மத்தியக் கிழக்கில் மீண்டும் குழப்பம் - I

மத்தியக் கிழக்கில் மீண்டும் குழப்பம்.

இதைப் பற்றிப் பதிவிடவேண்டும் என்று கை நமநமத்துக்கொண்டே இருந்தாலும் முடிந்தவரை சும்மா இருந்து பார்த்தேன் முடியவில்லை....


இந்தப் பிரச்னையைப் பற்றிய கீழே குறிப்பிட்டிருக்கும் எனது முந்தைய பதிவுகளைப் படித்துவிட்டு தொடர்ந்தீர்களேயானால், பின் வருவதை நீங்கள் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

சதாமின் தூக்கு - முடிவா? ஆரம்பமா?

சவூதி அரசிற்கு அமெரிக்க ஆயுதங்கள்


சமீபத்தில் சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழில் உள்பக்கத்தில் ஒரு பக்கம், நன்கு பயிற்சியளிக்கப்பட்ட மலேசியர்கள் சிரியாவில் பஸார் அல் அசாத் அரசைத் தாக்கி வருகிறார்கள் என்கிற செய்தியும், அதே தாளின் எதிர்ப்பக்கத்தில், ஒபாமா சிரியாவில் போர் தொடுத்து வரும் போராளிகளுக்கு மேலும் நன்கு பயிற்சி அளிக்க கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று பேசியதும் வெளிவந்திருந்தது. அதற்கு முதல் பக்கத்தில், ஈராக்கிற்குள் சிரியாவின் அரசுக்கு எதிராக போர் தொடுக்கும் படையினர் எல்லை தாண்டி வந்து, முக்கிய நகரங்களைப் பிடித்து வருகின்றனர் என்கிற செய்தி. ஈராக்கின் பிரதமருடன் ஜான் கெர்ரி நேரில் சந்தித்து பேசினார் என்பது துணைச் செய்தி. ஈரானின் உதவியை அமெரிக்க நாடப்போவதாக ஊடகங்கள் கிசுகிசுக்கின்றன. இஸ்ரேல் அமெரிக்காவை முறைத்துக் கொண்டிருக்கிறது. சவுதி அரசு தனக்குள் கமுக்கமாகச் சிரித்துக் கொள்கிறது.

என்னதான் நடக்கிறது இங்கு? அமெரிக்காவிற்கு என்னதான் திட்டம்?
 
வாருங்கள் அலசலாம்....

(தொடரும்...)

 




 

 

0 இப் பதிவைப் பற்றிய கருத்துக்கள்: