ஃபுரில் இருக்கும் எண்ணெய் வளம் பெரியது என்ற எண்ணெய் வள ஆய்வறிக்கைதான் இதற்கெல்லாம் மூல காரணம். எண்ணெய் மட்டுமா, உலகிலேயே மூன்றாவது பெரிய யுரேனியம் டெபாஸிட் டார்ஃபுர் பகுதியில் தான் உள்ளது. அதுவும் ஏறக்குறைய மிகச் சுத்தமான டெபாஸிட். அது போக உலகின் நான்காவது பெரிய காப்பர் டெபாஸிட்டும் இங்குதான் உள்ளது. தரைக்குக் கீழ் உள்ள எண்ணெய்தான் பாவம் அத்தரைக்கு மேல் உள்ள மக்களை அநியாயமாகக் கொல்வதற்குக் காரணமாயிருக்கிறது. எங்கெங்கு எண்ணெய் வளம் உள்ளதோ எங்கெல்லாம் அமெரிக்கக் கம்பெனிகளின் கையில் அந்த எண்ணெய் வளங்கள் இல்லையோ, அங்கெல்லாம் பிரச்னைதான்.

சாட் என்ற சூடானின் அண்டை நாட்டைப் பார்த்தோமே.. அந்த நாட்டில் டார்ஃபுர் பகுதியை ஒட்டிய பகுதியில் உள்ள எண்ணெய் வளத்தை எக்ஸான் மொபில் எடுத்துச் செய்து கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் அதற்குக் கடும் எதிர்ப்பு இருந்தது. ஈராக் போரின் காரண கர்த்தா (Iraq War Architect) பால் வால்போவிட்ஸ் உலக வங்கித் தலைவரான பிறகு, அவருக்கு இடப்பட்ட விசேஷ உத்தரவு என்னவென்றால், எக்ஸான் மொபில் கம்பெனிக்கு சாட் நாட்டில் எந்தப் பிரச்னையும் வரக்கூடாது என்பது தான். உலக வங்கி தாரளமாக கடன் வழங்கியது. அதே சமயம், தேவையான நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. அமெரிக்காவின் 17 சதவீத எண்ணெய் வள இறக்குமதி ஆப்பிரிக்காவில் இருந்து வருகிறதென்றால், அந்த 17 சதத்தில் இதுவும் ஒன்று. 17 சதத்தை 26 சதமாக ஆக்குவதற்கான திட்டம் வரையப்பட்டிருக்கிறது. எக்ஸான் மொபில் இதில் தீவிரம் காட்டுகிறது. உற்பத்தியோ, எண்ணெய்வள நாடுகளில் நெருக்கடியோ இல்லாமல், எண்ணெய் ஏன் 100 டாலர் வரை உயர்ந்தது என்பதற்கு தனியாகவே ஒரு பதிவு போட வேண்டும். இந்த அநியாய விலை உயர்வு, எண்ணெய்க் கம்பெனிகளும் இராஜயோகமாகப் போனது. எக்ஸான் மொபில் மட்டுமே 36 பில்லியன் டாலர் அதிக லாபம் ஈட்டியிருக்கிறது.

ஈராக்கில் 600,000 மக்களை அநியாயமாகக் கொன்று குவித்த அமெரிக்கா, டார்ஃபுரில் 200,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற ஊகத்தின் பேரில் (எண்ணிக்கை இன்றளவும் அனுமானம் மட்டுமே செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம், சூடான் அரசு அந்த எண்ணிக்கைய வன்மையாக மறுத்திருக்கிறது) சீன அரசைக் குறைசொல்கிறார்கள். அருகிலிருக்கும் காங்கோ நாட்டில் இதுவரை 1.35 மில்லியன் மக்கள் கொன்று குவிக்கப்பட்டிருக்கிறார்கள். இரு தரப்பிற்கும் ஆயுதம் விற்கும் அமெரிக்கா அதைப்பற்றி ஒரு மூச்சு கூட விடவில்லை. அக்கம் பக்கத்து ஆப்ரிக்க நாடுகளில் உள்நாட்டுப் போர்களில் இறந்தவர்களைப் பற்றி இங்கு ஒரு லிஸ்டே இருக்கிறது.

சீனாவைத் தாக்கக் காரணம் என்ன?

சூடான் அரசு ஆரம்ப முதலே அமெரிக்க கம்பெனிகளுக்கு எண்ணெய் வள ஆய்விற்கு அனுமதி தரப் போவதில்லை என்று உறுதியாக இருந்தது. சீன அரசின் CNPC, இந்திய அரசின் ONGC, மலேசியாவின் PETRONAS போன்ற நிறுவனங்கள் எண்ணெய் வள ஆய்விற்கு அனுமதி பெற்றன. சீனா அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால், இதுவரை துரப்பணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிராத பகுதிகளைக் குறிவைத்து தற்போது, நைஜீரியா, சாட், லிபியா, அல்ஜீரியா என்று தனது எண்ணெய் வள மூலாதாரங்களைப் பெருக்கியது.

சூடானில் போட்டி கடினமாகத்தான் இருந்தது. சீன அரசு ஆயுதங்கள் முதலான உதவிகளை சூடான் அரசிற்கு அளித்ததன் மூலம், அதிகமான எண்ணெய் வயல் பரப்புகளுக்கு உரிமம் பெற்றது. கல்வி, பொருளாதாரம், ஆயுதம் என்று எல்லாத் துறைகளிலும் சீனா சூடான் அரசைத் தத்தெடுத்த செல்லப் பிள்ளைக்கு செய்வது போல் அத்தனையும் செய்ய, அமெரிக்கா தற்போது சீனா தான் இந்த 200,000 பேர் செத்துப் போனதற்குக் காரணம் என்பது போன்ற ஒரு பிரமையை அமெரிக்கா சார் ஊடகங்களின் மூலம் பிரசாரம் செய்கிறார்கள். இதற்கு திரையுலகப் பெருமக்களும் விலக்கல்ல. நோக்கம் என்னவென்றால், அமெரிக்க எண்ணெய்க் கம்பெனிகள் அங்கு தொழில் செய்ய வேண்டும். சீனா அதற்குத் தடையாக உள்ளது. இராணுவ நடவடிக்கை எடுக்க முடியாத கட்டாயத்தில் அமெரிக்க உள்ளது. அப்படி எடுத்தால் அது சீனாவை நேரடியாகச் சீண்ட வேண்டிய கட்டாயம் வரும். அதற்கான தயார் நிலையில் அமெரிக்கா இல்லாததால், ஊடகங்களின் உதவியை நாடியிருக்கிறார்கள். SAVE DARFUR என்று எத்தனை வெப்ஸைட்கள் உள்ளன தெரியுமா... எல்லாவற்றிலும் திட்டமிட்ட மிகைப்படுத்தப்பட்ட செய்திகள்..

அமெரிக்கா எப்போதுமே ஊடகம் சார்ந்த பிரச்சாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளது. வியட்நாம் தோல்வியை மறைக்க அவர்கள் பணமுதலீடு செய்து எடுத்த எத்தனையோ ஹாலிவுட் படங்களை நாம் மறுக்க முடியுமா? சார்லி சாப்ளினை ஏன் நாடு கடத்தினார்கள் என்பது நாம் அறியாததா? நிர்ப்பந்தங்களின் பேரில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் போன்றவர்கள் இதற்கு முகம் கொடுக்கிறார்கள் என்பது தான் வேதனை. அடுத்து ஜார்ஜ் குளுனி, அமைதித் தூதுவர் என்ற பெயரில் விரைவில் ஒரு சீன எதிர்ப்பு டார்ஃபுர் அறிக்கை விடலாம். பாப் பாடகர்கள் எதிர்ப்பிசை இயற்றலாம்.

அதாவது, மாமியார் உடைத்தால் மண் பானை. மருமகள் உடைத்தால் பொன் பானை.

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த உலகிலே....

Darfur and Steven Spielberg - A political Olympics

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் பேஜிங் ஒலிம்பிக் விளையாட்டு ஆர்ட் டைரக்டர் பதவியில் இருந்து விலகியிருப்பதாக ஊடகங்களில் சூடான செய்திகள் வந்திருக்கிறது. விலகியதற்குச் சொல்லப்பட்ட காரணம் வித்தியாசமானது. சூடானின் டார்ஃபுர் பகுதியில் இனக்கலவரம் நடப்பதாகவும் அதைத் தடுக்க சீனா இதுவரை முயற்சி செய்ய வில்லை என்றும் அதற்கான முயற்சிகளில் சர்வதேச அமைப்புகளை இறக்கி அப்பாவி மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்கும் தான் இந்த வித்தியாசமான விளம்பர குட்டிக்க(ா)ரணம். உலகையே தனது உள்ளங்கைக்குள் வைத்து விளையாடிக் கொண்டிருந்த அமெரிக்க அண்ணாச்சிக்கு என்ன ஆயிற்று. சீனா தலையிடவில்லை என்று சொல்லுவதும், இனப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்து என்று போராட்டம் (Save Darfur movements) நடத்துவதும், நம்மூர் பழமொழி மாதிரி.. சோழியன் குடுமி சும்மா ஆடுமா என்ன என்று கேட்கத் தோன்றினால், அது மிகச் சரி.

ஆடுகின்ற குடுமிக்குப் பின்னால் இருப்பது என்ன? ஏன் அப்படி அந்தக் குடுமி ஆடுகிறது என்பதைத்தான் நாம் இப்போது அலசப் போகிறோம்.

சூடான், ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள சில டஜன் நாடுகளில் பரப்பளவில் பெரிய நாடு. எகிப்து நாட்டிற்கு தெற்கே ஆரம்பிக்கும் சூடான் நாடு, சிறியதும் பெரியதுமாக குறைந்தது எட்டு நாடுகளை தனது எல்லையில் கொண்டிருக்கிறது. மேற்கு ஐரோப்பாவின் அளவிற்குப் பெரிதான சூடான் நாட்டின் தெற்குப் பகுதியான டார்ஃபுர் தான் தற்போதைய பிரச்னைப் பகுதி. டார்ஃபுரை ஒட்டியுள்ள நாடுகள் சாட் (Chad) மட்டும் எரிட்ரியா (Eritrea). மறுபக்கம் எத்தியோப்பியா (வயிறு ஒட்டிப்போய், வாயில் ஈ மொய்க்கும் கறுப்பினக் குழந்தை ஞாபகத்துக்கு வரவேண்டுமே..). சூடானில் வழக்கம் போல பத்துக்கும் மேற்பட்ட பெரும் கறுப்பினக் குழுக்கள் (நம்ம ஊர் சாதிகள் மாதிரி) இருந்தாலும் அவர்களின் பொதுவான பேச்சு வழக்கு மொழி, அரபு மொழி. அது போக இந்தியா போல அத்தனை குழுக்களுக்கும் பிரத்தியேக மொழி ஒன்று உண்டு.

