பெட்ரோல் விலையின் பின்னணி மர்மங்கள் / 3

1 லிட்டர் கச்சா எண்ணெயிலிருந்து 1 லிட்டர் பெட்ரோல் கிடைத்து விடுவதில்லை. ஏறக்குறை ய 46 சதவீதம் பெட்ரோலாகக் கிடைக்கிறது. சுத்திகரிக்கும் போது கி்டைக்கும் ஏனைய பொருட்களும், அதன் பகுப்பு விகிதாச்சாரமும் பின் வருமாறு

கச்சா எண் ணெ ய் அளவு (ஒரு பீப்பாய்) 159 லிட்டர்

சுத்திகரிக்கப்பட்டபின் அதன் அளவு 169 லிட்டர் (ஆச்சரியமாக இல்லை ?)

Petrol - 72.5 litres

Diesel - 35 litres

Jet Fuel (Kerosene) - 14.5 litres

LPG - 6.5 litres

Heavy Fuel Oil - 6.6 litres

Heating Oil - 6.6 litres

Other products - 27.5 litres


10 டாலர் விலையேற்றம் எப்படி 2.85 ருபாய் விலையேற்றத்திற்கு எப்படி காரணமாகிறது என்பது இப்போது புரிந்திருக்கும். புரியவில்லையெனில், இதோ

10 டாலர் = 450 ருபாய் (உத்தேசமாக..)
46 சதம் பெ ட் ரோல் = 450x.46 = 207 ருபாய்
72.5 லிட்டர் = 207 ருபாய்
1 லிட்டர் பெ ட் ரோல் = 2.85 ருபாய் (விலை வித்தியாசம்)

எனவே ஒவ் வொரு பத்து டாலர் விலையேற்றத்திற்கும் பெட்ரோல் 2.85 ருபாய் கூடுகிறது.

ஆனால், 159 லிட்டர் 90 டாலர் விற்கும் போது, 1 லிட்டர் பெட்ரோல் இந்திய ருபாயில் 25.47 தானே விற்க வேண்டும்.

(சுத்திகரிப்புச் செலவு மிகச் மிகச் சொற்பம் என்பதால் இங்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வில்லை).

பங்கில் விற்பதோ 63 ருபாய்க்கு...

அதற்கு அரசு தரும் விளக்கம் இதோ

(இந்தக் கணக்கு பெட்ரோ ல் 58.90 கு விற்க்கப்பட்ட போது உள்ளது)

Basic Price: Rs 28.93
Excise duty: Rs 14.35
Education Tax: Rs 0.43
Dealer commission: Rs 1.05
VAT: Rs 5.50
Crude Oil Custom duty: Rs 1.10
Petrol Custom: Rs 1.54
Transportation Charge: Rs 6.00

Total price: Rs 58.90

இப்பொழுது புரிந்திருக்கும், பாதிப்பணம் எங்கு செல்கிறது என்று..

இந்தப் பணம் திருப்பி எண்ணெய்க் கம்பெனிகளுக்கு நட்டத்தை ஈடுகட்ட என்று ஒரு சிறு பகுதி செலவு செய்யப்பட்டு விடுகிறது.

சரி, விலையேற்றத்திற்கான விவரம் தெரிந்தாகி விட்டது. எனவே இதை இத்தோடு விட்டு விடலாமா?

இந்த விலையேற்றம் சர்வதேச அளவில் நடைபெறுகிறதே, பாதிக்கப்படும் மற்ற நாடுகள் என்ன செய்கின்றன? குறிப்பாக, நம் சைஸில் இருக்கும் ‌ சைனா இந்தப் பிரச்னையை எப்படி கையாள்கிறது என்று கவனித்தோமானால், நமக்கு வியப்பு ஏற்படும்.

அதற்கு முன் மாதா மாதம் விலையேற்றம் ஏற்படுகிறதே, இதற்கு முன் அப்படி இருந்ததில்லையே என்று உங்களுக்குத் தோன்றினால்....

உண்மை..

கடந்த 6 மாதங்களில் 7 முறை பெட்ரோ ல் விலை உயர்ந்திருக்கிறது. அது எப்படி? எப்போது ஆரம்பித்தது? என்ற சிறு முன்னோட்டத்தை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

