பெனாசீர் பூட்டோ படுகொலை

27 டிசம்பர் 2007 இன்று பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் தற்போதைய முக்கிய எதிர்க்கட்சித் தலைவருமான திருமதி பெனாசீர் பூட்டோ தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் தற்கொலைத் தாக்குதலில் பலியானார். அவருடன் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

பெனாசீரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், பாகிஸ்தான் மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்

தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முக்கியத் தலைவர்கள் கொல்லப்படுவது நம் பிராந்தியத்திற்குப் புதிதல்ல என்றாலும் இந்தப் படுகொலை நடந்திருக்கும் சூழல் மிகப் பதட்டத்தை ஏற்படுத்துவதாகவும் மேற்கத்திய நாடுகளின் தலைவர்களுக்கு நகம் கடிக்கும் அளவிற்கு கவலையளிப்பதாகவும் இருக்கிறது.

முதலில் சில கேள்விகளுக்கான விடைகளைத் தேடலாம்.

1. இதை யார் செய்திருக்கக்கூடும்? அதனால் அவர்கள் பெறப்போகும் லாபம் என்ன?
2. மேற்கத்திய நாடுகளுக்கு பதற்றம் அடைய வேண்டிய அளவிற்கு தற்போது அப்படி என்ன சூழல்?
3. ஜனவரி 8 ஆம் தேதியன்று நடைபெற விருக்கும் தேர்தல் நடைபெறுமா அல்லது செளகரியாமாக மீண்டும் இராணுவ ஆட்சி நடைமுறைக்கு வந்துவிடுமா?

பிண்ணனி

லண்டனில் வைத்து அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் உளவுத் துறையினர் முன்னிலையில் ஏற்பட்ட மத்தியஸ்தத்திற்குப் பின்னர் முஷ்ரப் மற்றும் பெனாசீர் தரப்பு சமாதானமாகப் போக, பெனாசீர் சட்ட ரீதியான எதிர்ப்புகளின்றி நாடு திரும்ப முடிந்தது. அக்டோபர் 18 அன்று நடைபெற்ற மாபெரும் தாக்குதலில் குறைந்தது 300 பேருக்கும் மேல் பலியாயினர். அந்தச் சம்பவம் அடிப்படையில் ஒரு நெருடலை முஷ்ரப் மற்றும் பெனாசீர் தரப்பினரிடைய ஏற்படுத்தி அவநம்பிக்கைக்கு வழி வகுத்தது. பெனாசீர் முஷ்ரப்பையும் முஷ்ரப் பெனாசீரையும் நம்பாமல் செயல்பட ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் துபாய் சென்ற பெனாசீர், நெருக்கடி நிலை அமல்படுத்தப்படலாம் என்ற வதந்தியின் பேரில் அடுத்த நாளே நாடுதிரும்பிய சம்பவம் இதற்கு உதாரணம். உண்மையில் முஷ்ரப்பிற்கு அப்படி ஒரு எண்ணமிருக்கவில்லை.

பாகிஸ்தான் இராணுவத்திற்குள்ளேயே பல்வேறு தரப்புகள் இருக்கின்றன். சமீபத்திய சிவப்பு மசூதி தாக்குதலுக்குப் பின் நிறையப் பேர் இராணுவத்திலிருந்து விலகிய சம்பவங்கள் நடந்தன. ஆப்கானிஸ்தான் எல்லையில் பலூச், தாலிபான் மற்றும் அல்கொயிதா தரப்பினர் வலுப்பெற்று வரும் இந்த நிலையில், அவர்களைத் தடுக்க அதிகாரப்பூர்வமான தாக்குதல் நடத்த, மேற்கத்திய நாடுகளை அனுசரித்துச் செல்லும் தலைவர்கள் தேவைப்பட பெனாசீர் முக்கியத்துவம் பெற்றார். இதை அறிந்த தாலிபான் மற்றும் அல்கொயிதா தரப்பினர் பெனாசீரையும் தமது முக்கிய எதிரியாக அங்கீகரித்து வைத்திருந்தனர்.

கடைசிச் செய்தியாக அல்கொயிதா இதற்குப் பொறுப்பேற்றதாக ஒரு இணையத்தளம் http://www.adnkronos.com/AKI/English/Security/?id=1.0.1710322437 தெரிவிக்கிறது. அது எவ்வளவு தூரம் உண்மை என்பது போகப்போகத் தெரியும்.

மேற்கத்திய நாடுகளின் பதற்றம்

ஆசியப் பிராந்தியத்தில் அணுகுண்டு வைத்திருக்கும் நாடுகளில் ஒன்று பாகிஸ்தான். இராணுவத் தலைமையைக் கொண்ட ஆட்சியாளர்கள் இருக்கும் வரை அணுகுண்டை பத்திரமாக தீவிரவாதிகள் கையில் சென்றுவிடாமல் பாதுகாக்க முடியும். அதே சமயம், சுதந்திரம் பற்றி வாய்கிழியப் பேசும் அமெரிக்கா, பாகிஸ்தானிலும் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானது. இராணுவ ஆட்சியோ அல்லது ஜனநாயக ஆட்சியோ இல்லாத பட்சத்தில், அணுகுண்டை தீவிரவாதிகள் கையில் சென்று விடாமல் பார்த்துக் கொள்ள எடுக்க வேண்டிய செயல் திட்டங்களைப் பற்றித் தான் தற்போது நகம் கடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அமெரிக்கா ஏற்கனவே முஷ்ரப்புடன் பேச்சு வார்த்தை நடத்தி முடித்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதாவது, அணுகுண்டுகளைப் பாகிஸ்தானிலிருந்து வெளியேற்றி விடுவது அல்லது அதற்கு அமெரிக்காவே பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்த்துக் கொள்வது. இது எதுவும் முடியாமல் போகும் பட்சத்தில் இந்தியாவின் உதவி கோரப்படலாம் என்பது ஊகம். (இந்த ஊகம் சரியாகப் படவில்லை.. Paranoia???)

முஷ்ரப்பின் அமெரிக்க அடிபணிதல் கொள்கை பாகிஸ்தான் மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தி வைத்திருக்கும் நிலையில், முஷ்ரபபின் சமீபத்திய மசூதித் தாக்குதல், நீதிபதி மாற்றம் போன்ற சூழலில் ஒரு மாற்று சக்தியை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.


தேர்தல் நடைபெறுமா?

தேர்தல் நடைபெறுவது தள்ளிப் போகலாம் என்றுதான் தற்போது கணிக்க முடிகிறது. நவாஸ் ஷரீப் ஏற்கனவே தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று ஸ்டன்ட் அடித்துவிட்டு வேறு வழியில்லாமல் தற்போது தேர்தல் களத்தில் உள்ளார். எனவே, நாட்டின் ஸ்திரமற்ற நிலையைச் சுட்டிக்காட்டி, இராணுவ ஆட்சி தொடர்ந்து நடைமுறையில் இருக்க இது வாய்ப்பாக அமையும்.

தொலைக்காட்சியில் பொதுமக்களின் கோபம் பாகிஸ்தானின் ரோடெல்லாம் தீயாக எரிவதைக் காண முடிகிறது. பாகிஸ்தான் அமைதிப்பாதையை நோக்கித் திரும்பும் காலத்தை நோக்கி மெளனமாக காத்திருப்பதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. கத்தியெடுத்தவன் கத்தியால் மடிவான் என்ற பெருமொழி பாகிஸ்தான் விஷயத்தில் மிகச்சரியாக இருக்கிறது.

அரசுகளின் இணையத்தளப் பாதுகாப்பு - சில கேள்விகள்

எத்தனை பேர் அந்தச் செய்தியைப் படித்தீர்கள் என்று தெரியாது. சமீபத்தில் ஸ்வீடனைச் சேர்ந்த டான் எகர்ஸ்டாட் என்பவர் பல்வேறு நாடுகளின் தூதரக ஈமெயில் அட்ரஸ் மற்றும் பாஸ்வேர்டுகளை இணையத்தில் வெளியிட்டு எல்லாரையும் அசத்தினார். அதில் இந்திய தூதரகங்களின் பாஸ்வேர்டுகளும், ஏன், டி.ஆர்.டி.ஓ என்றழைக்கப்படும் பாதுகாப்புத்துறையின் ஆராய்ச்சிக்கழகமும் இதற்கு விதிவிலக்கல்ல. இதில் கூத்து என்னவென்றால், இந்திய அம்பாசடர்களின் அனைத்து ஈமெயில் அட்ரஸ்களுக்கும் ஒரே 'மிகவும் கஷ்டமான' பாஸ்வேர்ட்தான் - 1234.


முதலில் டான் எகர்ஸ்டாட் மற்றும் அவரது செயல்களைப் பற்றி:

டான் எகர்ஸ்டாட் தன்னை கம்ப்யூட்டர் பாதுகாப்பு ஆய்வாளர் என்று கூறிக்கொள்கிறார். அதே சமயம், தனிப்பட்ட வேலைகளையும் ஏற்றுச் செய்பவராம் இவர். ஆகஸ்டு 30 அன்று தனது இணையத்தளத்தில் ஒரு லிஸ்டை வெளியிட்டார். அந்த லிஸ்ட் இதுதான். (நான் கட் & பேஸ்ட் செய்திருக்கலாம். அதில் சில சட்டச் சிக்கல்கள் உள்ளன). அவசியம் பார்க்கவேண்டும் என்றால், இங்கு சென்று பார்க்கலாம்.


தூதரகப் பாஸ்வேர்ட்கள் அடங்கிய வெப்ஸைட்

இதற்குப் பிறகு, பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இந்தியப் பத்திரிகைகள் சுவீடன் நாட்டு ஹேக்கர் (Hacker) இந்திய தூதரங்களையும் இராணுவ ஆராய்ச்சி நிலையத்தையும் ஹேக் செய்து விட்டதாக எழுதின.

உண்மையில் பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் ஹேக் செய்யப்பட்டனவா?

இல்லை. அதாவது, இந்தத் தகவல்கள் ஒவ்வொரு சர்வரிலும் சென்று எடுக்கப்பட்ட தகவல்கள் அல்ல. Sniffing-என்று சொல்லப்படும், நுகருதல் முறையிலான ஒரு தொழில் நுட்பத்தில் எடுக்கப்பட்டவை. இப்படித் தகவல்கள் சேகரிப்பதற்கு, ஏதாவது கோர் ரெளட்டரில் நுகர்ந்தாலே போதுமானது. பொதுவாக மிகக் கடினமான பாதுகாப்பு வளையங்களுக்குள் இருக்கும் கோர் ரெளட்டர்களுக்குள் இப்படி நுகர்வது சாமானியமான வேலையில்லை. ஆனால், இந்த நபர் அவ்வளவு சிரமப்படவில்லை. மிக எளிதாகச் செய்திருக்கிறார்.

எப்படி இந்தத் தகவல் சேகரிக்கப்பட்டது?

TOR (The Onion Router) - இதைப்பற்றி முன்னமொருமுறை எனது பதிவில் விரிவாகக் குறிப்பிட்டிருந்தேன். அதைப் படித்துவிட்டு மீண்டும் இங்கு தொடர்ந்தால் உங்களுக்கு புரியும்.

TOR வைத்துக்கொள்வது யார் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். நீங்கள் கூட ஒரு சர்வரை வாடகைக்கமர்த்தி அதற்குள் டார் சர்வர் அப்ளிகேஷனை பொதுப்பயன்பாட்டுக்கு அளிக்கலாம். சுருக்கமாகச் சொன்னால், கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு கவனிக்கும் அதிகார அமைப்புகளின் கண்ணில் மண் தூவி தகவல் பரிமாற்றம் செய்ய முடியும். வேறு ஐ.பி. காட்டிவிட்டு தகவல்களும் குறுந்திரிக்கப்பட்டிருக்கும்). டான் செய்தது என்ன வென்றால் மூன்று டார் சர்வர்களை ஆராய்ச்சி செய்கிறேன் பேர்வழி என்று டார் நெட்வொர்க்குக்குள் இணைத்து, குறுந்திரிக்கப்பட்ட (encrypted) தகவல்களை தனது டார் சர்வரின் மூலம் நுகர்ந்தது தான். EXIT server எனப்படும் கடைநிலை சர்வரில் குறுந்திரிக்கப்பட்ட தகவல்கள் மீண்டும் சாதாரண தகவல் ஆக மறுதிரிக்கப்பட (decrypted) வேண்டும். கடைசிலை சர்வர் வைத்திருப்போர் இத்தகைய தகவல்களை சாதாரண நிலையில் தகவல்களாகப் பெற முடியும். POP3 சர்வர்கள் பெரும்பாலும் தனது பாஸ்வேர்டுகளை எவ்வகை குறுந்திரித்தலும் இல்லாமலேயே அனுப்புகின்றன. இதனால் கடைநிலை சர்வரில் இதை சாதாரணமாக அறிந்து கொள்ள முடிகிறது. இப்படியாக, டான் பல்வேறு நாடுகளின் தூதரக யூஸர்நேம் மற்றும் பாஸ்வேர்டுகளை அந்த ஐ.பி அட்ரஸ்களுடன் விவரணையாக வெளியிட்டுள்ளார்.

சம்பந்தப்பட்டவர்கள் கோபம் கொள்ளாமல், சிந்தித்துப் பார்த்துச் செயல்பட, நாம் கேட்க வேண்டிய கேள்விகள்:

1. எந்த நிபந்தனையுமில்லாமல் டார் சர்வரை இணையத்தில் யார் வேண்டுமானாலும் இயக்க முடியும் என்ற நிலையில், இன்றைக்கு டானால் சேகரிக்க முடிந்த இதே தகவல்களை தீவிரவாத இயக்கங்கள் சேகரித்துக் கொண்டிருக்கலாம். அதிலிருந்து எவ்வாறு தேசங்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளப்போகின்றன?

2. இதே வழிமுறையைப் பயன்படுத்தி தீவிரவாதிகள் தமக்குள் பரிமாறிக் கொள்வதில் ஒரு நோக்கமிருக்கிறது. (அதனால்தான் அமெரிக்கா உளவுத்துறை எங்கும் இப்படி சர்வர்களை அமைத்து அதைக் கண்காணித்து வருகிறது. அமெரிக்கா மட்டுமல்ல, இணைப்பில் ஒரு லிஸ்ட் இருக்கிறது, பார்த்து அறிந்து கொள்ளுங்கள்). ஆனால், அரசாங்கங்கள் தகவல் பரிமாற இம்முறையை பயன்படுத்துவது எதனால்? சரியான வழிகாட்டுவோர் (consultants) இல்லையா அல்லது அவர்களிடமிருந்து சரியான அறிவுரைகள் தரப்படவில்லையா?

3. தம் நாடுகளுக்கே தெரியாமல் தகவல் பரிமாறிக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?

4. டிபால்ட் பாஸ்வேர்டுகளை மாற்றுவதற்கு எப்போது சொல்லிக்கொடுக்கப் போகிறார்கள், குறிப்பாக, இந்தியத் தூதர்களுக்கு?

இதுவரை சம்பந்தப்பட்ட நாடுகள் இதைப்பற்றி சரியான வழிகாட்டுதல்களை தமது பயன்பாட்டாளர்களுக்கு அனுப்பியிருக்கும் என்று நம்புவோமாக. அண்மையில் தலைநகரில் நடந்த ஒரு இணையப்பாதுகாப்பு பற்றிய செமினாரில் உள்துறை இணை அமைச்சர் பள்ளம் ராஜூ அவர்கள் இதைப்பற்றி சிலாகித்துப் பேசியிருக்கிறார். நாவி.காம் தளமும் இதைப்பற்றிய மேல் நடவடிக்கைகளைப் பற்றிக் கேள்வி கேட்டிருப்பது கொஞ்சம் ஆறுதலான தகவல்.

பி.கு. ரீடிப் இமெயில் தளத்தில் தனது பலவருடத்திய முக்கிய ஆவணங்களை இழந்து நிற்கிறார் நண்பர் ஒருவர். உரிய பதில் இல்லையாம். அதன் பாதுகாப்பு பற்றி பல கேள்விகள் எழுந்துள்ளன. இணைய வாலிப வயோதிகர்கள் எல்லாம் இனி ரீடிப் மெயிலில் எந்த முக்கியமான தகவல்களையும் சேமித்து வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

APPENDIX: Example of Exit-nodes that can read your traffic:

• Nodes named devilhacker, hackershaven…
• Node hosted by an illegal hacker-group
• Major nodes hosted anonymously dedicated to ToR by the same person/organization in Washington DC. Each handling 5-10TB data every month.
• Node hosted by Space Research Institute/Cosmonauts Training Center controlled by Russian Government
• Nodes hosted on several Government controlled academies in the US, Russia and around Asia.
• Nodes hosted by criminal identity stealers
• Node hosted by Ministry of Education Taiwan (China)
• Node hosted by major stock exchange company and Fortune 500 financial company
• Nodes hosted anonymously on dedicated servers for ToR costing the owner US$100-500 every month
• Node hosted by China Government official
• Nodes in over 50 countries with unknown owners
• Nodes handling over 10TB data every month

கே,பி, கைது செய்யப்பட்டாரா? - இல்லை.

Thais nab top Tiger

By R. BHAGWAN SINGH and FAZEENA SALEEM

Chennai/Colombo, Sept. 11: Kumaran Padmanadan, alias KP, who ran the international procurement network of the LTTE, was arrested on Monday evening in Thailand, in what is seen as a major setback for the terrorist organisation in its long armed campaign for a separate Tamil state of Eelam in Sri Lanka. The Tamil Tigers suffered yet another blow, losing three large ships allegedly carrying heavy weapons and other battle gear on the high seas some 700 nautical miles (1,400 km) southeast of Sri Lanka’s southern tip of Dondra Head, defence officials in Colombo said.

"We got information that the Thai police have arrested KP at Bangkok Monday evening. It appears that he has been living there as a Thai citizen married to a Thai girl. This is surely a big blow for the LTTE coming at a very critical time (in the armed conflict), when our Navy has sunk three large Tiger ships carrying heavy weapons," military spokesperson Brig. Prasad Samarasinghe told this newspaper. He said KP was wanted in several cases related to terrorism and the question of seeking his extradition to Colombo for questioning would be taken up by the Sri Lankan foreign ministry. "He is holding a Thai passport and though the name on that passport does not match what’s in our records, the picture is the same. Our intelligence agencies have confirmed it’s KP," the brigadier said.

Brushing aside a statement by Thai officials that they have no information about a Sri Lankan militant being arrested, he said: "They are right saying they have no information about arresting a Sri Lanka terrorist, because KP is not a Sri Lankan. He is a Thai citizen holding a Thai passport. So they are technically correct."

He was euphoric, pointing out that the Sri Lankan Navy had sunk three large LTTE ships carrying heavy weapons in the Indian Ocean between Monday morning and early Tuesday.

Briefing the media about the deep sea strikes, Sri Lankan naval commander Vice-Admiral Wasantha Karannagoda said that acting on a definite intelligence input about Tiger ships coming in with arms and ammunition, the Navy was on high alert. The first LTTE ship was spotted at 8 am on Monday and was sunk by the Navy after an engagement for a little over two hours when it opened fire without paying heed to signals to halt. Later the same day, the Navy detected two more Tiger ships in the same waters moving in the same direction. While one vessel was destroyed around 5.30 in the evening, the other went down under naval fire in the early hours of Tuesday, he said.

He said 42 Tigers were killed in the sea battle. It was believed that the three ships were carrying heavy weapons and ammunition, one bulletproof vehicle for use of Tiger chief Vellupillai Prabhakaran and spares for three light aircraft. The naval commander claimed that nine of the 10 Tiger ships had been destroyed by the Navy in recent times. Three ships were destroyed in a similar fashion in February and March this year.

Coming in the backdrop of the naval victories, the arrest of KP appears to have lifted the spirits of Colombo. The third most important man on the Interpol list of the most wanted Sri Lankan militants after Prabhakaran and his intelligence head Pottu Amman, KP has been on the move across the globe over the years, buying up sophisticated weaponry for the LTTE and raising funds that the defence journal, Jane’s Defence Intelligence Review, had recently estimated to be between $200 million and $300 million per year.

With its global operations growing in size, the LTTE divided the work between KP handing the weapons procurement and related activities and another senior Tiger leader Aiyanna handling the international intelligence network for the outfit, apart from supervising collection of funds from the Tamil diaspora and other sources, often illegal, says the journal.

The 1955-born native of Jaffna is said to hold over 20 passports and operate bank accounts in London, Frankfurt, Denmark, Athens, Australia and Switzerland. Taking advantage of the rampant corruption in the third world countries of Burma, Cambodia and Thailand, KP had allegedly made large purchases of sophisticated weapons for the Tigers. Leaving Sri Lanka immediately after the 1983 anti-Tamil riots in Colombo, he set up a shipping company in Singapore to acquire the first Tiger ship, MV Chozhan. More shipping and international trading companies followed and the network is believed to own six ships running arms for the Tigers, apart from legal merchandise, across the high seas.

Intelligence officials say KP was arrested in 1983 for smuggling gold from Singapore to Mumbai and was caught again the following year on a similar smuggling charge. After that, he disappeared from the police scanner for some time but much later the Special Investigation Team probing the May 21, 1991 assassination of Rajiv Gandhi found that KP had slipped out of the country through Mumbai five days after that killing.

Sources in Colombo said KP’s arrest followed the detention of three Tiger operatives in Ranong province of Thailand in August while they were trying to purchase guns and large quantities of ammunition. Though on the run for several years following a red alert notice by Interpol on complaints from the Indian and Sri Lankan police, KP managed to get away and is believed to have settled down with his Thai wife in Bangkok, overseeing global procurement operations for the Tamil Tigers.

Analysts say that KP’s arrest is the biggest setback for the LTTE since the rebellion of its eastern commander Karuna Ammana, who has now joined with the government forces to push the Tigers out of the eastern region.

Thanks to: AsianAge



'Padmanathan not detained in Thailand'
14 Sep 2007, 0953 hrs IST,PTI


BANGKOK: LTTE leader K Padmanathan, an accused in the Rajiv Gandhi assassination case, has not been detained in Thailand, External Affairs Minister Pranab Mukherjee said in Bangkok on Friday.

"We have been informed that the person (Padmanathan) is not yet detained," the Minister said when asked about reports of the LTTE leader's detention this week.

This information was conveyed by the Thai government to the Indian mission in Bangkok and "we are depending on that", he said.

Mukherjee, who arrived in Bangkok on Thursday on a three-day visit, was speaking during an interaction after delivering a lecture on "India's Look-East Policy: Implications for Thailand and South East Asia".

Kumaran Padmanathan, who allegedly financed former Prime Minister Rajiv Gandhi's assassination, was reported to have been detained in Thailand earlier this week. The CBI had also asked the Thai Interpol to confirm the report.

Chief of Thai Interpol, Col Apichart Suribynya, had said that on Wednesday "according to immigration records for the past two years, there is no record of him (Padmanathan) entering the country."

During Mukherjee's visit, the two sides will focus on ways to enhance trade and investment and increase cooperation in energy, defence and security fields.

Thanks to: Times of India

இந்தியாவின் மணியாண்டுச் சுதந்திர நாள்

இந்தியா சுதந்திரமடைந்து, அதாவது, தன்னாட்சி பெற்று அறுபது ஆண்டுகள் நிறைவுறுகிறது. சுதந்திரத்திற்காக போராடியோர் தள்ளாடும் வயதைக் கடந்துகொண்டிருக்கும் வேளையில், சுதந்திரத்தைப் பற்றி உணர்ச்சியூட்டும் வகையில் எழுதப்பட்ட வரலாறுகளை மட்டுமே படித்த இளைஞர்கள் மற்றும் பேரிளைஞர்கள் கூட்டம் உள்ள நாடாக இந்தியா உள்ளது.

இந்தியாவில் இருந்து புற்றீசல்போலப் புறப்பட்டு உலகெங்கும் சென்ற இந்தியர்கள் (குரு படத்தில் கடைசியில் "We, Indians, are coming" என்று சொல்வது போல), பணத்தை மூட்டையாகக் கட்டிக்கொண்டு பலநாட்டு நிறுவனங்களை வாங்கிக் குவிக்கும் இந்திய நிறுவனங்கள், உலகிலேயே மிகப்பெரிய எண்ணைசுத்திகரிப்பாலையை நிர்மாணிப்பது, உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில் எலக்ட்ரானிக் முறையில் ஓட்டுப் போடுவது (இன்னமும் பல மேற்கத்திய நாடுகள் பேப்பரில்தான் ஓட்டுப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்), எகிறும் நில மற்றும் கட்டிட விலைகள், என்று ஒரு பக்கமும்; மறுபக்கத்தில் தீரவே தீராத காஷ்மீர் பிரச்சினை, சரியான சாலைகள் பாலங்கள் அமைந்திராத கிராமங்கள், ஆந்திராவில் நக்ஸலைட்கள், அஸ்ஸாமின் உல்பா, ஆர்எஸ்எஸ் மற்றும் இன்னபிற மத தீவிரவாத அமைப்புகள், இன்னமும் வறுமைக்கோட்டில் இருக்கும் மக்கள், மாநிலங்களுக்கிடையேயான நதிநீர்ப்பங்கீட்டுப் பிரச்னை மற்றும் ஏனைய பிரச்னைகள் என்று கதம்பமாக இந்தியாவின் அறுபதாவது ஆண்டு சுதந்திர தினம் பிறந்திருக்கிறது.

அறுபது ஆண்டுகளில் நாம் மிகப்பெரிய அளவில் வளர்ந்திருக்கிறோம் என்பதை மறுக்க முடியாது. சிங்கப்பூரை இணைவைத்துப் பார்த்தோமானால், இவ்வளவு நீண்ட காலம் என்பது நம் நாட்டின் எல்லையைப் பொறுத்து ஒருவகையில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். அதே சமயம் அமெரிக்கா சுதந்திரம் வாங்கிய 60 ஆண்டுகளில் இந்த அளவிற்கு வளர்ந்திருக்கவில்லை என்பதையும் நினைவுறுத்த வேண்டும்.

1947-ல் சுதந்திரம் வாங்கியபின் 1950-ல் குடியரசாக பிரகடனப்படுத்தப்பட்டு 57 வருடங்கள் ஜனநாயக ஆட்சி நடந்து வருகிறது (இடையில் சிலகாலங்கள் நெருக்கடிநிலைப் பிரகடனம் தவிர்த்து). பொருளாதார முன்னேற்றம் என்று பார்த்தால் 1990க்குப் பிறகு தொடர் வளர்ச்சிதான், ஆனால் அதற்கான ஆயத்தங்கள் 1980களிலேயே ஆரம்பித்துவிட்டது என்றால் பொய்யில்லை. வெகுகாலத்திற்கு, யானை போன்ற இந்தியா படுத்தே இருந்ததால் பல நாடுகள் இந்தியாவைப் பொருட்படுத்தவேயில்லை. ஆசியான் அமைப்பின் பாங்காக் டிக்ளரேஷனில்கூட இந்தியாவை குட்டியூண்டு நாடுகள் பொருட்படுத்தி அழைக்கவில்லை. 1990 களில் நரசிம்மராவ், மன்மோகன்சிங் மற்றும் சிதம்பரம் கூட்டணி இந்தியாவை ஒரு புதிய பாதையை நோக்கி செலுத்தத் தொடங்கியபோது, படுத்திருந்த யானை எழுந்தாற்போல இருந்தது. இன்றைக்கு இந்தியாவைப் பற்றி சிந்திக்காத பேசாத பொருளாதார அரசியல் வல்லுநர்கள் இல்லை. அதாவது, யானை தரையதிர ஓடத்தொடங்கியிருக்கிறது. அனைவரும் திரும்பிப்பார்க்கிறார்கள்.

