தமிழ் நாடும் மருத்துவக் கல்வியும்

தமிழ் நாடும் மருத்துவக் கல்வியும்
(அல்லது)
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும் ஜெமினி கணேசனும்.


இந்திய மருத்துவக் கல்லூரிகளின் தோற்றம் வளர்ச்சி பற்றி படிக்க நேர்ந்த பொழுது ஒரு அரிய தகவல் அறிய முடிந்தது.

சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் (ஆப்கானிஸ்தான் முதல் இலங்கை வரையிலான அப்போதைய இந்தியா) முதல் மருத்துவக் கல்லூரி, பிரெஞ்ச் அரசாங்கத்தால், 1823ம் ஆண்டு பாண்டிச்சேரியில் தற்போது (Jawaharlal Institute of Postgraduate Medical Education & Research (JIPMER) ஜிப்மர் என்றழைக்கப்படும் மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.

1820ம் ஆண்டு வங்காளத்தில் ஏற்பட்ட காலரா வியாதிக்கு பெரும்பான்மையான பிரிட்டிஷ் அதிகாரிகள் இறந்து போகவே, மருத்துவக் கல்வியின் தேவையை உண்ர்ந்த பிரிட்டிஷ் அரசு, 1835ம் ஆண்டு கல்கத்தாவில், கல்கத்தா மருத்துவக் கல்லூரியை ஆரம்பித்தது. அதே 1835ம் ஆண்டு சென்னையிலும் மெட்ராஸ் மருத்துக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.

1835 வாக்கில் தென்னிந்தியாவில்தான் இரு மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. ப்ரிட்டிஷ் இந்தியாவின் ஆதிக்கத்திலிருந்த பகுதிகளிலெருந்தெல்லாம், பாண்டிச்சேரியிலும், சென்னையிலும்தான் வந்து படித்துக் கொண்டிருந்தார்கள்.

1907ம் ஆண்டு மெட் ராஸ் மருத்துவக் கல்லூரியின் முதல் இந்திய மாணவி, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ஆவார். அதுவரை இந்தியப் பெண்கள் மருத்துவக்கல்லூரியில் படிக்கவில்லை. ஏன் கல்லூரிப் படிப்பு கூட அப்போது இந்தியாவில் வெகு சில பெண்கள்தான் படித்து முடித்திருந்தனர்.

யாரிந்த முத்துலட்சுமி ரெட்டி?

புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி வந்த நாராயணசாமி ஐயர் மற்றும் சந்திரம்மாவின் மகள். சந்திரம்மா இசை வெள்ளாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர். தேவதாசியாக பட்டம் கட்டப்படும் சாதிகளில் ஒன்று இசை வெள்ளாளர் சாதி. நாராயணசாமி ஐயரின் மனைவி சிறுவயதிலேயே தவறி விட்டதால், சின்ன வீடாக வைத்திருந்தது சந்திரம்மாவை.



சந்திரம்மாவுக்கு இரு குழந்தைகள். முத்துலட்சுமி மற்றும் ராமசாமி. தந்தையைப் போலவே, முத்துலட்சுமிக்கு கல்வியில் அயாராத ஆர்வம். தாயும் தடை போடவில்லை. கல்லூரியில் சேரவேண்டிய காலம் வந்த போது, மன்னர் கல்லூரியின் முதல்வரும் முத்துலட்சுமியின் தந்தையுமான நாராயணசாமி ஐயர் கல்லூரியில் இடம் தர மறுக்கிறார். விஜயரகுனாத தொண்டைமான் மன்னர் காதுக்கு இது செல்ல, முத்துலட்சுமியை கல்லூரியில் சேர்த்துக்கொள்ள மன்னர் ஆணையிடுகிறார். இவ்வாறாக முத்துலட்சுமி கல்லூரிப் படிப்பை முடிக்கிறார். ஆசிரியராக பணியேற்கும்படி தந்தையும், தாயும் வற்புறுத்த, மருத்துவக் கல்லூரியில் படிக்க இலக்கு வைக்கிறார் முத்துலட்சுமி.

பிரிட்டிஷ் மக்களிலேயே முதல் பெண் மருத்துவரான மேரி 1878ல் சென்னை மருத்துவக் கல்லூரியில்தான் பயின்று மருத்துவரானார். ஏனென்றால், லண்டனில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பெண்களைச் சேர்ப்பதில்லை. இதற்காகவே சென்னை வந்து படித்து டாக்டரானார் மேரி. அவரைப் பின்பற்றி 1912ல் இந்தியாவின் முதல் பெண் டாக்டரானார் முத்துலட்சுமி.

தனக்கு சரிசமமான உரிமை தர சம்மதம் பெற்று டாக்டர் சுந்தர ரெட்டியைத் திருமணம் செய்து கொண்டதால், டாக்டர் முத்துலட்சுமி 'ரெட்டி' ஆனார்.

ஜெமினி கணேசனுக்கு என்ன சம்பந்தம்?

டாக்டர் முத்துலட்சுமியின் சகோதரர் ராமசாமியின் மகன் தான் 'ஜெமினி' கணேசன் என்றழைக்கப்படும் கணபதி சுப்ரமணிய சர்மா.

Image Courtesy: www.thebetterindia.com

தலாய் லாமாவின் அந்தர் பல்டி

23  நவம்பர் 2017 அன்று கொல்கொத்தாவில் நடைபெற்ற ஒரு நேர்காணலில், திபேத்தியர்கள் திபேத்திய சுதந்திரப் போராட்டத்தைக் கைவிட்டு விட்டார்கள். அவர்கள் சீனாவுடன் சேர்ந்திருக்கவே விரும்புகிறார்கள். திபேத்தியர்களின் மத உணர்வுகளை மதித்து எங்களை எங்கள் வழியில் வாழவிட்டாலே போதும். திபேத்திற்கான வளர்ச்சித்திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்த சீனா முன்வரவேண்டும் என்று சொல்லி தில்லியின் சவுத் ப்ளாக்கிற்கு ஒரு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார் தலாய் லாமா. 

மக்மோகன் என்பவர் இந்திய வரைபடத்தை பிரிட்டிஷ் ஆட்சியில் வரையும் பொறுப்பை வைத்திருந்தார். சீனா, பாகிஸ்தான், பர்மா ஆகிய பகுதிகளின் எல்லையை கொல்கொத்தாவின் ஒரு அறையிலிருந்து கொண்டு ஒரு கோடு போட்டு தீர்மானித்தார். அதற்கு பெயர் மக்மோகன் எல்லை. அந்த மக்மோகன் எல்லையை சீனா ஏற்க மறுத்து விட்டது. சீனா, திபேத், இந்தியா ஆகிய நாடுகளை அழைத்துப் பேசி அதற்கு தீர்வுகாண 1913 வாக்கில் சிம்லாவில் ஒரு உடன்படிக்கை ஏற்படுத்தப் பட்டது. இதில் சீனா கலந்துகொள்ளாமல் புறக்கணித்தது, அதனால் அந்த உடன்படிக்கையில் சீனா கையெழுத்திடவில்லை. ஆனால், திபேத்தும் இந்தியாவும் கையெழுத்திட்டன. சீனாவைப் பொறுத்தவரை திபேத் மற்றும் தவாங்க் என்றழைக்கப்படும் கிழக்கு அருணாசலப் பிரதேசமும் சீனநாட்டைச் சேர்ந்தது. அந்த முடிவில் அவர்கள் மாறவில்லை.

இப்பொழுது இதில் அதிர்ச்சி என்ன என்று கேட்டால், நீங்கள் 63 வருடங்கள் பின் நோக்கிப் போகவேண்டும். சுதந்திர இந்தியாவில் 1950 வாக்கில் சிறுசிறு மாகாணங்களையெல்லாம் ஒன்றிணைத்து இந்தியாவின் எல்லைகளை வரையறுத்துக் கொண்டிருந்த நேரம். சீனா அந்த எழுச்சியைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தது. தலாய் லாமாவுடன் சீன இராணுவம் 1951ல் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டது. 1954ல் தற்போது கிழக்கு அருணாசல பிரதேசம் என்றழைக்கப்படும் பகுதிக்கு அப்போதைய இந்திய பிராந்தியப் பெயர், வடகிழக்கு பிராந்தியம் (North East Frontier Agency - NEFA).   அந்தப் பகுதியை சீனாவும் உரிமை கொண்டாடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு இந்தியாவில் சேருவதற்கான குழுப் போராட்டங்கள் தொடங்கின. 

