Update - லண்டன் கார் குண்டுகள்

எனது முந்தைய கட்டுரையில் சொல்லியிருந்தபடி வினோதமான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

1. இது வரையில் அல்காயிதாவுடனான தொடர்பை நிருபிக்க இயலவில்லை (நான் அல்காயிதாவிற்காக வக்கலாத்து வாங்குகிறேன் என்று நினைக்க வேண்டாம். தவறான செய்திகள் ஊடகங்கள் மூலம் உடனடியாக எந்த மறுதலிப்பிற்கும் உள்ளாகாமல் பரப்பப்படுகின்ற விதத்திற்கு எதிராகவே ஒழிய வேறு ஒன்றுமில்லை).

2. வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார்களுக்கும் கிளாஸ்கோ நகரில் நடந்த செரோக்கி ஜீப் எரிப்பு சம்பவத்திற்கும் இன்னும் தொடர்பு காண இயலவில்லை.

3. ஆஸ்திரேலியாவில் கைதான இந்திய டாக்டர் ஹனீப், முக்கிய சூத்திரதாரி் என கருதப்படும் ஆஷா என்கிற ஜோர்டானியர், கஃபீல் அஹமது என்பவரிடம் ஹனீப் கொடுத்துவைத்திருந்த அவரின் ரெகுலர் லண்டன் மொபைல் ஃபோன் சிம் கார்டைப் பயன்படுத்தியதால், ஹனீப் மாட்டியிருக்கிறார். ஒரு மொபைல் போன் வாங்கும் போது காண்ட்ராக்டில் வாங்குவது வழக்கம். அந்த சிம் கார்டை இடையில் நிறுத்தினால் பெனால்ட்டி கட்ட வேண்டி வரும். எனவே, வேறு ஊருக்கு புலம் பெயரும்போது, யாரிடமாவது அதைக் கொடுத்து மாதாமாதம் பணம் கட்டி விடுங்கள் என்று சொல்லிவிடுவது புலம்பெயர்வோர் வழக்கம். அந்த நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்தி ஹனீப் இந்தக் குற்றச் சாட்டிற்குள் உட்படுத்தப்பட்டிருக்கிறார் என்பதைத் தவிர வேறு எந்தக் முகாந்திரமும் இன்னேரம் வரை இனம் காணப் படவில்லை.

ஆஸ்திரேலிய விரிவுரையாளர் ஒருவர் சிங்கப்பூர் வானொலியொன்றில் இதைப்பற்றிக் கருத்துத் தெரிவிக்கும்போது, முன்பைய காலங்களை விட தற்சமயம் தொழில் நுட்ப வசதிகளினால் மிக பெரிதாக வலை (dragnet) விரிக்க முடிகிறது, அதனால் ஏகப்பட்ட சம்பந்தமில்லாத அப்பாவிகளும் இவ்வலைக்குள் சிக்குவது அன்றாடமாகி விட்டது. ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இந்திய டாக்டர் இது போன்று இருக்கவே அதிகம் வாய்ப்பிருக்கிறது என்று அவர் கருத்துரைத்திருந்தார்.

-மேலும் வரும்...

0 இப் பதிவைப் பற்றிய கருத்துக்கள்: