Showing posts with label அமெரிக்கா. Show all posts
Showing posts with label அமெரிக்கா. Show all posts

ஈரானியத் தாக்குதலுக்கு ஆயத்தம் நடக்கிறதா?

தற்சமயம் அமெரிக்கப் பொருளாதாரம் சொல்லொணா கடன்சுமைச்சூழலுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், வட்டிவிகிதம் குறைக்கப்பட்டு நாட்டின் வளர்ச்சி STAGFLATION என்று சொல்லப்படும் மந்தவளர்ச்சிநிலையை எதிர்நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. அமெரிக்க அதிபரைத் தேர்ந்தெடுக்கும் இச்சூழலில், இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டும் ஒரு கெட்ட பெயரோடு பதவியை விட்டு வெளியேற வேண்டிய அவமானம் ஜார்ஜ் புஷ்ஷிற்கு ஏற்பட்டிருக்கவேண்டாம்தான்.

கடன் வாங்கிச் செலவு செய்யும் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட அமெரிக்க அரசு, 2000ம் ஆண்டு கீழ் விழுந்த பொருளாதாரத்தை நிலை நிறுத்தி மேற் செலுத்த போர் சார்ந்த உத்தியைத் தேர்ந்தெடுத்து, ஒரு 911 நாடகம் கொடிதே நிறைவேறியது. 911க்கு சம்பந்தமில்லாத ஈராக்கைத் தாக்கி போருக்கான செலவு அதிகரிக்க அமெரிக்க பட்ஜெட்டில் ஒவ்வொரு முறையும் அதிகமான போர்ச செலவுக்கான அங்கீகாரம் கோரப்பட்டு வருகிறது. ஆறுவருடங்களாக இப்படியாக அமெரிக்கப் பொருளாதாரத்தை ஒருவாறாகக் கட்டிக் காத்தார்கள். கடன் வாங்கி அடுத்த நாட்டு மக்களைக் கொன்று குவித்து தனது பொருளாதரத்தை நிலைநிறுத்தும் ஒரே கேவலமான அரசு அமெரிக்க அரசாகத் தான் இருக்கும். இப்போது, அலன் கிரீன்ஸ்பான் என்ற புண்ணியவான் கடன் வாங்குவதற்கான வேறு ஒரு உத்தியைக் கண்டெடுத்ததன் விளைவுதான் தற்போதைய SUP-PRIME CRISIS. அதாவது கடனைத் திருப்பிச் செலுத்த இயலாதவனுக்கு வீடுவாங்கக் கடன் கொடுத்து, அந்த வீட்டை அடமானச் சொத்தாகக் காட்டி, அதை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு BOND-களாக விற்று விடுவது. இதில் இரண்டு வருட TAX HOLIDAY வேறு. மேற்படி வரிச்சலுகை காலம் முடிந்தபின் தவணை கட்ட முடியாததால், வீட்டை வங்கிகளிடம் கடனாளிகள் திரும்ப ஒப்படைத்து வருகிறார்கள். வீட்டை வாங்குவோர் யாரும் இல்லாததால், யாரும் வசிக்காத முதலும் வட்டியும் வராத அசட்டுச் சொத்துக்களை வைத்துக்கொண்டு வங்கிகள் விழிக்க, ஒரு தீடீர்ப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. டாலர் வீழ்ந்தது. பல வாங்கிகள் டிரில்லியன் டாலர்களில் நட்டம் ஏற்பட்டதாக தங்களது முதலீட்டாளர்களுக்கு அறிவிக்கத் தொடங்கியிருக்கின்றன. சில புத்திசாலி முதலீட்டாளர்கள் கடுமையான அதே சமயம், தமக்குச் சாதகமான நிபந்தனைகளுடன் பில்லியன் டாலர்களை முதலீடாக அளித்து நிர்வாக அமைப்பிற்குள் எளிமையாக நுழைந்து வருகின்றன.

சரி.. ஈரானியத் தாக்குதல் இதில் எங்கு வருகிறது என்கிறீர்களா? வருகிறது.

ஏற்கனவே அமெரிக்க புஷ் இஸ்ரேலுக்கு அளித்த வாக்குறுதியின்படி, ஒரளவு சுயமாகச் சிந்திக்கத் தெரிந்த ஆட்சியாளர்களும், பொருளாதார, இராணுவ பலம் உடைய ஐந்து மத்தியக் கிழக்கு முஸ்லிம் நாடுகளை அளித்தொழிக்கும் பணியில், தற்போது ஈராக் மட்டுமே நிறைவேறியிருக்கிறது. ஏனைய நாடுகளுக்கான செயல்திட்டங்களை புஷ் ஆகஸ்டில் பதவியில் இருந்து இறங்குமுன் நிறைவேற்றியாக வேண்டுமே. புதிய தலைவர்கள் (John Mccain மற்றும் Rudy Guiliani தவிர) யாரும் இஸ்ரேல் சொல்வதை அவ்வளவு பணிவன்புடன் கேட்டுக் கொள்ளப் போவதில்லை என்பதும் இந்த அவசரத்திற்குக் காரணம்.

ஆகஸ்டுக்குள் ஈரானைத்தாக்குவது அமெரிக்காவல் சாத்தியமாகுமா என்பது சந்தேகமே. இதற்கு செனட்டில் ஆதரவு கிடைக்காது. முக்கியமாக, தற்போதைய அமெரிக்கப் பொருளாதாரம் இருக்கும் சூழலில் இதற்கு நிச்சயம் ஆதரவு கிடைக்கப் போவதில்லை. எனவே, தாக்குதல் நிச்சயமானாலும் இது அமெரிக்காவால் நடத்தப் படப் போகாமல் இருப்பதற்கு அதிக சாத்தியம் இருக்கிறது.

ரஷ்ய மற்றும் சீன நாட்டு உதவிகளின் பேரிலும், FBI அறிக்கைகளின் படியும் ஈரானில் அணுகுண்டு தயாரிக்கப் படவில்லை என்பது உறுதியாகியிருக்கிறது. அதே சமயம் இந்த மாதிரியான அறிக்கையை சற்றும் விரும்பாத இஸ்ரேல், FBIக்குள்ளாகவே தனக்கெதிரான கோஷ்டிகள் உருவாகி விட்டதால், இனி அமெரிக்காவை நம்பிப் பிரயோசனம் இல்லை என்று நம்புகிறது. தனது நம்பகமான ஆட்கள் அமெரிக்காவில் உயர் பதவியில் இருக்கும் காலத்திற்குள்ளாகவே இந்தத் தாக்குதலை நடத்திக் காட்ட இஸ்ரேல் விரும்புகிறது. எனவே, இஸ்ரேல் கூடிய சீக்கிரத்தில் ஒரு அணு ஆயுதத் தாக்குதலை ஈரானின் மேல் நடத்தக் கூடும். மீடியாக்களின் கண்களைக் கட்டிவிட்டு, அந்த குண்டு, ஈரானின் அணுகுண்டு ஸ்டாக்கிலிருந்து வெடித்தது என்று பெரும்பான்மை ஆதரவு ஊடகங்களின் மூலம் உலகிற்குப் பறைசாற்றலாம். அல்லது பாகிஸ்தானிலுள்ள அணுகுண்டுகள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு வரும்போது ஈரானில் விபத்தாக வெடித்துவிட்டது என்றும் சொல்லலாம். ஆக, ஒரு பாரியத் தாக்குதலுக்கு ஆயத்தம் நடக்கிறது என்பது மட்டும் நிச்சயம்.

சமீபத்திய மத்தியதரைக்கடல் மற்றும் சூயஸ் கால்வாய் பகுதிகளில் கடலுக்கு அடியில் செல்லும் Sub-Sea Cables "எதிர்பாராத விதமாக" சிதைக்கப்பட்டதன் விளைவாக மத்தியக்கிழக்கு நாடுகள் முதல் மும்பை வரையிலான இன்டர்நெட் சேவைகள் பாதிக்கப்பட்டது. ஆழ்கடலில் இருக்கும் இந்தக் கேபிள்களைச் சரிசெய்ய குறைந்தது மூன்று நாட்களாகும். அப்பகுதியில் போர் நடந்து கொண்டிருந்தால் 10 நாளும் ஆகலாம், ஒரு மாதமும் ஆகலாம். சென்னையிலிருந்து வேறு ஒரு கேபிள் தென்கிழக்காசிய நாடுகளை இணைப்பதால், சென்னை போன்ற தென் மாநிலங்களுக்கு அதிகம் பாதிப்பில்லை என்றாலும், மத்திய கிழக்கு நாடுகளில் இன்டர்நெட் சேவை கடுமையாகப் பாதிக்கப்படும். இந்த நிகழ்வில் முக்கியமாகப் பார்க்கவேண்டியது மூன்று நாடுகள் மட்டும் இதில் பாதிக்கப்படவில்லை. இஸ்ரேல், ஈராக் மற்றும் லெபனான் ஆகிய மூன்று நாடுகள் தான் அவை. அவற்றில் இன்டர்நெட் சேவைகள் வழமையாக இயங்கி வந்தன, இயங்கிக் கொண்டிருக்கின்றன.

உளவு அமைப்புகள் தமது சந்தேகத்தை கொஞ்சம் அதிகப்படுத்தி எச்சரிக்கையாக நிகழ்வுகளைக் கண்காணிக்கத் தொடங்கியிருக்கின்றன. இந்த கேபிள் சிதைப்பு ஒரு முன்னோட்டமாக நடத்திப்பார்க்கப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் ஈராக் போரின் போது, இன்டர் நெட் மூலம் தான் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொடுரமான செயல்கள் எல்லாம் லைவ் ரிப்போர்ட்டாக இணையவலைத்தளங்களின் மூலம் அவ்வப்போது வெளியிடப்பட்டது. அந்த மாதிரி மீண்டும் நிகழக்கூடாது என்பதற்காகத் தான் இந்த இருட்டடிப்பு ஆயத்த முயற்சி நிறைவேற்றப்பட்டது என்பது கணிப்பாகும்.

ஐப்பானில் அணுகுண்டு போட்டு பல லட்சம் மக்களைக் கொன்ற அமெரிக்க அரசை எந்த நீதிமன்றம் தண்டித்தது. ஒரு வேளை ஈரானிய அணுகுண்டுத் தாக்குதல் நிஜமானால், அதே மாதிரிதான் இஸ்ரேலை யாரும் தண்டிக்கப் போவதில்லை. தடியெடுத்தவன் தண்டல்காரன்.