 ஆனால் பல குழுக்கள் தொடர்ந்து சீனா அரசிற்கு தலைவலி கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்த குழுவினர் 1959ல் அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வைத் தொடர்புகொண்டு உதவி கேட்க, சி.ஐ.ஏ. அங்குள்ள சிலருக்கு பயிற்சி அளிக்க ஆரம்பித்தது. 1959லேயே கலவரம் முற்ற ஆரம்பித்தது. தலாய் லாமாவைக் கைது செய்ய சீன ராணுவம் முடிவு செய்திருப்பதாக அறிந்த சி.ஐ.ஏ, தலாய் லாமாவை இந்தியாவுக்குள் அனுப்பி அவருக்கு மாதாமாதம் இன்று வரை சம்பளம் அனுப்பிக் கொண்டிருக்கிறது. 

இதைத் தொடர்ந்து 1962ல் அருணாசலப் பிரதேசத்தை இந்தியாவின் யூனியன் பிரதேசமாக அறிவித்தது இந்திய அரசு. ஐ.நா.வில் சீன அரசு முறையாக முறையிட்டது, எனினும் அமெரிக்காவின் உதவியால் அந்த முறையீடு செல்லுபடியாகவில்லை. கசப்பு முற்றி 1962ல் சீன ராணுவம் இந்தியாவுடன் போருக்கு வந்தது, அருணாசலப் பிரதேசம் முழுவதும் அது கைப்பற்றிக் கொண்டது. பல வகையான மிரட்டல்கள், சமாதானங்களுக்குப் பிறகு, 1963ல் தனது ராணுவத்தை மக்மோகன் எல்லைக்கு பழையபடி பின்வாங்கிக் கொண்டது சீனா. பிடித்திருந்த போர்க்கைதிகளும் 1963ல் விடுவிக்கப்பட்டார்கள்.

தப்பித்து வந்த தலாய் லாமாவிற்கு தர்மசாலா என்ற இடத்தில் வசதிகள் செய்து கொடுத்து, புலம்பெயர் திபேத்திய ஆட்சி அதிகாரம் செலுத்திக் கொண்டிருந்தார். இந்த கால கட்டத்தில் 1987ல்  இந்திய யூனியன் பிரதேச அந்தஸ்திலிருந்து மானில அந்தஸ்திற்கு அருணாசல பிரதேசத்தை உயர்த்தியது. தேர்தலும் நடந்தது. 

இவ்வளவிற்கும் பிறகும் சீனா தவாங்க் எனப்படும் கிழக்கு அருணாசலப் பிரதேசத்தை தனது பகுதியாகவே கருதிக்கொண்டு, அங்கிருந்து சீனாவிற்குப் போக விசா கேட்டவர்களுக்கு, உங்களுக்கு விசா தேவையில்லை. சொந்த நாட்டிற்கு போக எதற்கு விசா என்று திருப்பிக் கேள்வி கேட்டது. இன்றைக்கும் கிழக்கு அருணாசல பிரதேச மக்கள் சீனாவிற்கு விசா இல்லாமல் செல்கிறார்கள்.

இந்தச் சூழ்னிலையில்தான், தலாய் லாமா இப்படி ஒரு அறிக்கையைக் கொடுக்கிறார். முதல் பத்தியை இப்பொழுது மறுபடியும் படியுங்கள். அதிர்ச்சி என்னவென்று புரிந்திருக்கும்.








பொருள் மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) - சில விளக்கங்கள்.

ஜி.எஸ்.டி.  - சில விளக்கங்கள்.

ஜி.எஸ்.டி மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் அதன் ஆட்சியின் போது இதே மசோதாவை இதே பாராளுமன்றத்தில் முன்வைத்த போது மிளகாயைக் கடித்தது போல எதிர்ப்பு தெரிவித்த அதே பா.ஜ.க, இப்போது காங்கிரஸைக் கெஞ்சிக் கூத்தாடி ஒருவழியாக நிறைவேற்றியிருக்கிறது. 

சரி, முன்பு டி.என்.ஜி.எஸ்.டி இருந்தது, அதற்குப் பிறகு வாட் வந்தது. இப்போது வேறு ரூபத்தில் ஜி.எஸ்.டி வருகிறது. அதுவும் மத்திய ஜி.எஸ்.டி, மானில ஜி.எஸ்.டி, மற்றும் இன்டர்ஸ்டேட்/இம்போர்ட் ஜி.எஸ்.டி என்று மூன்று வகையான ஜி.எஸ்.டி.க்கள் இருக்கின்றன.

முதலில் ஜி.எஸ்.டி என்றால் என்ன?

குட்ஸ் அன்ட் சர்வீஸஸ் டாக்ஸ், அதாவது பொருள் மற்றும் சேவை வரி. ஒவ்வொரு விற்கும் தளத்திலும் வரி விதிக்கப்படும். அதாவது ஒவ்வொரு கை மாறும்போதும் வரி விதிக்கப்பட்டு, பயனாளியின் கையில் சேரும்போது அனைத்து வரிகளும் அவரின் தலையில் விழும். ஆனால், இடையில் வியாபாரிகள் அந்த வரியை ஏமாற்றி அமுக்கிவிடாமல், அரசு கஜானாவுக்கு முறையாகக் கொண்டுபோய்ச் சேர்க்கும் வழிமுறைதான் ஜி.எஸ்.டி.

மானில ஜி.எஸ்.டி என்றால் என்ன?

எஸ்.ஜி.எஸ்.டி என்றழைக்கப்படும் மானில பொருள் மற்றும் சேவை வரியானது ஒரு குறிப்பிட்ட சதவீதத்தில் (இன்னும் நிர்ணயிக்கப் படவில்லை) அமுல் படுத்தப்படும். ஒவ்வொரு கை மாறும் போதும் இது அந்த விற்பனையில் விதிக்கப்பட்டு பொருளின் மீது விலை ஏறும். ஒவ்வொரு மாதமும் இதைப் பற்றிய விவரங்களை இணையம் வழியே தெரிவித்தாக வேண்டும். அப்படி வசூலிக்கப்பட்ட தொகையை அடுத்த மாதம் ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் மானில அரசுக்குக் கட்டியாக வேண்டும். 

மத்திய ஜி.எஸ்.டி. என்றால் என்ன?

மேற்சொன்ன மானில பொருள் மற்றும் சேவை வரி மாதிரியே தான் இதுவும். ஆனால், இது வேறு ஹெட்-டில் வங்கியில் கட்டுவீர்கள். ஸ்டேட் ஜி.எஸ்.டி என்று வசூலிக்கும்போது சென்ட்ரல் ஜி.எஸ்.டி ஏன் வசூலிக்க வேண்டும். அது தனிக்கதை, பிறகு சொல்கிறேன். நீங்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஒவ்வொரு வியாபாரியும், இரு ஜி.எஸ்.டி.க்களும் வசூலித்தாக வேண்டும். இரண்டு வரிகளையும் மாதாமாதம் கட்டியாக வேண்டும். 

இன்டர்ஸ்டேட் ஜி.எஸ்.டி என்றால் என்ன?

சி.எஸ்.டி என்று முன்பு ஒரு வரி இருந்தது அதுதான் இப்போது ஐ.ஜி.எஸ்.டி என்றழைக்கப்படும் இன்டர்ஸ்டேட் ஜி.எஸ்.டி. இதன்படி இதற்கென ஒரு தனி வரிவிதிப்பு இருக்கும். அது மானில மற்றும் மத்திய ஜி.எஸ்.டி.க்களின் சேர்ந்த ஒரு விகிதமாக இருக்கும். ஒரு மானிலத்திலிருந்து மற்றொரு மானிலத்திலுள்ள நிறுவனங்களுக்கு விற்கும் போதும், இறக்குமதி செய்யும்போதும் இந்த வரியை விதிக்க வேண்டியிருக்கும்.

ஒவ்வொரு நிலையிலும் வரி விதிக்கப்படும்போது விலை கூடுமே, அது பயனாளியின் தலையில் தானே விடியும். இப்போதும் இதே முறையில் தானே வரி கட்டுகிறோம். என்னதான் வித்தியாசம் என்று உங்களுக்குத் தோன்றுகிறதா?

விளங்கிக்கொள்ளலாம், வாருங்கள்.

இந்தப் படங்களைப் பாருங்கள்.


இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால், மதிப்புக் கூட்டும் வரியை மட்டும்தான் நீங்கள் கட்டுவீர்கள். மீதமுள்ள வரி, உங்களுக்குத்திருப்பித் தரப்படும், அல்லது, நீங்கள் கட்ட வேண்டியதில்லை.

முதல் படத்தில் சென்ட்ரல் ஜி.எஸ்.டி மற்றும் ஸ்டேட் ஜி.எஸ்.டி இரண்டுமே வசூலிக்கப்பட்டு அரசிடம் கட்டப்பட்டு விடுகிறது. இரண்டாம் நிலை விற்பனையில், மதிப்பு ஏற்றப்பட்டு (அதாவது லாபம் மற்றும் இதர செலவினங்கள் சேர்த்து) அதே பொருள் கூடுதலாக மூன்றாம் வியாபாரிக்கு விற்கப்படுகிறது. அவரும் அவர் ஏற்கனவே கட்டிய தொகையைக் கழித்துக் கொண்டு மீதத்தைத்தான் கட்டுகிறார். கடைசியில், பயனாளி மூன்று நிலையிலும் ஏற்றப்பட்ட விலைக்கான வரியையும் சேர்த்து பொருளின் விலையாகக் கொடுத்து வாங்குகிறார்.

இதே முறைதான் இன்டர் ஸ்டேட் ஜி.எஸ்.டியிலும்.

சரி, இப்பொழுது புரிந்திருக்கும் உங்களுக்கு.

ஆனால் அது மட்டுமல்ல. அரசு எப்படி கவனமாக வியாபாரி கவனமாக ஏமாற்றிவிடாமல் இருக்கப் போகிறது அல்லது இருக்க முயற்சி செய்கிறது என்பதைப் பார்க்கலாம்.

1. புதிதாக பதிவு செய்பவர்கள் பான் நம்பரைக் கட்டாயம் கொடுத்தாக வேண்டும்.
2.   இந்தியா முழுக்க ஒரே நம்பர் தான். அனைத்து வியாபாரிகளுக்கும் இந்த எண் ஆன்லைன் மூலமாகத் தரப்படும். எல்லா ஜி.எஸ்.டி.களுக்கும் அதே நம்பர்தான். பணம் கட்டும்போது மட்டும் வேறு வேறு ஹெட்களில் கட்டுவீர்கள்.
3. ஆன்லைனில் இந்த நம்பர் வாங்குவது எளிது. ஆதார், பான் கார்டு, மட்டும் இருந்தால் போதும், மூன்று நாட்களில் எந்த வெரிபிகேஷனும் இல்லாமல், உங்கள் பதிவு எண் வழங்கப்படும்.
4. மொத்தமே 4 பாரங்கள் தான் நிரப்ப வேண்டியிருக்கும். ஒன்று விற்பனைக்காக வாங்கிய பொருள்களுக்கு, ஒன்று விற்ற பொருள்களுக்கானது, ஒன்று மாத விற்பனை விவரம், ஒன்று வருட விற்பனை விவரம்.
5. சிறு/குறு வியாபாரிகளுக்கு காலாண்டு மற்றும் ஆண்டு விற்பனை பாரங்கள் மட்டும் தான்.
6. அதனினும் சிறிய வியாபாரிகளுக்கு குறிப்பிட்ட வருட விற்பனைத் தொகை இருந்தால் எந்த விதமான ரிடர்னும் தாக்கல் செய்ய வேண்டியதில்லை. அதே சமயத்தில் வரியும் வசூலிக்க முடியாது.

இதில் அரசு வியாபாரிகளால் ஏமாற்ற முடியாது என்று நினைக்கிறது. உண்மைதான். ஒவ்வொரு வியாபாரப் பதிவு எண்ணும் ஒரு பான் எண்ணுடன் தொடர்பு படுத்தப் படுகிறது. ஒவ்வொரு பான் எண்ணும் இனி ஆதார் எண்ணுடன் தொடர்பு படுத்தப்படும். வங்கி எண்ணும் இந்த இரண்டும் இன்றி இனி பதிவு செய்ய முடியாது. ஆக கம்ப்யூட்டர் வழியாக ஒரு பான் எண்ணையோ, ஆதார் எண்ணையோ உள்ளிட்டால், உங்கள் மொத்த ஜாதகமும் வந்து விடும். ஆனால் அதற்கு குறைந்தது அடுத்த ஐந்தாண்டுகளாவது ஆகும்.

மத்தியக் கிழக்கில் மீண்டும் குழப்பம் - I

மத்தியக் கிழக்கில் மீண்டும் குழப்பம்.

இதைப் பற்றிப் பதிவிடவேண்டும் என்று கை நமநமத்துக்கொண்டே இருந்தாலும் முடிந்தவரை சும்மா இருந்து பார்த்தேன் முடியவில்லை....


இந்தப் பிரச்னையைப் பற்றிய கீழே குறிப்பிட்டிருக்கும் எனது முந்தைய பதிவுகளைப் படித்துவிட்டு தொடர்ந்தீர்களேயானால், பின் வருவதை நீங்கள் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

சதாமின் தூக்கு - முடிவா? ஆரம்பமா?

சவூதி அரசிற்கு அமெரிக்க ஆயுதங்கள்


சமீபத்தில் சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழில் உள்பக்கத்தில் ஒரு பக்கம், நன்கு பயிற்சியளிக்கப்பட்ட மலேசியர்கள் சிரியாவில் பஸார் அல் அசாத் அரசைத் தாக்கி வருகிறார்கள் என்கிற செய்தியும், அதே தாளின் எதிர்ப்பக்கத்தில், ஒபாமா சிரியாவில் போர் தொடுத்து வரும் போராளிகளுக்கு மேலும் நன்கு பயிற்சி அளிக்க கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று பேசியதும் வெளிவந்திருந்தது. அதற்கு முதல் பக்கத்தில், ஈராக்கிற்குள் சிரியாவின் அரசுக்கு எதிராக போர் தொடுக்கும் படையினர் எல்லை தாண்டி வந்து, முக்கிய நகரங்களைப் பிடித்து வருகின்றனர் என்கிற செய்தி. ஈராக்கின் பிரதமருடன் ஜான் கெர்ரி நேரில் சந்தித்து பேசினார் என்பது துணைச் செய்தி. ஈரானின் உதவியை அமெரிக்க நாடப்போவதாக ஊடகங்கள் கிசுகிசுக்கின்றன. இஸ்ரேல் அமெரிக்காவை முறைத்துக் கொண்டிருக்கிறது. சவுதி அரசு தனக்குள் கமுக்கமாகச் சிரித்துக் கொள்கிறது.

என்னதான் நடக்கிறது இங்கு? அமெரிக்காவிற்கு என்னதான் திட்டம்?
 
வாருங்கள் அலசலாம்....

(தொடரும்...)

 




 

 

விளையாட்டுச் சண்டை: ப்ளே ஸ்டேஷனும் எக்ஸ்பாக்ஸ் ஒன்னும்

வெகு நாட்களாக எதிர்பார்த்திருந்த சோனி ப்ளே ஸ்டேஷன் 4 (PS4) விற்பனைக்கு வந்து விட்டது. கடைகளின் வெளியே முதல் நாள் இரவிலிருந்து காத்துக்கிடந்த கணினி விளையாட்டுப் பிரியர்கள் 24 மணி நேரத்திற்குள் 10 லட்சம் பெட்டிகளை வாங்கிச் சென்றிருக்கின்றனர்.