மறுபக்கம் இந்தப் பொருளாதார முன்னேற்றம் எல்லா அடித்தட்டு மக்களுக்கும் போய்ச்சேர்நதிருக்கிறதா என்றால், (வருத்தமாகத்தானிருக்கிறது,) இல்லை எனலாம். இன்றைக்கும் 70 கோடிக்கு மேலானோர் தினமும் 4 டாலர் வருமானமும் அதற்கு கீழேயும் பெறும் வறுமையில் இருக்கின்றனர். அரசிடம் இவர்களுக்கான திட்டங்கள் இருக்கின்றனவா என்பது கேள்வி. ஆம், இருந்தன, இருக்கின்றன. உண்மையில் இப்படிப்பட்ட மக்களுக்கான திட்டங்கள் பெரும்பாலும் 'இலவசங்களாக'வே மக்களுக்கு அளிக்கப்பட்டன. அவற்றிலும் கைமாறிச் செல்லும் பனிக்கட்டியாய் துளி மட்டுமே அடித்தட்டு மக்களுக்குப் போய்ச் சேர்ந்தது. அரசியல்கட்சி வளர்க்கும் சுயநலம் மேலிட்டதால், மக்களை சுயசார்புள்ளவர்களாக ஆக்குவதை விட்டு விட்டு கையேந்திகளாகவே வைத்திருக்கிறார்கள். மக்களும் அரசு இலவசமாகத் தரவேண்டும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர். புரா போன்ற இன்னபிற சுயஉதவிக்குழுக்கள் இந்த மாற்றத்தைக் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியிருப்பதை அரசு இயந்திரம் முழு மூச்சில் என்றைக்கு தனது கொள்கையாக கொண்டு வருமோ அன்றுதான் இந்த இலவச எதிர்பார்ப்பு மனநிலை ஒழியும். ஒவ்வொரு குடும்பமும் தன்னிறைவுறும். மைக்ரோ ஃபைனான்ஸ் என்கிற அருமையான உத்தி கந்து வட்டியாளர்களை விரட்டிவிடும். ஆனால் எத்தனைபேர் இன்று மைக்ரோ ஃபைனான்ஸ் செய்கிறார்கள், எத்தனைபேருக்கு அப்படி ஒன்று இருப்பது தெரிகிறது.

காலம் மாறும். இன்றைக்கு நிறைய இளைஞர்கள் குறுகிய காலத்தில் தேவைக்கும் அதிகமாகச் சம்பாதித்து விட்டு தன் சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நமைச்சலுடன் திரிகிற அவர்களை ஒருங்கிணைத்தால் ஒரு பெரிய சமுதாய பொருளாதார மாற்றத்தை இந்தியாவில் கொண்டுவரமுடியும்.


+++++++++++++++++++

நமக்கு ஒருநாள் முன்னதாக சுதந்திரம் பெற்ற பாகிஸ்தானை நினைத்துப் பார்த்தோமானால், நாம் அதிர்ஷ்டசாலிகள் தான். இந்தியா சுதந்திர நாடுதான், குடியரசுத்தலைவரைக் கூட விமர்சிக்க முடிகிற இந்தியா எங்கே, எப்போது யார் இயந்திரத்துப்பாக்கியுடன் வந்து சுடுவார்கள் என்று நிச்சயமில்லாத பாகிஸ்தான் எங்கே?

1956 முதல் 1958 வரை மட்டும் ஜனநாயக ஆட்சி அமுலிலிருந்தது. அதன்பின் 1972 வரை இராணுவ ஆட்சிதான். பிற்பாடு பல்வேறுகட்சிகள், அரசியல் பழிவாங்கல் படலங்கள் என்று எந்த ஆட்சியாளருக்கும் நாட்டின் வளர்ச்சி பற்றியோ, பொருளாதார தொலைநோக்கு பற்றியோ அதிகம் சிந்திக்க நேரமில்லை. தற்போதைய அதிபர் முஷ்ரப் கூட தன் நாற்காலி பற்றிய பயத்தோடும் தன் உயிர் பற்றிய பயத்தோடுமே காலந்தள்ளி வருகையில் பொருளாதாரமாவது மண்ணாங்கட்டியாவது.

பாகிஸ்தானிலிருந்து எத்தனை நிறுவனங்கள் உலக அளவில் பெயர் பெற்றுள்ளன? எத்தனை நிறுவனங்கள் உலகளாவிய கிளைகளை வைத்துள்ளன? உலகளவில் என்ன மதிப்பிருக்கிறது பாகிஸ்தானிற்கு?

சமீபத்தில் தாய்வான் செல்ல விசா வாங்குவதற்காக அதன் ட்ரட் ரெப்ரஷன்டேட்டிவ் ஆபிஸிற்குச் சென்றிருந்தேன். எனக்கு முன் ஒரு பாகிஸ்தானி ஒருவர் விசா வாங்கும் வரிசையில் நின்றார். அவரின் பாஸ்போர்ட் பார்த்தவுடனேயே உங்களுக்கு இன்விடேஷன் லெட்டர உள்ளதா, ஏன் செல்கிறீர்கள் என்று கேட்டு, பாகிஸ்தான் பாஸ்போர்ட்டுக்கு விசா தற்சமயம் அளிப்பதில்லை என்று திருப்பி அனுப்பிவிட்டார். இந்தியப் பாஸ்போர்ட்டை நீட்டிய என்னிடம் கம்பெனி லெட்டர் கொண்டுவந்தீர்களா என்று கேட்டு, இல்லை என்றதும், பரவாயில்லை விசா பெறும்பொழுது கொண்டு வாருங்கள் என்று வாங்கி வைத்துக் கொண்டார். வேறு கேள்வியே இல்லை. எனக்கு அந்தப் பாகிஸ்தானியைப் பார்க்க பாவமாக இருந்தது. என்ன இருந்தாலும் 60 ஆண்டுகளுக்கு முன் நாமெல்லாம் ஒரேவரிசையில் நின்று பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடியவர்கள் தானே?

சரி, இனி பாகிஸ்தானின் எதிர்காலம் என்ன?

அமெரிக்கா பாகிஸ்தானை பொருளாதார உதவி தரமுடியாமல் போகலாம் என்று மிரட்டி வருகிறது. ஏனென்றால் ஆப்கன் எல்லையோரப் பகுதிகளில் தாலிபான்களை குடியமர்த்திக் கண்டும் காணாமல் இருந்து வரும் திருப்பணியை பாகிஸ்தான் செய்து வருகிறது. அதைக் கண்டிக்கும் விதமாகவே இந்த மிரட்டல். சமீபத்திய சிவப்பு மசூதி துப்பாக்கிச் சூடும் அமெரிக்காவையும் சீனாவையும் சாந்தப்படுத்தச் செய்யப்பட்ட ஒரு கோர நாடகம். அதில் பலியானோரில் எத்தனைபேர் அமெரிக்காவால் தேடப்படும் குற்றவாளிகள் என்பது முஷ்ரப்பிற்கும் புஷ்ஷிற்கும் மட்டுமே தெரியும். இப்படித் தன் மக்களையே காவு கொடுக்கும் மிரட்டலுக்கு ஆட்பட்டுக்கொண்டு எத்தனை நாளைக்கு காலம் தள்ள முடியும். இந்தியாவைச் சமாதானப்படுத்த அமெரிக்கா இனி பாகிஸ்தானிற்கு அடிக்கடி நெருக்கடிகள் தரக்கூடும். இந்தியாவை மையமாக வைத்தே நாட்டுப்பற்று வளர்க்கப்பட்ட பாகிஸ்தானில், எட்ட முடியாத உயரத்திற்கு சென்று விட்ட இந்தியாவை இனி எவ்விதத்திலும் நெருங்கமுடியாத கையாலாகாததனம் ஒரு பொதுவான அவநம்பிக்கையை (FUD - Fear, Uncertainty and Doubt) அம்மக்களிடத்தில் உருவாக்கியிருக்கிறது. உள்நாட்டிலும் அமைதியை ஏற்படுத்த முடியாமல், வெளிநாட்டிலும் நெருக்கடிகளுக்காளாகி அந்த நாடு வரும் காலங்களில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகப் போகிறது என்பது மட்டும் திண்ணம்.

+++++++++++++++++++++++++

சுதந்திரக்காற்றை சுதந்திரமாகவும் பெருமையுடனும் அனுபவித்துக்கொண்டிருக்கும் அனைத்து இந்தியச் சகோதர சகோதரிகளுக்கும் அறுபதாம் ஆண்டு சுதந்திர தின விழா நல்வாழ்த்துக்கள்..

சவூதி அரசிற்கு அமெரிக்க ஆயுதங்கள்

ஈராக் பிரச்னைக்கு இன்னும் எந்த முடிவும் தெரியாத இந்த நேரத்தில், அமெரிக்கா சவுதி உட்பட பல மத்திய கிழக்கு நாடுகளுக்கு (இஸ்ரேல் எகிப்து உட்பட) ஆயுத பரிவர்த்தனை உதவி செய்ய முன்வந்திருக்கிறது. அதிக பட்ச உதவியாக 30 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இஸ்ரேலிற்குப் போகிறது. சவுதிக்கு 20 பில்லியன், எகிப்திற்கு 13 பில்லியன்.

ஆமாம், இப்போது இந்த நாடுகளின் பாதுகாப்புக்கு எந்த வகையில் அச்சுறுத்தல் வந்துள்ளது?

அமெரிக்கா தன் தலையை இனி வரும் மத்தியக் கிழக்குப் போர்களுக்குள் கொடுக்காமல், அதே சமயம் அதன் விருப்பப்படியே ஒரு அச்சுறுத்தல் மிக்க அமைதியற்ற பிராந்தியமாக மாற்றித் தொடர்ந்து வைத்துக் கொள்ள இந்த ஆயுத விற்பனை உதவப் போகிறது. அதன் முக்கிய நோக்கங்கள் இரண்டு:

(1) ஈரானை எப்போதும் போர் பற்றிய ஆயத்தத்துடனும் பயத்துடனும் வைத்துக் கொள்வது

(2)சன்னி மற்றும் ஷியா முஸ்லிம் இனத்தாரிடையே நிரந்தரமான ஒரு சண்டையைத் தூண்டிவிட்டு ஏற்படும் இனக்கலவரத்தை மையமாக வைத்து, முஸ்லிம்களுக்கிடையேயான போரை உருவாக்கி, பின் பாதிக்கப்பட்ட அதன் ஆதரவு நாடுகளுக்கு உதவுவது.

இதனால் அமெரிக்காவிற்கு ஏற்படப்போகும் பலன்கள் என்ன?

1. ஈராக் நிலவரங்களால் பெரிதும் பலனடைந்திருப்பவை மத்தியக் கிழக்கு நாடுகள், ஈரான் உட்பட. அந்த நாடுகள் எண்ணெய் விலை உயர்வால் சேர்ந்துபோன பணத்தை மூட்டைகட்டி வைத்திருக்கிறார்கள். அவற்றைத் திரும்பப் பெற ஒரு வழி, இந்த ஆயுதவிற்பனை. அமெரிக்கப் பொருளாதாரம் ஆயுத விற்பனையை ஒரு அளவிற்கு நம்பியுள்ளது என்பதை நாம் மனத்தில் கொள்ள வேண்டும். அதே சமயம், இஸ்ரேலிற்கு 30 பில்லியன் பெறுமான ஆயுதங்கள் இராணுவத் தளவாட உதவியாக வழங்கப்படுவதையும் நாம் கவனிக்க வேண்டும். சவுதிக்கு விற்பனை, ஆனால் இஸ்ரேலிற்கு உதவி.

2. மத்தியக் கிழக்குப் பகுதி பெரும்பாலான நேரங்களில் பதட்டமான பகுதியாகவே இருக்கும். அதன் பொருட்டு, ஒவ்வொரு குண்டு வெடிக்கும் போதும் எண்ணை விலை ஏறும். அமெரிக்க டாலர்களில் வர்த்தகம் செய்ய மாட்டேன் என்பவர்கள் தனிமைப்படுத்தப் படுவர் (ஈரான் மற்றும் வெனிசூலா). அமெரிக்க பொருளாதாரத்தின் வேகவீழ்ச்சி இந்த எண்ணெய்ப் பொருளாதாரத்தின் வழியாக தாமதமாக்கப்படும்.

3. ஈரான் மேல் போர் தொடரப்போவது பெரும்பாலும் அமெரிக்காவாக இருக்காது. அது பிற்பாடு உதவிக்கு வரும். எந்த நாடு அந்த போரை முட்டாள்தனமாகத் தொடங்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சவுதிஅரேபியாவாக இருக்க அதிகம் வாய்ப்பிருக்கிறது.

4. அமெரிக்கா மற்றுமொரு போரைத் தொடங்காது என்று தாராளாமாக அமெரிக்கப் பொதுமக்(கு)களுக்கு அறிவித்து விட்டு நல்லபிள்ளை பெயர் வாங்கிக் கொள்ளலாம்.

மத்தியக் கிழக்கில் ஆரம்பிக்கும் இந்த விவகாரம் எகிப்து வரை போகப் போகிறது, குர்திஸ் இன மக்கள் வடிவத்தில். அதற்காகவே எகிப்துக்கும் 'உதவி'யளிக்கப்படுகிறது. குர்திஸ்தான் மக்கள் ஏற்கனவே போதுமான அமெரிக்க 'உதவி' பெற்றுத் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள்.

ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் ஒரு பங்கு ஆயுத விற்பனையை நம்பியே இருக்கும் போது, உலகில் உள்ள எத்தனையோ நாடுகளை நிர்மூலமாக்கி அதிலுள்ள எத்தனையோ மக்களைக் கொன்றுபோடுவது அவர்களைப் பொறுத்தவரை தொழில் தர்மமாகிறது.

அதற்குப் பலிகடா, இப்போதைக்கு மத்தியக் கிழக்கு - அடுத்த பத்து வருடங்களுக்கு.

நான் சென்ற திருத்தலங்கள்

நான் இதுவரை சென்ற திருத்தலங்களைத் திடீரென்று ஒரு ப்ளாக்கர் நினைவுகூறும்படி செய்துவிட்டார். அதன் விளைவே இந்தப் பதிவு. சில கோயில்களின் அம்மன்கள்/சாமிகளின் பெயர், சில தர்காக்களின் பெயர் மற்றும் சில சர்ச்சுகளின் பெயர்கள் மறந்து விட்டது. இது ஏதோ டுர் போன லிஸ்ட் மாதிரி தெரிந்தால் நான் பொறுப்பில்லை. ஏனென்றால், இதில் சொல்லப்பட்டிருக்கும் எல்லா இடத்திற்கும் உள்ளே, அதாவது, கோயிலென்றால் கர்ப்பகிரகத்திற்குள்ளும், தர்காவென்றால் சமாதிக்கருகிலும் சென்றிருக்கிறேன்.

1. அறந்தாங்கி வீரகாமாளியம்மன் கோயில்
2. ஆவுடையார்கோயில் என்னும் திருப்பெருந்துறை ஆலயம் (எனக்கு மிகவும் பிடித்துப்போன கோயில் இது)
3. திருப்புல்லாணியில் உள்ள இராமர் கோயில்
4. சேதுக்கரையில் உள்ள அனுமார்கோயில்
5. கீழக்கரையில் உள்ள கோயில்
6. ஏர்வாடியில் உள்ள தர்கா
7. இராமேஸ்வரம் கோயில்
8. திருச்செந்தூர் முருகன் கோயில்
9. நெல்லையப்பர் கோயில்
10. அறந்தாங்கி சிவன் கோயில்
11. அறந்தாங்கி வடகரை முருகன் கோயில்
12. மீமிசலில் உள்ள சிவன்கோயில்
13. கோட்டைப்பட்டிணம் தர்கா
14. தொண்டியில் உள்ள சீனியப்பா தர்கா
15. புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோயில்
16. முத்துப்பேட்டை தர்கா
17. தஞ்சைப் பிரகதீஸ்வரர் கோயில்
18. வண்டியூர் மாரியம்மன் கோயில்
19. திருச்சி புனித சூசையப்பர் கோயில்
20. திருச்சி மேலப்புதூர் சர்ச்
21. திருப்பராய்த்துறை
22. ஸ்ரீரங்கம் கோயில்
23. திருவானைக்காவல் கோயில்
24. திருப்பதி வெங்கடாச்சலபதி கோயில்
25. மும்பை மஹாலட்சுமி மந்திர்
26. மும்பை ஹாஜி அலி தர்கா
27. அஜமீர் தர்கா
28. டெல்லி ஜூம்மா மசூதி
29. ஸ்ரீரங்கப்பட்டிணம் கோயில்
30. மைசூர் சாமுண்டீஸ்வரி கோயில்
31. திருச்சூர் பூரத்திருவிழாக் கோயில்
32. திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்
33. நாகூர் தர்கா
34. வேளாங்கண்ணி சர்ச்
35. சென்னை வடபழனிக் கோயில்
36. சென்னை ஐயப்பன் கோயில் (ஐயப்பன் இன்னும் என்னை சபரிமலைக்கு அழைக்க வில்லை)
37. சமயுரம் மாரியம்மன் கோயில்
38. அறந்தாங்கி மாரியம்மன் கோயில்
39. அறந்தாங்கி முனிக்கோயில்
40. திருச்சி நத்தர்வலி தர்கா
41. பிரான்மலை தர்கா
42. மதுரை மீனாட்சியம்மன் கோயில்
43. கன்னியாகுமரியம்மன் கோயில்
44. சுசீந்திரம் கோயில்
45. தக்கலை தர்கா
46. கங்கைகொண்ட சோழபுரம் கோயில்
47. சிறுவாச்சூர் கோயில்
48. சாந்தோம் சர்ச்
49. பழனி முருகன் கோயில்
50. சிதம்பரம் நடராஜர் கோயில்
51. திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில்
52. திருவையாறு தியாகேஸ்வரர்கோயில்
53. பூண்டி மாதா கோயில்
54. திருப்பரங்குன்றம் கோயில்
55. திருப்பரங்குன்றம் தர்கா
56. களக்காடு கோயில்
57. உத்திரகோசமங்கை. இங்கு மரகத்திலான நடராஜர் சிலை உள்ளது (ராமநாதபுரம் அருகே உள்ளது).

வெளிநாடு

1. சிங்கப்பூர் மாரியம்மன் கோயில்
2. சி்ங்கப்பூர் பெருமாள்கோயில்
3. சிங்கப்பூர் சூலியா மசூதி
4. சிங்கப்பூர் சினகாக் (Synagogue - யூத மதத்தினரின் வழிபாட்டுத்தலம்)
5. ப்ராக் (prague, czech republic) சினகாக்
6. மலேசியாவின் பத்துக்குகை முருகன் கோயில்
7. ஐப்பானில் ஷிண்டோ கோயில் (டோக்கியோ)
8. ஒசாகாவில் உள்ள ஷிண்டோ கோயில்
9. ஒசாகாவில் உள்ள புத்தக் கோயில்
10. நாராவில் உள்ள புத்தக் கோயில் (ஜப்பான்)
11. கியாட்டோவில் உள்ள புத்தக்கோயில் (ஜப்பான்)
12. சிங்கப்பூரில் உள்ள சீனக்கோயில்கள் (பெயர்லாம் தெரியலீங்க)
13. கண்டி கதிர்காமன் கோயில்

வடகொரிய அணு உலை மூடுவிழா

கடந்த வருடம் வடகொரியா வெடித்த அணுகுண்டுக்குப் பின் ஏற்பட்ட விவகாரங்களில் மிக முக்கியமானது, ஆறுநாட்டுப் பேச்சுவார்த்தை. சீனா மத்தியஸ்தம் பண்ண முன் வந்து நடத்திய இந்தப் பேச்சு வார்த்தையில் அமெரிக்கா வேறு வழியின்றி தனது ரதகஜபதாதிகளுடன் (தென் கொரிய மற்றும் ஜப்பான்)கலந்து கொண்டது. சீனாவும் ரஷ்யாவை இதில் உட்படுத்திக் கொண்டது.

இந்த மத்தியஸ்தம் சீனாவின் ஆளுமைத்தனத்தை அமெரிக்காவிற்கு உணர்த்தும் விதமாகவே அமைந்தது சீனாவின் இராஜதந்திரத்தையும் சாதுரியத்தையும் காட்டுகிறது.

எப்போதுமே ஐநா சபை வளாகத்திலோ அல்லது அமெரிக்கத் தோழ நாட்டிலோதான் பேச்சு வார்த்தைகள் நடத்தப்படுவது அமெரிக்க வழக்கம். அதை உடைத்து, சீனாவின் தலைமையில் பேச்சு வார்த்தை நடந்தது. சீனாவின் அறிவுறுத்தலின் படியே பேச்சுவார்த்தை அம்சங்கள் முன் வைக்கப்பட்டன. சீனாவின் தலைமைக்குக் கட்டுப்பட்ட வடகொரியா தனது யோங்ப்யான் அணுஉலைகளை மூடி சீல் வைத்து ஐநா அணுஆயுதக் கண்காணிப்பாளர்கள் ஒப்புதலும் கொடுத்துவிட்டார்கள். இது சீனாவிற்கு முதல் வெற்றி. தன்னால் அணு ஆயுதப் பரவலில் அமெரிக்காவை விட சிறப்பாகச் செயல்பட முடியும் என்று நி௫பித்திக்கிறது. அதுவும் கத்தியின்றி, இரத்தமின்றி வெறும் பேச்சு வார்த்தையிலேயே அணுஆயுதப்பரவலைத் தடுக்க முடிவதும், டன் டன்னாக வெடி வெடித்து பல லட்சம் அப்பாவி மக்களைக் கொன்று ஈராக்கில் ஆப்பில் சிக்கிய குரங்காக அமெரிக்கா சித்திரவதைப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தால், இது சீனாவிற்கு வெற்றி தான்.

நேற்று நடைபெற்ற ஆறுநாட்டுப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்திருப்பதான ஒரு கருத்தை ஊடகங்கள் முன்வைக்கின்றன. ஆனால் அதற்கான சரியான முகாந்திரங்கள் இதில் சொல்லப்படாமல் வெறும் ஊகங்கள் மட்டுமே முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

ஊகங்களாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும் நம்பிக்கையின்மையின் சான்றுகள் இதோ

1. இரண்டாம் கட்ட நடவடிக்கையாக வடகொரிய தன்னிடமுள்ள அணுஆயுதத் திட்டங்களை முழுமையாக வெளியிட வேண்டும். மேலும் புதிய திட்டங்கள் எதுவும் இருந்தால் இதில் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் வடகொரியா இதைக் கொடுப்பதற்கு எந்த காலக் கெடுவையும் தரவில்லை என்பது குற்றச்சாட்டு. சீனா, முன்பு பேசியபடி, மீண்டும் செப்டம்பரில் இந்த பேச்சுவார்த்தை தொடரும் என்று சொல்லியிருக்கிறது. வேறு எந்தக் கருத்தும் சீனாவிடம் இருந்து வரவில்லை. இது வெறும் ஊகமே தவிர, வடகொரியா வெளிப்படையாக காலக்கெடு தர மறுக்கவில்லை.

2. தன்னிடமுள்ள அணுஆயுதங்களையும், பயன்படுத்தாமல் இருக்கின்ற புளுடோனியத்தையும் ஒப்படைக்க வேண்டும். ஆனால் வடகொரிய அத்தனை ஆயுதங்களையும் முழுமையாகத் தரப் போவதில்லை என்ற ஊகம் பத்திரிகைகளில் பரப்பப்படுகிறது. இதைப்பற்றிய பேச்சு வாரத்தைகள் செப்டம்பரில்தான் நடக்கப் போகிறது என்ற நிலையில், ஒரு தகராறுக்கான சூழலை உருவாக்குவதாவே தோன்றுகிறது.

3. வழக்கத்தில் இல்லாமல், புதிதாக அமெரிக்கத் தரப்பு பேச்சுவார்த்தையாளர் கிறிஸ்டோபர் ஹில், வடகொரியா மற்றுமொரு புளுடோனியம் செறிவூட்டும் ஆலை வைத்திருப்பதாவும் அது கணக்கில் வரவே இல்லை என்றும் ஆதாரம் எதையும் காண்பிக்காமல் குற்றச்சாட்டு சுமத்தியிருக்கிறார். வட கொரியா இதை மறுத்திருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தற்போதைய பேச்சு வார்த்தையில் வடகொரியச் சிறையிலிருக்கும் ஜப்பானியர்களை விடுவித்தால்தான் எரிபொருள் தரமுடியும் என்ற திடீர் நிபந்தனைக்கு வடகொரிய ஒப்புதல் அளிக்காததால், பேச்சு வார்த்தையில் தற்காலிகத் தடங்கல் ஏற்பட்டிருக்கிறது. செப்டம்பரில் தொடங்கும் பேச்சுவார்த்தைகள் இந்தச் சூழலை மாற்றும் என்று நம்ப அதிகம் வாய்ப்பிருக்கிறது.

மற்றுமொரு போரை நடத்தும் சூழலில் அமெரிக்கத் தலைமையோ அமெரிக்கப் பொருளாதராமோ வழிவிடாத இந்த நிலையில், ஈரானின் அணுப் பேச்சுவார்த்தைகளுக்கு வடகொரிய பேச்சு வார்த்தை அணுகுமுறை முன்னுதாரணமாகக் காட்டப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். அப்படி ஒருவேளை சூழ்நிலை வந்தால் அந்தப் பேச்சு வார்த்தையை நடத்தப் போவது ரஷ்யாவோ அல்லது சீனாவாகவோ இருக்கும்.

Update - லண்டன் கார் குண்டுகள்

எனது முந்தைய கட்டுரையில் சொல்லியிருந்தபடி வினோதமான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

1. இது வரையில் அல்காயிதாவுடனான தொடர்பை நிருபிக்க இயலவில்லை (நான் அல்காயிதாவிற்காக வக்கலாத்து வாங்குகிறேன் என்று நினைக்க வேண்டாம். தவறான செய்திகள் ஊடகங்கள் மூலம் உடனடியாக எந்த மறுதலிப்பிற்கும் உள்ளாகாமல் பரப்பப்படுகின்ற விதத்திற்கு எதிராகவே ஒழிய வேறு ஒன்றுமில்லை).

2. வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார்களுக்கும் கிளாஸ்கோ நகரில் நடந்த செரோக்கி ஜீப் எரிப்பு சம்பவத்திற்கும் இன்னும் தொடர்பு காண இயலவில்லை.

3. ஆஸ்திரேலியாவில் கைதான இந்திய டாக்டர் ஹனீப், முக்கிய சூத்திரதாரி் என கருதப்படும் ஆஷா என்கிற ஜோர்டானியர், கஃபீல் அஹமது என்பவரிடம் ஹனீப் கொடுத்துவைத்திருந்த அவரின் ரெகுலர் லண்டன் மொபைல் ஃபோன் சிம் கார்டைப் பயன்படுத்தியதால், ஹனீப் மாட்டியிருக்கிறார். ஒரு மொபைல் போன் வாங்கும் போது காண்ட்ராக்டில் வாங்குவது வழக்கம். அந்த சிம் கார்டை இடையில் நிறுத்தினால் பெனால்ட்டி கட்ட வேண்டி வரும். எனவே, வேறு ஊருக்கு புலம் பெயரும்போது, யாரிடமாவது அதைக் கொடுத்து மாதாமாதம் பணம் கட்டி விடுங்கள் என்று சொல்லிவிடுவது புலம்பெயர்வோர் வழக்கம். அந்த நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்தி ஹனீப் இந்தக் குற்றச் சாட்டிற்குள் உட்படுத்தப்பட்டிருக்கிறார் என்பதைத் தவிர வேறு எந்தக் முகாந்திரமும் இன்னேரம் வரை இனம் காணப் படவில்லை.

ஆஸ்திரேலிய விரிவுரையாளர் ஒருவர் சிங்கப்பூர் வானொலியொன்றில் இதைப்பற்றிக் கருத்துத் தெரிவிக்கும்போது, முன்பைய காலங்களை விட தற்சமயம் தொழில் நுட்ப வசதிகளினால் மிக பெரிதாக வலை (dragnet) விரிக்க முடிகிறது, அதனால் ஏகப்பட்ட சம்பந்தமில்லாத அப்பாவிகளும் இவ்வலைக்குள் சிக்குவது அன்றாடமாகி விட்டது. ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இந்திய டாக்டர் இது போன்று இருக்கவே அதிகம் வாய்ப்பிருக்கிறது என்று அவர் கருத்துரைத்திருந்தார்.

-மேலும் வரும்...

லண்டன் கார் குண்டுகள்.. நாடகமா?

லண்டனில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட இரண்டு மெர்ஸிடஸ்கள் லண்டன் வாசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் இவ்வேளையில், புதிய பிரதமரான கார்டன் பிரெளன் எந்த வித பதட்டமுமில்லாமல் எல்லாரும் அமைதியாய் இருக்குமாறு வேண்டிக்கொண்டிருப்பது அவரின் மேலான நம்பிக்கையை அதிரித்திருக்கிறது..

கார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட மறுநாளே கிளாக்ஸோ விமான நிலைய வாசலில் இதேபோன்ற மற்றொரு கார் தீப்பிடித்து எரிந்தது. காரில் இருந்தவர்கள் அதிகபட்ச காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த வெடிகுண்டுக் கார்கள் எல்லாம் திட்டமிட்டு முறையாகத் தயார் செய்திருந்தும் ஏனோ வெடிக்க வைக்கும் கருவிகள் மட்டும் வெடிக்காமல் போயிருக்கின்றன. இது போலீஸாருக்கு மிக்க ஆச்சரியத்தை வரவழைத்திருக்கிறது. மேலும், இதே காரணங்களால் கிளாக்ஸோ விமானநிலையத்தில் உள்ளவர்களும் தம்மேல் எரிபொருளைக் கொட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கின்றனர்.

வழக்கமான அல்காயிதா கதைகள் இங்கும் ஊகிக்கப்படுகின்றன. பிரிட்டிஷ் அதிகாரிகள் இதைப் பற்றி எதுவும் சொல்லாத நிலையில் வழக்கம்போல அமெரிக்க அதிகாரிகள் முந்திரிக்கொட்டைத்தனமாக இது அல்காயிதாவின் வேலை என்றும், ஈராக்கில் கையாளப்படும் அதே முறைபோன்றுள்ளது என்றும் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்கள். இது என்னவோ எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்வது போல் உள்ளது.

ஏன் இப்படிக் கருத வேண்டியிருக்கிறது என்பதற்கு பல காரணங்கள் உள்ளன.

பிரிட்டனின் de-facto அமெரிக்கன் ஏஜென்ட் திரு. டோனி பிளேர் அவர்கள் ஒரு வாரத்திற்கு முன்னர் பதவி விலகி திரு. கார்டன் ப்ரெளனுக்கு வழி விட்டார். அப்போதே ப்ரெளன் யார், ஈராக் விவகாரத்தில் எந்த அளவிற்கு பிரிட்டனின் ஆதரவு இருக்கும் என்பதைப் பற்றி வாஷிங்டன் வட்டாரங்கள் கவலைப்பட ஆரம்பித்து விட்டன. ப்ரெளனின் சகாக்களிடமிருந்து அவர் பிரிட்டனின் ஈராக் ஈடுபாட்டைப் பற்றி நல்ல அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கவில்லை என்று அறியப்படுகிறது. இதைப்பற்றி பிரிட்டன் விவகாரங்களைக் கவனிக்கும் அமெரிக்க அதிகாரிகள் தனியாக பென்டகனிடம் ப்ரெளன் பதவியேற்ற நூறு நாட்களுக்கும் ஈராக்கிலிருந்து பிரிட்டிஷ் படைகளை மீட்டுக் கொள்ளும் அறிவிப்பை வெளியிடக்கூடும் என்று அறிக்கையளித்திருக்கிறார்கள. ஈராக்கில் தனியாக மாட்டிக்கொள்ளும் அபாயத்தை நோக்கியிருந்த பெண்டகன் அதிகாரிகளுக்கு ப்ரெளனுக்கு பிரிட்டிஷ் படைகளின் அத்தியாவசியத்தை வலுவான காரணங்களுடன் சுட்டிக் காட்ட வேண்டிய சூழ்நிலை இருந்தது.

இப்போது, உங்களுக்கு சில முடிச்சுகளின் சூட்சுமம் தெரிந்திருக்குமே. விசாரண முடிவுகள் வியக்கத்தக்க அறிக்கைகளுக்க வழிவகுக்க அதிக சாத்தியம் இருக்கிறது. காத்திருப்போம்.

இதன் தொடர்பான சுட்டி

http://www.telegraph.co.uk/news/main.jhtml?xml=/news/2007/05/20/wirq20.xml

ஆயுத வியாபாரிகள்....அதீத பேரங்கள் - 8

நீல்ஸ் கிறிஸ்டியன் நீல்ஸன் என்கிற கிம் பால்கிரேவ் டேவி என்கிற ஆர்ச்சார்யா தாதா நிர்வானந்தா அவதூத் என்கிற பீட்டர் ஜான்சனைப் பற்றிப் பார்க்கலாமா?

இதுவரை விமான நிலையங்களில் பதிவானதாக அறியப்பட்ட வகையில் மொத்தம் 46 பாஸ்போர்ட்டுகள் வைத்திருந்தார் கிம் டேவி. மும்பை விமான நிலையத்தில் காணாமல் போனபோது வைத்திருந்த பாஸ்போர்ட் நியூஸிலாண்ட் நாட்டைச் சேர்ந்தது. கிம் டேவிக்கு ஆங்கிலம், இந்தி, பெங்காளி, உட்பட பல மொழிகளைப் பேசத் தெரியும்.

முதன் முதலில், கோபன்ஹேகனில் வங்கிப் பாதுகாப்பு வாகனத்தைக் கொள்ளையடித்த வழக்கில் பிடிபட்ட கிம் டேவி, போலீஸிடம் தப்பித்த போது பாதுகாப்பு வளையங்களை எளிதாக உடைக்கும் 'திரில்' பெற்றார். பிற்பாடு ஸ்வீடனில் இதே போன்ற ஒரு கொள்ளையை நகைக்கடை ஒன்றில் நடத்தி தப்பித்தார். பின் துரத்திய போலீஸால் கிம் டேவி போலி பாஸ்போர்ட்டை அடையாளமாகக் காட்டி வாடகைக்கு எடுத்த காரைத்தான் கைப்பற்ற முடிந்தது. பிடிபட்ட கூட்டாளி ஒருவன் சொன்ன வாக்குமூலம் போலீஸை அதிர்ச்சி அடையச் செய்தது. அது என்ன என்றால், ஆனந்த மார்க்கம் என்ற அமைப்பை வளர்ப்பதற்காகவே இந்தக் கொள்ளை நடப்பதாகவும், மற்றவர்களிடம் சொல்லியுள்ளார். ஆனந்த மார்க்கம் இதை மறுத்தது. மேலும் பொய்ச் செய்தி வெளியிட்டதற்காக ஊடகங்களில் வழக்கும் தொடரப்பட்டது.

இதற்கிடையில் புருலியா விவகாரத்திற்குப் பிறகு, ஒரு சமயத்தில் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில், பிளீச்சின் நண்பர் என்று சொல்லிக்கொண்ட எம்பி சர்.டெட்டி டெய்லர் என்பவர், டேவி நைரோபியில் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் உளவு அதிகாரிகளுடன் காணப்பட்டதாக தெரிவித்தார். சூடானின் தீவிரவாதிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் வேலைகளில் டேவி ஈடுபட்டிருந்தாகவும், அதன் காரணமாகவே அவரை அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் உளவுத்துறைகள் பாதுகாப்பதாகவும் குற்றம் சாட்டினார்,

ஜான் கர்ராங் என்ற சூடானின் பீப்பிள் லிபரேஷன் ஆர்மி (SPLA) எனப்படும் தென் சூடானின் கிறித்துவ தீவிரவாத அமைப்பின் (அப்பாடா.. இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்றே கேட்டுப் புளித்துப் போன காதுகளுக்கு கொஞ்சம் புத்துணர்ச்சி கிடைத்துப் போகட்டும்)கமாண்டரின் அரவணைப்பில் ஹோட்டல் சரினா மற்றும் ஸபாரி கிளப் ஆகிய ஹோட்டல்களில் வெகுகாலம் தங்கியிருந்ததாக அறியப்படுகிறது. மார்க்ஸிஸ்டுகள் மற்றும் இஸ்லாமிய அரசுகளை எதிர்த்து பல வருடங்களாக கார்டோம் நகரில் போரிட்டு வருகின்றனர் இந்த அமைப்பினர். இந்த SPLA அமைப்பிற்கு வெளிப்படையாக ஆயுதங்கள் வழங்க இயலாத அந்த வல்லரசு கிம் டேவியைப் பயன்படுத்தி ஆயுத சப்ளை செய்யச் சொன்னது.

நாளடைவில் கிம் டேவிக்கு இந்த திருடன் போலீஸ் விளையாட்டு பிடிக்காமல் போனது. அப்படியென்றால் பணம் கொட்டும் மற்ற பிஸினஸ் எது என்று ஆராயத் தொடங்கினார். தங்கம் மற்றும் வைரம் தோண்டும் தொழிலில் திடீரென ஆர்வம் அதிகமானது.

ஹாங்காங்கில் ஹோவர்ஸ்டாக் இன்டர்நேஷனல் ட்ரேடிங் என்ற கம்பெனி ஆரம்பித்தார். இந்த நிறுவனம் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த ஸப்ரா அசோசியேட்ஸ் என்ற புவியியல் நிறுவனத்தை அமர்த்தி தங்கம் கிடைக்குமா என்று தெற்குச் சூடானில் கபோய்டா (KAPOETA) என்ற இடத்தில் தேடச்சொன்னது. ஸப்ரா அசோசியேட்ஸ் தெற்கு சூடானில் மேற்படி கிறித்துவத் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த ஐந்து இடங்களில் 12 மில்லியன் அவுன்ஸ் தங்கம் கிடைக்கக்கூடிய பகுதிகளைக் இனம் கண்டது. அப்போதைய தங்கத்தின் விலை அவுன்ஸிற்கு 350 டாலர் என்று வைத்துக் கொண்டால் கூட 4.2 பில்லியன் டாலர் பெறுமான சொத்து அது. SPLA அமைப்பிற்கு வெட்டியெடுக்கப்படும் ஒவ்வொரு அவுன்ஸிற்கும் ராயல்டி தந்து விடவேண்டும் என்பது ஒப்பந்தம்.

தங்கம் கிடைத்ததால் உண்டான மகிழ்ச்சியில் ஆழ்ந்த கிம் டேவி, உடனேயே தங்கம் வெட்டியெடுக்கும் வேலையை ஆரம்பித்துவிட்டார். தங்கத்தைப் பற்றிய வியாபார நுணுக்கங்கள், அதன் "தந்து முந்து"கள் தெரிந்திராத கிம் டேவி, தங்கத்தை வெட்டி எடுத்து சுத்தம் செய்து மார்க்கெட்டில் கொண்டு வந்து இறக்க இறக்க, சட சடவென தங்கம் விலை குறைந்தது. பதறிப்போன லண்டன் தங்க வர்த்தகர்கள் 'எவண்டா இவன்' என்று கண்டுபிடித்து, தங்களுக்குத் தெரிந்த உத்திகளைப் பயன்படுத்தி தெற்குச் சூடானில் கிம்டேவி தங்கம் தோண்டுவதை நிறுத்திவிட்டார்கள்.

பணம் சம்பாரித்த கை நிற்குமா?

மியான்மரில் ரூபி மற்றும் சபையர் என்கிற விலைமதிப்பு மிக்க கற்களைத் தோண்டி எடுப்பதில் ஆர்வம் போனது.

கிம் டேவிக்கு முறையான அரசுகளுடன் ஏற்பட்ட நெருக்கத்தை விட வன்முறையாளர்களிடமும், ஆயுதந்தாங்கி போராடுவோர்களிடமும், உளவுத்துறையினரிடமுமே நெருக்கம் அதிகம். ஆகவே இந்த மாதிரியான தொழிலுக்கும் அவர் அந்தமாதிரியான அமைப்புகளையே தேர்ந்தெடுத்தார். அப்படி ஒரு அமைப்புதான் K.I.A எனப்படும் கச்சின் இன்டிபெண்டன்ஸ் ஆர்மி. இந்தியா மற்றும் சைனாவை எல்லையாகக் கொண்ட மியான்மர் என அறியப்படும் பர்மாவின் ஆளும் இராணுவ அரசிடம் தனிநாடு கேட்டுப் போராடும் அமைப்பு அது. கச்சின் பகுதியில் தங்கம் உட்பட விலையுயர்ந்த கற்கள் அதிகமாக கிடைக்கிறது. முடிச்சுப் போட்டுப் பார்த்த கிம் டேவி உடனேயே அந்த அமைப்பின் தலைவரான மலிசு ஷாவ் மாய் என்பவரைத் தொடர்பு கொண்டார். மலிசு அப்போது தான் ஆளும் இராணுவ அரசிடம் ஒரு உச்சகட்டப் போரை நடத்தி இருந்தார். இந்த போருக்கு மியான்மரின் இராணுவ அரசிற்கு சைனாவின் ஆயுத உதவி வேறு. உடனே அந்த தீவிரவாத அமைப்பிற்கு சைனாவை எதிர்க்கும் முகமாக, வேறு சில நாடுகள் ஆயுதம் தர முன் வந்தன. நேரம் சரியாக இருந்தது. உளவு அமைப்புகளின் கண்களில் மண் தூவுவதற்காக ஆனந்த மார்க்கம் என்ற அமைப்பை முன் வைத்து இந்த ஆயுத பரிவர்த்தனை நாடகம் நடந்தேறியது. பின்னணியில் வேறு வல்லரசுகள் இருந்ததற்கான நிரூபிக்கப்படாத ஆதாரங்கள் இருந்தன. யார் யார் என்று சொல்வது சாலச் சிறந்ததல்ல.

சரி. கச்சினில் தரவேண்டிய ஆயுதம் எப்படி சரியாக ஆனந்த மார்க்கத்தின் தலைமையகம் இருக்கும் ஆனந்த்நகர் அருகில் (அப்படித்தான் சிபிஐ சொல்கிறது) கொண்டுபோய் போடப்பட்டது. இது திட்டமிட்ட நாடகமா? அல்லது தவறுதலாகவே போடப்பட்டதா என்பது தான் கேள்வி. இந்தக் கேள்விக்கு மறைந்து வாழும் கிம் டேவி தான் பதில் சொல்ல வேண்டும், உளவுத்துறைகளாலும் பீட்டர் பிளீச் மூலமும் அறியப்பட்ட வகையில் இது தவறுதலாகவே போடப்பட்டதாக அறிய முடிகிறது.