கார்டோம் (Khartoum) நகர்தான் சூடானின் தலைநகரம். 1956ல் பிரி்ட்டனிடமிருந்து போராடிச் சுதந்திரம் வாங்கியபின், ஒரு மதச் சண்டை நடந்தது (1947க்குப் பின்னரான இந்து முஸ்லிம் சண்டை நினைவுக்கு வரலாம்... பிரிட்டன் அதே முறையை ஒவ்வொரு இடத்திலும் பயன்படுத்தியிருக்கிறது). இது கிறித்துவ முஸ்லிம் சண்டை. ஒருவாராக கிறித்துவ அமைப்புகள் முன்வந்து சமாதான ஒப்பந்தமொன்றைக் கையொப்பமிடச் செய்து, ஒரு பத்து வருடத்திற்கு நாடு அமைதியாக இருந்தது. இந்த மதச் சண்டையில் நாம் கவனிக்க வேண்டியது முக்கியமானது ஒன்றுள்ளது. மதச்சண்டை, முஸ்லிம் பெரும்பான்மை வடக்கு சூடானுக்கும் கிறித்துவப் பெரும்பான்மை தெற்கு சூடானுக்கும்தான் நடந்தது. பத்துவருட அமைதிக்குப் பிறகு, 1983ல் ரஷ்யாவின் உதவியுடன் SPLA என்ற அமைப்பு மார்க்ஸிஸ்ட் அமைப்பாக பரிணமித்தது. ரஷ்ய ஆயுதங்கள் ஹெலிகாப்டர்கள் என்று தாராளமாகப் புழங்கின. ஒரு கால கட்டத்தில் ரஷ்யா ஆளும் கட்சியுடன் செய்து கொண்ட இரகசிய உடன்படிக்கையின் படி தெற்குப் பக்க SPLAவின் ஆதரவை நிறுத்திக் கொள்ள, SPLAவிற்கு ஆயுதம் கொடுக்கும் பண உதவி அளிக்கும் நாடுகள் தேவைப்பட்டன. அமெரிக்கா முன்வர, மீண்டும் உள்நாட்டுச் சண்டை ஆரம்பித்தது. 2002 வாக்கில் தீவிரவாதக் குழுக்களுக்கு பயிற்சியளிக்கும் பணியில் இஸ்ரேல் ஈடுபட முன்வந்தது. சாட் மற்றும் எரிட்ரியா நாடுகளில் முகாம்கள் அமைக்கப்பட்டு ஆயுதப்பயிற்சி மொஸ்ஸாத் மூலம் அளிக்கப்பட்டது. முதலில் ரஷ்யா, பிறகு அமெரிக்கா மற்றும் பிரிட்டன், அப்புறம் இஸ்ரேல் என்று இத்தனை நாடுகள் தீவிரவாதக் குழுக்களுக்கு ஆதரவளித்து வந்த நிலையில், அரசுத் தரப்பினருக்கு ஆதரவு தரமுன் வந்தது யாரென்றால் சீனாவும் இந்தியாவும் மலேசியாவும் மற்றும் ரஷ்யாவும்.

அது சரி இவ்வளவு நாடுகளுக்கு இங்கென்ன வேலை?

- தொடரும்.

ஈரானியத் தாக்குதலுக்கு ஆயத்தம் நடக்கிறதா?

தற்சமயம் அமெரிக்கப் பொருளாதாரம் சொல்லொணா கடன்சுமைச்சூழலுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், வட்டிவிகிதம் குறைக்கப்பட்டு நாட்டின் வளர்ச்சி STAGFLATION என்று சொல்லப்படும் மந்தவளர்ச்சிநிலையை எதிர்நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. அமெரிக்க அதிபரைத் தேர்ந்தெடுக்கும் இச்சூழலில், இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டும் ஒரு கெட்ட பெயரோடு பதவியை விட்டு வெளியேற வேண்டிய அவமானம் ஜார்ஜ் புஷ்ஷிற்கு ஏற்பட்டிருக்கவேண்டாம்தான்.