நவம்பர் 22 இன்று வெளிவந்து விட்ட எக்ஸ்பாக்ஸ் ஒன் (XBox One) கிட்டத்தட்ட இதே அளவு எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. எக்ஸ்பாக்ஸ் ஒன் தற்போது முந்தைய எக்ஸ்பாக்ஸ் 360ஐ விட அதிக அளவு வசதிகளுடன் வரவிருக்கிறது. ஆனால் 10 லட்சம் பெட்டிகளைத் தாண்டி விற்று சாதனை படைக்குமா என்று நாளை தான் தெரியும்.

வழக்கம்போல அஜீத்-விஜய் ரசிக மோதல்கள் போலவே, இணையத்திலும் பிஎஸ்4 மற்றும் எக்ஸ்பாக்ஸ் ஒன் ரசிகர்கள் அடித்துக் கொள்கிறார்கள். வழக்கமான மைக்ரோசாஃப்டின் கண்டிப்பான கொள்கைகளால் வெறுத்துப்போன ரசிகர்கள் பிஎஸ்4ஐ தலைக்குமேல் தூக்கி வைத்து ஆடிக்கொண்டிருக்கிறார்கள். இரண்டு கன்சோல்களையும் தொழில் நுட்பரீதியாக மற்றும் அதில் இருக்கும் வசதிகளைக் கருத்தில் கொண்டு ஆராய்ந்தால், கிட்டத்தட்ட இரண்டும் விலை உட்பட, ஒன்றுக்கொன்று சோடை போகவில்லை. அப்படியென்றால் எதை வாங்குவது, எதை விடுவது? அதைப் பற்றித்தான் பார்க்கப்போகிறோம்.

பொழுதுபோக்கு அம்சம்:

ஹைடெஃபினிஷனில் கேம் விளையாடிக்கொண்டே, உடனே டிவியை இரண்டாவது திரையில் பார்த்தால் எப்படி இருக்கும்? கேபிள் டிவியை கேம் கன்சோல் வழியாகப் பார்த்துக்கொண்டு, ரிமோட் இல்லாமல் குரல் வழியாக சேனல் மாற்றினால் எப்படி இருக்கும்? (இது சாம்சங்கின் இன்டர்னெட் டிவிகளில் சாத்தியம் தான்.. ஆனால் ஒரு கேம் கன்சோலுக்கு கொடுக்கும் விலையை அதற்காக கூடுதலாகக் கொடுக்க வேண்டியிருக்குமே). இது எல்லாம் எக்ஸ்பாக்ஸில் உள்ளது, ஆனால் பிஎஸ்4ல் இல்லை. மற்றபடி, நெட்ஃப்ளிக்ஸ் போன்ற வீடியோ தளங்கள் இரண்டிலும் உள்ளன. மிக முக்கியமாக எக்ஸ்பாக்ஸில் உள்ள ப்ளூரே டிவிடி ப்ளேயர், பிஎஸ்4ல் இல்லை.

விளையாட்டுக்களைப் பகிர்ந்து கொள்ளுதல்:

பிஎஸ் வகையறாக்களில் ஒரு விளையாட்டு வட்டை ஒரு முறை வாங்கினால், அதை நண்பரிடம் கொடுக்க முடியும், விலைக்கு விற்க முடியும். யார் வேண்டுமானாலும் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் எக்ஸ்பாக்ஸ்360 வரை அந்த மாதிரி செய்ய முடியாது. ஏனென்றால், அது எக்ஸ்பாக்ஸ் கன்சோலுடன் பதிவு செய்யப்படுகிறது, அந்த விளையாட்டு வட்டை ஓசி வாங்கிகூட வேறு எந்தக் கன்சோலிலும் பயன்படுத்த முடியாது. ஒரு முறை ஒருவர் வாங்கிய விளையாட்டு வட்டை வேறு ஒருவர் பயன்படுத்தவே முடியாது.  இது மைக்ரோசாஃப்டின் மீதான முக்கியமான குற்றச்சாட்டு. ஆனால், எக்ஸ்பாக்ஸ் ஒன் முதல் இந்தத் தடை நீக்கப்படுகிறது. யார் வேண்டுமானாலும் பயன்படுத்தப்பட்ட வட்டுக்களை வாங்கிக் கொள்ளலாம். விற்கலாம். எனவே தற்போது பிஎஸ்4 அதை ஒரு முக்கியமான வித்தியாசமாக சொல்லிக்கொள்ளமுடியாது. 

கேமரா:

பிஎஸ்4 கேமரா தனியாக வாங்கிக்கொள்ளவேண்டும். கேமராவும் சேர்த்து வாங்கினால் அதன் விலை 500 டாலருக்கும் மேல் போய் விடுகிறது. எக்ஸ்பாக்ஸ் ஒன்னில் கேமராவும் 500 ஜிபியும் சேர்த்து 499 டாலர்கள் தான். கேமரா இல்லாமல் 500 ஜிபி பிஎஸ்4 399 டாலருக்கு விற்கிறது.

இம்முறை கினக்ட் (Kinect) கேமரா 1080p துல்லியத்துடனும் ஒன்றுக்கு மேற்பட்ட மைக்-குகளுடனும் வருகிறது. மேம்பட்ட திறனுடன் வரும் கேமராவால் உங்களின் மிகச்சிறிய அசைவைக் கூட துல்லியமாகக் கண்டறிய முடிகிறது. மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட மைக்குகள் இருப்பதால், உங்களின் குரலைத் துல்லியமாக கணிக்க முடிகிறது. இது பிஎஸ்4ல் ஒரு மைனஸ் என்றுதான் சொல்ல வேண்டும்.

விளையாட்டுக்களைப் பதிவு செய்தல்:

இரண்டு கன்சோல்களிலும் பதிவு (Record) செய்யும் வசதிகள் இருந்தாலும், அதைப் பகிர்ந்து கொள்ளும் (Sharing) வசதிகள் இருந்தாலும், எக்ஸ்பாக்ஸில் கூடுதல் நேரம் பதிவு செய்ய முடிவதும். அதை எடிட் செய்து பதிவேற்றம் செய்யும் வசதியும் இருப்பது சிறப்பு. இந்த எடிட்டிங் வசதி, பிஎஸ்4ல் இல்லை, மற்றும் குறைந்த நேரம் மட்டுமே பதிவு செய்ய இயலுகிறது.

உட்கட்டமைப்பு:

இரண்டு கன்சோல்களும் ஒரே மாதிரியான ப்ராஸசர்களைப் (8 Core Processor ) பயன்படுத்தினாலும், மெமரியின் அளவும் (8GB RAM ) ஒரே அளவில் இருந்தாலும், மெமரியின் வேகம் பிஎஸ்4ல் அதிகம். அதனால், விளையாட்டுக்களைப் பொறுத்தவரையில் எக்ஸ்பாக்ஸ் 720p அளவு துல்லியத்தில் மட்டுமே சிறப்பாக வேலை செய்யமுடிகையில், பிஎஸ்4 1080p அளவு துல்லியத்தில் கண்ணுக்குக் குளிர்ச்சியாகப் பார்க்கக்கிடைப்பது, நிச்சயமான ஒரு வித்தியாசம். மைக்ரோசாஃப்ட் இந்த விஷயத்தில் கோட்டை விட்டு விட்டது.

மற்ற விஷயங்கள்:

# ஸ்கைப் வசதி பிஎஸ்4ல் இல்லை. எக்ஸ்பாக்ஸ் ஒன்னில் 1080p வசதியுடன் ஒரே சமயத்தில் மூன்று பேருடன் பேச முடியும்.

# HDMI Pass-through டிவி வசதி பிஎஸ்4ல் இல்லை. அதுவும் குரலால் கட்டுப்படுத்தக்கூடிய வசதி எக்ஸ்பாக்ஸ் ஒன்னில் வரப்பிரசாதம்.

# காட்சித் துல்லியம் பிஎஸ்4ல் மிக நன்றாக இருக்கிறது.

# ப்ளூ-ரே விடியோ ப்ளேயர் இருப்பதால்,  எக்ஸ்பாக்ஸ் டிவிடி ப்ளேயராகவும் பயன்படுத்த முடியும். பிஎஸ்4ல் வெறும் விளையாட்டுக்கள் மட்டும் தான் விளையாட முடியும்.

# கூடுதல் வசதிகள் பெறவேண்டி வருடத்திற்கு இரண்டு கன்சோல்களிலும் கிட்டத்தட்ட ஒரே மதிப்பிலான சந்தா கட்டவேண்டியிருக்கும்.

# இனி பிஎஸ்4 போலவே எக்ஸ்பாக்ஸ் ஒன்னிலும் தொடர்ந்து இணையத்தில் இருந்து விளையாட வேண்டிய அவசியமில்லை. ஒருமுறை உங்கள் அக்கவுண்டை பதிவு செய்ய இணையத்தில் தொடர்பு வைத்தால் போதுமானது. எனவே இப்போது இந்த வித்தியாசமும் இல்லை.

# விலை வித்தியாசமும் இல்லை (கேமராவையும் சேர்த்தால்).

மொத்தத்தில் பிஎஸ்4ல் விளையாட்டுக்களை மிகத் துல்லியாமான காட்சிகளுடன் அதிவேகமாக விளையாட முடியும். எக்ஸ்பாக்ஸ் ஒன்னில் விளையாட்டையும் தாண்டி அதை குடும்பத்தினருடன் களிக்கக் கூடிய ஒரு பொழுதுபோக்கு அம்சமாக பலவகையிலும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இரண்டுமே இந்தியாவிற்குள் விற்கப்பட இன்னும் பல மாதங்களாகும் என்பது தான் கொஞ்சம் வருத்தமாயிருக்கிறது.

அமெரிக்க ஆயுதக்கப்பலும் சமீர் ஃபரஜல்லாவும்

சமீபத்தில் தூத்துக்குடிக்கருகில் சிக்கிய அமெரிக்க ஆயுதக்கப்பலைப் பற்றி ஆராய முற்பட்டபோது கிடைத்த தகவல்கள் சந்தேகங்களை அதிகரிக்கின்றன.

சமீர் பரஜல்லா (Sameer Farajallah) என்கிற புலம்பெயர்ந்த பாலஸ்தீனியர், சார்ஜாவில் கட்டிட பொருட்கள் வியாபாரம் நடத்தி பிழைப்பு நடத்தி வந்தார். ஐக்கிய அரபுக் குடியரசில் பாலஸ்தீனியர்களுக்கு தனிச் சலுகை உண்டு. அதைப் பயன்படுத்தி தன்னை வளர்த்துக்கொண்ட சமீருக்கு, தன் பொருளாதர வசதியை மேம்படுத்த பல்வேறு வகையிலும் முயன்று வந்தார். சார்ஜா ஆயுத வியாபாரிகளுக்கு ஒரு வகையில் வர்த்தகம் நடத்த ஏதுவாக தனது வர்த்தகக் கொள்கையை வைத்திருந்தது. 
 
தனக்கு பரிச்சயமான சில ஆயுத வர்த்தகர்களுடனான தொடர்பில்,  ஈராக்கில் நடந்த போரில் இருக்கும் மறைமுக ராணுவ வர்த்தகங்களால் பயன்பெற முடிவு செய்து, ஈராக்கின் மறு நிர்மாணம் என்ற பெயரில் கூட்டம் நடத்த, அமெரிக்காவில்  நியூ ஃபீல்ட்ஸ் என்று ஒரு கம்பெனி ஆரம்பித்தார். அக்கம்பெனியில் அவர் ஒருவர் மட்டும் தான் டைரக்டர் என்பது குறிப்பிடத்தக்கது. ஈராக்கின் முக்கிய ராணுவ அதிகாரிகளுடன் அமெரிக்க நிறுவனங்கள், அரை மணி நேரம் சந்தித்து உரையாட 10,000 டாலர் வசூலித்த சமீரால், விசா பிரச்னைகளால் ஈராக்கிய அதிகாரிகளைக் கொண்டு வர முடியவில்லை. ஆனால் பணமும் திருப்பித் தரவில்லை. அமெரிக்க ராணுவ அதிகாரிகள் ஆசியுடன் நடந்த இந்த மறு புணரமைப்புக் கண்காட்சியில் வந்து ஏமாந்து போன அமெரிக்கர்கள் தான் அதிகம். ஆனாலும் தளரவில்லை, சமீர்.

பிறகு இதே நாடகம் லிபியாவிலும் மறு புணரமைப்பு என்ற பெயரில் நடந்தது.

இதில் எல்லாம் சரியான காசு பெயராமல் சலித்துப் போன சமீருக்கு வேறு வகையான யோசனை சொல்லப்பட்டது. 2010ல் அட்வான்ஃபோர்ட் என்கிற கடல் கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாப்பு கொடுக்கும் சேவை தரும் நிறுவனம் ஒன்றை அமெரிக்காவில் ஒஹையோ மாகாணத்தில் ஆரம்பித்தார்.

கப்பல்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டன. ஐரோப்பாவின் ஏழ்மையான நாடுகளின் கடற்படை வீரர்களைக் குறிவைத்து வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தினார். எஸ்டோனியாவில் மாதம் 2000 ஈரோ தருவதாக வாக்கு கொடுத்தவுடன் 200 பேர் உடனடியாக கடற்படையிலிருந்து விலகி வேலைக்கு சேர்ந்தார்கள். எஸ்டோனியக் கடற்படை, ஆட்கள் பற்றாக்குறையால் தடுமாற ஆரம்பித்து விட்டது என்றால் பாருங்களேன்.

ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 1000 ஈரோ வீதம் பாதுகாப்பு தரப்படும் கப்பல்களிடமிருந்து வசூலித்து விடுவார். அப்படியென்றால், 200 பேருக்கு லாபமென்ன என்று கணித்துக் கொள்ளுங்கள்.

இந்த கடற்படை வீரர்கள் பயன்படுத்த நவீன ஆயுதங்கள் வேண்டுமே... அதைப் பெறுவதில் முறையான வழிமுறைகளை இந்த நிறுவனம் கையாளவில்லை. ஏனென்றால் அதற்கான ஆலோசனை சொல்ல சரியான ஆட்கள் இல்லை அவரிடம். ஒரு முறை, அமெரிக்க மாகாணமொன்றில் தனிப் பயன்பாட்டுக்கு என்று மொத்தமாக ஆயுதம் வாங்கி கப்பலுக்கு அனுப்பி விட்டனர். தாமதமாக மோப்பம் பிடித்த உளவு அமைப்புகள், விவரம் கேட்க, சமீரின் மகன் தான் வாங்கியதாகக் கூறி, ஜெயிலுக்குப் போனார். இரண்டரை வருடங்கள் கம்பெனி செயல்பட தடை விதிக்கப்பட்டு, கடந்த ஜூன் மாதம் தான் மீண்டும் அமெரிக்காவில் அக்கம்பெனி செயல்படத் தொடங்கியது. இதற்கிடையில் தொடர்ந்து செயல்படும் பொருட்டு, தனது கம்பெனியின் தலைமைக் கேந்திரத்தை லண்டனுக்கு மாற்றிவிட்டு தொடர்ந்து தனது தொழிலைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.

இம்முறை புத்திசாலித்தனமாக கேப்டன் வில்லியம் வாட்சன் என்பவரை தனது கம்பெனியின் தலைமைப் பொறுப்பில் நியமித்தார், சமீர். இது ஒரு அமெரிக்கக் கம்பெனி என்கிற தோற்றத்தை தந்தது.

அந்த எஸ்டோனிய படைவீரர்களுக்கும் சரியாக சம்பளம் கொடுக்க வில்லை. ஏன், வேலை செய்வதற்கான ஒப்பந்தம் கூட வழங்கப்பட வில்லை. இதனால், நிறையப் பேர் விலகி விட்டனர். அதனாலென்ன,  ரோமானியா, உக்ரைன், என ஏழை நாடுகள் நிறைய இருக்கின்றனவே.