பெட்ரோல் விலையின் பிண்ணனி மர்மங்கள் - 2

1990 களில் சதாம் உசேன் டாலர் மூலம் எண்ணெய் விற்பனை செய்வதை எதிர்த்து ஈரோவில் தான் வர்த்தகம் செய்யவேண்டும் என்று ஒபெக் அமைப்பில் போராடினார். அவருக்கு ஆதரவாக லிபியா, கொலம்பியா, மற்றும் சில உறுப்பினர்கள் முழங்கினர். தவறhன வழிகாட்டல் மூலம் ஈராக் குவைத்தை தாக்க ஊக்கப் படுத்தப்பட்டு, ஊக்கப்படுத்தப் பட்டவர்களாலேயே, போரும் நடத்தப்பட்டு, முதலாம் ஈராக் போர் நடந்தேறியது. ஈராக்கை பலவீனப்படுத்த மட்டுமே முடிந்த அந்தப் போர் அமெரிக்காவிற்குத் தோல்வியில் முடிந்தது. ஆனால் இந்தப் போர் ஏனைய அமெரிக்க எதிர்ப்பாளர்களின் முதுகுத் தண்டுகளை சில்லிட வைக்கும் பயத்தை ஏற்படுத்திய வகையில் அமெரிக்காவிற்கு வெற்றிதான்.


2001ல் இரட்டைக் கோபுர வீழ்ச்சிக்குப் பிறகு, அதில் துளியும் சம்பந்தபட்டிராத சதாம் உசேன் மீது பொய்க்குற்றம் சாட்டி இரண்டாம் ஈராக் போர் ஏவப்பட்டு, வெற்றி கொண்டு, அமெரிக்காவின் நேரடி ஆளுமையின் கீழ் ஈராக் அரசு வந்தது. நேரடி ஆளுமை என்பது அமெரிக்காவின் படைத் தளபதியின் ஈராக்கின் அனைத்து நடவடிக்கைகளும் வந்தது. ஈராக் ஒபெக் அமைப்பின் உறுப்பினர் என்பது உலகறிந்த உண்மை. 2001 ஈராக் போருக்குப்

பின் ஒபெக் அமைப்பில் நேரடியாக அமெரிக்கா உள்ளே வந்தது. மிரட்டல்கள், உரத்த சத்தம் மூலமாக ஒபெக் மூலம் நேரடியாக எண்ணெய் வர்த்தகத்தை கட்டுக்குள் கொண்டுவந்தது. 2002ல் ஒரு வழியாக ஒபெக் விலை நிர்ணயம் செய்யும் உரிமையை இழக்க, ஐசிஈ என்ற நிறுவனம் ஜார்ஜியா மாகாணத்தின் அட்லாண்டா நகரில் ஆன்லைன் வர்த்தகம் செய்யும் நிறுவனத்தை தொடங்கியது. அதற்கு முன் இன்டரநேஷனல் பெட்ரோலியம் எக்சேஞ்ச் என்ற அமைப்பு அத்தகைய வர்த்தகத்தை நடத்தி வந்தது. அதன் மூலம் ஒபெக் அமைப்பு விற்றhலும், விலை என்னவோ 20-40 டாலருக்கு மேல் போனதில்லை.

அந்த இன்டர்நேஷனல் பெட்ரோலியம் எக்சேஞ்ச் (International Petroleum Exchange - IPE) நிறுவனத்தை ஐசிஈ விலைக்கு வாங்கியதன் மூலம், கச்சா எண்ணெய் விலை நிர்ணயம் செய்யும் அல்லது அதை ஏற்றவோ இறக்கவோ செய்யக் கூடிய ஏகோபித்த கட்டுப்பாட்டை அமெரிக்கா பெற்றது. இதை ஒபெக் நாடுகள் அறிந்தனவா, தெரிந்திருந்ததா அல்லது தெரிந்தும் ஒன்றும் செய்ய இயலாத சூழ்நிலையா என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

ஆன்லைன் வர்த்தகம் என்ன என்று சற்று கவனிக்கலாம். ‌ இது சம்பந்தமான பதிவுகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அவற்றிற்கான சுட்டிகள் இ‌ங்கே. பதிவு1, பதிவு2.

