ஆபரேஷன் பொய் -2

ஏற்கனவே நான் எழுதிய இந்த வலைப்பூவை படிக்கவும். http://thiruvadiyan.blogspot.com/2006/08/blog-post_12.html

பிரிட்டிஷ் போலிஸ் 25 பேரை 10 விமானங்களைத் தகர்க்கத்திட்டமிட்டதாக கைது செய்தது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் பாகிஸ்தான் தொடர்புடையவர்கள். இந்த உளவுத் தகவலை பிரிட்டிஷ் உளவுத்துறைக்கு அளித்த பெருமை பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ-யைச் சேரும்.


இதில் எது கவனிக்க வேண்டிய விஷயம் எனில்... கைது செய்யப்பட்டோர் மொத்தம் 25 பேர்.. இதில் மாஸ்டர் மைன்ட் எனப்படும் ரவ்ஃப் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டான். சரி... ஊடகங்களுக்கு பரபரப்பு செய்தி கிடைத்தாகி விட்டது. இஸ்லாம் என்ற மதம் மற்றுமொரு முறை தீவிரவாதமதம் என்றும் இஸ்லாமியர்கள் எல்லாம் தீவிரவாதிகள் என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டாகி விட்டது.

தற்போதைய நிலை என்ன..?

மாஸ்டர் மைன்ட் என வருணிக்கப்பட்ட ரஷித் ரவ்ஃப் பற்றிய விசாரணையில் இதுவரை எந்த உருப்படியான தகவலும் சிக்கவில்லை. ஒரே ஒரு குற்றம் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, அது ஓவர் ஸ்டே. பாகிஸ்தான் அமைப்புகள் ரஷித் ரவ்ஃப் என்ற பெயரையே தற்போது மறந்து விட்டன. இது இப்படியென்றால், பிரிட்டிஷ் போலிஸ் நிலையோ இன்னும் மோசம்....

கைது செய்யப்பட்ட 25 பேரும் முஸ்லிம் என்ற பரபரப்புக்குப் பின் ஒரிரு நாட்களில் மூவர் விடுவிக்கப்பட்டனர். மீதம் 22 பேரில் 11 பேர் மட்டுமே கோர்ட்டுவரை அழைத்துச் செல்லப்பட்டு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டனர். அதிலும் 8 பேர் மட்டுமே நேரடியாக குற்றத்தில் ஈடுபடுவதற்கான "வாய்ப்பு" இருந்ததாக குற்றப்பத்திரிக்கை சொல்லுகிறது. மீதம் மூவரில் இருவர் இப்படி ஒரு விஷயம் நடைபெறப்போவதாகத் தெரிந்திருந்தும் அரசுக்குச் சொல்லவில்லை என்ற குற்றமும், ஒரு சிறுவன் (17 வயது) தீவிரவாதம் சம்பந்தமான சில பத்திரிக்கைத் துணுக்குகளை வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

விவரம் அறிந்த வட்டாரங்கள் இப்படி ஒரு காரியத்தைச் செய்ய குறைந்தது விமானம் ஒன்றுக்கு இருவர் வீதமும், அவர்களுக்கு போக்குவரத்து உட்பட இதர உதவி செய்ய ஒரு குழு ஒன்றிற்கு மூவர் விதம் மொத்தம் ஐம்பது பேராவது இந்தச் சதித்திட்டத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் குற்றம் சாட்டப்பட்டிருப்பது மொத்தம் 8 பேர்தான்.. அதுவும் ஊகத்தின் அடிப்படையில்தான் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றனர்...

அதெப்படி 8பேர் போய் பத்து விமானங்களைத் தகர்க்க முடியும்...?

ஆக மொத்தம் அமெரிக்க பிரிட்டிஷ் உளவுத்துறைகளின் திசைதிருப்பல் விவகாரத்திற்கு பாகிஸ்தான் துணைபோய் இருக்கிறது. எதை வேண்டுமானாலும் செய்யக் கூடிய தராதரத்திற்கு பாகிஸ்தான் சென்றிருக்கிறது என்பது நமக்கு கவலையளிக்கிறது. (நாளைக்கு இந்தியாவிற்கு எதிராக உள்ள எந்தச் சதியிலும் பாகிஸ்தான் ஏன் என்ற கேள்வி கேட்காமல் தம் மக்களையே காவு கொடுக்கத் தயங்காது.)

இது மட்டுமா, மும்பாய் வந்த நார்த்வெஸ்ட் விமானத்தை டட்ச் போர் விமானங்கள் வழிமறித்து ஜெர்மனியில் அவசரமாகத் தரையிறக்கி 12 இந்திய முஸ்லிம்களைக் கைது செய்தது. அவர்கள் செய்த ஒரே தவறான காரியம், தங்களிடமிருந்த பிளாஸ்டிக் பைகளிலிருந்து (பிரிட்டிஷ் விமானத் தகர்ப்பு முயற்சி என்ற நாடகத்திற்குப் பின், பாவம் அனைவரும், வெளித்தெரியக்கூடிய பிளாஸ்டிக் பைகளில்தான் பாஸ்போர்ட், செல்போன் போன்றவற்றை வைத்துக்கொள்ளவேண்டும்) அடிக்கடி செல்போனை எடுத்துப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

அரண்டுபோயிருக்கும் அமெரிக்க மார்ஷல்கள் இருண்டுபோய்த் தெரிந்த இந்தியர்களைக்கண்டதும் பேய் என்று அவர்களுக்குத் தோன்றிவிட்டது. உடனே அவர்களை டெரரிஸ்ட் என்று விமானிக்குத் தகவல் தந்து... பின் கைது செய்யப்பட்டு தற்போது மன்னிப்பு கேட்டு விடுவிக்கப்பட்டது வேறு கதை.

பிரிட்டிஷ் போலிஸ் ஏற்கனவே செய்த பொய்ப்பிரச்சாரத்திற்கு வலுவூட்ட இந்த சிறு நாடகம் நடந்திருக்குமோ என்ற சந்தேகமும் உள்ளது.
ஏன் இந்திய அரசு இதற்கு கடும் கண்டணம் தெரிவிக்க வில்லை என்றுதான் தெரியவில்லை. உலகெங்கும் போய் இந்தியர்கள் அண்ணியச் செலவாணி அனுப்ப வேண்டும். ஆனால் நமது அரசியல் வாதிகள் இந்தியர்களை மற்றவர்கள் இப்படி அநீதிக்கு உள்ளாக்கும் போது கண்டிக்காமல் இருப்பது சரியா..?

சரி விஷயத்திற்கு வருவோம்...

இந்த ஆபரேஷன் போஜிங்காவை ஏன் பிரிட்டிஷ் அரசு அமெரிக்க உதவியுடன் எதற்காக நடத்த வேண்டும். இதுபோல் எத்தனை நாடகங்கள் காத்திருக்கின்றன..?

முன்பு மாதிரியெல்லாம் இப்போது இல்லை... ஊடகங்கள் அதிகரித்து விட்டன. உண்மை எப்படியோ.. யார் மூலமோ வெளிவந்து விடுகிறது....

1 இப் பதிவைப் பற்றிய கருத்துக்கள்:

Anonymous said...

அது சரி... இரு பெரும் அரசுகள்... அதுவும் பெயர்பெற்ற உளவுத்துறைகளை வைத்துள்ள அரசுகள்.. இப்படி ஒரு முட்டாள்தனத்தையா செய்யும்.... எது நடந்தாலும் ஏதாவது சொல்வதே உங்களுக்கு வேலையாய்ப் போய்விட்டது.. போய் உருப்படியான வேலை ஏதும்இருந்தால் செய்யும்..