பாருங்கள், இம்முறை எஸ்டோனியர்களும், உக்ரேனியர்களும், இந்தியர்களும் அதிகமான எண்ணிக்கையில் இந்தக் கப்பலில் இருக்கிறார்கள்.

அதெல்லாம் சரி, இந்தக் கப்பல் கடல் கொள்ளையர்கள் ஒழிக்கப்பட்டு விட்ட வங்காள விரிகுடாவில் என்ன செய்கிறது?

இலங்கையிலிருந்து ஆப்ரிக்கா நாடுகளுக்கு செல்லும் பல கப்பல்களுக்கு இந்தக் கம்பெனி இதற்கு முன் பாதுகாப்பு கொடுத்திருக்கிறது. இம்முறை யாருக்கு பாதுகாப்பு கொடுக்க வந்தார்கள் என்கிற கேள்வியும், இந்தக் கப்பல் ஆயுதங்கள் கடத்தி செல்லும் வர்த்தகத்தில் ஈடுபடுகிறதா என்கிற சந்தேகமும் எழாமல் இல்லை. பாகிஸ்தானிய தீவிரவாத அமைப்புகளின் நடமாட்டம் சமீபகாலமாக இலங்கையில் அதிகரித்திருப்பதும், இந்தக் கப்பலின் நடமாட்டமும், இந்தப் பிரச்னையை தீர அலச வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது.

அதற்கான விடையை, ரா அமைப்பு ஒரு வேளை கண்டுபிடிக்கக் கூடும்.
 
Reference:
1.  http://news.err.ee/6082c763-d9b3-4458-abce-5dc727697cb1
2. http://www.papt.org.ph/news.aspx?id=...d=115&paging=1
3. https://www.duedil.com/director/915541851/samir-farajallah

Strauss-Kahn Trap

IMF Chief Strauss-Kahn has been arrested and denied bail.

Strauss-Kahn is not an ordinary personality. Kahn is possibly an presidential contestant for French Polls next year. His rating is good compared to the Sarkozy's declining rating. So, what's the trap?

A maid has complained to the police about attempted rape and forceful obscene acts by Strauss-Kahn in a upmarket Sofitel Hotel room. He was arrested inside a plane , just before minutes to fly out. It's a huge debacle to French People's hope in change in Presidency and IMF.

Was the accusation real? We yet to know, since the case is under investigation.

But there are some interesting background information and possible beneficiaries. Let's look into that.

Multi-Currency and US:

Strauss-Kahn, the veteran supporter of alternative Currency in the world, had widely supported the implementation and expansion of Euro Currency, in place of Dollar. After taking the helm of IMF, he has started talking about SDR (Special Drawing Rights), which is equivalent of US Treasury Bonds, but comprises a basket of Currencies, i.e., Euro, Yuan, Yen.

Just barely few days ago before his arrest, Kahn has called for new World Currency (Source: http://www.telegraph.co.uk/finance/currency/8316834/International-Monetary-Fund-director-Dominique-Strauss-Kahn-calls-for-new-world-currency.html). His idea is that this new Currency will gradually replace US Dollar or substitute to certain extent. Instead of single currency (USD or Euro), he has mooted for a basket of currencies, and introducing SDRs in place of US Treasury Bonds to improve the confidence of world community to invest.

We need to look back, for the same reason of voicing out replacing US dollar with Euro for OPEC Trade, caused Saddam Hussein his life and hundreds of thousands of ordinary iraqis' lives. There were two wars have been waged and the country was devastated. There were three OPEC members voicing for replacement of US Dollar in OPEC Trading, (1) IRAQ (2) LIBYA (3) VENEZUELA. Iraq has gone, Libya has been just looked after and ongoing, and Venezuela is on the anvil.

In the meantime, BRIC countries (Brazil, Russia, India, China and South Africa) are busy discussing replacing US dollar as a Transaction currency, atleast in the trade between these 4 countries and signed an in-principle agreement between them to use their own currencies.

China holds $2,85 trillion US treasury bonds, and keep disposing them by investing in high value US companies and Oil Resources, instead of using it for importing goods for the country. China was scary about keeping so much valued treasury bonds in declining currency, and it moots to bring in alternative through IMF.

Now, Strauss-Kahn is accused, arrested and under investigation, and the other Members of IMF will be very scary to talk about replacing US Currency, ever. Since IMF HQ is in US, the Members of IMF has to go to US somehow. Another Scare tactic ?

Sarkozy and PAN-AFRICAN Policy

Sarkozy is intend to stand for Presidential Elections again, which is due next year. Sarkozy's recent acts have brought him infame, and losing his rating, whereas Strauss-Kahn has emerged as a strong contender for the Presidential Election in France.

At the same time, US is shifting its sight to African Continent, which have been under utilized in terms of Human Resources and Natural Resources. China has already made inroad into African Mineral wealth, and has acquired lot of such resources silently. US is moving its focus from Afghanistan and Al-Qaeda to Africa. They have to move away from Afghan/Pak, and it's no longer purposeful, once OBL was hunted down. US will take extreme measures to convince India to take over and look after those non-state actors.

The recent military level actions are lead by French Military in alliance with US Forces in African Continent. Ivory Coast democracy restoration is predominantly done by French Forces. Air Raids in Libya is predominantly carried out by French and US forces under NATO.

Sarkozy and US are the two main beneficiaries by bringing Strauss-Kahn under severe duress and destroying his public image.

You and I don't have difference of opinion in bringing someone under justice for wrongdoing, but it is a bad timing for Strauss-Kahn, as he was in the wrong place, at a wrong time.

பெட்ரோல் விலையின் பின்னணி மர்மங்கள் / 3

1 லிட்டர் கச்சா எண்ணெயிலிருந்து 1 லிட்டர் பெட்ரோல் கிடைத்து விடுவதில்லை. ஏறக்குறை ய 46 சதவீதம் பெட்ரோலாகக் கிடைக்கிறது. சுத்திகரிக்கும் போது கி்டைக்கும் ஏனைய பொருட்களும், அதன் பகுப்பு விகிதாச்சாரமும் பின் வருமாறு

கச்சா எண் ணெ ய் அளவு (ஒரு பீப்பாய்) 159 லிட்டர்

சுத்திகரிக்கப்பட்டபின் அதன் அளவு 169 லிட்டர் (ஆச்சரியமாக இல்லை ?)

Petrol - 72.5 litres

Diesel - 35 litres

Jet Fuel (Kerosene) - 14.5 litres

LPG - 6.5 litres

Heavy Fuel Oil - 6.6 litres

Heating Oil - 6.6 litres

Other products - 27.5 litres


10 டாலர் விலையேற்றம் எப்படி 2.85 ருபாய் விலையேற்றத்திற்கு எப்படி காரணமாகிறது என்பது இப்போது புரிந்திருக்கும். புரியவில்லையெனில், இதோ

10 டாலர் = 450 ருபாய் (உத்தேசமாக..)
46 சதம் பெ ட் ரோல் = 450x.46 = 207 ருபாய்
72.5 லிட்டர் = 207 ருபாய்
1 லிட்டர் பெ ட் ரோல் = 2.85 ருபாய் (விலை வித்தியாசம்)

எனவே ஒவ் வொரு பத்து டாலர் விலையேற்றத்திற்கும் பெட்ரோல் 2.85 ருபாய் கூடுகிறது.

ஆனால், 159 லிட்டர் 90 டாலர் விற்கும் போது, 1 லிட்டர் பெட்ரோல் இந்திய ருபாயில் 25.47 தானே விற்க வேண்டும்.

(சுத்திகரிப்புச் செலவு மிகச் மிகச் சொற்பம் என்பதால் இங்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வில்லை).

பங்கில் விற்பதோ 63 ருபாய்க்கு...

