தனித்தமிழ்நாடும் திமுகவும்

தனித்தமிழ்நாடு கேட்டுப் போராட தயங்கமாட்டோம் என்று மதிமுக செயலாளர் ஒருவர் மேடையில் முழங்கியிருப்பது பெரும்பாலானோருக்கு அதிர்ச்சி ரகத்தைச் சேர்ந்த செய்தியாக இருக்கக்கூடும்.

ஆனால் 1965லேயே திரு.அண்ணாதுரை அவர்கள் தனித்தமிழ்நாடு கேட்டு போராட்டம் நடத்தியது பலருக்குத் தெரிந்திருக்காது. அந்தப் போராட்டத்தில் தற்போதைய தமிழக முதல்வர் அவர்களும் பங்குபெற்றிருந்தார் என்பதும் சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

ஈழத்தந்தை செல்வா அவர்களும் ஏறக்குறைய அந்த காலகட்டத்தில்தான் தமிழர்களுக்கென உரிமைவேண்டும் என்று போராட ஆரம்பித்திருந்த நேரம் அது.

அதே நேரத்தில்தான் அமெரிக்காவின் தெற்காசிய இராணுவக் கொள்கை மாற்றியெழுதப்பட்டுக் கொண்டிருந்தது. அதாவது பனிப்போர் காலமான அந்நேரத்தில் அமெரிக்க இராணுவம் உலகில் எந்த இடத்திற்கும் நான்கு மணிநேரத்திற்குள் சென்றுவிட முடிந்தது. இந்தியப் பெருங்கடல் மட்டும் அதற்கு விதிவிலக்கு. ஏனெனில் டீகோ கார்சியா தவிர வேறு எங்கும் அமெரிக்காவிற்கு தளம் கிடையாது. (டீகோ கார்சியா என்ற அமெரிக்க இராணுவத்தளம் ஏறக்குறைய 8000 மைல்களுக்கப்பால் உள்ளது. http://maps.google.com/maps?q=-7.313055556,72.41083333(DIEGO%20GARCIA%20NSF)&z=5&t=k) டீகோ கார்சியாவிலிருந்து இந்தியத்துணைக்கண்டத்திற்கு போர் விமானங்கள் பறந்து வர அப்போது 8 மணி நேரத்திற்கும் மேலாகும். விமானந்தாங்கிக் கப்பல் வர அதற்கும் மேலாகும்.

அந்த இராணுவச் செயல்திட்டத்தின் கீழ், குறைந்த நேரத்தில் இந்தியத் துணைக்கண்டத்தைத் தாக்கக்கூடிய வகையில் அமையக்கூடிய, அமெரிக்க இராணுவக் கப்பற்தளம் அமைக்க இடம் தேடினால், பாகிஸ்தானின் (1971 வரை பங்களாதேஷ் உருவாகவில்லை) சிட்டகாங், அல்லது கராச்சி மற்றும் இலங்கையின் திரிகோணமலை தான் இருந்தது. அப்போதைய அரசுக்கு உடனடியாக இதைத் தடுக்கவேண்டிய நிர்ப்பந்தம். வரலாறு அறிந்தவர்கள் புள்ளிகளைக் கோலமாக்கி விபரம் அறிந்து கொள்வார்களாக.

எனக்கு ஒரு உறுதிப்படுத்தபபடாத சந்தேகமும் உண்டு, ஈழப்பிரச்சினை, தனித்தமிழ்நாடு, திரிகோணமலை கப்பற்படைத்தளம் ஆகியவற்றிற்கு ஒன்றுக்கொன்று தொடர்புகள் உண்டோ என்று. பெரியஇடத்து விவகாரம் ரொம்பத் தோண்டக்கூடாது பாருங்கள்.

தனித்தமிழ்நாடு கோரிக்கையை வைத்து ஆட்சியேற்ற அண்ணாவின் அரசு, இந்திரா அம்மையாரின் "ஆலோசனைக்கு"ப்பிறகு ஒரு அம்சமான அறிக்கையை வெளியிட்டது. தனித்தமிழ்நாடு கோரிக்கை கிடப்பில் போடப்படுகிறது என்று. இதில் அதற்கு அண்ணா எடுத்துரைத்த உவமைதான் மிக முக்கியம். தனித்தமிழ்நாடு என்பது நமது காதில் அணிந்திருக்கும் தங்கத் தோடு போன்றது. அதை எறிந்து விட வேண்டும் என்று சொல்லவில்லை. காதில் புண் இருந்தால் தற்காலிகமாக கழட்டிவைத்துவிட்டு பிறகு தேவைப்படும்போது எடுத்து அணிவதில்லையா... அதுபோல் தற்போது காதுப்புண் ஆறும் வரை தனித்தமிழ்நாடு என்ற தோட்டைக் கழட்டி வைப்போம் என்று தனது சகாக்களுக்கு அவர் ஆறுதல் உரைத்தார். இந்திராகாந்தி அம்மையார் அவர்கள் அண்ணாவின் காது புண்படும்படி அப்படி என்ன சொன்னார் என்பது தற்போது அமரராகிவிட்ட இருவருக்கும் மட்டும்தான் தெரியும்.

பிற்பாடு அந்தத் தோடு என்னாவனது என்பது இன்றுவரை யாருக்கும் தெரியாது.

திருமா அவர்கள் மேலைநாட்டுச் "சுற்றுப்பயணம்" எல்லாம் செய்துவிட்டு நாடு திரும்பியிருக்கும் இவ்வேளையில், இந்தியாவின் தலையீடு ஈழத்தில் இருக்க வேண்டிய அவசியமான இச்சூழலில் தனித்தமிழ்நாடு கோரிக்கை தமிழக அரசியல் மேடைகளில் தோன்றியிருப்பது நல்லதற்கல்ல.

இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால் தனித்தமிழ்நாடு பற்றி நன்கு அறிந்த ஒருவர் இன்றைய முதல்வர் பதவியில் இருப்பது தான்.

முதல்வர் கண்டும் காணாமல் போகப்போவதில்லை என்பதை தமிழக அரசு மணிமாறனை கைது செய்து உறுதிப்படுத்தியிருக்கிறது.

மேலும் ஈழப்பிரச்னை என்பது வேறு, விடுதலைப்புலிகளின் ஆதரவு வேறு என்று பிரித்துப்பார்க்கத் துவங்கியிருப்பதும் தமிழக அரசின் தெளிவான நிலைப்பாட்டை எடுத்துரைக்கிறது.

மத்திய அரசு கவனிக்குமா?

9 இப் பதிவைப் பற்றிய கருத்துக்கள்:

said...

///மேலும் ஈழப்பிரச்னை என்பது வேறு, விடுதலைப்புலிகளின் ஆதரவு வேறு என்று பிரித்துப்பார்க்கத் துவங்கியிருப்பதும் தமிழக அரசின் தெளிவான நிலைப்பாட்டை எடுத்துரைக்கிறது.///

இந்தியர்கள் திருந்தவே மாட்டார்கள்.

தமிழர்கள் வேறு புலிகள் வேறு இல்லை. ஆதரிப்பதானால் இதை உணர்ந்து ஆதரிக்க வேண்டும். இல்லையேல் முதல் பட்ட அனுபவம் மீண்டும் நிகழலாம்.

Anonymous said...

அப்படியானால் ஏனையப் போராளிகளுக்கெல்லாம் ஈழப்போராட்டத்தில் பங்கு இல்லையா..?

said...

வருகைக்கு நன்றி, Capital.... முதல்பட்ட அனுபவம் மீண்டும் நிகழலாம் என்று ஊகிக்கிறீர்களா அல்லது...

Anonymous said...

இதோ வந்துட்டாரய்யா கேபிடல்..இந்தியர்களுக்கு சாபமிட..தமிழர்கள் வேறு புலிகள் வேறு இல்லையென்றால்...கருணா யார்? ஆனந்த சங்கரி யார்? http://sathiyak.blogspot.com/2006/06/blog-post_115168673391652127.html என்ற தளத்தில் எழுதுபவர் யார்? சோபாசக்தி என்பவர் யார்? விழிப்பு,தேனி இணயதளங்களில் எழுதுபவர்கள் எல்லாம் யார்? அழிக்கப்பட்ட TELO இயக்கத்தில் இருந்தவர்களலெல்லாம் யார்? ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்தவர்களா?

சக தமிழனையே கொன்றழித்துவிட்டு அவனை துரோகி என்று சொல்வார்கள்..நாம் அதை நம்பவேண்டும்..நம்பாவிட்டால் நாங்களும் துரோகி.நன்றாக இருக்கிறது.
எதிர்கருத்தையும் உங்களை மாதிரி ஆட்கள் சற்று சிந்திக்க வேண்டும்.

//ஆதரிப்பதானால் இதை உணர்ந்து ஆதரிக்க வேண்டும். இல்லையேல் முதல் பட்ட அனுபவம் மீண்டும் நிகழலாம்.\\

முதலில் இந்த மாதிரி கட்டளையிடுவதையெல்லாம் நிறுத்துங்கள் கேபிடல்...இதன் இன்னொறு பெயர் 'பாஸிசம்'. ஈழ மக்கள் பிரச்சனையில் கருத்து சொல்லவோ..தலையிடவோ எவருடைய அனுமதியும் யாருக்கும் தேவையில்லை.