உற்பத்தி கேந்திரத்தில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் உற்பத்திச் செலவு 8 லிருந்து 10 டாலருக்குள் தான். இந்த விவரத்தை நீங்கள் என்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் ஆண்டுத் தணிக்கை அறிக்கையில் காணமுடியும். 10 டாலர் கச்சா எண்ணெய், எப்படி 100 டாலருக்கு சர்வதேச சந்தையில் விற்கிறது? யாருக்குப் போகிறது அந்த 90 டாலர்? இதெல்லாம் அறிய வேண்டுமானால், ப்யூச்சர்ஸ் எனப்படும் பங்கு வர்த்தக முறையை அறிந்திருக்க வேண்டும். வரும் காலத்தில் டிமாண்ட் கூடுதலாக இருக்கும் என்ற கணிப்பில் இந்த விலை இருக்கும் என்ற உத்தேசத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, தேவைப்படும் அளவைக் குறித்து ஒரு பார்வர்ட் கான்ட்ராக்ட் போடுவார் அந்த வர்த்தக நிபுணர். அது பில்லியன் டாலர் கணக்கில் வரும். ஆனால், அதில் பத்து சதம் மட்டும் கட்டி அந்த கான்ட்ராக்ட் போட ஆன்லைன் வர்த்தகம் அனுமதிக்கிறது. அந்த பத்து சதத்திற்கும் வங்கிகள் சொற்ப வட்டிக்கு அதாவது, கான்;;ட்ராக்ட் அமலாகும் காலம் வரையிலான வட்டியை மட்டும் முன்கூட்டியே வாங்கிக் கொண்டு அந்தப் பத்து சதத்தை கடனாகத் தருகின்றன. ஆக 1 பில்லியன் டாலர் கான்ட்ராக்டிற்கு வெறும் சில ஆயிரம் டாலர்களை மட்டும் செலவு செய்து கான்ட்ராக்ட் போடப் படுகிறது.

விலையேற்றம் என்பது சொற்ப செலவிலேயே நடக்கிறது, ஆனால் ஈட்டுவதோ
பல்லாயிரம் மடங்கு லாபம். அந்த லாபம் அனைத்தும் அமெரிக்க டாலரிலேயே இருப்பதால், அமெரிக்காவிற்கு டாலர் பிரிண்ட் செய்யும் செலவிலேயே எண்ணெய் கிடைத்து விடுகிறது. இதுதான் சூட்சுமம்.

சரி, சர்வதேசச் சந்தையில் 10 டாலர் ஏறினால் இங்கு பெட்ரோல் பங்கில் 2.50 ருபாய் விலையேற்றுகிறhர்களே, அது எப்படி? என்று உங்களுக்கு ஆச்சரியமும் வேதனையும் ஏற்பட்டால், விவரங்கள் அடுத்த பதிவில்.

பெட்ரோல் விலையின் பிண்ணனி மர்மங்கள் - 1

சமீபத்திய பெட்ரோல் விலையேற்றங்களின் மூலம் மக்களின் வயித்தெரிச்சலை ஏகத்திற்கும் சம்பாதித்திருக்கும் மத்திய அரசு, அதன் விளைவுகள் என்ன என்று தெரிந்து தான் செய்கிறதா என்பது சுத்தமாகப் புரியவில்லை.

சந்தை விலை நிர்ணயம் என்ற பெயரில் சர்வதேச சந்தையில் ஏற்படும் விலை மாற்றத்திற்கேற்ப உள்ளூர் விலையை நி ர்ணயிப்பது என்ற அரசின் முடிவு கடந்த ஜூன் மாதம் (2010) எடுக்கப்பட்டு, ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் விலையை மாற்றி (ஏற்றி) வந்தார்கள். தற்போது ஒரே மாதத்தில் இருமுறை விலை ஏற்றப்பட்டிருக்கிறது.

கச்சா எண்ணெய் விலை ஏற்றம் காரணமாக உள்நாட்டில் பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்த்தப்படுகிறது என்பது பொதுவான காரணமாகச் சொல்லப்படுகிறது. கச்சா எண்ணெய் எப்படி தினம் ஒரு விலை விற்கிறது, அது என்ன காய்கறியா, தினம் ஒரு விலை விற்பதற்கு.

அதற்கு முதலில் கச்சா எண்ணெய் எப்படி உற்பத்தியாகிறது. எங்கு யாருக்கு விற்பனை செய்யப்படுகிறது சர்வதேச சந்தையில் எப்படி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது இந்திய மக்கள் ஏன் ஒவ்வொரு முறையும் கூடுதல் தொகை செலுத்த வேண்டியிருக்கிறது இதை எல்லாம் பார்க்க வேண்டும்.