அதற்கு அரசு தரும் விளக்கம் இதோ

(இந்தக் கணக்கு பெட்ரோ ல் 58.90 கு விற்க்கப்பட்ட போது உள்ளது)

Basic Price: Rs 28.93
Excise duty: Rs 14.35
Education Tax: Rs 0.43
Dealer commission: Rs 1.05
VAT: Rs 5.50
Crude Oil Custom duty: Rs 1.10
Petrol Custom: Rs 1.54
Transportation Charge: Rs 6.00

Total price: Rs 58.90

இப்பொழுது புரிந்திருக்கும், பாதிப்பணம் எங்கு செல்கிறது என்று..

இந்தப் பணம் திருப்பி எண்ணெய்க் கம்பெனிகளுக்கு நட்டத்தை ஈடுகட்ட என்று ஒரு சிறு பகுதி செலவு செய்யப்பட்டு விடுகிறது.

சரி, விலையேற்றத்திற்கான விவரம் தெரிந்தாகி விட்டது. எனவே இதை இத்தோடு விட்டு விடலாமா?

இந்த விலையேற்றம் சர்வதேச அளவில் நடைபெறுகிறதே, பாதிக்கப்படும் மற்ற நாடுகள் என்ன செய்கின்றன? குறிப்பாக, நம் சைஸில் இருக்கும் ‌ சைனா இந்தப் பிரச்னையை எப்படி கையாள்கிறது என்று கவனித்தோமானால், நமக்கு வியப்பு ஏற்படும்.

அதற்கு முன் மாதா மாதம் விலையேற்றம் ஏற்படுகிறதே, இதற்கு முன் அப்படி இருந்ததில்லையே என்று உங்களுக்குத் தோன்றினால்....

உண்மை..

கடந்த 6 மாதங்களில் 7 முறை பெட்ரோ ல் விலை உயர்ந்திருக்கிறது. அது எப்படி? எப்போது ஆரம்பித்தது? என்ற சிறு முன்னோட்டத்தை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

பெட்ரோல் விலையின் பிண்ணனி மர்மங்கள் - 2

1990 களில் சதாம் உசேன் டாலர் மூலம் எண்ணெய் விற்பனை செய்வதை எதிர்த்து ஈரோவில் தான் வர்த்தகம் செய்யவேண்டும் என்று ஒபெக் அமைப்பில் போராடினார். அவருக்கு ஆதரவாக லிபியா, கொலம்பியா, மற்றும் சில உறுப்பினர்கள் முழங்கினர். தவறhன வழிகாட்டல் மூலம் ஈராக் குவைத்தை தாக்க ஊக்கப் படுத்தப்பட்டு, ஊக்கப்படுத்தப் பட்டவர்களாலேயே, போரும் நடத்தப்பட்டு, முதலாம் ஈராக் போர் நடந்தேறியது. ஈராக்கை பலவீனப்படுத்த மட்டுமே முடிந்த அந்தப் போர் அமெரிக்காவிற்குத் தோல்வியில் முடிந்தது. ஆனால் இந்தப் போர் ஏனைய அமெரிக்க எதிர்ப்பாளர்களின் முதுகுத் தண்டுகளை சில்லிட வைக்கும் பயத்தை ஏற்படுத்திய வகையில் அமெரிக்காவிற்கு வெற்றிதான்.


2001ல் இரட்டைக் கோபுர வீழ்ச்சிக்குப் பிறகு, அதில் துளியும் சம்பந்தபட்டிராத சதாம் உசேன் மீது பொய்க்குற்றம் சாட்டி இரண்டாம் ஈராக் போர் ஏவப்பட்டு, வெற்றி கொண்டு, அமெரிக்காவின் நேரடி ஆளுமையின் கீழ் ஈராக் அரசு வந்தது. நேரடி ஆளுமை என்பது அமெரிக்காவின் படைத் தளபதியின் ஈராக்கின் அனைத்து நடவடிக்கைகளும் வந்தது. ஈராக் ஒபெக் அமைப்பின் உறுப்பினர் என்பது உலகறிந்த உண்மை. 2001 ஈராக் போருக்குப்

பின் ஒபெக் அமைப்பில் நேரடியாக அமெரிக்கா உள்ளே வந்தது. மிரட்டல்கள், உரத்த சத்தம் மூலமாக ஒபெக் மூலம் நேரடியாக எண்ணெய் வர்த்தகத்தை கட்டுக்குள் கொண்டுவந்தது. 2002ல் ஒரு வழியாக ஒபெக் விலை நிர்ணயம் செய்யும் உரிமையை இழக்க, ஐசிஈ என்ற நிறுவனம் ஜார்ஜியா மாகாணத்தின் அட்லாண்டா நகரில் ஆன்லைன் வர்த்தகம் செய்யும் நிறுவனத்தை தொடங்கியது. அதற்கு முன் இன்டரநேஷனல் பெட்ரோலியம் எக்சேஞ்ச் என்ற அமைப்பு அத்தகைய வர்த்தகத்தை நடத்தி வந்தது. அதன் மூலம் ஒபெக் அமைப்பு விற்றhலும், விலை என்னவோ 20-40 டாலருக்கு மேல் போனதில்லை.

அந்த இன்டர்நேஷனல் பெட்ரோலியம் எக்சேஞ்ச் (International Petroleum Exchange - IPE) நிறுவனத்தை ஐசிஈ விலைக்கு வாங்கியதன் மூலம், கச்சா எண்ணெய் விலை நிர்ணயம் செய்யும் அல்லது அதை ஏற்றவோ இறக்கவோ செய்யக் கூடிய ஏகோபித்த கட்டுப்பாட்டை அமெரிக்கா பெற்றது. இதை ஒபெக் நாடுகள் அறிந்தனவா, தெரிந்திருந்ததா அல்லது தெரிந்தும் ஒன்றும் செய்ய இயலாத சூழ்நிலையா என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

ஆன்லைன் வர்த்தகம் என்ன என்று சற்று கவனிக்கலாம். ‌ இது சம்பந்தமான பதிவுகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அவற்றிற்கான சுட்டிகள் இ‌ங்கே. பதிவு1, பதிவு2.

உற்பத்தி கேந்திரத்தில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் உற்பத்திச் செலவு 8 லிருந்து 10 டாலருக்குள் தான். இந்த விவரத்தை நீங்கள் என்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் ஆண்டுத் தணிக்கை அறிக்கையில் காணமுடியும். 10 டாலர் கச்சா எண்ணெய், எப்படி 100 டாலருக்கு சர்வதேச சந்தையில் விற்கிறது? யாருக்குப் போகிறது அந்த 90 டாலர்? இதெல்லாம் அறிய வேண்டுமானால், ப்யூச்சர்ஸ் எனப்படும் பங்கு வர்த்தக முறையை அறிந்திருக்க வேண்டும். வரும் காலத்தில் டிமாண்ட் கூடுதலாக இருக்கும் என்ற கணிப்பில் இந்த விலை இருக்கும் என்ற உத்தேசத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, தேவைப்படும் அளவைக் குறித்து ஒரு பார்வர்ட் கான்ட்ராக்ட் போடுவார் அந்த வர்த்தக நிபுணர். அது பில்லியன் டாலர் கணக்கில் வரும். ஆனால், அதில் பத்து சதம் மட்டும் கட்டி அந்த கான்ட்ராக்ட் போட ஆன்லைன் வர்த்தகம் அனுமதிக்கிறது. அந்த பத்து சதத்திற்கும் வங்கிகள் சொற்ப வட்டிக்கு அதாவது, கான்;;ட்ராக்ட் அமலாகும் காலம் வரையிலான வட்டியை மட்டும் முன்கூட்டியே வாங்கிக் கொண்டு அந்தப் பத்து சதத்தை கடனாகத் தருகின்றன. ஆக 1 பில்லியன் டாலர் கான்ட்ராக்டிற்கு வெறும் சில ஆயிரம் டாலர்களை மட்டும் செலவு செய்து கான்ட்ராக்ட் போடப் படுகிறது.

விலையேற்றம் என்பது சொற்ப செலவிலேயே நடக்கிறது, ஆனால் ஈட்டுவதோ
பல்லாயிரம் மடங்கு லாபம். அந்த லாபம் அனைத்தும் அமெரிக்க டாலரிலேயே இருப்பதால், அமெரிக்காவிற்கு டாலர் பிரிண்ட் செய்யும் செலவிலேயே எண்ணெய் கிடைத்து விடுகிறது. இதுதான் சூட்சுமம்.