முதலில் டாக்காவில் இறங்கி பின் அங்கிருந்து கச்சினின் கூரான மலைப்பகுதிக்குள் பறந்துபோய் ஆயுதங்களை பாராசூட் மூலம் இறக்கத் திட்டமிடப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. கச்சினின் கூரான மலைப்பகுதிக்குள் விமானங்கள் பறப்பது எளிதல்ல என்பதால் K.I.A விற்கு அந்தப் பகுதி சரியான மறைவிடமாக இருந்து வந்தது. டாக்காவிலிருந்து பறந்தால் கூரான மலைப்பகுதிகளுக்குள் தாழ்வாகச் செல்ல முடியும் என்பது கணக்கு. இதற்காக டாக்காவில் விமானம் தரையிறங்கும் அனுமதி வாங்கும் வேலையில் இருந்த கிம் டேவியின் கூட்டாளியால் ஏனோ அந்த அனுமதியை கடைசியில் வாங்க முடியாமல் போனது. எனவே டாக்காவில் இறங்காமலே பறந்துபோய் கச்சினில் ஆயுதங்களை இறக்குவதாக கிம் டேவி தீர்மானித்துக் கொண்டார். இந்தமாதிரியான ஆட்கள் பொதுவாக எவ்விதமான ஆபத்து வந்தாலும் மிகவும் நிதானமாக இருப்பார்கள். பதட்டமடைவது என்பது அவர்களுக்கு இருக்கவே இருக்காது.

விமானம் பறக்கும் வேகத்தை வைத்தும் பறக்க ஆரம்பித்த நேரத்தை வைத்தும் இத்தனையாவது நிமிடங்களில் ஆயுதம் போட்டாக வேண்டும் என்று கணக்கிட்டுக் கொண்ட கிம் டேவி, துப்பாக்கி முனையில் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே விமானிகளுக்கு ஆணையிட்டுக் கொண்டு வர, விமானிகள் அதற்கு பணியாமல் முரண்பட, ஏற்பட்ட குளறுபடிகளில் கச்சினில் விழ வேண்டிய ஆயுதங்கள் புருலியா மாவட்ட கிராமங்களில் போய்ச் சேர்ந்தது என்பதாக அறிய முடிகிறது.

இந்த விஷயத்தில் விடையளிக்க இயலாத பல மர்மங்கள் புதைந்திருக்கின்றன. அவிழ்க்க இயலாத அல்லது சம்பந்தப்பட்ட அரசுகள் அவிழ்க்க விரும்பாத எத்தனையோ மர்ம முடிச்சுகளுள் இவைகளும் அடங்கும்.

டென்மார்க்கில் கிம் டேவியைக் கண்டு பிடித்த சிபிஐ-யால் அப்போது குற்றவாளிகளைப் பரிவர்த்தனை செய்து கொள்ளும் ஒப்பந்தம் இல்லாததால் இந்தியாவிற்கு கைது செய்து கொண்டுவராமல் போனது. இண்டர்போல் மூலம் இந்தியாவிற்குக் கொண்டுவர கோரிக்கை வைக்கப்பட்டது. அந்தக் கோரிக்கை இன்டர்போல் ஒரு சிவப்புமூலைக் கடிதம் வெளியிடப்பட்டதுடன் நிற்கிறது. இன்றுவரை கிம் டேவியைத் தேடிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறது இன்டர்போல்.

ரண்டி என அறியப்படும் சத்யநாராயண்சிங் மற்றும் அவரது தம்பியான வினய் சிங்கிற்கும் இந்த ஆயுதக் கடத்தலில் என்ன வகையிலான தொடர்பு என்பது சரியாக விளக்கப்படவில்லை.

பிரிட்டிஷ் உளவுத்துறை இந்தியஅரசிற்கு சரியான நேரத்தில் சொன்னதா, இல்லையா? இல்லையென்றால் என்ன காரணம்?

இந்திய மண்ணில் பலமுறை இறங்கிச் சென்றிருக்கிறதே அந்த விமானம். அந்தக் காலகட்டங்களில் ஒருமுறைகூட சோதனையிடப்படாமல் போனதன் காரணம் என்ன?

ஹாங்காங்கைச் சேர்ந்த தங்கக் கள்ளக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த, ஜெர்மனியில் பிறந்து கன்சாசில் வசித்து வந்த, அமெரிக்க குடிமகனான ப்ரோரென் என்பவரை, சிங்கப்பூரிலிருந்து மும்பைக்கு வந்த போது இதே புருலியா விவகாரத்தில் இந்திய அரசு கைது செய்தது. இவர்தான் ஆயுதம் போட்ட ஆண்டனோவ் விமானம் வாங்குவதற்கான பணம் கொடுத்து ஏற்பாடு செய்தார் என்பது குற்றச்சாட்டு. அவர் ஷ்னீடர் மார்டின் கான்ராட் என்ற பெயரில் பயணம் செய்திருந்தார். இந்திய உளவுத்துறையின் விசாரணையில் அவரின் வேறு சில பெயர்களும் தெரியவந்தன.

அவரிடம் உங்களின் உண்மையான பெயர் என்ன என்று கேட்ட போது, அவர் சொன்ன பெயர் என்ன தெரியுமா?

ஹனுமான்.

'ஆண்ட'வனுக்குத் தான் வெளிச்சம்.

இனி..

ஆயுதம் என்பது இரகசியமாக வீட்டின் கொல்லைப்புறத்தில் தயாரிக்கப்படுவது அல்ல. அவை ஒரு தொழிற்சாலையிலேயேதான் தயாரிக்கப்படுகின்றன. ஒரு நாட்டின் அரசிற்குத் தெரியாமல் இந்த ஆயுதங்கள் அந்த நாட்டிலிருந்து வெளியேறிவிட முடியாது. அப்படியானால், இப்படி ஆயுதங்கள் கடைத்தெருவில் விற்கப்படும் அளவிற்கு (பெஷாவரில் ஆயுதம் விற்பதற்கனவே ஒரு பஜார் இருந்தது. அதைப் பற்றிய படங்களை ஒருமுறை இந்தியா டுடேயில் பார்த்ததாக நினைவு) கொண்டுவந்ததற்கு ஆயுதம் உற்பத்தி செய்யும் நாடுகளும் ஒரு காரணம். ஆயுதம் உற்பத்தி செய்யப்படும் நாடுகளையும் ஒரு கண்ணில் வெண்ணெயும் மறுகண்ணில் சுண்ணாம்பும் வைக்கும் ஐநா சபையின் ஆயுதக்கட்டுபாடு தீர்மானங்களையும் இனி வரும் தொடர்களில் காணலாம்.

(பின் குறிப்பு)

ஆயுதக்கடத்தல் என்று வரும்போது அது அழகு பார்ப்பதற்காக வாங்கப்படுவதல்ல என்பது திண்ணம். அருகாமையிலேயே நமது சகோதரர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்களே, அவர்களுக்கு எப்படி ஆயுதம் வந்து சேர்கிறது என்ற ஆவல் உங்களுக்கு ஏற்பட்டால் நான் பொறுப்பல்ல. அதில் ஏகப்பட்ட சாகச சம்பவங்கள் அடக்கம். சாண்டில்யனின் கடல்புறாவின் பாதிப்பினை கேபி டிபார்ட்மெண்ட்டுக்குள் காணக் கிடைக்கலாம். அதைப்பற்றி இப்போதைக்கு எழுதுவதாக இல்லை என்று உத்தேசித்திருக்கிறேன்.

பொங்கல் வாழ்த்துக்களும் சில சிந்தனைகளும்

அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்.

இன்று பொங்கல் திருநாள்.

பள்ளிப் பருவத்தில் பொங்கல் வாழ்த்துக்களை கட்டுக்கட்டாக வாங்கி நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தபாலில் அனுப்பிய ஞாபகம் ஏனோ வந்தது.

அதிகாலைக் குளிரில் குளிப்பதா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டே போய் ராசுப்பயல் என்னை வலுக்காட்டி தள்ளிவிட, நடுங்கிக்கொண்டே குளத்தில் போய்க்குளித்து, புதுத்துணியுடுத்தி, காலையிலேயே விறகடுப்பின் புகையின் கண்ணெரிச்சலுக்கிடையில், சூரியனை வானில் தேடி, பொங்கலோ பொங்கல் கூவி, கடவுளுக்குப்படைத்து, இனிப்பான புதுஅரிசியின் வாசனையுடன் இருக்கும் பொங்கலைக் கொஞ்சம் சாப்பிட்டு, பிறகு வீடுவீடாக பொங்கலைக் கொடுத்துவர என் அம்மா, இது இது இன்னாருக்கு என்று சொல்லித்தர வீடு வீடாய்ப் போய்க் கொடுத்துவருவேன். ஒவ்வொரு வீட்டிலும் ஏதாவது தருவார்கள். பழம், காய்கறி, காசு, இனிப்பு என்று, ஒரே வசூல்தான் அன்றைக்கு. அன்றைக்குப் பார்த்து காலையில் இந்தச் சூரியன் பத்துமணி வரை தலையைக் காட்டாது. ஒரே மப்பும் மந்தாரமுமாய் இருக்கும், வீதியெங்கும் புகை. புதுத்துணியுடுத்திய பெண்கள் அன்று மட்டும் அதிகமாய் அழகாய்த் தெரிவதும் அவர்களை சடையைப் பிடித்து வம்பிழுப்பதும் தனிக்கதை.

இன்றைக்கு சிங்கப்பூரில் ஒரு உள்ளரங்கத்திலோ அல்லது கோயிலிலோ (தமிழர் திருநாள் இங்கு இந்துக்களின் பண்டிகையாய்ப் போனது) பொங்கல் கொண்டாடப்படும். தத்தம் பிள்ளைகளும் தாமும் பளபளக்கும் பட்டுடைகளில், மெர்சிடஸிலோ அல்லது லெக்ஸஸிலோ வரும் தமிழர்கள் கோயிலில் பக்திசிரத்தையாய் கும்பிட்டுவிட்டு பிள்ளைகளை பொங்கல் பொங்குவதைக் காட்டச் செல்வர். அதன்பின், மாடுகள் எல்லாம் ஒரு கொட்டகையில் வரிசையாகக் கட்டப்பட்டு அங்கு பால்கறக்கும் நேரம் முதலானவை எழுதப்பட்டிருக்கும். (இன்னமும் அதற்கு தனியாக நுழைவுக்கட்டணம் வசூலிக்கவில்லை என்பது சந்தோசம்.) மாடுகள் இந்த நிகழ்ச்சிக்காகவே ஜோஹோரிலோ அல்லது லிம்-ச்சு-காங்கிலோ உள்ள ஒரு பண்ணையில் இருந்து தற்காலிகமாக வாடகைக்கு எடுத்துவரப்படும். மாடுகள் மட்டுமின்றி சமூக விலங்குகள் என அழைக்கப்படும் ஆடு, மாடு, எருமை, கோழி, சேவல், நாய்கள், கிளிகள் போன்றவற்றிற்கும் சிங்கப்பூர் பிள்ளைகளுக்கும் வெகு தூரம். (நாய் மற்றும் கிளி ஆகியன வளர்க்க அரசிடம் பணம் கட்டி சில நடைமுறைகளுக்குட்பட்டு வீட்டில் வளர்க்கலாம்.) எனவே மாட்டுப்பொங்கல் என்றால் என்ன என்று கேட்கும் இன்றையக் குழந்தைகளுக்கு மாட்டைக் காட்டுவதற்கும் அதில் எப்படி அவர்கள் தினம் குடிக்கும் பால் வருகிறது என்று காண்பிப்பதற்கும் இந்த மாட்டுக் கண்காட்சி உபயோகப் படுகிறது. மாடுகள் லிட்டில் இந்தியா சாலைகளில் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக வருகிறது இந்த முறை.

===================

என் மகள் கேட்டாள், அரிசி எப்படி விளைகிறது என்று. அவளுக்கு அது புல் வகையைச் சேர்ந்தது என்று தெரிந்திருக்கிறது. மற்றபடி ஒவ்வொரு புல்லாக வளர்த்து அரிசி செய்வார்களா என்று கேட்க, எனக்கு அப்போது தான் உறைத்தது. மடைபாய்ச்சுவதிலிருந்து, உழுது, பாத்திகட்டி, நாட்டுநற்று, களையெடுத்து, உரம்வீசி, காவலுக்குச் சென்று, கதிரறுத்து, கதிரடித்து, மரக்காலில் அளந்து, மூட்டைகட்டி, காயவைத்து, குதிரில் இட்டு, அவியல்போட்டு ஆறவைத்து, ஆலைக்குத் தூக்கி, அங்கு அரைத்து, உமி தனியாக, தவிடு தனியாக, அரிசி தனியாக, குருணை தனியாகக் கட்டிப் பின் வீட்டுக்குக் கொண்டு வந்து, பானைக்குள் அளந்து கொட்டி முடிக்கும் வரை செய்திருந்த எனக்கு என் 6 வயது மகள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க மலைப்பாய் இருந்தது. எதையோ தேடப்போய் எதையோ இழந்துவிட்டோமோ என்று ஒருகணம் உலுக்கியது. சமூக பொருளாதார மாற்றங்கள் கலாச்சாரத்திற்குள் எப்படி மாற்றங்களைக் கொண்டுவருகிறது என்று உணர்வதற்கு அது தருணமாய் இருந்தது.

=========================

காடுகரையை எல்லாம் விற்றுவிட்டு இன்று இரண்டு ருபாய்க்கு ரேசனில் அரிசிவாங்கிக் கொண்டிருக்கிறான் விவசாயி. இலவசமாக மின்சாரம் வருமா, இலவசமாக கிணறு தோண்டித்தருவார்களா, இலவசமாக உழுது தருவார்களா, இலவசமாக உரம் தருவார்களா, இலவசமாக களை எடுத்துத் தருவார்களா, இலவசமாக கதிரறுத்துத் தருவார்களா என்றெல்லாம் இலவச எதிர்பார்ப்புகள் அதிகமாகிக் கொண்டிருக்க, இரண்டு ருபாயில் அரிசியையே வழங்கி ஏகப்பட்ட வாக்குறுதிகளை மிச்சப்படுத்தியிருக்கும் கலைஞர் அவர்களை வாழ்த்தாமல் இருக்க முடியாது, ஆனால் இனி விவசாயி என்பவன் ஒருவன் இருக்காமல் போகக்கூடிய சாத்தியக்கூறுகள் அத்தனையும் இருக்கிறது, வியட்நாமிலோ அல்லது தென் கொரியாவிலோ அரிசியை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கலாம். அவர்கள் அரிசியை இரண்டு ருபாய்க்கும் குறைத்து அரசிற்கு விற்க விரும்பினால் வாங்கித்தானே ஆக வேண்டும். அதுதானே உலக வர்த்தகமயமாக்கல். அதே சமயம் இது வேறு வகையான சமூக மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. வேலைக்கு ஆட்கள் இன்று கிராமத்தில் கிடைக்கவில்லை. ஒருநாள் வேலைக்குப் போனால் குறைந்தது நூறு ருபாய் கூலியாய்க் கிடைக்கிறது. 25 கிலோ அரிசி வாங்கினால் ஒரு மாதத்திற்கு போதும். காய்கறி வாங்க அவ்வப்போது ஒரு நாள் வேலை பார்த்தால் போதும். எதற்கு வேலை பார்ப்பது. குதிரில் நெல் இருந்தால் போதும் டீக்கடைக்கு அரசியல் பேச போய்விடுவானே தமிழன். வேலையாவது மண்ணாங்கட்டியாவது.

==============================

காடுதிருத்தி கழனியெல்லாம் பாடுபட்டு விளைச்சலை வீட்டுக்கு கொண்டுவந்து பகலவனுக்குப் படைத்து நன்றி செலுத்தும் நாள் பொங்கல் திருநாள். இதில் மதமும் இல்லை, சாதியும் இல்லை. தமிழராய்ப் பிறந்தோர் எல்லோரும் கொண்டாடி மகிழ வேண்டிய பெருநாள், பொங்கலை ஆக்கி பாத்தியா ஒதும் இஸ்லாமியக் குடும்பங்களைக் கண்டிருக்கிறேன், காகிதத்தட்டுக்களில் பொங்கலைப் பகிர்ந்துண்ணத் தரும் கிறித்துவக் குடும்பங்களைக் கண்டிருக்கிறேன், ஆனால் இன்றைக்கு பொங்கல் என்ற தமிழர் திருவிழா, தீபாவளி என்ற பளபளக்கும், நொடியில் கரைந்துபோகும் வடநாட்டு திருவிழாவின் வெளிச்சத்திற்கு முன் தாழ்ந்து போனது, பாலகங்காதர திலகர் இதைப் பிரபலப்படுத்தும் வரை இது அஷ்டமி நவமி போன்றதொரு மற்றொரு நிகழ்வாகவே இருந்திருக்கிறது,

பொங்கலைப்பற்றி எழுதும்போது இது இங்குமட்டும் தான் வழக்கமா என்ற வழக்கமான ஒரு கேள்வி எனக்குள் எழ, கூகிளப்பனைக் கேட்டால் உலகெங்கும் கொண்டாடுப்படுகிற வழக்கம் என்ற புதுத்தகவல் (எனக்கு) கிடைத்தது,

Thanks Giving Day என்று வடஅமெரிக்காவிலும், லண்டனிலும் ஆஸ்திரேலியாவிலும், Moon Festival என்று சீனர்களிடத்திலும், Tet Trung Thu என்று வியட்நாமிலும், Succoth என்று யூதர்களிடத்திலும், Kwansa மற்றும் Yam என்று ஆப்பிரிக்கர்களிடேயும், Chusok என்று கொரியர்களிடேயும், இது போக பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, மலேசியா, கம்போடியா, பர்மா ஆகிய நாடுகளிலும் பொங்கல் கொண்டாடப்படுகிறது, அமெரிக்காவிலும் கனடாவிலும் இது மதம் சாராத பண்டிகையாகக் கொண்டாடப்பட்டாலும், லண்டனில் இது சர்ச் சார்ந்த பண்டிகையாக கடந்த ஒரிரு நூற்றாண்டுகளில் மாற்றப்பட்டிருக்கிறது.

=============================

இன்றைக்குப் பொங்கல் கொண்டாட்டமென்றால் தமிழ்கூறும் நல்லுலகின் திரைப்பட நாயகர்களும் நாயகிகளும் சன்டிவியில் தோன்றி வரும் காட்சிகளை வீட்டில் அமர்ந்து ரசிப்பதும், பொங்கலுக்கு வெளியாகும் புதுப்படங்களைப் பார்ப்பதிலும் போய்க் கொண்டிருக்கிறது. வாழ்க தமிழர், வாழ்க அவர்தம் புதிய கலாச்சாரம்.

பொங்கும் மங்களம் எங்கும் தங்கிட பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

ஆயுத வியாபாரிகள்....அதீத பேரங்கள் - 7

பிற்பாடு பிளீச்சின் டேனி்ஷ் நண்பரும் அவரும், துபாய் போய் பின் அங்கிருந்து டாக்கா சென்றனர். பின்பு அங்கிருந்து கிம் டேவியைச் சந்திக்க பாங்காக் போனார்கள். போகும் வழியில் கிம் டேவியைப் பற்றிச் சொல்லிக்கொண்டு வந்தார் அந்த டேனிஷ் நண்பர். இதே விஷயத்தை முடிக்க டேனிஷ் பிஸினஸ்மேன் ஒருவர் 600,000 டாலர் பேசி 150,000 டாலர் அட்வான்ஸ் வாங்கிவிட்டதாகவும் ஆனால் தனது பராக்கிரமத்தால் அந்த காண்ட்ராக்டை பிளீச்சிற்குப் பெற்றுத்தந்ததாகவும் பெருமை பொங்கச் சொல்லிக் கொண்டிருந்தார். கிம் டேவி ஹாங்காங்கில் தங்கக் கடத்தலிலும் எலக்ட்ரானிக் பொருள்கள் கடத்தலிலும் பெரிய கிங் என்றும் பெருமைபாடிக்கொண்டிருந்தார். பேச்சோடு பேச்சாக இந்த ஆபரேஷன் டேவியின் நேரடிக் கண்காணிப்பில் நடைபெறும் என்றும் அவர் அந்த விமானத்தில் பயணம் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் சொன்னார்.

பாங்காக்கில் ஒரு இரவு விருந்தில் கிம் டேவி, டேவியின் வக்கீல், டேவியின் தொழில் பார்ட்னர், பிளீச், அவரது டேனிஷ் நண்பர், மற்றும் ராண்டி என்று தன்னை அழைத்துக்கொண்ட இந்தியர் ஒருவரும் கலந்து கொண்டனர். கிம் தனது திட்டத்தைப் பற்றி விவாதிக்கலானார். மேற்கு வங்கம் வரை கப்பலில் கொண்டு சென்று அங்கிருந்து புருலியாவிற்கு தரைமார்க்கமாக எடுத்துச் செல்லலாமே என்று சொன்னார். அது மிகவும் ரிஸ்க்கான காரியம் என்றும் ஒரு விமானத்தை தற்காலிகமாக விலைக்கு வாங்கி அதைக் கொண்டு அந்த ஆயுதங்களை ஆகாய மார்க்கமாகவே டெலிவரி செய்து விட்டு பிறகு வந்த விலைக்கு அந்த விமானத்தை விற்று விடலாம் என்றும் பிளீச் யோசனை சொல்ல அது ஏற்கப்பட்டது. மேலும் டேவி அந்த விமானத்தை விற்காமல் டாக்காவிலேயே நிறுத்திவைத்துக் கொண்டு வேறு பல சாதாரண வியாபார விஷயங்களுக்கும் பயன்படுத்தலாம் என்று சொன்னார்.

இந்த ஆலோசனையின்படி டேவி 250,000 டாலர் கொடுத்து ஒரு ஆன்டனோவ் 26 (AH26) ரக விமானம் ஒன்றை வாங்கி ஏஎச்266 என்று நாமகரணம் சூட்டப்பட்டு ஹாங்காங்கில் டேவியால் பதிவு செய்யப்பட்ட கரோல் ஏர் சர்வீஸஸ் என்ற கம்பெனிக்கு அது மாற்றப்பட்டது. பிற்பாடு அதே விமானம் துருக்கியிலும் கைகோஸ் தீவுகளிலும் பதிவு செய்யப்பட்டது. இந்த விமானத்தைக் காண்ட்ராக்டில் ஓட்டுவதற்கு விமானச் சிப்பந்திகளாக லாட்விய நாட்டு ஐவர் குழு ஒன்று 30,000 டாலர்களுக்கு முன் வந்தது. அவர்களுக்குச் சொல்லப்பட்டதெல்லாம் இந்தச் சரக்கு விமானத்தை மூன்று மாதகாலங்களுக்கு பல்வேறு நாடுகளுக்கு ஓட்டிச் செல்ல ஒரு ஒப்பந்தம். ஆயுதக்கடத்தலெல்லாம் அவர்களுக்கு சுத்தமாக அப்போது தெரியாது. காண்ட்ராக்ட் பேசி முடிக்கப்பட்டவுடன் ரிகா என்ற லாட்விய நாட்டு நகரமொன்றின் விமானத் தளத்தில் அந்த விமானம் டெலிவரி செய்யப்பட்டு ஐவர் குழுவின் தலைவரிடம் சாவி ஒப்படைக்கப்பட்டு விட்டது.

லண்டன் திரும்பிய பின் மீண்டும் சிரத்தையாக பிரிட்டிஷ் உளவுத்துறையிடம் மேற்கொண்டு தகவல்களை அளித்துவிட்டு பிடிஐ (Border Technologies and Innovations) என்ற கம்பெனியை நாடினார், பிளீச். அந்தக் கம்பெனி பல நாடுகளின் இராணுவத்திற்கு ஆயுத தளவாடங்கள் செய்வதில் அனுபவம் பெற்றிருந்தது. பிளீச் பங்களாதேஷ் இராணுவ அமைச்சின் முத்திரையுடன் கூடிய ஒரு தபாலை பிடிஐ நி்றுவனத்திடம் அளித்து, இது முறையான ஒரு வியாபாரம்போலக் காட்டியிருந்தார். இதைப் பெறுவதற்காகத்தான் அவர் முன்னம் டாக்கா போய்வந்திருக்க வேண்டும். பிடிஐ நிறுவனம் பல்கேரிய நிறுவனம் ஒன்றிடம் ஆர்டர் அளித்திருந்தது. பிடிஐ நிறுவனம் கொடுத்த பட்டியலின் படி அனைத்தையும் தந்துவிட்டு, பாராசூட் மட்டும் தன்னிடம் இல்லை என்று கைவிரித்து விட்டது. அதுவே ஒரு வகையில் நல்லதாகப் போனது, டேவிக்கு. ஏனென்றால் லாட்விய விமானக்குழுவிற்கு கள்ளிப் பெட்டிகளுக்குள் என்ன இருக்கிறது என்பது தெரியாமல் போனது.

10 டிசம்பர் 1995. பல்கேரியாவின் பர்காஸ் நகரில் 'சரக்குகளை' பெறுவதற்காக ஆண்டனோவ் 26 தரையிறங்கியது. இதற்கு சற்று முன்பாக பர்காஸிற்கு பிளீச் கிளம்பும் முன் பிரிட்டிஷ் உளவுத்துறை அதிகாரி ஒருவர் GATWICK விமானநிலையத்தில் சந்தித்து அவரது பயணத்தைத் தொடரும்படியும் தமது அமைப்பு இதைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் சரியான சமயத்தில் தலையிட்டு இதைத் தடுத்துவிடுவோம் என்றும் கூறியதாக் பிளீச் தெரிவிக்கிறார். பிளீச் அந்த விமானத்தில் சரக்கை ஏற்றிவிட்டு லண்டன் திரும்பும் நோக்கத்தோடு பர்காஸ் சென்றார். ஆனால் நடந்ததோ வேறு. அங்கு திடீர் விஜயம் செய்த டேவி, பிளீச்சை தன்னுடன் விமானத்தில் பயணிக்கும்படி சொன்னார். இந்த விமானப் பயணம் பற்றி அனைத்து விஷயங்களையும் அறிந்திருந்த பிளீச் இந்தப் பயணம் முடியும் வரை கூடவே இருக்க வேண்டும் என்று டேவி வற்புறுத்தினார். பின்னர் அது மிரட்டலாக உருமாறியது. மறுத்த பிளீச்சை டேவி 'குடும்பத்தையே தொலைத்துவிடுவேன்' என்று மிரட்ட ஆரம்பிக்க வேறு வழியின்றி பிளீச் அதே விமானத்தில் பயணம் செய்ய வேண்டியதாயிற்று.


Technical Equipments - Central Ordinance Depot, Rajendrapur Cantoment, Bangaladesh
என்று எழுதப்பட்டிருந்த கள்ளிப் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு அந்த விமானம் பர்காஸிலிருந்து கராச்சி நோக்கிப் பறந்தது. அதுவரை இந்தக் கள்ளிப்பெட்டிகள் இராணுவத்திற்கான தளவாடங்களை ரிப்பேர் செய்வது சம்பந்தமான உபகரணங்கள் என்றுதான் விமானிகள் நம்பிக்கொண்டிருந்தனர். கராச்சியில் பாராசூட்டுகள் அந்தக் கள்ளிப்பெட்டியில் இணைக்கப்படும் போது விமானிகளுக்கு ஏற்பட்ட சந்தேகம் மற்றும் பயம், கள்ளிப் பெட்டிகள் தரையிறங்கும் வரை நீடித்தது. 17 டிசம்பர் கராச்சியிலிருந்து ரங்கூன் நோக்கிப் பறந்த அந்த விமானம் மேற்கு வங்காளம் வாரணாசிக்கருகில் வரும்போது போதிய எரிபொருள் இல்லாமல் தகராறு செய்ய, வாரணாசி விமானநிலையத்தில் இறங்கி எரிபொருள் நிரப்பிக் கொண்டார்கள். பிளீச்சிற்கு ஆச்சரியமோ ஆச்சரியம். என்ன இந்த இந்திய அதிகாரிகள் யாரும் வந்து விமானத்தைச் சோதனை செய்யவுமில்லை, கைது செய்யவுமில்லை என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தார். அவரின் பார்வையில் பிரிட்டிஷ் உளவுத்துறை இந்திய அரசிற்கு இந்நேரம் சொல்லி அவர்கள் இந்த விமானத்தின் மேல் ஒரு கண் வைத்திருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தார்.