கச்சா எண்ணெய் உற்பத்தி ஒபெக் (OPEC) என்னும் எண்ணெய் உற்பத்தி நாடுகள்
கூட்டமைப்பிற்குள் பெருவாரியாக உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியா, பிரேசில், சீனா போன்ற நாடுகளும் எண்ணெய் உற்பத்தி செய்கின்றன, ஆனால் அவை ஒபெக் கூட்டமைப்பில் இல்லை. ஒபெக் அமைப்பு 2002 ஆம் ஆண்டு வரை உலக விலை நிர்ணயம் செய்து வந்தது. அது வரை கச்சா எண்ணெயின் விலை 20-40 டாலருக்குள் தான் இருந்தது. 2002க்கு பிறகு இன்டர்காண்டினென்டல் எக்சேஞ்ச் (InterContinental Exchange - ICE) என்ற அட்லாண்டாவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் எண்ணெய் தொடர்பான வர்த்தகச் சந்தைக்கான ஆன்லைன் வணிகத்தைத் தொடங்கி, ஒபெக் அமைப்பிலிருந்து விலை நிர்ணயிக்கக்கூடிய கட்டுப்பாடு ஐசிஈ எனப்படும் அந்த அமைப்பிற்கு சென்றது. ஆரம்பத்தில் அதற்கு உடன்படாத ஒபெக் அமைப்பு, ஆன்லைன் வர்த்தகம் மூலம் இரு மடங்கு வரை கச்சா எண்ணெய்க்கு விலை கிடைக்கத் தொடங்கியதன் விளைவாக முழுக்க முழுக்க ஐசிஈ யின் மூலம் விலை நிர்ணயம் செய்வதை ஏற்கத் தொடங்கின. இந்த ஐசிஈ யின் பங்கு என்ன அதனால் யாருக்கு உண்மையான லாபம் என்பதை பார்ப்பதற்கு முன்பு ஒரு பின்னோட்டம் பார்க்கலாம்.

கச்சா எண்ணெய் ஆதிக்கம் என்பது பல லட்சக் கணக்கான மக்களைக் கொன்றும், பல நாடுகளின் எல்லைகளை திருத்தியமைத்தும், ஆட்சிகளை மாற்றி, சில நாடுகளின் தலையெழுத்தையே மாற்றி அமைத்த வல்லமை பெற்றது.

1960 களில் மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் வளம் கண்டறியப்பட்டு அந் நாடுகள் செல்வத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்த வேளையில், யாருக்கும் எந்தப் பிரச்னையும் இருக்கவில்லை. 1967ல் இஸ்ரேல் நாடு போரினால் உருவானது. இஸ்ரேல் தனது எல்லையை விரிவு படுத்த 1973ல் யோம் கிப்புர் போர் என்ற போரை வலுக்கட்டாயமாக தனது அண்டை நாடுகளின் மேல் திணித்தது. அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும், அமெரிக்க படைகளின் ஆயுத பலத்தால் சில நாட்களிலேயே இஸ்ரேலுக்குச் சாதகமாக அப்போர் முடிவுக்கு வந்தது. பாலஸ்தீனியப் பிரச்னை அன்றுதான் மிக விஸ்தாரமாகச் சு{டு பிடிக்கத் தொடங்கியது.

அமெரிக்காவின் இந்தத் தலையீட்டிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அமெரிக்காவிற்கான எண்ணெய் விற்பனையை ஒபெக் நாடுகள் முற்றிலும் நிறுத்தி விட்டன. 6 மாதங்களுக்கு இது தொடர்ந்தது. அமெரிக்கா பொருளாதாரம் ஸ்தம்பித்தது. 1973 பொருளாதார நெருக்கடிக்கு இந்தத் தடையே முக்கியக் காரணம். அந்தச் சமயத்தில்தான் அமெரிக்கா தங்கத்தை இருப்பில் வைத்து கரன்சி அடிக்கும் நியாயமான கொள்கையை காற்றில் பறக்கவிட்டு, தம் இஷ்டத்திற்கு டாலர் அடிக்க ஆரம்பித்தனர். டாலரின் உண்மையான மதிப்பென்ன என்று கேள்வி எழுப்பியவர்களெல்லாம் கேள்வி எழுப்பிய நாடுகளெல்லாம் வன்மையாகக் கவனிக்கப்பட்டன. தனது ஆதிக்கத்தைக் கேள்வி கேட்கக் கூடியவர்கள் தனது ஆதரவாளராக மட்டுமே இருக்க முடியும், கேள்வி கேட்பர் பரம எதிரி என்பது அவர்களின் கொள்கை. அதை உலகெங்கும் அமுல்படுத்த அமெரிக்கா முயன்றது, முயல்கிறது, முயலுவது எங்கள் பிறப்புரிமை என்று கூவுகிறது. அது ஏனைய நாடுகளுக்குப் பிடிக்க வில்லை.

1973 எண்ணெய் நெருக்கடிக்குப் பிறகு உலகிலேயே அதிகமான கச்சா எண்ணெய் இறக்குமதியாளரான அமெரிக்கா எனர்ஜp செக்யூரிட்டி என்ற பெயரில் புதிதாகக் கொள்கைகள் வகுக்க ஆரம்பித்தது. அதில் முக்கியமான ஒன்று ஒபெக் அமைப்பை தன் கைக்குள் கொண்டு வருவது. 2002 வரை அது சாத்தியமாக முடியவில்லை. ஏன் சாத்தியமாக வில்லை, பின் எப்படி 2002ல் மட்டும் அது சாத்தியமானது?

அடுத்த பதிவில் பார்க்கலாம்.