கடன் வாங்கிச் செலவு செய்யும் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட அமெரிக்க அரசு, 2000ம் ஆண்டு கீழ் விழுந்த பொருளாதாரத்தை நிலை நிறுத்தி மேற் செலுத்த போர் சார்ந்த உத்தியைத் தேர்ந்தெடுத்து, ஒரு 911 நாடகம் கொடிதே நிறைவேறியது. 911க்கு சம்பந்தமில்லாத ஈராக்கைத் தாக்கி போருக்கான செலவு அதிகரிக்க அமெரிக்க பட்ஜெட்டில் ஒவ்வொரு முறையும் அதிகமான போர்ச செலவுக்கான அங்கீகாரம் கோரப்பட்டு வருகிறது. ஆறுவருடங்களாக இப்படியாக அமெரிக்கப் பொருளாதாரத்தை ஒருவாறாகக் கட்டிக் காத்தார்கள். கடன் வாங்கி அடுத்த நாட்டு மக்களைக் கொன்று குவித்து தனது பொருளாதரத்தை நிலைநிறுத்தும் ஒரே கேவலமான அரசு அமெரிக்க அரசாகத் தான் இருக்கும். இப்போது, அலன் கிரீன்ஸ்பான் என்ற புண்ணியவான் கடன் வாங்குவதற்கான வேறு ஒரு உத்தியைக் கண்டெடுத்ததன் விளைவுதான் தற்போதைய SUP-PRIME CRISIS. அதாவது கடனைத் திருப்பிச் செலுத்த இயலாதவனுக்கு வீடுவாங்கக் கடன் கொடுத்து, அந்த வீட்டை அடமானச் சொத்தாகக் காட்டி, அதை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு BOND-களாக விற்று விடுவது. இதில் இரண்டு வருட TAX HOLIDAY வேறு. மேற்படி வரிச்சலுகை காலம் முடிந்தபின் தவணை கட்ட முடியாததால், வீட்டை வங்கிகளிடம் கடனாளிகள் திரும்ப ஒப்படைத்து வருகிறார்கள். வீட்டை வாங்குவோர் யாரும் இல்லாததால், யாரும் வசிக்காத முதலும் வட்டியும் வராத அசட்டுச் சொத்துக்களை வைத்துக்கொண்டு வங்கிகள் விழிக்க, ஒரு தீடீர்ப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. டாலர் வீழ்ந்தது. பல வாங்கிகள் டிரில்லியன் டாலர்களில் நட்டம் ஏற்பட்டதாக தங்களது முதலீட்டாளர்களுக்கு அறிவிக்கத் தொடங்கியிருக்கின்றன. சில புத்திசாலி முதலீட்டாளர்கள் கடுமையான அதே சமயம், தமக்குச் சாதகமான நிபந்தனைகளுடன் பில்லியன் டாலர்களை முதலீடாக அளித்து நிர்வாக அமைப்பிற்குள் எளிமையாக நுழைந்து வருகின்றன.

சரி.. ஈரானியத் தாக்குதல் இதில் எங்கு வருகிறது என்கிறீர்களா? வருகிறது.

ஏற்கனவே அமெரிக்க புஷ் இஸ்ரேலுக்கு அளித்த வாக்குறுதியின்படி, ஒரளவு சுயமாகச் சிந்திக்கத் தெரிந்த ஆட்சியாளர்களும், பொருளாதார, இராணுவ பலம் உடைய ஐந்து மத்தியக் கிழக்கு முஸ்லிம் நாடுகளை அளித்தொழிக்கும் பணியில், தற்போது ஈராக் மட்டுமே நிறைவேறியிருக்கிறது. ஏனைய நாடுகளுக்கான செயல்திட்டங்களை புஷ் ஆகஸ்டில் பதவியில் இருந்து இறங்குமுன் நிறைவேற்றியாக வேண்டுமே. புதிய தலைவர்கள் (John Mccain மற்றும் Rudy Guiliani தவிர) யாரும் இஸ்ரேல் சொல்வதை அவ்வளவு பணிவன்புடன் கேட்டுக் கொள்ளப் போவதில்லை என்பதும் இந்த அவசரத்திற்குக் காரணம்.

ஆகஸ்டுக்குள் ஈரானைத்தாக்குவது அமெரிக்காவல் சாத்தியமாகுமா என்பது சந்தேகமே. இதற்கு செனட்டில் ஆதரவு கிடைக்காது. முக்கியமாக, தற்போதைய அமெரிக்கப் பொருளாதாரம் இருக்கும் சூழலில் இதற்கு நிச்சயம் ஆதரவு கிடைக்கப் போவதில்லை. எனவே, தாக்குதல் நிச்சயமானாலும் இது அமெரிக்காவால் நடத்தப் படப் போகாமல் இருப்பதற்கு அதிக சாத்தியம் இருக்கிறது.