சரி, சர்வதேசச் சந்தையில் 10 டாலர் ஏறினால் இங்கு பெட்ரோல் பங்கில் 2.50 ருபாய் விலையேற்றுகிறhர்களே, அது எப்படி? என்று உங்களுக்கு ஆச்சரியமும் வேதனையும் ஏற்பட்டால், விவரங்கள் அடுத்த பதிவில்.

பெட்ரோல் விலையின் பிண்ணனி மர்மங்கள் - 1

சமீபத்திய பெட்ரோல் விலையேற்றங்களின் மூலம் மக்களின் வயித்தெரிச்சலை ஏகத்திற்கும் சம்பாதித்திருக்கும் மத்திய அரசு, அதன் விளைவுகள் என்ன என்று தெரிந்து தான் செய்கிறதா என்பது சுத்தமாகப் புரியவில்லை.

சந்தை விலை நிர்ணயம் என்ற பெயரில் சர்வதேச சந்தையில் ஏற்படும் விலை மாற்றத்திற்கேற்ப உள்ளூர் விலையை நி ர்ணயிப்பது என்ற அரசின் முடிவு கடந்த ஜூன் மாதம் (2010) எடுக்கப்பட்டு, ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் விலையை மாற்றி (ஏற்றி) வந்தார்கள். தற்போது ஒரே மாதத்தில் இருமுறை விலை ஏற்றப்பட்டிருக்கிறது.

கச்சா எண்ணெய் விலை ஏற்றம் காரணமாக உள்நாட்டில் பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்த்தப்படுகிறது என்பது பொதுவான காரணமாகச் சொல்லப்படுகிறது. கச்சா எண்ணெய் எப்படி தினம் ஒரு விலை விற்கிறது, அது என்ன காய்கறியா, தினம் ஒரு விலை விற்பதற்கு.

அதற்கு முதலில் கச்சா எண்ணெய் எப்படி உற்பத்தியாகிறது. எங்கு யாருக்கு விற்பனை செய்யப்படுகிறது சர்வதேச சந்தையில் எப்படி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது இந்திய மக்கள் ஏன் ஒவ்வொரு முறையும் கூடுதல் தொகை செலுத்த வேண்டியிருக்கிறது இதை எல்லாம் பார்க்க வேண்டும்.

கச்சா எண்ணெய் உற்பத்தி ஒபெக் (OPEC) என்னும் எண்ணெய் உற்பத்தி நாடுகள்
கூட்டமைப்பிற்குள் பெருவாரியாக உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியா, பிரேசில், சீனா போன்ற நாடுகளும் எண்ணெய் உற்பத்தி செய்கின்றன, ஆனால் அவை ஒபெக் கூட்டமைப்பில் இல்லை. ஒபெக் அமைப்பு 2002 ஆம் ஆண்டு வரை உலக விலை நிர்ணயம் செய்து வந்தது. அது வரை கச்சா எண்ணெயின் விலை 20-40 டாலருக்குள் தான் இருந்தது. 2002க்கு பிறகு இன்டர்காண்டினென்டல் எக்சேஞ்ச் (InterContinental Exchange - ICE) என்ற அட்லாண்டாவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் எண்ணெய் தொடர்பான வர்த்தகச் சந்தைக்கான ஆன்லைன் வணிகத்தைத் தொடங்கி, ஒபெக் அமைப்பிலிருந்து விலை நிர்ணயிக்கக்கூடிய கட்டுப்பாடு ஐசிஈ எனப்படும் அந்த அமைப்பிற்கு சென்றது. ஆரம்பத்தில் அதற்கு உடன்படாத ஒபெக் அமைப்பு, ஆன்லைன் வர்த்தகம் மூலம் இரு மடங்கு வரை கச்சா எண்ணெய்க்கு விலை கிடைக்கத் தொடங்கியதன் விளைவாக முழுக்க முழுக்க ஐசிஈ யின் மூலம் விலை நிர்ணயம் செய்வதை ஏற்கத் தொடங்கின. இந்த ஐசிஈ யின் பங்கு என்ன அதனால் யாருக்கு உண்மையான லாபம் என்பதை பார்ப்பதற்கு முன்பு ஒரு பின்னோட்டம் பார்க்கலாம்.

கச்சா எண்ணெய் ஆதிக்கம் என்பது பல லட்சக் கணக்கான மக்களைக் கொன்றும், பல நாடுகளின் எல்லைகளை திருத்தியமைத்தும், ஆட்சிகளை மாற்றி, சில நாடுகளின் தலையெழுத்தையே மாற்றி அமைத்த வல்லமை பெற்றது.

1960 களில் மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் வளம் கண்டறியப்பட்டு அந் நாடுகள் செல்வத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்த வேளையில், யாருக்கும் எந்தப் பிரச்னையும் இருக்கவில்லை. 1967ல் இஸ்ரேல் நாடு போரினால் உருவானது. இஸ்ரேல் தனது எல்லையை விரிவு படுத்த 1973ல் யோம் கிப்புர் போர் என்ற போரை வலுக்கட்டாயமாக தனது அண்டை நாடுகளின் மேல் திணித்தது. அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும், அமெரிக்க படைகளின் ஆயுத பலத்தால் சில நாட்களிலேயே இஸ்ரேலுக்குச் சாதகமாக அப்போர் முடிவுக்கு வந்தது. பாலஸ்தீனியப் பிரச்னை அன்றுதான் மிக விஸ்தாரமாகச் சு{டு பிடிக்கத் தொடங்கியது.

அமெரிக்காவின் இந்தத் தலையீட்டிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அமெரிக்காவிற்கான எண்ணெய் விற்பனையை ஒபெக் நாடுகள் முற்றிலும் நிறுத்தி விட்டன. 6 மாதங்களுக்கு இது தொடர்ந்தது. அமெரிக்கா பொருளாதாரம் ஸ்தம்பித்தது. 1973 பொருளாதார நெருக்கடிக்கு இந்தத் தடையே முக்கியக் காரணம். அந்தச் சமயத்தில்தான் அமெரிக்கா தங்கத்தை இருப்பில் வைத்து கரன்சி அடிக்கும் நியாயமான கொள்கையை காற்றில் பறக்கவிட்டு, தம் இஷ்டத்திற்கு டாலர் அடிக்க ஆரம்பித்தனர். டாலரின் உண்மையான மதிப்பென்ன என்று கேள்வி எழுப்பியவர்களெல்லாம் கேள்வி எழுப்பிய நாடுகளெல்லாம் வன்மையாகக் கவனிக்கப்பட்டன. தனது ஆதிக்கத்தைக் கேள்வி கேட்கக் கூடியவர்கள் தனது ஆதரவாளராக மட்டுமே இருக்க முடியும், கேள்வி கேட்பர் பரம எதிரி என்பது அவர்களின் கொள்கை. அதை உலகெங்கும் அமுல்படுத்த அமெரிக்கா முயன்றது, முயல்கிறது, முயலுவது எங்கள் பிறப்புரிமை என்று கூவுகிறது. அது ஏனைய நாடுகளுக்குப் பிடிக்க வில்லை.

1973 எண்ணெய் நெருக்கடிக்குப் பிறகு உலகிலேயே அதிகமான கச்சா எண்ணெய் இறக்குமதியாளரான அமெரிக்கா எனர்ஜp செக்யூரிட்டி என்ற பெயரில் புதிதாகக் கொள்கைகள் வகுக்க ஆரம்பித்தது. அதில் முக்கியமான ஒன்று ஒபெக் அமைப்பை தன் கைக்குள் கொண்டு வருவது. 2002 வரை அது சாத்தியமாக முடியவில்லை. ஏன் சாத்தியமாக வில்லை, பின் எப்படி 2002ல் மட்டும் அது சாத்தியமானது?

அடுத்த பதிவில் பார்க்கலாம்.