எரிபொருள் நிரப்பிய விமானம் ரங்கூன் நோக்கிப் பறக்கத் தொடங்கியது. ஆனால் மேற்கு வங்கத்தின் கயா நகருக்குமேல் பறக்கத் தொடங்கும் போது துப்பாக்கி முனையில் விமானிகளை மிரட்டி தாழப்பறக்கும் படி செய்து பாராசூட் மூலம் கள்ளிப் பெட்டிகளை இறக்க முனைந்தார் டேவி. விமானிகள் தவறான செய்கைக்கு உடன்படுகிறோமே என்ற பயத்தால் முரண்டு பிடித்ததாலும், தென்ஆப்பிரிக்காவில் வாங்கி கராச்சியில் டெலிவரி எடுத்திருந்த மூன்றாந்தர பாராசூட்கள் சரியாக விரியாததாலும் குறி தவறி ஆயுதங்கள் விழத்துவங்கின. வியர்த்து வழியத்துவங்கியிருந்த விமானிகளை ஆசுவாசப்படுத்தி ரங்கூன் நோக்கி சென்றால், அங்கும் இறங்க முடியவில்லை. போதிய விளக்கு வசதிகள் இல்லாததால் இறங்க சாத்தியமில்லை என்று அறிவிக்கப்பட வேறு வழியின்றி அந்த இரவு நேரத்தில் கல்கத்தா விமான நிலையத்தில் தரையிறங்கி எரிபொருள் நிரப்பிக் கொண்டது. துப்பாக்கி முனையிலிருந்த பிளீச் "போலீஸ், இப்போதாவது நீ வரக்கூடாதா?" என்று தெய்வத்தை வேண்டிக் கொண்டிருந்தார். ஆனால் ஆச்சரியமாக யாரும் வராமல் போக, அந்த ஆயுதக் கடத்தல் விமானம் தாய்லாந்தின் புக்கெட் நகர் நோக்கிப் பறந்தது.

21 டிசம்பர் 1995. தாய்லாந்திலிருந்து மீண்டும் பயணத்தைத் தொடங்கிய விமானம் கல்கத்தா வழியாக கராச்சி நோக்கி் பறக்க, கல்கத்தா வானிலை சரியில்லாத காரணத்தால் சென்னைக்கு வந்து எரிபொருள் நிரப்பிக் கொண்டு கராச்சி நோக்கிப் பறக்கத் தொடங்கியது. இன்னும் இரண்டு மணிநேரங்களில் கராச்சியில் இறங்கிவிடக் கூடிய தூரத்தில் இருக்கும் போது மும்பை விமான நிலையக் கட்டுபாட்டறையிலிருந்து வந்த ஒரு எச்சரிக்கை அந்த விமானத்தை திரும்ப மும்பைக்கு வரவைத்தது. மும்பை சாகர் விமான நிலையத்தில் ஒரு மூலையில் நிறுத்தி வைக்கப்பட்டது அந்த விமானம். இந்திய விசாரணை அதிகாரிகள் வருவதற்கு ஏறக்குறைய ஒரு மணிநேரம் ஆனது. துப்பாக்கி முனையில் அனைவரையும் மிரட்டிவிட்டு யாரிடமோ தனது போனில் பேசியபின், அதிகாரிகள் வருவதற்கு முன் கீழிறங்கிய கிம் டேவி விமான நிலைய அரைகுறை வெளிச்சந்திலிருந்து நடந்துபோய் இருட்டுக்குள் கரைந்து போனார்.

ஐந்து லாட்விய விமானச் சிப்பந்திகளும் பிளீச்சும் 22 டிசம்பர் 1995 அன்று கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தின் முன் நிறுத்தப்பட்டனர். இதில் சில வழக்கமான காமெடிகள் எல்லாம் இருந்தது. அதை இங்கு விளக்கி நம் பெருமையை நாமே பறைசாற்றிக் கொள்ளக் கூடாது அல்லவா. ஆறுபேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ராண்டி என்றழைக்கப்படும் சத்யேந்தர் நாராயண் சிங்கின் தம்பியாகிய வினய் குமார் சிங் என்ற இந்தியருக்கும் தண்டனை அளிக்கப்பட்டது. இந்த வினய் குமார் சிங் மேற்படி சரக்குகளைப் பெற காத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். அனைத்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. ஆனந்த மார்க்கம் என்ற அமைப்பினரும் பிற்பாடு இதே குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர். ஆனால் குற்றம் சரிவர நிருபிக்கப்படாமல் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். உண்மையில் ஆனந்த மார்க்கம் என்ற அமைப்பு பொய்யாக இந்த வலைக்குள் சிக்கியிருந்தது என்பதைபின்னர் கண்டுபிடித்தனர்.

ஆயுதக்கடத்தலில் பணம் சம்பாரிக்கலாம் என்று வந்த பிளீச் இந்தியச் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருந்தார். அதிலிருந்து வெளியே வர அவர் பகீரதப் பிரயத்தனம் பண்ணி கடைசியல் வெளியில் வந்ததை ஏற்கனவே பார்த்தோம்.

இதுவரை மேற்படி சொன்னதெல்லாம் பிளீச் வாக்குமூலமாகச் சொல்லப்பட்டு பிரிட்டிஷ் உளவுத்துறையால் ஆமோதிக்கப்பட்ட கதை.

ஆனால் உண்மையில் நடந்தது என்ன...?

எப்போதும் ஒரு நாணயத்திற்கு இருபக்கம் உள்ளது அல்லவா... அந்த மறுபக்கம் என்ன?

ஆனந்தமார்க்கம் என்ற அமைப்பிற்கு ஆயுதங்கள் தரப்படுவதாக பிளீச் மற்றும் பிரிட்டிஷ் உளவுத்துறையிடம் ஏன் பொய் சொல்லப்பட்டது.

மேலும்...

சாகர் விமானநிலையத்தில் மாயமாகி இன்றுவரை கண்ணில் படாத கிம் டேவி என்ற சூத்திரதாரியையும், அவனின் பிண்ணனி என்ன என்பதையும் சற்று விளக்கமாக அடுத்த பகுதியில் காணுவோம்.

ஆயுத வியாபாரிகள்....அதீத பேரங்கள் - 6

புருலியா ஆயுதமழை விவகாரத்தில் தொடர்புடையவர்கள் முக்கியமாக இருவர். பீட்டர் பிளீச் என்ற முன்னாள் உளவுத்துறை அதிகாரி மற்றும் கிம் டேவி எனப்படும் மற்றொரு நபர். பீட்டர் பிளீச் எவ்வாறு இந்த கிம் டேவியுடன் தொடர்புகொண்டு கிம் டேவியின் வலைக்குள் சிக்கி கிட்டத்தட்ட துப்பாக்கி முனையில் ஆயுதத்தூவலைச் செய்தார் என்று பார்ப்போம் (அப்படித்தான் பிரிட்டிஷ் உளவுத்துறை சொல்கிறது).

முதலில் பீட்டர் பிளீச்.

பீட்டர் வான் கால்கெஸ்டீன் பிளீச் (Peter von Kalkstein-Bleach), பிரிட்டிஷ் இராணுவ உளவுத்துறையில் கார்ப்பொரல் பதவியில் 20 வருடங்கள் பணியாற்றிய பின், பணம்கொட்டும், அதே சமயம் மிகச் சாதுரியம் தேவைப்படும், ஆயுதக் கடத்தல் தொழில் செய்வது என்று முடிவு செய்திருந்தார். இந்தத்தொழில் ஏகப்பட்ட பேப்பர் வேலைகள் இருக்கும் மற்றபடி ஆயுதம் வாங்குவதோ அதைக் கொண்டுபோய் இறக்குவதோ ஒரு விஷயமே கிடையாது என்று நினைத்திருந்தார். இந்த நினைப்பு எவ்வளவு தவறhனது என்று அப்போது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. இந்தத் தொழிலுக்காக பிள்ளையார் சுழி போட்டு ஏரோசர்வ் என்ற கம்பெனியை பிரிட்டிஷ் இராணுவ அமைச்சிடம் முறையாக அனுமதி பெற்று பதிவு செய்திருந்தார்.

ஆகஸ்ட் 1995 வாக்கில் பிளீச் ஒரு தொழில் முறைக் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக கோபன்ஹேகன் சென்றிருந்தார். தமது முனிச் நகரைச் சேர்ந்த நண்பரொருவரைப் சந்திக்க நேர்ந்தது. ஒரு முக்கியமான விஷயத்திற்காக கூட்டிப்போவதாகச் சொல்லி அவரை பண்ணை வீடு ஒன்றிற்கு அழைத்துச் சென்றார். அங்கு கோபன்ஹேகனைச் சேர்ந்த ஒரு வர்த்தகர், மற்றும் அவரது இரு நண்பர்கள், ஒரு டென்மார்க் நாட்டுக்காரர் மேலும் ஒரு அறிமுகப்படுத்தி வைக்காத நிழல் நபர். அந்த நிழல் நபர் பெரும்பாலும் எதுவும் பேசவில்லை. சிகரட் வியாபாரம் பற்றி வெகுநேரம் பேசியபின், அந்த நிழல்நபரைத் தனியே கலந்தாலோசித்துவிட்டு பிளீச்சிடம் அந்த கோபன்ஹேகன் நபர் விஷயத்திற்கு வந்தார். 2500 ஏகே47 ரக துப்பாக்கிகளையும் 1.5 மில்லியன் துப்பாக்கிக் குண்டுகளையும் ஒரு நபருக்கு அனுப்ப வேண்டும் என்று நேரடியாகச் சொன்னார். ஆயுதக் கடத்தல் விவகாரத்தில் பொதுவாக இது யாருக்குப் போகிறது என்று விசாரிக்கப்படுவது வழக்கமில்லை. மேலும் இந்திய நகரான கல்கத்தாவிற்குப் போவதால் அது இந்திய அரசிற்காகக் கூட இருக்கலாம் என்று நினைத்திருந்தார்.

அந்த தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டிராத நிழல் நபர், பிளீச் இந்த விஷயத்திற்கு ஒத்துக் கொண்டவுடன், ஒரு பெரிய வரைபடத்தை விரித்து மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு கிராமத்தை விரலால் வட்டமிட்டு இங்குதான் இது செல்ல வேண்டும் என்றபோதுதான் அவருக்கு சுரீரென்று உரைத்தது. இது தீவிரவாதக் கும்பலுக்குச் செல்லுகிறது என்று. உடனே மனதிற்குள் இதை பிரிட்டிஷ் உளவுத்துறையிடம் தெரிவித்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்றும், வந்தவரை காசு என்றும், நினைத்துக் கொண்டார். அந்த நிழல் நபர் தொடர்ந்தார். தனது அமைதி விரும்பும் மக்களை மேற்கு வங்க கம்யூனிஸ்ட் அரசு கொடுமைப் படுத்துவதாகவும் கொன்று குவிப்பதாகவும் அதற்காகவே இந்த ஆயுதங்கள் செல்வதாகவும் சொன்னார். பிளீச் தனது வியாபாரத்திறமையை வெளிப்படுத்தும் விதமாக, இந்த டெலிவரி ஒன்று பாராசூட் மூலமாகவோ அல்லது இரகசியமாக தரையிறங்கியோதான் செய்யமுடியும் என்றும், கடைசிவரை இந்த பயணத்தில் ஈடுபடுபவர்களுக்கு விமானியைத் தவிர, வேறு யாருக்கும் டெலிவரி செய்வது இந்த இடம் என்று ஒருபோதும் தெரியக்கூடாது என்றெல்லாம் ஆலோசனை சொல்லிக்கொண்டிருந்தார்.

கடமை சுத்தமாக லண்டன் திரும்பிய பிளீச் பிரிட்டிஷ் இராணுவ அமைச்சின் DESO என்ற அமைப்பைத் தொடர்புகொண்டு ஒன்று விடாமல் வரி பிசகாமல் ஒப்பித்தார். அப்போதைய அதிகாரியான ஆல்கின்ஸ் என்பவர் (இவரே அப்போதைய இந்தியாவிற்கான விவகாரங்களைக் கவனித்தவரும் ஆவார்) பிளீச்சிடம் தொடரந்து அதில் ஈடுபடும்படியாகவும் மேலும் தகவல்களை அவ்வப்போது தந்து கொண்டிருக்கும்படியும் ஆலோசனை கூறினார். தாம் டென்மார்க் மற்றும் இந்திய அரசுகளிடம் இதைப் பற்றி தெரிவித்து விடுவதாகவும். மேலும் அந்த திட்டப்படி ஆயுதங்கள் போடப்பட்டால் அதை எடுத்துச் செல்பவர் வரை பிடித்து விடுவதற்கு உதவியாக இருக்கும் என்பதால் அவரைத் தொடரச் சொல்லியிருந்தனர். நம்பிக்கையுடன் திரும்பிய பிளீச் 470,000 டாலர்கள் என்று கொடேஷன் கொடுக்கிறார். சாதாரண தொழில்முறைப் பயணமாக பங்களாதேஷ் சென்றிருந்த பிளீச்சிற்கு பங்களாதேஷிற்கு ஒரு லெட்டர் ஆப் கிரெடிட் பேக்ஸில் வந்தது. அதில் 470,000 டெபாஸிட் செய்ததற்கான விபரங்களிருந்தன். கீழே கிம் டேவி என்று கையெழுத்திட்டிருந்தது. இது தான் அந்த நிழல் நபரின் பெயர் போலிருக்கிறது என்று பிளீச் நினைத்துக் கொண்டார்.

லண்டன் திரும்பிய பிளீச் தற்போது மீண்டும் உளவுத்துறையைச் சந்தித்து அவர்களிடம் கூடுதல் தகவல்களைத் தெரிவித்தார். தற்போது அந்த அதிகாரிகளில் ஒருவர் பிளீச்சை இத்துடன் நிறுத்திக் கொண்டு ஒதுங்கிக் கொள்ளச் சொன்னார். அதிர்ச்சியடைந்த பிளீச், தான் இதில் ஈடுபட்டிருப்பது பணம் சம்பாதிக்க மட்டுமே. எனவே தான் பணத்தைப் பெற்றுக் கொண்டபின் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்து கொள்ளுங்கள் என்று சொன்னதாகவும் தெரிகிறது. உளவுத்துறை இதை மறுக்க, பிளீச் இதை ஆமோதிக்க, உண்மை என்னவென்று யாருக்கும் தெரியவில்லை.

ஆக உளவுத்துறையின் எச்சரிக்கைக்குப் பிறகும் பிளீச் இதில் ஈடுபட்டார். ஆனாலும் பிரிட்டிஷ் உளவுத்துறை அதிகாரிகள் இது சம்பந்தப்பட்ட செய்திகளை இந்திய உளவுத்துறைக்குச் சொல்லியிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் நவம்பர் 1995 வரை, அதாவது ஆயுதம் போடப்படும் ஒருமாதம் முன்பு வரை, அது இந்திய அரசின் காதுகளுக்கே போகவில்லை.