ரஷ்ய மற்றும் சீன நாட்டு உதவிகளின் பேரிலும், FBI அறிக்கைகளின் படியும் ஈரானில் அணுகுண்டு தயாரிக்கப் படவில்லை என்பது உறுதியாகியிருக்கிறது. அதே சமயம் இந்த மாதிரியான அறிக்கையை சற்றும் விரும்பாத இஸ்ரேல், FBIக்குள்ளாகவே தனக்கெதிரான கோஷ்டிகள் உருவாகி விட்டதால், இனி அமெரிக்காவை நம்பிப் பிரயோசனம் இல்லை என்று நம்புகிறது. தனது நம்பகமான ஆட்கள் அமெரிக்காவில் உயர் பதவியில் இருக்கும் காலத்திற்குள்ளாகவே இந்தத் தாக்குதலை நடத்திக் காட்ட இஸ்ரேல் விரும்புகிறது. எனவே, இஸ்ரேல் கூடிய சீக்கிரத்தில் ஒரு அணு ஆயுதத் தாக்குதலை ஈரானின் மேல் நடத்தக் கூடும். மீடியாக்களின் கண்களைக் கட்டிவிட்டு, அந்த குண்டு, ஈரானின் அணுகுண்டு ஸ்டாக்கிலிருந்து வெடித்தது என்று பெரும்பான்மை ஆதரவு ஊடகங்களின் மூலம் உலகிற்குப் பறைசாற்றலாம். அல்லது பாகிஸ்தானிலுள்ள அணுகுண்டுகள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு வரும்போது ஈரானில் விபத்தாக வெடித்துவிட்டது என்றும் சொல்லலாம். ஆக, ஒரு பாரியத் தாக்குதலுக்கு ஆயத்தம் நடக்கிறது என்பது மட்டும் நிச்சயம்.

சமீபத்திய மத்தியதரைக்கடல் மற்றும் சூயஸ் கால்வாய் பகுதிகளில் கடலுக்கு அடியில் செல்லும் Sub-Sea Cables "எதிர்பாராத விதமாக" சிதைக்கப்பட்டதன் விளைவாக மத்தியக்கிழக்கு நாடுகள் முதல் மும்பை வரையிலான இன்டர்நெட் சேவைகள் பாதிக்கப்பட்டது. ஆழ்கடலில் இருக்கும் இந்தக் கேபிள்களைச் சரிசெய்ய குறைந்தது மூன்று நாட்களாகும். அப்பகுதியில் போர் நடந்து கொண்டிருந்தால் 10 நாளும் ஆகலாம், ஒரு மாதமும் ஆகலாம். சென்னையிலிருந்து வேறு ஒரு கேபிள் தென்கிழக்காசிய நாடுகளை இணைப்பதால், சென்னை போன்ற தென் மாநிலங்களுக்கு அதிகம் பாதிப்பில்லை என்றாலும், மத்திய கிழக்கு நாடுகளில் இன்டர்நெட் சேவை கடுமையாகப் பாதிக்கப்படும். இந்த நிகழ்வில் முக்கியமாகப் பார்க்கவேண்டியது மூன்று நாடுகள் மட்டும் இதில் பாதிக்கப்படவில்லை. இஸ்ரேல், ஈராக் மற்றும் லெபனான் ஆகிய மூன்று நாடுகள் தான் அவை. அவற்றில் இன்டர்நெட் சேவைகள் வழமையாக இயங்கி வந்தன, இயங்கிக் கொண்டிருக்கின்றன.

உளவு அமைப்புகள் தமது சந்தேகத்தை கொஞ்சம் அதிகப்படுத்தி எச்சரிக்கையாக நிகழ்வுகளைக் கண்காணிக்கத் தொடங்கியிருக்கின்றன. இந்த கேபிள் சிதைப்பு ஒரு முன்னோட்டமாக நடத்திப்பார்க்கப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் ஈராக் போரின் போது, இன்டர் நெட் மூலம் தான் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொடுரமான செயல்கள் எல்லாம் லைவ் ரிப்போர்ட்டாக இணையவலைத்தளங்களின் மூலம் அவ்வப்போது வெளியிடப்பட்டது. அந்த மாதிரி மீண்டும் நிகழக்கூடாது என்பதற்காகத் தான் இந்த இருட்டடிப்பு ஆயத்த முயற்சி நிறைவேற்றப்பட்டது என்பது கணிப்பாகும்.

ஐப்பானில் அணுகுண்டு போட்டு பல லட்சம் மக்களைக் கொன்ற அமெரிக்க அரசை எந்த நீதிமன்றம் தண்டித்தது. ஒரு வேளை ஈரானிய அணுகுண்டுத் தாக்குதல் நிஜமானால், அதே மாதிரிதான் இஸ்ரேலை யாரும் தண்டிக்கப் போவதில்லை. தடியெடுத்தவன் தண்டல்காரன்.