முதல் அனுபவம் தானே? அதனால் என்ன..பாடத்தை கற்று தேர்ந்துவிட்டு மேலே போய்கொண்டே இருக்கவேண்டியதுதான். பல அடிகளையும் இழப்புகளையும் கடந்துதானே ஒவ்வொரு இயக்கமும் வளர்ந்து இருக்கிறது.

பலியாகும் LTTE உறுப்பினர் உயிரும்,மற்ற குழு உறுப்பினர் உயிரும் ஏன் சிங்கள மக்கள் உயிரும் ஒன்றுதான்.எல்லா உயிரிழப்பிலும் சோகம் உள்ளது.

Anonymous said...

test

said...

செல்வமணி, தங்கள் வருகைக்க நன்றி...

Anonymous said...

காட்டிலே திரிவதையெல்லாம்.... அதற்கு உபசாரம் வேறா.... புலி புலிதான்யா.. அதை என்னதான் காட்டின் நிழல் படாமல் வளர்த்தாலும், குலத்தளவே ஆகுமாம் குணம்.. இரத்த வெறி பிடித்த மிருகம்யா அது..

Anonymous said...

அன்று ஒரு ராஜீவ், நாளை யாரோ ?!? அது எவராய் இருப்பினும் சரி, அவருக்கு கடற் கறையில் சிலை வைத்து, தியாகியாக்கி அவர் பெயர் சொல்லி இன்னொருவர் ஆட்சியை பிடிக்காது இருந்தால் நல்லது

Anonymous said...

மிகச்சிறப்பான பதிவு திருவடியான்


ஈழத்து முஸ்லீம்களும் முதலில் பிரிவினைக்கு ஆதரவாக இருந்தவர்கள்தான். அது இன்று அவர்களுக்கு பெரிய ஆபத்தாக வளர்ந்திருக்கிறது. சிங்களர்களும் தமிழர்களும் சந்தேகக்கண் கொண்டு பார்ப்பவர்கள் இலங்கை முஸ்லீம்களைத்தான். அது மட்டுமல்ல, சிங்களவர்கள்கூட செய்யாத இன அழிப்பு இனபடுகொலைகளை சக தமிழர்களான முஸ்லீம்கள் மீது கட்டவிழ்த்துவிட்டு பள்ளிவாசல்களிலேயே வைத்து கொலைகளை செய்து ஒரு லட்சத்துக்கும் மேலான குடுமபங்களை யாழ்ப்பாணத்திலிருந்து ஒரே நாளில் துரத்தியவர்கள் புலிகள். இன்றைக்கு முஸ்லீம் தமிழர்கள் தங்களை தமிழர்கள் என்று சொல்லிக்கொள்ளக்கூட விரும்பாமல் முஸ்லீம் என்று தனி இனம் என்று குரல் கொடுத்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டிலும் இதே போல முஸ்லீம்கள் தனித்தமிழ்நாடு கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தவர்கள்தான்.அதனால்தான் இன்றும், திராவிட முன்னேற்றக்கழகத்தின் ஆதரவாக முஸ்லீம் தலைவர்களும் இயக்கங்களும் இருக்கின்றன. பெரியாரை உபயோகப்படுத்தி இந்து மதத்தை அழிப்பதற்காகவும் இந்தியாவை உடைப்பதற்காகவும் இன்றும் பல இஸ்லாமிய இயக்கங்கள் தனித்தமிழ்நாடு கோரிக்கையாளர்களுக்கு ஆதரவாகவும் இருக்கின்றன. அதே காரணத்தினால், முஸ்லீம்களையும் அவர்கள் செய்யும் அட்டூழியங்களையும் கண்டுகொள்ளாமல், அதனை விமர்சிப்பவர்களை இந்துத்வா என்று திட்டி தனிமைப்படுத்தவும் தனித்தமிழ்நாட்டு ஆதரவாளர்களும் சார்புள்ளவர்களும் முயல்கிறார்கள்.

தனித்தமிழ்நாடு கோரிக்கை வலுக்கொண்டு ஈழத்தில் நடப்பது போல நடந்தால், அதில் முதலில் காயமடையப்போகிறவர்கள் முஸ்லீம்கள் தான் என்பது ஈழ வரலாறு தரும் பாடம். முதலில் துரத்தபப்டப்போகிறவர்கள், நாடு வீடு இழந்து அலையப்போகிறவர்கள் முஸ்லீம்கள்தான் என்பது ஈழ வரலாறு தரும் பாடம்